திங்கள், 31 அக்டோபர், 2016

கலாச்சார நடவடிக்கை ஏன்? எவ்வாறு?

இந்திய சமூகத்தின் உண்மைச் சூழல் வேகமாக மாறிவருகிறது. கண்டிப்பாக நல்லதை நோக்கி அல்ல. தேசிய விடுதலை இயக்கத்தின் ஊடாக எழுந்த சமூக மாற்றத்தை நடத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் தளர்ந்து வருகிறது.
அந்தோணி எனக்ரி மற்றும் மைக்கேல் ஹார்ட் என்பவர்கள் உலகமயமாக்கல் குறித்து எழுதிய புத்தகம் பரவலாக விவாத்தை கிளப்பி உள்ளது. அவர்கள் கூறுவது என்ன? ஏகாதி பத்தியம் இறந்துவிட்டது. ஆனால், நம் கண்கள் முன்பு மற்றொரு சாம்ராஜ்யம் உருவாகி வரு கிறது. இந்த சாம்ராஜ்யத்தின் பெயர் ‘உலகமய மாக்கல்’. பன்னாட்டு மூலதனத்திற்கு இந்த உல கையே அடிமைப்படுத்துவதுதான் இதன் நோக் கம். இந்த புதிய சாம்ராஜ்யத்தின் ‘நன்னெறி களும்’, ‘வளர்ச்சி’ என்பதற்கு இவர்கள் தயாரித் திருக்கும் கோட்பாடுகளும்தான் இன்று இந்திய சமூகத்தில் மேலோங்கி இருக்கும், பொதுவான சிந்தனைத் தளத்தை உருவாக்கி வருகின்றன.
இந்த புதிய சாம்ராஜ்யம் சொல்ல விழையும் முக்கிய செய்தி என்ன?
சந்தை! எங்கும் சந்தை, எதிலும் சந்தை! என்பதே. இந்தச் செய்தி எப்படி பரப்பப்படுகிறது? இந்த கலாச்சாரத்தின் அடிப் படையாகக் கொண்டு பல வழிமுறைகள் மூல மாக இந்த கலாச்சாரத்தின் உள்நோக்கம் ஒரு நவீன (உண்மையில், முதலாளித்துவம் என்று தான் கூறவேண்டும்.) சுவையையும் (இச்சை என்றும் கொள்ளலாம்) எதையும் விமர்சனம் செய்யாத மனப்பாங்கையும் செல்வச் செழிப்பை யும் கொண்டு வருவேன் என்று சூளுரைக்கிறது. ஆனால், உண்மையில் முன்னேற்றத்திற்கான தடைகளையும் பண்பாட்டு பிற்போக்குத்தனத் தையும் தான் ஊக்குவிக்கிறது.
வகுப்புவாத சூழல்
இத்தகைய போக்கின் முக்கியமான வெளிப் பாடுதான் வகுப்புவாதம் ஆகும். உலகமயமாக்கல் என்ற புதிய சாம்ராஜ்யம் உருவாக்கிய ‘கலாச்சார’ நெருக்கடியினால் இது மேலும் ஆழ்ந்தூன்றி தழைக்கிறது. ஆக உலகமயமாக்கலும், வகுப்பு வாதமும் ஒரே நோக்கங்களைப் பகிர்ந்து ஒன்று மற்றொன்றை ஊட்டி வளர்க்கும் போக்குகள் என்பது தெரிகிறது. இந்த புதிய சாம்ராஜ்யத்தின் கட்டளைகளை எந்தவித விமர்சனமும் இன்றி இந்திய ஆளும் வர்க்கம் ஏற்கும் என்பதை சமீ பத்திய ஆஃப்கன் போரின் மூலம் எழுந்த விளைவு கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. இந்தப் பின்னணியில் சமூகத்தின் மீதான எந்த செயல்பாடும், குறுக்கீடும் பல முனைகளை கொண்டதாகவே இருக்க வேண்டும். அது அரசியல், பண்பாட்டு மற்றும் கொள்கை ரீதி யான பலமுனைச் செயல்பாடாக இருக்க வேண் டும். இன்று உருவாகி உள்ள பொது சிந்தனைத் தளத்தின் தன்மையை மாற்றுவது நம் செயல் பாட்டின் துவக்ககால நோக்கமாக இருக்க வேண் டும். கலாச்சார நடவடிக்கைகள் இத்தகைய செயல் பாடுகளின் மையமான இடத்தைப் பிடிக்க வேண்டும்.
கலாச்சார நடவடிக்கை என்பது…
பொதுவாகவே ‘கலாச்சாரம்’ என்றாலேயே பல வகையான புரிதல்கள் அளவுக்கு மீறி இருப்ப தால் முதலில் கலாச்சார நடவடிக்கை என்றால் என்ன என்பது குறித்து சில விஷயங்களை தெளிவு படுத்துவது அவசியம். மனிதர் சம்பந்தப்பட்ட அனைத்து ஈடுபாடுகளிலும் உள்ளடங்கி இருக் கும் கலாச்சாரம், சமூக அதிகாரம் செலுத்தப்படும் தளமாகவும் அதிகாரத்தை எதிர்க்கும் தளமாக வும் விளங்குகிறது. அதே சமயத்தில் மேலாதிக் கத்தை செலுத்தவும், மேலாதிக்கத்தை எதிர்ப்ப தற்குமான கருவியாகவும் அது உள்ளது. கலா சாரம் என்பது சமூகத்தில் மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் இழைந்தோடுவது, ரேமண்ட் வில்லியம்ஸ் கூறுவது போல், கலா சாரம் என்பது தன்னாலேயே நின்று விளைவு களை உருவாக்க முடியாத ஒரு இரண்டாம் பட்ச வெளிப்பாடு இல்லை. மாறாக, சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பரவிநிற்பது. எனவே, கலாச்சார நடவடிக்கைக்கான வாய்ப்பு களும் எல்லைகளும் ஒட்டுமொத்தமான சமூக அனுபவங்கள் அனைத் தையும் உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக உணர்வு நிலைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் கலாச்சார நடவடிக்கை, கலாச்சார நடவடிக்கை என்பது பல கலை வடிவங்களைக் கொண்டு நடத் தப்படும் கலை விழாக்கள் அல்லது இதனால், கலை விழாக்கள் கருத்துப் பரிமாற்றக் கருவிகளாக பயன்படுத்தலாம் என்பதை மறுக்கவில்லை. அதற்கும் மேலாக, அன்றாட வாழ்வில் உள்ள டங்கிய ‘கலாச்சாரத்தை’ தட்டி எழுப்பக்கூடிய தொடர்ந்து செயலாற்றும் சமூக நடவடிக்கை யாகவே நாம் கலாச்சார நடவடிக்கையைப் பார்க்கிறோம். மக்கள் சமூகத்தில் முற்போக்கு வாதத்தை தீவிரப்படுத்தப் பயன்படும் குறுக்கீடு களின் ஒரு வகைதான் கலாச்சார நடவடிக்கை என்பது.
வாழ்க்கையை மேலாதிக்கத்திலிருந்து விடு தலை பெறச் செய்ய தேவைப்படும் சாத்தியக் கூறு களை உருவாக்க, சமூகத்தில் நிலவும், ஏற்றத்தாழ் வின்றி இருப்பதுபோல் காணுகின்ற, அமைதி யான நடுநிலையை (நளூரடைiசெரைஅ) குலைப்பது அவசியம் என்று அந்தோணியோ கிராம்ஷி கூறு வார். இதை செயலாற்றுவதற்கு மனித முயற்சியை முன்னிறுத்தும் நோக்கம்தான் கலாச்சார நட வடிக்கையின் அடிப்படை நோக்கமும் கூட.
தடையாக உள்ள மூன்று காரணிகள்
இத்தகைய நோக்கம், ஏதோ இந்திய சமூக இயக்கங்களின் அனுபவத்திற்கு அந்நியமான நோக்கம் அல்ல. அப்பாற்பட்டதும் அல்ல. பல சமூக இயக்கங்கள் அவர்கள் விரும்பும் மக்கள் பகுதியினரை சென்றடைய பலவிதமான சலா சார வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் போன்ற மக்கள் அறிவியல் இயக்கங்கள் மக்கள் வாழ்க்கையின் வாடிக்கையான செயல்களிலும் வழக்கங்களிலும் குறுக்கிடுவதன் மூலம் அவர்களின் கலாச்சார உணர்வுகளில் மாற்றத்தைக் கொண்டுவர முயற் சித்து வருகின்றன. மறுபக்கம், சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட், மானவீயம் (முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலைவிழா முயற்சிகள் போன்ற) இயக்கங்கள் இன்று நிலவும் சமூக உணர்வுகளை எதிர்கொண்டு சவால் விட கலை வடிவங்களின் ஆற்றலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளன. தற்போது நிலவும் சமூக நிலையை, சக்தியோடு கேள்வி கேட்க இந்த இயக் கங்களின் சாதகமான பங்களிப்பை கணக்கில் கொள்ளும். அதே சமயத்தில் ‘கலாச்சார நட வடிக்கை’ என்பதன் அர்த்தத்தை வடிவ ரீதியாக வும் சரி, உள்ளடக்க ரீதியாகவும் சரி; புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த புதிய அர்த் தத்தின்படி, தொடர்ந்த, தீவிரமான குறுக்கீடுகளின் மூலம் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்ற, சமூக மாற்றத்தை அடைய, கலாச்சாரம் மையமான கருவியாக மாற்றப்பட வேண்டும்.
