திங்கள், 27 பிப்ரவரி, 2012

Sri Lanka: War Crimes and Need for International Investigation - a Book Released

Sri Lanka: War Crimes and Need for International Investigation - a Book Released Transnational Government of Tamil Eelam (TGTE) today released a Booklet on Sri Lanka: “We Accuse War Crimes and Genocide – A Brief for an Independent International Investigation.” This highlights different reports of Tamil killings and have charts that make it easy to compare important facts and past international actions for mass killings. This Booklet will be used as one of the resources to counter Sri Lankan Government’s propaganda. Email PDF Print .Toronto, Canada (PRWEB) February 27, 2012
Transnational Government of Tamil Eelam (TGTE) today released a Booklet on Sri Lanka: “We Accuse War Crimes and Genocide – A Brief for an Independent International Investigation.” This release took place in Toronto, Canada to a packed audience and addressed by several dignitaries including, Member of the Canadian Parliament Rathika Sitsabaiesan and John Argue of Amnesty International, said a TGTE spokeswoman.
“Releasing this Booklet is one of our initiatives to reach out to the international community to highlight the mass killing of Tamils and the need for an international investigation. We need justice for our people. If Sri Lanka is allowed to walk free for these killings, then other governments will feel less restraint to kill civilians” said Prime Minister Visuvanathan Rudrakumaran. “Bringing Sri Lankan Government to face international justice is our top priority” he continued.
This booklet will also be released in Geneva (UN) on 27th, in India on 28th and in London on 29th. It will then be followed by releases in different Capitals around the world, said the TGTE spokeswoman. This booklet, written by academics from India and North America, is to be widely distributed around the world and at the current UN Human Rights Council session in Geneva, she continued.
This Booklet highlights different reports that documented mass killing of Tamils, including the UN Panel report and US State Department report. It also includes several international actions that were taken for mass killings, starting from Nuremberg trials in 1945, said the spokeswoman. The facts in the Booklet are supplemented by charts that make it easy to compare important issues and past international actions, she continued.
TGTE has sent a delegation to the UN Human Rights Council to counter Sri Lankan delegation’s attempt to stop any action on Sri Lanka, said the spokeswoman. This Booklet will be used as one of the resources to counter Sri Lankan Government’s propaganda, she continued.
According to a UN Panel report over 40,000 civilians were killed in five months in 2009 and women were sexually assaulted. Sri Lankan Government restricted food and medicine to Tamils, resulting in several died of starvation and injured were bled to death. UN Secretary General Ban Ki-Moon referred this UN report to the UN Human Rights Council to act, continued TGTE spokeswoman
The book will be also available on line at: http://www.tgte-us.org Contact: Deluxon Morris (UK) at: d.morris@tgte.org or +44-794-002-0758

டாக்டர் அம்பேத்கர் படம் தமிழில் குறுந்தகடு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம் !!






டாக்டர் அம்பேத்கர் படம் தமிழில் குறுந்தகடு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம் !!

தோழர்களே....

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை மறு வெளியிடுவது அல்லது தமிழில் குறுந்தகடு கொண்டு வருவது என முயற்சியில் உள்ளோம்.. இதன் முதன் செயல்திட்டமாக, ஜனவரி 30,2012 அன்று தோழர்,எடிட்டர் லெனினும்,( தமிழ்நாட்டில் முதன்முதலில் டிசம்பர்,ஜனவரி 2011 அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்தவரில் இவரும் முக்கியமானவர் ) நானும் எக்மோரில் உள்ள NFDC அலுவலகத்தில் பி.ராமு (Asst . Manager -Film /Production of NFDC,Chennai Branch ) அவர்களே சந்தித்து மறு படியும் வெளியிட வேண்டும் என் கேட்டுகொண்டோம் ...

பின்,
மறு வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளதால்.... தமிழில் குறுந்தகடு கொண்டுவருவது என முடிவு செய்தோம்..
NFDC சென்னை , மும்பை மற்றும் டெல்லி அலுவலகத்திற்கு 3000 குறுந்தகடுகள் தயாரித்து தரவேண்டி விண்ணப்பித்து உள்ளோம்...

இத்துடன் NFDC க்கான மாதிரி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது...

எங்களின் முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் தோழர்கள்...

