புதன், 20 ஜனவரி, 2016

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் ,கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள், கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI
ஓடியாடி கூடி விளை யாடும் பாரம்பரிய குழு விளை யாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள்  மத்தியில் உருவாக்கும். 
அத்தகைய விளை யாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டு கள் கொஞ்சம் கொஞ்ச மாக வழக்கொழிந்து வருகின்றன.இருப்பினும் ஒரு சில கிராமங் களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வந்த பாரம்பரிய விளையாட்டு களை (தற்போதுள்ள தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின் பழங்கால
விளையாட்டுகள்) பின்னுக்குத் தள்ளும் வகை யில் தனிநபர் வீடியோ கேம்ஸ் புகுந்துவிட்டது. 
அக்கம் பக்கத்தில் இருப்பவர் களுடன் பழகவே தயங்கும் இன்றைய நகர வாழ்க்கையில் குழு விளையாட்டுக்கு குழந்தைகள் எங்கே போவார்கள்? எனவேதான் பள்ளி மாணவ, மாணவியரிடம் இதை எடுத்து செல்லலாம் என்று எண்ணி யுள்ளோம் ..
நடைமுறை சிக்கல் உள்ளது என்று பள்ளியோ மக்களோ குழந்தைகளோ  இதை தவிர்க்கலாம் விளையாட்டு முறை குறித்து எடுத்து குறி செயல்படுத்த முயற்சிப்போம்.. தமிழகத்தில் சில அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறனர் கல்விதுறையில்  அனுமதி கிடைத்தால் உடற்கல்வி பாடவேளையில் பாரம்பரிய குழு விளையாட்டைக் கற்றுத்தருலாம் .
 நாங்கள் முயற்சிக்கிறோம்..ஆகவே இந்த தொகுப்பு.. 
வாய்ப்பு இருப்பின்  மும்பையில் நமது  பாரம்பரிய குழு விளையாட்டுக்காக ஒரு விளையாட்டு போட்டி நடத்தப்படும்..

பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி,காயா?பழமா?, 
சூ விளையாட்டு,உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65 விளையாட்டுகள் இருந்தன. 
இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி,பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு,மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி,சோற்றுபானை என 27 விளையாட்டுகளும், 
சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டுவிளையாட்டு,குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி,குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30விளையாட்டுகளும், 
ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல்,சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம்,மோடிவிளையாட்டு, பானை உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும்,குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு,பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன.

தமிழர்கள் நாம் கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம்,
பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை,விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்மனதிற்கும், நம் உடலிற்கும்
நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.
..............................................................................................................................................................
தன்னம்பிக்கை தரும் நொண்டி விளையாட்டு

நாம் நம் பண்டைய விளையாட்டுக்களை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும்.. நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இழப்பில் ஈடுகட்டும் ஆற்றலைத் தருவதோடு, தன்னம்பிக்கையையும்அதிகரிக்கிறது. நொண்டி விளையாட்டிற்கு இத்தனை பேர் விளையாட வேண்டும் என வரைமுறை எதுவும் இல்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்..


வட்டம் அல்லது சதுரம், இதில் ஏதேனும் ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும் விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் ஒடவேண்டும். அவர்களை ஒருவர் நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். நொண்டி அடித்து செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் (காலை வைத்து) போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுல் நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர மற்ற பகுதியில் காலை ஊன்ற கூடாது. நொண்டி அடித்துச் செல்பவர் ஒருவரைத் தொட்டால், தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் காலை ஊன்றினால் அதற்கு முன் தொடப்பட்டவர் உள்ளே மீண்டும் வந்து ஓடும் வாய்ப்பை பெறுவார். இவ்வாறு நொண்டி விளையாட்டு தொடரும்.