ஆனால், இன்றைய சூழலில், சமூக மற்றும் சித்தாந்த நிலைகள் சார்ந்த பல காரணிகள் இத் தகைய கலாச்சார நடவடிக்கை செயலாற்றப்படு வதற்கு தடைகளாக உள்ளன. மூன்று காரணி களை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
  1. தனி நபருக்கும் வெளி உலகத்திற்கும் இடையே உள்ள மாறிக் கொண்டிருக்கும் உறவு
  2. சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கமும் அதனுடன் தொடர்பு கொண்ட நுகர்வு கலா சாரத்தின் பெருக்கம்
  3. மதம் சார்ந்த உணர்வுகள் வகுப்பு வாதத் தின் வளர்ச்சி
    இவை அனைத்தும் உண்மை சமூகச் சூழலுக்கு புறம்பான ஒரு குறுகிய கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு பங்களிக்கின்றன.
தனி நபர்கள் அந்நியமாகின்றனர்
சமூதாயப் பிரச்சனைகள் தனிநபரின் அக் கறைக்கு அந்நியமாகிப்போகும் போக்கு வளர்ந்து வருகிறது. முதலாளித்துவம் போற்றும் போட்டி மனப்பான்மையினாலோ என்னவோ, தனிநபரின் மனதில் சமூதாயத்திற்கு இடமில்லை என்றாகி விட்டது. பொது வாழ்க்கை தனி நலனும் தீவிர அக்கறை பெறும் விஷயங்களாக மாறிவிட் டன. தனி நலனுக்கு உண்டாகியுள்ள நெருக்கடிக் கான விடைகள் தேடுவதிலேயே அதிகமான ஈடுபாடு வளர, சமூக நலனின் மேல் தனிநபருக்கு அக்கறை அறவே இல்லாமல் போய் விட்டது. தனிநலன் என்பதையே சமூகப் பொதுநலனிடம் சரணடையச் செய்த மறுமலர்ச்சி மற்றும் தேசிய விடுதலை இயக்க கால வரலாற்றிலிருந்த போக் கிற்கு எதிராக இந்தப் போக்கு அமைகிறது. சமூக நலத்தின் மீது அக்கறை கொண்டு, கலாச்சார நட வடிக்கைகளை ஊக்குவித்து செயலாற்றக்கூடிய நபர்களின் எண்ணிக்கை சொற்பமாகி வருகிறது.
நுகர்வியம்
கடந்த சில வருடங்களாக மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் ஏற்படுவரும் மாற்றங்களின் காரணமாக தனிநபர் நெருக்கடி மேலும் தீவிர மாகியுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தின் தன்மை மாறி உள்ளது. உலகமயமாக்கல், இது வரை காணாத அளவில், வர்த்தகப் பொருட்கள் மீதான மோகத்தையும், அவற்றை அடையக் கூடிய சாத்தியத்தை பெருக்கி உள்ளது. பன் னாட்டு மூலதனம் ஒரு புதிய தன்மை கொண்ட சந்தையை உருவாக்கியதோடு அதனுடன் சேர்ந்த ஒரு புதிய கலாச்சாரத்தையும் உருவாக்கி உள்ளது. தனிநபரும் இந்த கலாச்சாரத்தை தன் இஷ்டப் பட்டு உட்கொள்ளவில்லை. மாறாக இந்த கலாச்சாரம் தனிநபர் மேல் வலிமையாகத் திணிக்க ப்படுகிறது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதுபோல், சந்தையின் சக்தி கட்டுக்கடங்காமல் வளர்ந்து, நுகர்வுப் பொருள் மோகம்தான் மக்களின் கலாச்சாரம், மக்களின் சித்தாந்தம் என்பது போன்ற நிலை உருவாகி உள்ளது. இது தன்னிலைக்கு மீறிய பொருளாசைகளை உருவாக்கியுள்ளது. உண்மை நிலைமைக்கும் உருவாக்கப்பட்ட ஆசைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டில் எழும் மனக் கலக்கத்திலும் ஏக்கத்திலும் தவிப்பிலும்தான் மத உணர்வுகளும் வகுப்பு வாதமும் கொழுந்துவிட்டு எரிகின்றன. பல தனிநலன் குறித்த பிரச்சனை களுக்கு ஆன்மீகத்தில் விடை காண முயலும் போக்கு வளர்ந்திருப்பதும் மேற்குறிப்பிட்ட முரண்பாட்டின் வெளிப்பாடே.
பண்பாட்டில் இயங்குவது…
மென்மேலும் அந்நியப்பட்டுப் போகும் தனி நபரை சமூக வட்டத்திற்குள் கொண்டு வருவதே கலாச்சார நடவடிக்கையின் செயல் நோக்கம். அதை இரண்டு விதமான செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம். ஒன்று, சிந்தனைப் பூர்வமாக, மற்றொன்று ஆக்கப்பூர்வமான செயல்களினு டாக. சமூக அரசியல் இயக்கங்களுக்காக கலை வடிவங்கனை பயன்படுத்தும் பண்பாடு காலனிய எதிர்ப்பு இயக்கம் முதல் பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி. இன்றைய இந்தியாவிலும் பல இயக்கங்கள் இதே முயற் சியை பல புதிய பரிமாணங்களுடன் மேற்கொள் ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வகுப்பு வாதத்திற்கு எதிரான இயக்கத்தில் இசை, ஓவியம், வீதி நாடகங்கள் ஆகிய வடிவங் களை தனது கருவிகளாக பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறது. சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட் (ளுஹழஆஹளுகூ) என்ற இயக்கம் ஒருங்கிணைக் கப்படாமல் இருந்தாலும், பல்வேறு இயக்கங் களின் சிறந்த முயற்சிகளினால் இந்த வடிவங்களைப் பயன்படுத்தி சமூக உணர்வில் ஒரு தாக்கத்தை ஏற் படுத்த முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் குறைபாடு என்ன? இவை அங்கொன்றம் இங் கொன்றுமாக அவ்வப்போது நடக்கின்றன. ஆகையால், மக்கள் கவனத்தை தொடர்ச்சியாக ஈர்க்கும் பணியை இவை செய்ய முடியாது.
இதற்கு மாறாக, கலாச்சார நடவடிக்கைகளை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாற்றுவதற் கும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் சாத்தியம். நூல் விற்பது, கதர், ஆசிரம வாழ்க்கை ஆகியவற்றை வெகுஜன மக் களைத் திரட்டும் பணியில் வலுவானக் குறியீடு களாக காந்தியடிகள் வியக்கத்தகுந்த வகையில் பயன்படுத்தி பல முன்னுதாரணங்களைத் தந் துள்ளார்.
ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் கலாச்சார நடவடிக்கையை மேற்கொள்வதன் முக்கிய அம்சம் கலாச்சார சமூகங்களை உருவாக்குவது. இரு வகையான சமூகங்களை உருவாக்குவது சாத்தியம். 1கற்பனை சமூகங்கள் , 2.உள்ளூர் சமூகங்கள் என்பன.
கற்பனை சமூகங்கள் சில பொதுவான நெறி களையும் ஆர்வத்தையும் உணர்ந்து உள்வாங்கி இருப்பவை. இதன் அங்கத்தினர், அவர்களுக்கு விருப்பமான நெறிகளுக்கும் ஈடுபாட்டிற்கும் வித்திட்ட ஒரே தோற்றுவாய் அல்லது மூலக் கருத்தாடலோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொள்பவர்களாக இருப்பர்.
கற்பனை சமூகங்கள்
மத்திய பிரதேசத்தில் ‘ஏகலைவன்’ என்ற அமைப்பின் கல்வி குறித்த குறுக்கீடுகள், ஈடுபாடுகள் கற்பனை சமூகத்தை  விளக்குவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கல்வியில் இவர்கள் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளின் மூலமாக, சில பொதுவான கருத்துகளை உரு வாக்கி உள்ளனர். ஆனால் இதன் அங்கத்தினர், முறையான கருத்துப் பரிமாற்றத்தினை அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு சோதனையில் ஈடுபடுவதோ, இல்லாமல் இருக்கலாம். ஆனால் ‘ஏகலைவன்’ ஒரு குறிப்பிட்டத் துறையில் தனது ஈடுபாட்டின் மூலமாக, இந்த ஈடுபாடு உரு வாக்கிய தாக்கத்தின் மூலமாக, கண்ணுக்கு புலப் படாமல் இருப்பினும் பலர், இது நமது இயக்கம், நான் ஆமோதிக்கும் கருத்தாடலைக் கொண்டது என்று உணர்ந்து செயல்படக் கூடிய கற்பனை சமூகத்தை உருவாக்கி உள்ளது.