தொடர்பு கொள்ளுங்கள் :-

விழித்தெழு இயக்கம்,மும்பை &
அம்பேத்கர் திரைப்படம் பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு---தமிழ்நாடு
தொடர்புடைய கட்டுரைகள்:-
http://mathimaran.wordpress.com/2010/04/16/article-297/
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி


http://mathimaran.wordpress.com/2010/04/30/article-302/
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…

http://www.thenaali.com/inner.php?id=251

http://mathimaran.wordpress.com/2010/04/21/article-298/
அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்

http://mathimaran.wordpress.com/2010/11/29/43article-342/
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

http://www.ambedkarfilm.com/default.html

(For down loading in English and Hindi)

http://www.vizhi.net/?p=1589

(
அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி )


www.keetru.com/index.php?option=com_content&view...

www.mathavaraj.com/2010/12/blog-post_03.ஹ்த்ம்ல்

www.tamil10.com/.../அம்பேத்கர்-திரைப்படம்-.

மாதிரி கடிதம்

To

D. Rama Krishnan

Deputy General Manager

National Film Development Corporation Ltd

Chennai

From

Vizhithezhu Ilaignar Iyakkam

Mumbai

SUB: Requesting 3000 VCD/DVD copies of Tamil version of film Dr.Babasaheb Ambedkar

Respected Sir,

On behalf of the ' Vizhithezhu Ilaingar Iyakkam'(Awareness Youth Organisation) is a social organisation to bring awareness among people on various issues and fighting for peoples common rights. This organisation never failed to raise its voice against the social injustice and inhumanity. We also introduced many living personalities from various fields like art and literature.

We have been screening many documentary and sensual fiction films for the people. We have already screened many documentaries from national and international list. We have very good contact with many organisation, Schools and colleges. We are conducting film screening, interative and debate sessions and contests for students.

Now we like to distribute the Tamil version of film Dr. Babasaheb Ambedkar, directed by Jabbar Patel. As you know better that, this Dr.Babasaheb Ambedkar is one of the finest historical film.

In post Independent India, there were two struggles being fought simultaneously; the first, which is well known, was fight for independence lead by Mahatma Gandhi, against the British colonial powers. The second, much less well known but no less important was an internal struggle. Seventy million Indian untouchables, led by Dr. Ambedkar were fighting for their rights. This film holds its significance due to the fact that, though the ethos contained is Indian, it has its equation in the political and social disparity all over the world. The basic aim of the social revolution is to uphold the meaning of humanity in its truest sense.

We have not finding any official VCD/DVD copies of This movie. So will like to place an order for bulk DVD copies. We need at least 3000 ( three thousand) copies initially. We Will pay for that. Even We are ready to give some amount as token for confirming this order.

Our aim is to distribute the copies of this film as much as possible among the young generation and let them know the history through the medium they better understand.

We hope you will do the necessary things to get the copies of the film. And you can even direct us to know the proper channel to get the VCD/DVD copies of the film Dr. Babasaheb Ambedkar.

Hope you will help us and also be a part of this awareness act.

Thanking You.

Yours Sincerely,

SRITHAR

Vizhithezhu Ilaignar இயக்கம்,மும்பை,
Mob:09702481441




சனி, 18 பிப்ரவரி, 2012

அந்தரத்தில் நிலை கொண்ட வாழ்வு ---மும்பை .....இயக்குனர் கீரா மூர்த்தி

எனக்கு(இயக்குனர்,கீரா மூர்த்தி ) மும்பை என்பது பல ஆண்டுகளாக தொடர்புடைய ஒரு நகரம் ..சிறுவயதிலிருந்து ராஜேஷ் குமார் ,சுஜாதா இன்ன பிற எழுத்தாளர்கள் எனக்கு அழகான மும்பையை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தார்கள்..நான் திரைப்பட துறைக்கு வரும் முன்பு லாரியில் கிளினராக வேலை பார்த்த காலங்களில் வாரத்தில் இரு முறை சென்று வரும் பகுதி..அப்பொழுதெல்லாம் வேலை நிமித்தம் கடந்து ஊர் சுற்ற முடியாது..லாரி முதலாளிகளின் அடிமை..

அடுத்ததாக எமது பயணம் சென்னையில் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தேடி அலைந்த நாட்களில் வயிற்றை கொஞ்சம் கவனிக்க திருமண மண்டபங்களில் வேலை பார்ப்போம்..அப்படியாக ஒரு உணவு பரிமாற்ற முன்பை சென்றேன்..அப்பொழுது சுற்றிலும் முன்பையின் பார்ப்பன தமிழர்களின் கொழுத்த வாழ்க்கை கண்ணுக்கு தெரிந்தது..முன்பை வரை என்னை புரோக்கர் அழைத்து சென்றதற்கான பின்னணி ஒன்றே ஒன்றுதான்..நான் சிகப்பாக இருப்பதுதான் அது..சென்னையிலும் பிராமண திருமணம் என்றால் எனக்கு சர்வர் வேலை நிச்சயம் உண்டு..