.............................................................................................................................................
பல்லாங்குழி விளையாடினால் நீண்ட நாள் சளித்தொல்லை, கண்பார்வை போன்ற பிரச்சனைகள் குணமடையும் ஆனால் பல்லாங்குழி ஆடவேண்டிய கைகள் இன்று செல் போனிலும்,கம்புயுடரிலும் பட்டங்களை தட்டிக்கொண்டிருக்கிறது. 40 - 50 வயதில்
கண்ணாடி மாட்டிக்கொண்ட காலம் போய் 4 - 14வயதிலேயே கண் பார்வை கோளாறுகளால் கண்ணாடிகள் மாட்டிவிட்டோம் நம் பிள்ளைகளுக்கு.
....................................................................................................
பம்பரம் விளையாட்டு

என்னதான் மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடினாலும் அவை கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு இணையாவதில்லை, உடல் நலனுக்கு ஆரோக்கியத்தையும் தருவதில்லை. ஒரு கையில் நொறுக்குத்தீனியும் மறுகையில் போனும் வைத்து விளையாடுவதினால் உடல் சோர்வு அதிகரித்து ஆரோக்கியத்தை குறைக்கிறது.

 விளையாட்டின் நோக்கம் உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமல்ல.உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு! குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை. சரி, இனி பம்பரம் விளையாட்டை பற்றி பார்ப்போம்…..

இந்த பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டுக்கொள்ளவேண்டும். அந்த வட்டத்தை சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காக தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு ஒன் டூ த்ரி சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தை சாட்டையால் சுற்றிக்கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும்.
பின்பு சாட்டையை பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.
...................................................................................................................................................................
மறந்து போன ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.

ஆடு புலி ஆட்டக்கோடு விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்த பகுதியில் முக்கோணக் கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டில் மொத்தம் 18 ஆட்டக்காய்கள் இருக்கவேண்டும். அதில் மூன்று காய்கள் புலிகளாகவும், மீதமுள்ள 15 காய்களை ஆடுகளாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு காய்களையும் வித்தியாசப்படுத்தும் விதத்தில் காய்களானது இருக்கவேண்டியது அவசியம்..
3 புலிகள், 15 ஆடுகள் கொண்ட இந்த விளையாட்டில் புலிகள் ஆடுகளிடம் சிறைப்படுதல் அல்லது ஆடுகளை புலிகள் விழுங்குதல் என்பது விளையாட்டின் நோக்கமாகும். ஆடுகளை ஒவ்வொன்றாக விழுங்கும் புலிகள், புலிகளை முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
1. முதலில் புலி, அடுத்து ஆடு என்று சட்டகத்தின் இணைப்புகளில் வைக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளைப் போல் இது கட்டத்துக்குள் வைக்கப்படுவதில்லை. புலிகளை அடைப்பது போல ஆடுகளை அடுக்க வேண்டும். அதை தடுப்பது போல புலிகளை நகர்த்த வேண்டும்.
2. புலிக்கு அருகில் ஆடு இருந்து அதற்கு அடுத்த கட்டம் வெற்றிடமாக இருந்தால் புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும். எனவே புலிக்கு அருகில் தொடர்ச்சியாக இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக வேண்டும்.
3. புலிகள் சிறைப்படும் போது எத்தனை ஆடுகள் விழுங்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து ஆடுகள் தரப்பில் விளையாடுபவர் புள்ளிகளைப் பெறுவார். அதுபோல புலிகளை சிறைப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளை இழந்தால் புலிகள் தரப்பில் விளையாடுபவர் வெற்றிபெறுவார்.
இவை இந்த விளையாட்டின் பொது விதிகள்.
...................................................................................................................................................................