உள்ளூர் போராட்டங்கள்
உள்ளூர் சமூகங்கள் செயல்படும் நிலை முழு வதும் மாறுபட்டது. அவர்கள் உள்ளூர் பிரச் சனைகளை மையமாக வைத்து செயல்படுவதி னால் இவற்றை நாம் ‘உள்ளூர் சமூகங்கள்’ என்று கூறவில்லை. மாறாக, இவை செயல்படும் விதத்தி லும் தன்மையிலும் இருக்கவேண்டிய மாற்றத்தை வைத்தே உள்ளூர் சமூகங்கள் எனக் கொள்கி றோம். இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அனைவருக்கும் சம்பந்தமான ஒரு பிரச் சனைக்கு,  இவர்கள் செயலாக்கத்தை (போராட் டங்கள், ஒன்று திரட்டுதல்…) மனதில் கொண்டு, உள்ளூர் வடிவம் கொடுக்கின்றனர். ஒரு பொது வானப் பிரச்சனையை உள்ளூர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மாற்றி  செயல்படுகின்றனர் என்றும் கூறலாம். மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவின் அடிப்படையில் எழும் சுற்றுப்புறச் சூழல் குறித்த பிரச்சனைகள் இதற்கு ஓர் உதாரணமாக கூறலாம்.
சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்கெனவே மோசமான நிலைகளை ஊட்டிவிட்ட நிலையில், உலகமாயக்கலினால், இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் அதி கரித்துள்ளன. சமூக அக்கறையை வளர்ப்பதற்கும், மாற்று வழிமுறைகளைத் தயாரிக்கவும், சுற்றுப் புறச் சூழல் பிரச்சனைகளை மையமாக வைத்து ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கலாம். தமக்கு சம்பந்தப்படாத, ஏதோ தொலைதூரத்தில் உள்ள ஒரு  பிரச்சனை என்பதைவிட இது நம் உள்ளூர் பிரச்சனை என்றக் கண்ணோட்டம் மக்களிடம் அதிக ஆர்வத்தை தூண்டக்கூடும். அதேசமயம், சுற்றுப்புறச்சூழல் சார்ந்த பிரச் சனைகள், நாட்டில் உள்ள சந்து மூலை முடுக்கு களுக்கும் பொருந்தும் என்பதால் உள்ளூர் பிரச் சனைகளுக்கு ஒரு தேசியத் தன்மையும் உண்டு. ஆனால் ‘உள்ளூர் சமூகம்’ என்பது ஏதோ ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க சொல்கின்றனர் என்று நினைத்துவிட வேண்டாம், ஸ்தாபனம் அல்ல ஆனால் ஒரு கூட்டுத்தன்மை. இந்தக் கூட்டுத் தன்மையால் பங்கேற்கும் தகுதி உறுப் பினர் சந்தா கொடுத்து சேர்வதால் கிடையாது. ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினால் உள்ளூர் பிரச்சனைகளில் தலையிடுவதால் மட்டுமே ஒருவரால் இந்தக் கூட்டுத்தன்மையின் பங்கேற் பாளராக ஆகமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் பொருத்தமான பலவிதமான, எண்ணிலடங் காதப் பிரச்சனைகளை நம்மால் கண்டறிய முடியயும். ‘உள்ளூர் சமூகங்கள்’ தனிப்பட்டு செயல்படும் கூட்டமைப்புகளும் இல்லை. இவை, இன்றைய கலாச்சார, சமூக, அரசியல் சூழலுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டியவை.
மக்களை ஈர்க்க வேண்டும்
சமூக உணர்வை உருவாக்குவதற்கு தொடர்ச்சி யான செயல்பாடுகள் கட்டாயம். இதற்கான வாய்ப்பு உள்ளூர் சமூகங்களை உருவாக்குவதி னால் பெருகும் என்பதுதான் இச்சமூகங்களின் சிறப்பம்சம். அரசியல் கட்சிகளும், அவற்றின் பல அமைப்புகளும் கடைபிடிக்கும் பிரச்சார போராட்ட முறைகள் தன்னிச்சையான முறை யிலோ அல்லது இங்கொன்றும் அங்கொன்று மாக, அவ்வப்போது நடப்பதால் ஒருமுகமானத் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. மேலும், இம்முறைகள் பெரும்பாலும் தங்களது உறுப் பினர்களை மட்டுமே எல்லையாகக் கொண்டு அமைகின்றன. பல சமயங்களில் இவை பொது வான அனுதாபத்தைக்கூட பெறத் தவறிவிடு கின்றன. ஜனநாயகப் போராட்டங்களின் கட் டாயமானப் பங்காக இந்த முறைகள் இருந் தாலும், தற்போதுள்ள சமூக சூழலில் இவை எந்த அளவிற்கு தேவைப்படும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன என்பது குறித்து தீவிரமான மறுபரி சீலனை தேவை. இதற்கு மாறாக, ‘உள்ளூர் சமூ கங்களின்’ செயல்பாடுகளும், ஈடுபாடுகளும் அமைதியான முறையில்  குறிப்பிட்ட  பிரச்சனைகளின் அடிப்படையில், கூட்டுப்பொறுப்பை மையமாகக் கொண்டு ஆழமான உறவுகளை மக்களிடையே உரு வாக்கும் தளமாக மாறும் தன்மை படைத்தவை.
கலாச்சார நெருக்கடி
மக்கள் சமூகத்தில் முற்போக்கு சிந்தனையைத் தீவிரப்படுத்துவதுதான் கலாச்சார நடவடிக்கை யின் மையநோக்கம். இதன் முதற்படி உலகமய மாக்கல் சார்ந்த கருத்தாடல்களின் பிடியிலிருந்து மக்கள் சமூகத்தை மீட்பதும், வகுப்புவாதம் வளரக் காரணமாய் உள்ள காரணிகளை களைந் தெறிவதும்தான். உலகமயமாக்கலுக்கும் சரி, வகுப்புவாதத்திற்கும் சரி. இவை இரண்டு சாதக மான கருத்துகளுக்கு இன்றைய இந்திய சமூகத் தில் பஞ்சமில்லை. இத்தகைய கருத்துகள் சக்தி மிக்கவை. பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடி யவை.
உலகரீதியான சக்திகளின் ஆதரவிலும் ஊக் கத்திலும் உலகமயமாக்கலுக்கு சாதகமான கருத் துகள் உருவாக்கப்படுகின்றன. ‘சங்கப் பரிவாரத் தின்’ சமூக – கலாச்சார அமைப்புகளின் மூலம் வகுப்புவாதத்திற்கு ஆதரவான அரசமைப்பு நேரடியாக உடந்தை, உலகமயமாக்கல் மூலம் இந்தியப் பொருளாதாரம் மோசமாக பாதிப்புக் குள்ளாகிய போதும், பெரும்பான்மையான மக்களின் தேவைகளை பிரதிபலிக்காத சந்தை இன்று செல்வம் கொழித்து கிடக்கிறது என்ற செயற்கையான பிரம்மையை உருவாக்குவதில் வெற்றி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய ஆப்பிள் பழங்களுக்கு ஈடாக மோட்டார் வாகனங்கள் பெருத்துக்கிடப்பது என்ற உதாரணம் சாதாரண மனிதனின் தேவையை இந்த சந்தை கணக்கில் கொள்ளவே இல்லை என்பதை நிரூபிக்கின்றது. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் ஆதரவினாலும், அமோகமான வரவேற்பினாலும், உலகமய சக்திகள் இன்று, அடிமட்டங்களில் கூட வர்த் தகப் பொருட்கள் மீதான மோகத்தை கிண்டி விடும் புதிய கலாச்சார சுவையை ஏற்படுத்தி உள்ளன.
பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைக் கான அடிப்படைத் தேவைகளே பகற்கனவாக உள்ள இந்தியா போன்ற பரந்த நாட்டில் வர்த் தகப் பொருள்மீதான மோகம் சார்ந்த கலாச்சாரம் அடிப்படையில் முரண்பாடான ஒன்று. ஏனெ னில் இது பலரிடையே புதிய எதிர்பார்ப்பு களையும், சலுகைகளையும், சாத்தியங்களையும் தூண்டிவிடுகிறது. இவர்கள், இதுவெல்லாம் நம் பகுதிக்கு அப்பாற்பட்டவை என்று உணரும் போது, தங்களை ஏற்கனவே கவ்வியிருக்கும் அலாதியான வாழ்க்கை மீது மேலும் வெறுப் படைகின்றனர்.