அதன் பிறகு எனது அடுத்த பயணம் பச்சையின் பட வேலைகள் சம்மந்தமாக மகிழ்நன் அழைப்பின் பெயரில் தம்பி பொழிலனுடன் சென்றிருந்தேன் .நான் சென்றது மும்பையின் இதயம் என அழைக்கப்படும் தமிழர்கள் அதாங்க பறையர்கள் மற்றும் இன்னபிற ஒட்டுண்ணி சாதிகள் நிரம்பி நிற்கும் தாராவி ..

நான் கேட்ட கண்டடைந்த தாராவி அல்ல..அது..நாயகனில் விரவி நிற்கும் தாராவி அல்ல..பார்ப்பன மணிரத்தினத்தினால் தாராவியை காட்ட முடியாது என்பதை புரிந்து கொண்ட இடம் அது..

மும்பையின் தெருக்களில் நிரம்பி வழியும் தமிழ் சாதிகளின் பதாகைகள்..அதை தாண்டி பத்தாயிரம் பேருக்கு வெளிக்கிருக்கும் பொது இடம் பத்து..அதே போல சில லட்சம் தமிழர்களின் வெளிக்கிருக்கும் கொள்ளளவு அதிகபட்சம் நூறு அறைகள்..அவசர மும்பையில் பாதி பேர் வெளிக்கிருக்க தொடர்வண்டியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்கிற அவலம்..இவ்வளவையும் தாண்டி ஒரு புறா கூடல் பல நூறு புறா கூடுகளை போன்ற வீடுகள் ..ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் நடந்து போகும் பொழுது நம் தலையில் தட்டும் அளவுக்கு இருக்கும் அதிசயம் (கேவலம்) .ஒரு ஆள் கூட கவனமின்றி நடக்க தவறினால் மரணம் என்கிற இரும்பில் நிற்கும் படிக்கட்டுகள் ..

எப்பொழுதும் அந்த இடத்தையும் கூட கூறு போட ரௌடிகளுடன் இயங்கும் பிஜிபி,சிவா சேனா ,இன்ன பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் .. பெரும்பாலும் அடிமட்ட தொழிலில் மட்டுமே வாழ்வாதாரம் கொண்ட தமிழ் மக்கள்..நடைபாதையெங்கும் சில கோடி நட்சத்திரங்களை போல நீண்டிருக்கும் பீ கூட்டங்கள்....என மும்பை மிக அழகாகவே இருந்தது..

நான் அந்த மக்களுடன் பேசிய பொழுது இதை விட ஒரு லட்சம் மடங்கு கேவலமாக (அதாங்க அழகா மணிரத்தினம் எடுத்தது )இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் தாராவி இருந்தது..

மனசில் சொல்லொண்ணா துயரம் எம் ஈழ மக்கள் போலவே மும்பையில் எம் இன மக்கள்(பார்ப்பன மற்றும் அந்த அடிவருடி அரசியலை கையில் கொண்ட நாடார்,தேவர்களை தவிர ..இதை குறிப்பிட காரணம் சாதியின் வலிமை தான் ) சிலரை தவிர பல லட்சம் மக்களின் தின வாழ்வாதாரம் தொடர் கேள்வி குறிகள்..ஈழத்தில் இன சிங்கள ஆதிக்கம் என்றால் அதை விட மும்பையில் சாதிய ஆதிக்கம்..

அதையே சீரணிக்க முடியாமல் (குறிப்பாக தமிழகத்தில் கஷ்ட படுவதை நாம் பேத்தி கொள்வதை விட ஆயிரம் மடங்கு கேள்வி குறியுடன் வாழும் மக்கள் )நான் கிளம்பி வந்தேன்..எங்கும் நடை பயணமே உண்மையில் மக்களின் உண்மை துயரினை சந்திக்க முடியும் என்றும் நம்பினேன்..அப்படி இயலாமையில் இருந்த நான் அடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்த பொழுது இன்னும் ஒன்று புரிந்தது..

நான் பார்த்தது கேட்டது அதுதான் உச்சம் என நம்பியது என எல்லாமே பொய்..ரே ரோட்டில் வசிக்கும் எம் மக்களின் வாழ்விற்கு முன்பாக தாராவி மிக சாதாரணம்..

எழுதவோ பேசவோ கூட திராணியில்லாத பகுதி அது..இவர்களின் வாழ்வு எல்லையை எந்த ஒரு நாய் தலைவன் கூட புரிந்து கொள்ள முடியாது..கற்பனை செய்ய முடியாது..