கிராமத்து பாரம்பரிய விளையாட்டு: 
கிட்டிப் புள்ளு (கில்லி )
traditional games

 கிட்டிபுள்ளு எனும் விளையாட்டானது கிட்டிதக்கா, கில்லி தாண்டா, குச்சிக்கம்பு, சிங்காங்குச்சி, குச்சி அடித்தல், எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறுவர்கள், சிறுமியர்கள் என அனைவரும் இவ்விளையாட்டினை விளையாடுவார்கள். இவ்விளையாட்டினை விளையாடுவதற்கு கிட்டிபுள், கிட்டிகோள் என இரு கருவிகைளை கொண்டு விளையாடுவார்கள். கிட்டிபுள் எனப்படும் குச்சியானது சுமார் மூன்று விரல் கொண்ட பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் இருமுனைகளும் கூராக இருக்கவேண்டும். கிட்டிகோளானது ஒருவிரல் பருமனும் சுமார் 50 சென்டிமீட்டர் நீளமும் இருக்கவேண்டும். விளையாடுவதற்கு ஏற்ற குச்சியாக வலுவான மரத்திலில் இருந்து வெட்டப்பட்ட குச்சியின் கிளைகளை வைத்தே விளையாடலாம். ஆனால் குச்சியானது அடிக்கும்போது உடையாமல் திடமானதாக இருக்கவேண்டும்.
எப்படி ஆடவேண்டும்: இவ்விளையாட்டை இரண்டு விதமாக விளையாடலாம்;
1. மண் தரையில் ஒரு சிறிய குழியைத் தோண்டி அதன் மேல் புள்ளு குச்சியை வைக்கவேண்டும். பின்னர் கிட்டி குச்சியை புள்ளுக்குச்சிக்கு அடியில் இருக்குமாறு வைத்து தூக்கி அடிக்க வேண்டும். அடிக்கப்பட்ட புள்ளுக்குச்சியை குழுவில் உள்ள மற்றவர்கள் துணியாலோ அல்லது கைகளாலோ பிடிக்கவேண்டும்.
2. மண் தரையில் ஒரு சிறிய குழியைத் தோண்டி அதன் மேல் புள்ளு குச்சியை வைக்கவேண்டும். பின்னர் விளையாடும் நபர் இரண்டு கால்களையும் விரித்து குழியானது கால்களுக்கு இடையில் இருக்குமாறு சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் கீழே குனிந்து கிட்டி குச்சியை புள்ளுக்குச்சிக்கு அடியில் இருக்குமாறு வைத்து விரித்த கால்களுக்கு இடையில் உள்ள இடைவெளியின் வழியாக தூக்கி வீச வேண்டும். அதனை குழுவில் உள்ளவர்கள் துணியாலோ அல்லது கைகளாலோ பிடிக்கவேண்டும். புள்ளு குச்சியை பிடித்து விட்டால் விளையாடிய நபர் வெளியேறி அடுத்த நபர் ஆட்டத்தை தொடரவேண்டும். இவ்விளையாட்டை விளையாடுவதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களும் விளையாடலாம்.
................................................................................................................................................................
காணாமல் போன விளையாட்டுகள்

உப்புக்கோடு

உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார். மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும். முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத் தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான விளையாட்டு!
...................................................................................................
மெல்ல வந்து கிள்ளிப்போ

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர், பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு… ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
கிள்ளிப்போ…’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!
..............................................................................
கள்ளன் வாரான்… களவாணி வாரான்

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார். மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

‘காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’

என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார். வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!
.......................................................................................
பூப்பறிக்க வருகிறோம்

2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள். இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம் வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும் ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே களேபரம்தான்!
............................................................
கழங்கு

பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!
ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சான்: ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல

இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம், நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள் கிட்டுவதேயில்லை!
.................................................................................................................................................
தன்னம்பிக்கை தரும் சிலம்பம்!
silambattam

சிலம்பம்… தமிழர்களின் வீர விளையாட்டு… பாரம்பரியப் பெருமை மிக்கது… முக்கியமாக மிகச்சிறந்த தற்காப்புக்கலை. சிலம்பம் அறிந்தவர் கையில் ஒற்றைக் கம்பு இருந்தாலே போதும்… எத்தனை பேர் தாக்க வந்தாலும் தப்பித்துவிடலாம். இது காலம்காலமாக மக்கள் மனதில் ஊறிப் போயிருக்கும் நம்பிக்கை… உண்மையும் கூட. தமிழர் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் கையில் எடுத்தது கம்பு என்கிறது வரலாறு. அதுதான் ‘சிலம்பக்கலை’யாக வளர்ந்தது. காலப்போக்கில் தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிர்ப்புடன் இருக்கிறது சிலம்பாட்டம்!