இந்தப் பொருள் மோகம் நடுத்தர வர்க்கத்தி னர் இடையே வேறுவிதமானத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மோகத்தினால் அவர்கள் தழுவி ஏற்றுக் கொள்ளும் பொருள் சார்ந்த புதிய நவீனத்துவம் அவர்களிடையே ஒரு கலாச்சார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடன் வாங்கி ஏற்றுக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையில் வட்டத்திற்குள்ளாக அவர்களால் இந்த நெருக் கடிக்கான விடைகளை காண முடியாமல் போகி றது. இதன்மூலம், தனது வேர்களை நோக்கியத் தேடலில் ஈடுபடும் முயற்சி கட்டாயப்படுத்தப் படுகிறது. இவர்கள், தமது வேர்களை, மதரீதியாக வரையறுக்கப்பட்ட கடந்தகால கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் கண்டெடுக்க விரும்புகின்றனர். இந்தக் கலாச்சார நெருக்கடி அரசியல் படுத்தப் படும்போது தான், நடுத்தர வர்க்கம் வகுப்பு வாதத்திற்கு தமது விமர்சனமற்ற ஆதரவை முழுமையாக அளிக்கிறது. இதன் பெயர்தான் கலாச்சார தேசியவாதம் என்று கூறுப்படுகிறது. மேற் கத்திய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்ட ஒரு கலாச்சார அடையாளத்தை மேன்மைப்படுத்தி முன்னிறுத்துவதுதான் கலாச்சார தேசிய வாதத் தின் நோக்கம். எனவே, உலகமயமாக்கலுக்கும் கலாச்சார தேசியவாதத்துக்கும் இடையே ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. இந்த முரண் பாட்டை மறைக்கத்தான் ஆளும் வர்க்கங்கள் அதன் சிந்தனையாளர்களும் ‘சுதேசி’ என்ற முகமூடியை கண்டுபிடித்துள்ளனர். உலகமயமாக் கலுக்கு ஒரு மனிதாபிமான பரிணாமத்தை அளிக்க முற்படுவதுதான் ‘சுதேசி’ என்ற கோஷம். இருப்பினும், சந்தையின் ஆதிக்கம் மேலும் மேலும் ஊடுருவ, இந்த முரண்பாடு தீவிரமாகி றதே ஒழிய மறையவில்லை.
அதேசமயம் எதிர் காலாசார நடவடிக்கை களை முடுக்கிவிடவும் அதற்கு தேவையான தளத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், இந்த முரண் பாடுதான் உள்ளூர் சமூகங்களை தங்களை ஆயத் தப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது.
இடதுசாரிகளின் முயற்சி
இதுவரையில் உலகமயமாக்கலிற்கும், வகுப்பு வாதத்திற்குமான எதிர்ப்பு, அரசியல் சார்ந்த எதிர்ப்பை தாண்டி செல்லவில்லை. இடதுசாரி சக்திகளின் முன்முயற்சியினால், வேலை நிறுத்தம், தர்ணா, ஆர்ப்பாட்டம் என பல வழிமுறை களினால் இந்த எதிர்ப்பு நன்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதற்கான சமூக எதிர்ப்பு தகுந்த முறையில் வளரவில்லை. பன்னாட்டுக் கம் பெனிகளின் சந்தையை சார்ந்த சில கடைகளைத் தாக்குவது (கர்நாடகாவில்) போன்ற சில நேரடி யான எதிர்முறைகள் நடற்துள்ளன. ஆனால் அரசின் குறுக்கீட்டின் காரணமாக, இவற்றை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. பல சமயங்களில் இவற்றால் செயல்படுத்த முடிய வில்லை. பல சமயங்களில் இவற்றால் பொதுமக் களின் அனுதாபத்தை சம்பாதிக்க முடியாமல் போய் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி உள்ளன. பன்னாட்டு கம்பெனிகளின் பொருட் களை புறக்கணிப்பது என்ற ஒரு மாற்றையும் பலர் கூறுகிறார்கள். ஆனால், இக்கம்பெனிகள் நாட்டுச் சந்தையில் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஊடுருவலையும்  இதற்கு அரசின் மறைமுகமாக ஆதரவையும் கணக்கில் கொண்டால் இந்த மாற்று ஒரு பகற்கனவாகவே தெரிகிறது.
புரிந்துகொள்ள வேண்டிய சிக்கல்
வகுப்புவாதத்திற்கான எதிர்ப்பும் இதே சிக்கலில்தான் மாட்டிக் கொண்டுள்ளது. இருப் பினும், பல்வேறு கொள்கை ரீதியான வேலை களின் மூலம் வகுப்புவாத எதிர்ப்புணர்வை கட் டமைக்க குறிப்பிடத்தக்க பல முயற்சிகள் நடந் துள்ளன. இன்று இந்துமத வகுப்புவாதம் ஆட் சியைப் பிடித்துள்ளது. இது ஏதோ அவர்களின் அரசியல் பணியினால் மட்டுமல்ல; சமூக, கலாச்சாரத் தளங்களில் அவர்கள் செய்த தளராத தொடர்ச்சியான செயல்பாட்டினால்தான். இதுவேதான், இன்று நாட்டில் மேலோங்கி இருப்பதுபோல் காணப்படும் மதம் சார்ந்த உணர்வுகள் வளர பங்களித்துள்ளது. அமைப்பு ரீதியாக திரட்டப்படும் மத உணர்வுகளும், ஆன்மீகமும் கொடுக்கும் தளத்தில்தான் வகுப்பு வாதம் மக்கள் சமுதாயத்தில் ஊடுருவிப் பரவு கிறது. மதம் சார்ந்த உணர்வுகளையும், ஆன்மீக உணர்வுகளையும் அமைப்பு ரீதியாகவும் பிரம் மிக்கத்தக்க வகையிலும் பொதுப்படையாக வெளிப்படுத்தும் போக்கு கடந்த சில வருடங் களில் வளர்ந்துள்ளது. ஆகையால் ஆன்மீக உணர்வுகளுக்கும் வகுப்புவாதத்திற்கும் உள்ள வேறுபாடு சமூகத்தின் பார்வையில் வேகமாக மறைந்து வருகிறது.
மக்கள் சமூகத்தின் பொதுப்படையான சிந்தனையோட்டத்தை மாற்றுவதும், அதன்மீது தீவிரமானத் தாக்கத்தை உருவாக்குவதும் தான் கலாச்சார நடவடிக்கையின் பயன். இதை மறுப்பு மற்றும் எதிர்ப்புகள் மூலமாக மட்டும் அடைந்து விட முடியாது. மறுப்பும் எதிர்ப்பும் கட்டாயத் தேவைகள். ஆனால் போதுமானவை அல்ல.
முடிவாக…
உலகமயமாக்கலும் வகுப்புவாதமும் உரு வாக்கி உள்ள பொதுச் சிந்தனையை குலைக்க, பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் ஒரு எதிர்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை. இது எப்படி சாத்தியம்? நமக்கே உரிய கலாச்சார பாரம்பரிய மூலங்களை ஆதாரமாகக் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைத்து தொடர்ந்து ஈடுபடும் அதேவேளையில் பிற் போக்குவாதத்திற்கு ஆளாகிப் போகாமல் செயல்படுவதுதான் ஒரே வழி.
அந்நியோன்னியமான முறையில் உள்ளூர் கலாச்சார வாழ்க்கையில் தொடர்ச்சியான தலை யிடக்கூடிய ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கு வதுதான் எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் கட்டாயமானத் துவக்கப்பணி.
இந்த எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் பணி யில் சமூக – அரசியல் மேலதிகாரத்துடன் மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த மோதலுக்கு, உள்ளூர் மற்றும் தேசியப் பரிமாணங்கள் விஷயங்களில் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துவது. இது அடுப்பெரிக்க விறகு சேர்ப் பதும், குடிக்க தண்ணீர் பெறுவதிலும் இருந்த, கடந்தகால வரலாற்றிலும் பண்பாட்டிலும் தனக்கே உரித்தான பங்கையும் இடத்தையும் கோருவது வரை அடங்கும். இவை தேசியத்தை கட்டமைக்கும் முயற்சியிலும் தாக்கத்தை ஏற் படுத்தக்கூடியது என்பதால், உள்ளூர் சமூகங்கள் போற்றும் கலாச்சாரம் பல்வேறு பண்பாட்டு ரீதியான சமூகங்கள் பல்வேறு வகைகளில், பல பகுதிகளில் வெளிப்படுத்திய கலாச்சாரங்களை ஆதாரமாகக் கொண்டது. இத்தகைய அடிமட்ட, உள்ளூர் சார்ந்த பரிமாணங்களை (இவை உள்ளூர் சம்பந்தப்பட்டவை மட்டுமே என்று கருதாமல்) முடிந்த அளவிற்கு வேறுபாடு களோடு வெளிப்படுத்துவதுதான் இன்று உலக மயமாக்கலும், வகுப்புவாதமும் வேறுவேறு பாணியில் அடைய முயலும் – ஒரேவிதமான பண்பாட்டை – ஒரே தேசியத்தை -முறியடிக்கும். இந்த கண்ணோட்டத்திலான, கலாச்சார நடவடிக்கை என்பது கலாச்சாரத்தையும் தாண்டி சமூகத்தையும் அரசியலையும் தன்னுள் ஒரு அம்சமாகப் புரிந்து செயல்படக்கூடியது. அப்படியெனில், கலாச்சாரமும் அரசியல்தானே!

பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்

உலகமயமாக்கலுக்கும், தாரளயமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைபாடு பண்பாட்டின் வழியாக மிகப்பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் நாம் இன்று வாழ்கிறோம்.
பண்பாடு, உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதலில் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாவதாக அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது.
மேலும், இதைப் புரிந்துகொள்வதற்கு பண்பாடு என்பது எந்தப் பொருளில் இங்கே குறிக்கப்படுகிறது? என்பதையும், மேலாதிக்கம் என்பதன் பொருள் என்ன? என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
பண்பாடு என்பது என்ன?:
பண்பாடு என்பது இங்கே கலை, இலக்கியம் மட்டுமே அல்ல. அது மக்கள் சமூகத்தின் வாழ்வு முறைகள் அனைத்தையும் குறிக்கிறது. நமது உடைகள், உணவுப் பழக்கங்கள், நாம் வாழும் வீடு என எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள் ஆகும்.
வாழ்க்கையின் வெற்றி, அழகு பற்றிய நமது கருத்துக்கள் எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள். கலையும், இலக்கியமும் இந்த அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றிற்கு உருவகம் கொடுக்கின்றன. நல்ல கலையும் இலக்கியமும் இந்த அர்த்தங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது.
மேலும் பண்பாடு நம்முடைய குடும்பங்களிலும், சமூகக் குழுக்களிலும், கல்வி நிலையங்களிலும் தொடர்பு ஊடகங்களின் மூலமாகவும் – விமர்சனமற்ற முறையில், உணர்வுப்பூர்வமில்லாமல் நம்மை வந்தடைகிறது.
பண்பாடும், மேலாதிக்கமும்:
இதனை மேலும் புரிந்துகொள்வதற்கு பண்பாட்டிற்கும், அரசின் கொள்கைக்கும், மேலாதிக்கத்திற்கும் இடையேயுள்ள உறவைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கிராம்சி அரசைப் பற்றிக் குறிப்பிடும்போது கூறுகிறார்: “ஆளும் வர்க்கங்கள் அதன் அதிகாரத்தை முழுச் சமூகத்தின் மீதும் இரண்டு விதங்களில் செலுத்துகின்றன. ஒன்று – ஆளும் வர்க்கங்களின் அரசு மற்றும் அதன் அங்கங்களான காவல்துறை, ராணுவம், சட்டங்கள் மூலமாக பலாத்காரத்தை பிரயோகிக்கின்றன. ஆளும் வர்க்கங்களின் பொருளாதார பலம், அரசை அவற்றின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் துணையாகின்றன.
இரண்டாவதாக, ஆளும்வர்க்கங்களின் அதிகாரம், ஆளப்படுபவரின் ஒப்புதலோடு செலுத்தப்படுகிறது. முதலாளித்துவ சமூகத்தின் உறவுகளை அதன் அடிப்படைக் கூறுகளான மூலதனத்திற்கும் உழைப்பிற்குமான இடைவினையைப் புரிந்துகொள்வதன் வழியாகத்தான் உணர முடியும். இந்த சமூக உறவுகள் பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார அமைப்புக்கள், பண்பாட்டு ஸ்தாபனங்கள் போன்றவற்றில் வேர்விட்டுள்ளன.
ஒரு வகையான நிறுவனங்கள் அதன் ஏகபோக பலாத்காரத்தின் மூலமாக காவல்துறை, சட்டம், வரி, நிதி, வர்த்தகம், தொழிற்சாலை சம்பந்தமான நிர்வாகத் துறைகளை உள்ளடக்குகின்றன. இவை அனைத்தும் இணைந்து அரசு என்றாகிறது. மற்ற அனைத்தையும் கிராம்சி ‘சிவில் சமூகம்’ என்று அழைக்கிறார். இந்த சிவில் சமூகத்தின் மூலமே மேலாதிக்கம் நிறுவப்படுகிறது.
அரசும் – சிவில் சமூகமும்:
அரசிற்கும் சிவில் சமூகத்திற்குமான உறவை நாம் எப்படி புரிந்துகொள்வது? செவ்வியல் அரசியல் (classical politics) அதிகாரம் அரசிடம் குவிந்துகிடக்கிறது. எனவே, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதே மைய நோக்கம் என்பதாகிறது. அதாவது 1917 ஆம் ஆண்டில் குளிர்கால அரண்மனையைத் தாக்கி கைப்பற்றுவதும், தொழிலாளி வர்க்கம் இந்த அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பே சோசலிசத்தைக் கட்டமுடியும் என்பதாகிறது.
கிராம்சி, அதிகாரம் சிவில் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது; கூடவே அது அரசின் கையிலும் உள்ளதென்கிறார். அரசைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பலமான கோட்டைகளாக, மதில் சுவர்களாக, சிவில் சமூகம் உள்ளது. இந்தக் கோட்டைகளைத் தகர்க்காமல் குளிர் கால அரண்மனையை அணுக முடியாது.
குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றிய பின்பும் இந்தக் கோட்டைகளின் உள்ளிருப்புப் reserve army விழுங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அரசு, இந்த சிவில் சமூகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. அரசின் இந்த அரணைத் துளைத்து உள்ளே சென்றாலும் சிவில் சமூகத்தின் reserves அவற்றை அடைத்து சரிசெய்துவிடும்.
தயாரிக்கப்படும் ஒப்புதல்:
நோம் சாம்ஸ்கி, வெகுஜன ஊடகங்கள் குறிப்பாக பத்திரிக்கைகளும் தொலைக்காட்சியும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக எவ்வாறு இந்த ஒப்புதலைத் தயாரிக்கின்றன என்பதை விரிவாக விளக்குகிறார்.
இந்த தத்துவார்த்த பிரச்சனைகளின் அடிப்படையில் அதிகார உறவுகளைப் புரிந்துகொள்வதிலேயே அடங்கியிருக்கிறது. இதுகாறும் நாம் உற்பத்தி உறவுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றிய ஆய்வில் மட்டுமே மையம் கொண்டிருந்தோம்.
உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், அடிப்படையில் அன்னிய மூலதனத்திற்குள்ள சில தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அகற்றுவதையே நோக்கமாகக் கொண்டவை.
தொழில் முதலாளிகளின் மிக உச்ச லாபத்திற்கு உரிமை அளிப்பதே இதன் அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட சுதந்திரமான சந்தையில் அதிக ஆதாரங்களை உடையவர்கள் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் முதலாளிகளுமே பெரும் ஆதாயங்களை அடைவார்கள். ஏழைகள் பாடோ, சொல்ல வேண்டியதில்லை.
காலனியாதிக்கமும், உலகமயமாக்கலும்:
இதுதானே காலனியாதிக்கத்தின் அர்த்தமும், பிரட்டனின் காலனியாக நாம் இருந்தபோது நமது சந்தைகள் அவர்களுக்காக திறந்துவிடப்பட்டது. அவர்களுக்குத் தேவையான எந்த கச்சாப்பொருளையும் அவர்களே எடுத்துச் செல்லலாம். அவர்கள் நிர்ணயித்த விலையில் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் நினைத்த கம்பெனிகளைத் திறந்துகொள்ளலாம். அவர்களுக்கு வேண்டிய எந்தப் பொருளையும் இங்கே விற்கலாம்.
காலனி ஆதிக்கம் பலாத்காரத்தோடு அதிகாரத்தைக் கைப்பற்றியது. உலகமயமாக்கல் இன்று பண்பாட்டின் ஊடாக நடந்தேறி வருகிறது. மின்னணு ஊடகங்களின் மூலமாகவும் தொலைக்காட்சிகளின் மூலமாகவும் இது ஊடுபரவுகிறது.
நமது மத்தியதர வர்க்கத்தின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தங்களுக்குத் தேவையான மிக முக்கியமான தேவைகளையும் புறந்தள்ளிவிட்டு மற்றொரு பொருளை அடைவதற்கான முயற்சியே நுகர்வியம் – consumerism.
நுகர்வியம் என்பது :
ஒரு டெலிவிஷன் அல்லது வாஷிங் மெஷின் வாங்குவதென்பது அடிப்படையில் நுகர்வியம் ஆகிவிடாது. ஆனால் இதனைப் பெற்றிடும் முயற்சியின்போது அதைவிட ஒரு முக்கிய செலவை, தேவையைப் புறக்கணிக்கும்பொழுது (உதாரணத்திற்கு ஒழுகும் வீட்டைச் சரிசெய்ய அல்லது மகளின் கல்விக்கான செலவைத் தள்ளிவிடும்போது) அது நுகர்வியம் ஆகிறது.