எங்கு பார்த்தாலும் சிறு கப்பல் களுக்கான இரும்பு அடிக்கும் தொழிற்சாலை அதன் இடது பகுதியில் வீடுகள்..தொழிற்சாலைக்கும் வீட்டிருக்கும் இடையேயான தூரம் ஒரு அடி அந்த ஒரு அடியில் என் சில ஆயிரம் குழந்தைகள் மின் வெட்டும் இடத்தில் விளையாடுகிறான்..என் மனசை இரும்பாக்கிய இடம் அது..அந்த வீடுகளில் ஏழெட்டு மனிதர்கள்..காலம் காலமாக கப்பல் கட்டும் துறைமுகத்தை உருவாக்க அழைத்து இல்லை கொண்டு செல்ல பட்ட எம் தமிழர்கள் அதன் குழந்தைகள்..இங்கே சாதாரண வெல்டிங் பட்டறையின் மின்னலை கூட தாங்க முடியாத நம் கண்கள்..அங்கே பெரும் இரும்புகளுக்காக தீட்டப்படும் மின்னல்கள்..இரும்பு செதில்கள் அதன் நடுவே வாழும் குழந்தைகள்..அங்கேயும் அந்த இடத்தையும் பிடுங்க காத்திருக்கும் கழுகு மராட்டிய முதலாளிகள்..

இதை விட முக்கியமான ஒன்று..அந்த வீடுகள் எல்லாமே அந்தரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன..கடலில் இரும்புகளை ஏற்றி இரும்புகளின் மீது வீடு அமைத்து அதன் மீது வாழ்வை ஓட்டும் அந்த தமிழர்களை விட உலகத்தில் ஒரு தமிழனையும் பார்க்க முடியாது..கடல் உப்பில் இரும்புன்ன ஆகும்..அந்த இரும்பு சிதைந்தால் எப்படி உயிர் போகும்..அந்த உயிர் போனால் முதலாளி கழுகு அந்த இடத்தையும் ஆக்கிரமிக்கும்..

ஆனாலும் மனிதனாக பிறந்ததற்காக தமிழனாக பிறந்ததற்காக எத்தனை உயிர் மடினும் வாழ்வது என்கிற கோட்பாட்டில் வாழும் அவர்களை விட எதையும் சொல்ல எந்த தமிழனுக்கும் அருகதை அல்ல..என்னிடம் தங்கர் பச்சான் ஒன்னு சொன்னார்..முல்லை பெரியார் பத்தி கவலை படுரானுங்க..ஈழ பிரச்சனைய பத்தி பேசுறானுங்க..மூன்று தமிழர் விடுதலைக்காக இம்மாம் கூட்டம் கூடுது..ஒரு தானே ஒரு மக்களின் வாழ்வையே கேள்விக்குரியாக்குநிச்சி என் யாரும் கண்டுக்கல ..அப்படின்னு அவர் சொல்லும் பொழுது எனக்கு கோபம் வந்தது அவர் மீதும்..ஒட்டு மொத்த வசதியான சேற்றில் இறங்காத அதை போல பாவனை செய்த..அதற்க்கு வக்காலத்து வாங்குகிற அத்தனை தமிழ் தேசிய வாதிளின் மீதும் கோபம் வந்தது..தங்கரையும் சேர்த்து தான் என்..நீங்க கூட மும்பைய பார்க்கல..உங்க வசதி எங்க குறிஞ்சி இருக்குன்னு..

எல்லா விசயங்களுக்காக போராடுவதாக பாவனைதான் எல்லாரும் செய்றாங்க..என்னையும் சேர்த்து தான் ..இதுக்கு முடிவு என்ன..இந்த ஒட்டு மொத்த தமிழ் தேசிய வாதிகளின் கற்பிதங்களுக்கு யார் முடிவு கட்டுவது..இவர்களின் பின்னால் இயங்கும் வாலிபர்களின் கதி என்ன...இந்த வாலிபர்கள் திராவிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட போன தலைமுறைகளின் இன்றைய தமிழ் தேசிய வாரிசுகள் என்னும் பொழுது கவலை அளிக்கிறது..திராவிடத்தில் ஏமாந்த அதே தமிழன் இன்று தமிழ் தேசியத்தாலும் ஏமாறுகிறான் என்பதை வெக்கத்தோடு அறிவிக்கிறேன்..........