5 ஆயிரம் ஆண்டு பழம்பெருமை வாய்ந்தது சிலம்பக்கலை. தமிழக அரசு இதை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்திருக்கிறது. இன்றைக்கு ஆண்களோடு பெண்களும் இக்கலையை ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறார்கள். நாமும் மும்பையில் கற்ப்போமே..
   
 ‘அலங்கார சிலம்பம்’, ‘போட்டி சிலம்பம்’, ‘போர் சிலம்பம்’னு சிலம்பத்துல வகைகள் இருக்கு. ‘அலங்கார சிலம்பம்’, அரசு விழாக்கள், பண்டிகை நாட்கள்ல பேரணி, கூட்டங்களில் செய்து காட்டப்படுவது… நிறைய வளையங்களை ஒன்று சேர்த்து, அவற்றைக் கொண்டு பல வித்தைகள் பண்ணணும். சுருள் கத்தி, மான்கொம்பு போன்ற உபகரணங்களும் இதுல அடக்கம்.
இதுக்கு அப்புறம்தான் ‘போட்டி சிலம்பம்’ கத்துக்க வேண்டும் . கைகளில் கம்பை வைத்துச் சுழற்றிச் சின்னச் சின்ன சாகசங்களைச் செய்யா வேண்டும் . அதற்கு அடுத்ததுதான் ‘போர் சிலம்பம்’. அதாவது, சினிமாவில் காட்டப்படுவது. ரொம்ப வேகமாக கம்பை சுழற்றும் போர் சிலம்பத்துல கொஞ்சம் அசந்தாலும் ஆபத்து! டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பெண்கள் மத்தியில தற்காப்புக் கலைகளைக் கத்துக்கணும்கிற விழிப்புணர்வு அதிகமாகியிருக்கு. கராத்தே, குங்பூ மாதிரியானவைதான் நல்ல தற்காப்பு கலைகள்னு நாங்க  நினைச்சோம்  நடைமுறைபடுத்தினோம் ..
அப்படி இல்லை. நமது சிலம்பு இருக்கு என்று புரிந்துகிட்டோம்
பொது இடங்கள்ல நம்மை பாதுகாத்துக்க கையில கம்பு இருக்கணும்னுகூட அவசியமில்லை. ஒரு சின்ன கைக்குட்டை போதும். நம்மை தாக்க வர்றவங்ககிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம். இந்தக் கலையைக் கத்துகிட்டா, மனசுல தைரியத்தோட எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் தானாகவே வந்துடும்.
தனி சிலம்பு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சுருள் கத்தி வீச்சு, குழுப் போட்டின்னு ஏகப்பட்ட வகைகள் இருக்கு. ஒருத்தரோட நெற்றிப் பொட்டு வரையிலான உயரத்தை வைத்துதான் சிலம்பம் சுழற்றும் கம்பு தயாரிக்கப்படும். மாசம் 150 ரூபாய் கட்டணத்திலேயே கத்துக்கலாம். சிலம்பத்தை ‘விளையாட்டு’ என்று சொல்வதைவிட ‘கலை’ன்னு சொல்றதுதான் பொருத்தமாக இருக்கும்.
...................................................................................................................................................................அழியாது நாடக கலை 