தேவையற்ற போலித் தேவைகளை உருவாக்கிக் கொள்வது – தான் வாழும் சமூகக் குழுக்களிடையே ஒரு பொருளை உபயோகிக்கும் திருப்தியில்தான் நுகர்வியம் அடங்கியிருக்கிறது. இதைத்தவிர உலகமயமாக்கல் இங்கே இவர்களின் தேவையையொட்டி நியாயப்படுத்தப்படுகிறது.
உலகமயமாக்கல் சில குறிப்பிட்ட விழுமிய கட்டமைப்புகளைக் கொண்டுவருகிறது. ஒருவன் செல்வந்தனாக இருப்பது மிக உன்னதமாகக் கொள்ளப்படுகிறது.
ஏற்கப்படும் ஊழல்:
எப்படியாயினும், செல்வம் சேர்ப்பது எந்த வகையிலேனும் சேர்ப்பது என்பது வெற்றியின் அளவுகோலாக உள்ளது. இந்த விழுமியங்கள் வர்க்கங்களைக் கடந்து ஆட்டிப்படைக்கிறது. அது சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் சென்று தாக்குகிறது. அவர்களை பாழ்படுத்தி துரிதமாகவும், மிக விரைவாகவும் செல்வந்தனாக மாறுவதற்கான போட்டியில் அவர்களைத் தள்ளிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘ஊழல்’ ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகியுள்ளது.
இந்த மேலாதிக்கத்திற்கு எதிராக நாம் எவ்வாறு போராடுவது?
நம்முடைய உணர்வுகளின், நம்முடைய விழுமியத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ள இந்த சக்திகளை எதிர்த்து நாம் எப்படி போராடப்போகிறோம்?
ஆளும் வர்க்கங்கள், விழுமியங்களை எல்லோருக்குமானதாக மாற்றிவிட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் வெகுஜன எழுச்சியே சாத்தியமாகுமா? என்ற கேள்வி உள்ளது.
இந்தக் கேள்விக்கு கிராம்சி கூறுவது என்ன?
இத்தகைய ஒரு நிலைமையை எதிர்த்து நியாயம் – நற்பண்புகள் – அறிவார்ந்த சீர்திருத்தத்திற்கான ஒரு எழுச்சியை – பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தின் கட்டுப்பாட்டைத் தகர்க்க இயலும். இதற்கு எதிரான ஒரு மாற்று மேலாதிக்கத்தைக் கட்டியமைக்க வேண்டும். உழைக்கும் மக்களின் மற்றும் மாற்றத்தை விரும்பும் பிற பிரிவினரின் மேலாதிக்கமாக இது இருக்கும். இதன் மூலம் மேலாதிக்கத் தத்துவத்தினை வலுவிழக்கச் செய்யவும், அதே நேரத்தில் செயல்பாட்டிற்கான தத்துவத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் வழி பிறக்கும்.
பண்பாட்டு இயக்கம்:
கிராம்சியின் இந்த நியாயம், நற்பண்புகள் – அறிவார்ந்த சீர்திருத்தம் என்பதைத்தான் இன்று நாம் ‘பண்பாட்டு இயக்கம்’ என்கிறோம். இவ்வியக்கம், மக்களின் பல்வேறு பிரிவினரிடையிலும் விழிப்பூட்டும் பணிகளில் செயல்படும். அது அவர்களின் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்தும், அதற்கு மாற்றானதைக் காட்டும்.
பண்பாட்டு இயக்கத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், திரைப்பட கர்த்தாக்கள் எல்லோருக்கும் விழுமியங்களைக் கேள்விக்கு உட்படுத்துவதில் முக்கியப் பங்கு உண்டு. இன்று இந்த மேலாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டியதொரு அவசரம் உள்ளது.
நமது வாழ்க்கை முறையை, நமது விழுமியங்களை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள மேலாதிக்கம் செய்கிற தத்துவங்களை நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். பண்பாட்டு இயக்கம் வெறும் கலைஞர்களைக் கொண்ட ஒரு இயக்கம் மட்டுமல்ல; சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் பங்கேற்கச் செய்யும்; சிவில் சமூகத்தின் எல்லா அமைப்புகளையும் ஈடுபடுத்தும், ஒரு இயக்கமாகும்.
பொதுப் புலனறிவு:
ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் ஒரு தத்துவவாதி – ஒரு அறிவு ஜீவி. அதாவது தனக்கென ஒரு தத்துவத்தை – ஒரு உலகப்பார்வையை ஒவ்வொருவரும் கொண்டுள்ளனர். உணர்வுபூர்வமற்ற வகையில் உலகத்தைக் காணும் இந்தப் பார்வையைத்தான் கிராம்சி பொதுப் புலனறிவு என்கிறார்.
இந்த பொதுப் புலனறிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது மேலாதிக்கத் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட கருத்துக்களையும் இணைத்து வெகுஜனப் பண்பாட்டில் ஊடுருவுகிறது.
எனவே, மக்களின் பொதுப் புலனறிவு என்ற களத்தில்தான் மேலாதிக்கத் தத்துவத்தின் கருத்துக்களோடு ஒருவரின் தனிப்பட்ட அனுபவப் படிப்பினைகள் மோதுகின்றன எனலாம்.
நியாய உணர்வுகள்:
ஆயினும் மேலாதிக்கத் தத்துவத்தால் என்றைக்கும் மக்களின் நியாயமான உணர்வுகளை அடக்க முடியாது. இந்த இடத்தில்தான் நமது பண்பாட்டு இயக்கத்தின் பணி தொடங்குகிறது. இந்த பொதுப் புலனறிவை நாம் விமர்சனத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக அதனை நல்ல புலனறிவாக உருமாற்றலாம்.
மேலாதிக்க விழுமியங்களைத் தோலுரித்துக் காட்டுவதன் மூலம், பொதுப் புலனறிவுக்குள் பொதிந்து கிடக்கும் எதிரான விழுமியங்களை தோலுரித்துக் காட்ட முடிகிறது. அதன் வழி, அவர்களுக்குள் இருக்கும் சொந்த அனுபவங்களை வெளிக்கொண்டுவர முடிகிறது.
இந்தக் கருவை மையமாகக் கொண்டு ஒரு மாற்றுக் கருத்தைக் கட்டி எழுப்பி, அதனோடு ஒரு விவாதத்தை நடத்தி, புதிய கருத்துக்களை உருவாக்கிவிடலாம்.
இப்படியொரு சூழ்நிலையில், மேலாதிக்கத்திற்கு எதிராக பண்பாட்டு இயக்கத்தின் கடமை என்னவாயிருக்கும்? குறிப்பாக, உலகமயமாக்கல் இன்று பண்பாட்டை ஒரு முக்கியக் காரணியாக இருந்து அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்திடும் சூழலில், மேலாதிக்கத்திற்கு பண்பாடு ஒரு வாகனமாக பயன்படுத்தப்படுகிறது என்ற இந்தப் புரிதல், பண்பாடு ஊழியனுக்கு புதிய கற்பிதங்களையும், நடைமுறைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைத் தருகிறது.
சிந்தனைகளின் போராட்டம்:
மேலாதிக்க விழுமியங்களை கேள்விக்கு உட்படுத்துவது எப்படி? நமது சிவில் சமூகத்தின் எல்லா நிறுவனங்களிலிருந்தும் இவை செயல்படுத்தப்படுகின்றன – நிலைபெறுகின்றன என்பதையும் விளங்குவதன் மூலமே இது சாத்தியமாகிறது.
குடும்பம், சாதி, மத நிறுவனங்கள், அறிவியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரம், தொழில் உற்பத்தி – இவையெல்லாம் சிவில் சமூகத்தின் நிறுவனங்களில் நிலைபெற்று எப்படி மேலாதிக்க வர்க்கங்களுக்கு – அவர்களின் மேலாதிக்கத்திற்கு உதவி செய்கின்றன; பொதுமைப்படுத்தப்படுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
பண்பாட்டு நடவடிக்கையில் ஆதிக்க பிரிவுகள் மற்ற பிரிவினருடன் ஏற்படுத்தக் கூடிய எல்லா உடன்படிக்கைகளையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், அந்தப் பிரிவு மக்களை நமது அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
நோம் சோம்ஸ்கி கூறுகிறார்: “ஒரு சர்வாதிகாரத்தில் மக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஜனநாயகத்தில் அவர்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.”
மேற்கண்ட விஷயங்கள் இன்று பண்பாட்டுக் களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் துணையாவன. கூடவே இது தொடர்பான அறிவியல் விவாதத் தளத்தை விரிவுபடுத்தவும் பயன்படுவன.

சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்?

(கேள்வி பதில் பகுதியில் சுறுக்கமான பதில்கள் இடம்பெறுகின்றன. விரிவான விவாதம் மேற்கொள்ள விரும்பும் தோழர்கள், துணைக் கேள்விகள் அல்லது கருத்துக்களை பின்னூட்டமாக (கமெண்ட்) இடலாம் – ஆசிரியர் குழு)
சாதிக்கான அழுத்தமான உணர்வு பரவியுள்ள இந்தியச் சமூகத்தில் , குறிப்பாக அதிகார மட்டத்தில் மேலடுக்குச் சாதி உணர்வு மேலோங்கியிருப்பதை சில கட்சிகள் சாதி அடையாளத்தை வலுப்படுத்தும் வகையில் பிற்படுத்தப்பட்ட மக்களைத் திரட்டுகிறார்கள். இடதுசாரிகளுக்கு எதிராக நிறுத்துகின்றனர். தலித்துகளுக்கு எதிரான போக்குகளை ஆதரிக்கின்றனர்…
சமீபத்தில், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு நிறுவனங்களில் பின்பற்றப்படவில்லை என்கிற தகவல் வந்துள்ளது. இந்த நிலைமைக்கு எதிராகவும் அதேநேரம் தொழிலாளி வர்க்க ஒற்றுமை உணர்வோடும் அணுகவேண்டியுள்ளது.
இந்தியச் சமூகச் மேலடுக்குச் சாதி உணர்வு அழுத்தமாக உள்ள நிலையில், சில கட்சிகள் சாதிய அடையாளத்தோடு அணுகி பிற்படுத்தப்பட்ட மக்களை இடதுசாரிகளுக்கு எதிராக நிறுத்துகின்றனர். இந்நிலையில் இடதுசாரிகள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன?
-சுந்தா
“சாதிக்கான அழுத்தமான உணர்வு பரவியுள்ள இந்தியச் சமூகத்தில்” – என்று கேள்வி துவங்குகிறது.முதலில் அதற்கான விளக்கத்திலிருந்து துவங்கலாம். சாதிக்கான அழுத்தமான உணர்வு தற்போது பரவியுள்ளது என்பது உண்மையே. பிற்பட்ட சாதியினரிடம் இந்தப் போக்குகள் நாடு முழுவதுமே வளர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரண்டு தரப்பினர் வேறு வேறு காரணங்களுக்காக சாதிக்கான உணர்வை வளர்த்து சாதிரீதியான பிணைப்புக்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
சாதாரண மக்கள் தங்களது வாழ்க்கை சிக்கல்கள் ஏற்படுத்துகிற சூழலில் சாதியை நாடுகின்றனர். இன்று வேலை, கல்வி வாய்ப்புக்கள் சார்ந்த நெருக்கடிகள் தீவிரமாகும் நிலையில், தங்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காக சாதிய ஒருங்கிணைப்பு ரீதியான பிணைப்புக்களை நாடுகின்றனர். இந்தத் தரப்பினரை இடதுசாரி இயக்கம் கனிவோடு அணுக வேண்டும்.
இவர்களை சாதியப் பிணைப்பில் நிலைநிறுத்த மேலிருந்து தூண்டுகிற சக்திகளை தனியாகப் பார்க்க வேண்டும். அதாவது வன்னியர் சாதி சார்ந்த திரட்டலில் இணையும் சாதாரண உழைக்கும் பிரிவு சார்ந்த வன்னியரையும், அரசியல் ஆதாயத்திற்கு சாதீயத் திரட்டல் மேற்கொள்ளும் தலைமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும். ‘பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாள அரசியலுக்கு பயன்படுத்துகிற அனைத்து சுயநல சக்திகளுக்கு எதிராகவும் இடதுசாரிகள் போராட வேண்டும்’ என்று கோஷமிட்டால் மட்டும் போதாது. பொருத்தமான கள அணுகுமுறை தேவை.
முதலில் குறிப்பிட்ட சாதி உணர்வுக்கு ஆட்பட்டு சாதிய திரட்டலுக்கு ஆளாகும் தரப்பினரிடம் இரண்டு தளத்தில் இடதுசாரிகள் உரையாட வேண்டும். தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சாதி கருத்து நிலையோ, அல்லது சாதியத் திரட்டலோ உதவிடாது என்பதை உணர்த்த வேண்டும். இன்னொரு தளம், சாதி சார்ந்த மேல் அடுக்கிலிருந்து தலித் மக்களைப் பார்க்கிற ஆதிக்கக மனோநிலையிலிருந்து அவர்கள் விடுபட உரையாட வேண்டும். கருத்து உரையாடல் மட்டுமல்லாது ஒன்றுபட்ட செயல்பாட்டுக்கான களங்களும் உருவாக்க வேண்டும்.
இதுவே, சுயநல ஆதாயத்திற்காக அடையாள அரசியல் நடத்தி சாதியத் திரட்டலை மேற்கொள்ளும் தலைமையை அவர்களிடமிருந்து அப்புறப்படுத்தும். அடையாள அரசியல்வாதிகள் செயல்படுகிற, அனைத்துப் பிற்பட்ட சாதியினரிடமும் இந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பல மத்திய அரசுநிறுவனங்களில் நிரப்பப்படவில்லை என்பதற்கான பல விவரங்கள் வெளியாகியுள்ளன. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும், இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்டாத இடங்களில் பிற்பட்டோர் நியமனத்திற்கான போராட்டத்தையும் நடத்துவது அவசியம். ஏற்கனவே,
இடதுசாரிகள், இடதுசாரி தொழிற்சங்கங்கள், வாலிபர் அமைப்புகள், தலித் மற்றும் பிற்பட்டோருக்கான நிரப்படாத ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த (backlog) பிரச்சினைகளை எடுத்துப் போராடி வந்துள்ளன. நிச்சயமாக இடதுசாரிகள் இப்பிரச்சினைகளில் துறைவாரியான துல்லியமான தலையிடுவது அவசியம்.
இட ஒதுக்கீடு பற்றிய கோரிக்கைகள் சமீப காலமாக தீவிரமாக எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் அப்பிரச்னைகள் முன்வைக்கப்படுவதும், அவற்றையொட்டிய போராட்டங்கள், சாதிசார்ந்த திரட்டல்கள் என நடந்து வருகின்றன. இதையொட்டி சாதி அடையாளங்கள் மீண்டும் புத்துயிர் பெற்ற நிலை உருவாகி, தேர்தல் அரசியலுக்கான கருவியாகவும் அவை பயன்படுத்தப்பட்டன.
குஜராத்தில் படேல் சமுகத்தினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி கிளர்ச்சி நடைபெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், 1980-களில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மட்டுமல்லாது, இட ஒதுக்கீடு முறையே கூடாது என்ற கோரிக்கைகளை எழுப்பி கிளர்ச்சி நடந்தது. படேல் சமுகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதனை முன்னின்று நடத்தினர்.
பா.ஜ.கவும், சங் பரிவாரமும் மாநிலத்தில் காலூன்றுவதற்கான வாய்ப்பாகப் படேல்களின் போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டன. நீண்ட காலம் பாஜக ஆட்சி குஜராத்தில் நடைபெற இது தூண்டுகோலாக அமைந்தது. தற்போது அதே படேல் சமூகத்தினர், தங்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆக இந்த இட ஒதுக்கீடு கிடைத்தால் பிற்பட்ட சமூகத்தினர் முன்னேற முடியும் என்று ஆசை காட்டி அடையாள அரசியல் நடத்த அனைத்து முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளும் முயற்சிக்கின்றனர். ஆளுகிற சுரண்டல் வர்க்கங்களுக்கு இது சாதகமானதாக அமைகிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்து வலுவான ஒற்றுமை வளர விடாமல் தடுக்க இது உதவிடும்.
இடதுசாரிகளும் மார்க்சிஸ்ட் கட்சியும் இவற்றை எதிர்கொள்ள தலித் பிற்பட்டோர் உரிமைகளுக்கான போராட்டம், சமுக ஒடுக்குமுறை எதிர்த்த போராட்டம் ஆகியவற்றை நடத்துவதோடு, இவர்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் பறிக்கின்ற நவீன தாராளமயத்தை எதிர்த்தும் வர்க்க ரீதியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுதான் தலித், பிற்பட்ட உழைக்கும் மக்களின் உண்மையான முன்னேற்றத்தை சாதிக்கும்.
