திங்கள், 31 மே, 2010

மும்பை போராட்டங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு நடத்தப்பட்டது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை மறைத்து இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு, சுற்றுலாவுக்கு பொருத்தமான நாடு என்று நிறுவும் பொருட்டு இந்திய அதிகாரவர்க்கத்தின் முழு ஆதரவு மற்றும் துணையோடு, திரைப்பட விழாவை வருகிற சூன் திங்கள் இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு எதிராக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அதே போன்று மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சார்ந்த தோழர் சிரீதர் பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்த, சாராத தமிழர்களை ஒருங்கிணைத்து, கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் பிரச்சாரம் செய்தது, திரைப்பட்த்துறையினரை சந்தித்து இலங்கை செல்லக்கூடாதென வேண்டுகோள் வைத்தனர் அதில் சபானா ஆஜ்மி, ஜாவேத் அக்தர் ஆகியோர் போகமாட்டோம் உறுதி மொழி கொடுத்தனர், அடுத்தக்கட்டமாக இலங்கைக்கு செல்லவிருக்கும் செல்லவிருக்கும் சல்மான்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அவரின் உருவப்படத்தை எரித்து தாராவி காவல்துறையினரால் 8 தமிழுணர்வாளர்கள் கைதாயினர்.
ஆக, மேற்கண்ட போராட்டங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு நடத்தப்பட்டது. இதில் உரிமை கோருவதற்கு விழித்தெழு இளைஞர் இயக்கம் உட்பட எந்த அமைப்புக்கும் உரிமையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
வே.சித்தார்த்தன்,
செயலாளர்,
விழித்தெழு இளைஞர் இயக்கம்.
தொடர்புள்ள இணைப்புகள்,
http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=1214

சனி, 29 மே, 2010

ஜாவேத் அக்தர், சபனா ஆஸ்மி ஆகியோர் ஐஃபா அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை

இலங்கைக்கு செல்லவில்லை என்று ஜாவேத் அக்தர், சபனா ஆஸ்மி ஆகியோர் ஐஃபா அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று மும்பை தமிழர்களிடம் தெரிவிப்பு......

போய் சந்தித்தவர்கள் சிரீதர், கதிரவன், முத்துராஜ்