நன்றி,
இயக்குனர்,கீரா மூர்த்தி

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

தமிழகத்தின் 170 கல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை---- அம்பலபடுத்திய மாணவன்

திர்ச்சி தரும் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்கு பெரும் உதவிகளைச் செய்கிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி, தமிழக இன்ஜினியரிங் கல்லூரி களில் நடந்திருக்கும் அநியாயத்தை அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர் சரவணகுமார்.

அவரைச் சந்தித்தோம். 'நான் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்று கவுன்சிலிங் மூலம் சேலத்தில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். கவுன்சிலிங் மூலம் சேர்பவர்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தொகை 32,500 ரூபாய். ஆனால், அந்தக் கல்லூரியில் 50,000 ரூபாய் வசூல் செய்தனர். காரணம் கேட்டதற்கு, 'இந்தத் தொகையை கட்டினால் படிக்கலாம் இல்லை என்றால் வேறு கல்லூரிக்குப் போய் விடுங்கள்’ என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். கவுன்சிலிங் முடிந்தபிறகு வேறு கல்லூரியில் போய்ச் சேரமுடியாது என்பதால், கூடுதல் பணத்தைக் கஷ்டப்பட்டு கட்டி படித்தேன்.

முதல் ஆண்டு ஒரு வழியாக முடித்து விட்டேன் என்றாலும் அடுத்த மூன்று வருடங்கள் படிப்பதற்கு பணம் புரட்ட முடியாது என்பது தெரிந்தது. அரசு சொன்ன தொகையை நம்பி இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது. அவ்வளவு பணம் கட்டமுடியாது என்பதால் அடுத்த வருடம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் தவிப்பார்களோ என்ற சிந்தனை என்னைப் பாடாய்ப்படுத்தியது. அதனால், குறிப்பிட்டதை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது, அரசு தக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றேன். நான் கேட்ட 20 கேள்விகளுக்கு 36 பக்கங்களில் பதில் கொடுத்தார்கள். பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றாலும் கிடைத்த பதில்களே அதிர வைத்து விட்டன.

2007-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகாருக்கு உள்ளானவை, 39 இன்ஜினீயரிங் கல்லூரிகள். 2008-ம் ஆண்டு 46 கல்லூரிகள். 2009-ம் ஆண்டு 61 கல்லூரிகள். 2010-ம் ஆண்டு 24 கல்லூரிகள் என்று 170 கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ளன. இதனை விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 39 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகளில் மட்டுமே அந்தக் குழு விசாரணை நடந்தியிருக்கிறது. அதில் இரண்டு கல்லூரிகள் மட்டும் அதிக வசூல் செய்வது கண்டறியப்பட்டது.

இதேபோன்று 2008-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 61 கல்லூரிகளில், 7-ல் மட்டும் விசாரணை நடைபெற்றது. அதில் 5 கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக புகார் கூறப்பட்ட 170 கல்லூரிகளிலும் விசாரணை நடத்தாமல் சில கல்லூரிகளில் மட்டுமே நடந்துள்ளது. அதனால் 11 கல்லூரிகளில் மட்டுமே அதிகக் கட்டணம் வசூல் செய்வதுநிரூபணமானது. இந்த 11 கல்லூரிகளும் தலா ஒரு மாணவருக்கு மட்டுமே, கூடுதலாக வசூல் செய்த பணத்தை திருப்பி அளித்துள்ளது. அதிகக் கட்டணம் வசூல் செய்த கல்லூரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

'புகார் அளிக்கப்பட்ட அனைத்துக் கல்லூரி களிலும் ஏன் விசாரணை நடத்தவில்லை? இந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் தங்களது கடமையை சரிவரச் செய்யாமல் சில கல்லூரிகளுக்குத் துணை போயிருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டி அரசு மீதும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீதும் வழக்கு தொடுக்கப் போகிறேன். பல ஆயிரம் மாணவர்களின் வாழ்கையைப் பாழாக்கும் கூடுதல் கட்டண வசூல் விவகாரம் இனியாவது ஒழியட்டும்'' என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து, உயர்க்கல்வித் துறை அமைச் சர் பழனியப்பனிடம் கேட்டோம். ''இது முழுக்க முழுக்க கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள். இப்போது, மானிட் டரிங் செய்வதற்காக மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைத்து உள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது விசாரணை நடத்தி வருகிறோம். கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம்'' என்றார்.

இன்றைய நடவடிக்கை இருக்கட்டும். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்கப்போவது யார்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பதில் சொல்லப்போவது யார்?

நன்றி:

ஜூனியர் விகடன்


--
வெளிச்சம் மாணவர்கள்
"மற்றவர் வாழ்வில் கல்வி வெளிச்சம் ஏற்ற இணைவோம்"

Students Help line 9698151515