இதைத்தான் தோழர் சீத்தாராம் யெச்சூரி இடதுசாரி இயக்கம் இரண்டு கால்களில் ஏக காலத்தில் நடைபோடுகிறது என்று வர்ணித்தார். இதுதான் பலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் அடையாள அரசியல் நடத்துவோரும், மறுபுறம் முதலாளித்துவ அரசியலை நிகழ்த்துவோரும் இடதுசாரிகளை குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்க்கின்றனர்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அடையாள அரசியல் நடத்தும் பலர் நவீன தாராளமய கொள்கைகளையும் அதன் பண்பாட்டு கருத்தாக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறவர்கள். அதேபோன்று முதலாளித்துவ அரசியல் நிகழ்த்தும் பலர் அடையாள அரசியல் வளருவதை ஆதரிப்பவர்கள். இந்த சிக்கலான எண்ணப்போக்குகளும் இடதுசாரிகள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.
இதே பணியில்தான் உயர்ந்த அறிவு ஜீவியாக கருதப்படுகிற எழுத்தாளர் அருந்ததி ராய் இடதுசாரிகள் சாதி, வர்க்கம் ஒன்றாகப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமுக ஒடுக்குமுறை என்ற நிகழ்ச்சிநிரலில் மட்டும் நின்று, முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக நடத்தும் வர்க்கப் போராட்டத்தை கைவிட வேண்டுமா? அல்லது சமூக ஒடுக்குமுறைப் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டு பொருளாதார பகுதி கோரிக்கைகளோடு நின்று விடுவதா?
இந்த இரண்டும் தவறானது.
தலித் பிற்பட்ட உழைக்கும் மக்களுக்கான உண்மையான விடுதலைக்கு சமூக உற்பத்தியில் கட்டுப்பாடு அவசியம். இன்று தலித் மக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 17 அல்லது 18 சதம் உள்ள தலித் குடும்பங்கள் சமுக சொத்தில் 5 சதத்திற்கும் குறைவான உடைமை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். தனிப்பட்ட தலித் நிறைவான சம்பளம் பெறுவதோ அல்லது ஒரு தலித் முதலாளி ஆகிவிட்டார் என்பதல்ல பிரச்னை. சமூக சொத்து, சமூக உற்பத்தி ஆகியவற்றில் யாருடைய அதிகார மேலாண்மை இருக்கிறது என்பதுதான் முக்கிய பிரச்னை. இந்த அதிகார மேலாதிக்கத்தில் மாற்றம் கொண்டு வருவதுதான் முக்கிய அடிப்படைப் பிரச்னை.
இதற்கு, சோசலிச சமுதாயம் அமைத்திடும் குறிக்கோளுடன் சமூகத்தின் அனைத்து சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் திரட்டல் அவசியமானது. இதில் ஊசலாட்டம் இருப்பது, ஒரே நேரத்தில் தலித், பிற்பட்ட உழைக்கும் மக்களுக்கும் சோசலிச இலட்சியத்திற்கும் துரோகம் இழைப்பதில் முடியும்.

மத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்?- – ச.தமிழ்செல்வன்

கேள்வி: நம்பிக்கை,வழிபாடு,சடங்கு போன்ற மத செயல்பாடுகளால் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியினரிடம் மதவாதம் பற்றிக்கொள்கிறது. சங் பரிவார் அதனைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது?
பதில் :
நம்பிக்கை, வழிபாடு, சடங்கு போன்றவை ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பினும் இவற்றைத் தனித்தனியாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.சடங்குகளுக்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல நாம்.தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி,பொன்னாடை போர்த்துதல் போன்ற சில சடங்குகள் நம்மிடமும் உண்டு.மூடநம்பிக்கை சார்ந்ததாக அல்லாமல் ஆண்-பெண் சமத்துவத்துவம் , சாதி சமத்துவம் போன்றவற்றைப் பாதிக்காத படி இருக்கும் சடங்குகளை மக்கள் கடைப்பிடிப்பதை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. நினைவு கூர்தல் போன்றவற்றின் குறியீடாகத்தான் சடங்குகள் நம் வாழ்வில் வந்தன. இது ஒரு வகை எனில், பெரும்பாலான சடங்குகள் நம்பிக்கை சார்ந்தும் மூட நம்பிக்கை சார்ந்தும் உருவானவை.ஒவ்வொரு சடங்கையும் அதன் தோற்றக்கதையை ஆய்ந்து விமர்சிக்கலாம். உதாரணமாக மயானக்கரைக்கு தீச்சட்டி கொண்டு போதல் –இது அந்தக்காலத்தில் நெருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்படாத காலத்தில் உருவான –தேவையை ஒட்டி எழுந்த பழக்கம்- தீப்பெட்டி,லைட்டர் போன்றவை வந்த பின்னும் தொடரும்போது அது வெறும் சடங்காகி விடுகிறது.பயனற்ற சடங்குகளைத் தவிர்க்கலாம்.பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கும்போது அவர்கள் தங்கள் ஆசிகளை வழங்குவதன் அடையாளமாக திருநீறு பூசுவது,நெற்றியில் சிலுவை இடுவது என்கிற பழக்கம் அல்லது சடங்கு பெருவழக்காக இருக்கிறது.மன நிறைவைத்தரும் இதுபோன்ற சடங்குகளுக்கு மாற்றாக மத அடையாளமற்ற புதிய சடங்குகளை உருவாக்க வேண்டும்.
வழிபாடு என்பது அறிவியலடிப்படையில் தேவையற்றது. அதை விமர்சிக்கும் போது நம் நாட்டில் ஒரு பண்பாடாகவே வளர்ந்து நிற்கும் தனி மனித வழிபாட்டையும் சேர்த்துத்தான் பேச வேண்டும்.நம்பிக்கை-மூடநம்பிக்கை இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.மூடநம்பிக்கையை எதிர்க்கும் போராட்டத்தில் நம்பிக்கையாளர்களும் இணைய சாத்தியம் உள்ளது.அப்படியான நிகழ்ச்சி நிரல்களை நாம் உள்ளூர் அளவில் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும்.வறட்டு நாத்திகம் சங் பரிவாரத்துக்கு மேலும் உதவிகரமாகவே அமையும்.
நம்பிக்கை,சடங்கு ,வழிபாடு உள்ளவர்களிடம் மதவாதம் இருப்பதில்லை. மத உணர்வுதான் இருக்கிறது.மத உணர்வு மதவாதமாகி மத வெறிக்குத் துணைபோகும் வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் மத உணர்வு மத நல்லிணக்கமாக மலர்ந்து மதச் சார்பின்மை என்கிற திசையிலும் மணம் பரப்ப வாய்ப்பு உள்ளது. யார் முந்துகிறோமோ அவருக்கு சாதகமாக மனித மனங்கள் திரும்பும்.
இந்தியாவில் மதவாத சக்திகள் சுறுசுறுப்பாகவும் விரைந்தும் செயல்படுவதுபோல மதச்சார்பற்ற சக்திகள் (நீங்களும் நானும் உள்ளிட்டு) செயல்படுவதில்லை என்பது வரலாறு.
உள்ளூர் அளவில் மதச்சார்பற்ற நிகழ்வுகள் பலவற்றை உருவாக்கி மக்களை அவற்றில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மதம் சார் நடவடிக்கைகள் இயல்பாகவே எண்ணிக்கையில் அதிகமாக அமைந்திருப்பது நீங்கள் குறிப்பிடுவது சங் பரிவாரத்துக்கு சாதகமான சூழலைத் தானாகவே ஏற்படுத்தித் தருவது உண்மை. அப்படியானால் நாம் இன்னும் பல மடங்கு வேகத்துடனும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.நம்பிக்கை என்னும் கோட்டை அழிக்கவும் அறிவியல் கல்வி மூலம் முயல வேண்டும். அல்லது அக்கோட்டுக்குப் பக்கத்தில் மதச்சார்பற்ற கோட்டைப் பெரிதாக வரைந்து மதவாதக் கோட்டைச் சிறியதாக்கவும் செய்யலாம். முறைசார்ந்த கல்வியில், பாடத்திட்டத்தில் கல்வியின் உள்ளடக்கத்தில் அறிவியல்பூர்வமான மாற்றத்துக்காக நாம் போராடுவது இன்னொரு முக்கியமான பணி.

இடது திருப்பம் எளிதல்ல

இடது திருப்பம் எளிதல்ல: நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல்

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும்

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !


  • தமிழில்: இரா.சிந்தன்
இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்.
நிதி மூலதன ஆதிக்கம்:
நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன.
மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது.
மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை.
கைவிடப்படும் கொள்கைகள்:
குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர்.
மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது.
கிளறப்படும் அடையாளங்கள்
பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும்.
மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன.
இந்துத்துவப் பரவலின் பின்னணி
பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது.
தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று.
தமிழக முதலாளித்துவம்
தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது.
தமிழகத்தின் அரசியல் சூழல்
வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை.கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல.
திமுக-அதிமுக
திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.
இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன.
தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர்.
சித்தாந்தப் போராட்டம்
எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன.
இந்துத்வ திட்டம்
இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக  நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை.
இடது ஜனநாயக மாற்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.
திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.
தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது.
இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம்.