சினிமாவின் படையெடுப் புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீர் சிந்தவைக்கும் நாட கம். நல்லதங்காளுக்கு 7 குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டு பாடியபடி கிணற்றில் வீசுவாள் நல்லதங்காள்.
ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்த போது, நல்லதங்காளாக நடித்த பெண், ஒரு குழந்தையை மட்டும் தாலாட்டு பாடாமல் கிணற்றில் போட்டாளாம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொதித்து விட்டார்கள். எப்படி தாலாட்டு பாடாமல் குழந்தையை கிணற்றில் போடலாம் என்று கேட்டு மேடை ஏறிவிட்டார்கள். கிணற்றில் போட்ட குழந்தையை எடுத்துக் கொடு த்து, தாலாட்டு பாடியபின் போட சொன்னார்களாம். இன்னொரு சம்பவம். பாலாமணி அம்மாள், ‘தாரா சசாங்கம்‘ என்ற நாடகத்தை நடத்தினார். இதில் நடித்தவர்கள் பெண்கள் மட்டுமே. இந்த நாடகத்தில், கதாநாயகிக்கு கதாநாயகன் எண்ணெய் தேய்க்கும் காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சியில் நாயகி உடை அணிந்திருக்க மாட்டாள்.
இதைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். திருச்சியில் இருந்து இந்த நாடகத்துக்காக, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற ரயில் விடப்பட்டதாம். நாயகியாக நடித்தவர் ஸ்கின் உடை அணிந்திருந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. 1940 வரை புராணம், சமஸ்கிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன. பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த (முதலியார்).
மேடை நாடகங்களில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இவர். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும், சங்கரதாச சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர். இதில், கிட்டப்பா நடித்து புகழ்பெற்றார். விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்‘ நாடகம் அப்போது புகழ்பெற்ற நாடகம். முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ், மேடையில் உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்துவிட்டது. சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற நாடக வாத்தியார்கள், ஸ்டூடி யோக்களுக்கு தங்களை இடம் மாற்றினார்கள். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன.
இப்போது நாடகங்கள் முற்றிலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடக கம்பெனிகள் இருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. சினிமாவகளில் இருப்பாவர்கள் சிலர் மட்டும் தான்  சில  காமெடி நாடகங்களை நடத்தி வருகின்றனர். இது ஓரளவு வெற்றிகரமாக சென்றாலும் முழுமையான வரவேற்பு இல்லை.

 குறிப்பு:- ‘தியேட்டர் ஆஃப் மகம்‘  மதுவந்தி அருண்.

 ஹாலிவுட் நடிகர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள நாடகத்தில் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா நட் சத்திரங்கள் மட்டும் நாடகம் என்றால் விலகிப் போகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் நாடகம் பார்க்கவாவது வரவேண்டும். கிராமங்களில் திருவிழாக்களில் நாடகம் போட்ட கலைஞர்கள் இன்று வாழ்க்கையையே போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதி இல்லை.
நாடகத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞர்கள் இன்னும் கலை தாகத்தோடு இருக்கிறார்கள். முன்பு இருந்த நிலையை ஒப்பி டும்போது இப்போது சற்று மாற்றம் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. வெளிநாட்டில் உள்ளவர்கள், சினிமாவை விட பத்து மடங்கு நாடகத்தின் மேல் மதிப்பும், ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள். நாடக கலைஞர்களை கொண்டாடுகிறார் கள். நாடகம் ஒன்றில்தான் பாராட்டோ, திட்டோ நேருக்கு நேர் கிடைக்கும். அதிலிருக்கும் த்ரில்லே தனி. நாடக கலை அழிகிற கலையாக இருந்திருந்தால் சினிமா வந்த பத்து ஆண்டுக்குள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். என் தலைமுறை வரை அது வந்திருக்கிறது என்றால் எந்த காலத்திலும் அழியாத அற்புத கலை நாடக கலைதான்’’ என்கிறார் மதுவந்தி அருண்.
......................................................................................................................................
பொய்த்துப்போன பொய்க்கால் குதிரை ஆட்டம்?’

தமிழர்களின் நாடி துடிப்பாக நாட்டுப்புற கலைகளை விளங்கி வந்தன. ஆனால் இப்பொழுது அவை மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. கலைகள் மறைந்து போனாலும் மண்ணின் அடையாளங்களாக என்றும் அவை போற்றபடுகின்றவை. கிராமத்தில் கோயில் திருவிழா என்றால், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று கிராமிய நடன நிகழ்ச்சிகளுடன், சினிமா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் முக்கிய இடத்தைப் பிடித்து வருகின்றன. இருந்தாலும், பொய்க்கால் குதிரை ஆட்ட கலைக்கு என்றுமே மவுசு உண்டு.
அரசு விழாக்களில் பொய்க்கால் குதிரையாட்டம் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு. கலைகள் மொத்தம் 64 இருந்தாலும் ஆடற்கலை காண்போரை சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டும். இந்த கலைகள் அதிகம் ஆடும் இடமாக இருப்பது எல்லாம் ஆலய தேர் உலாவில் தான். அப்படி ஆடும்போது அவர்கள் மனதிற்கு “இந்தக்கலைக்கு இன்னும் உயிர் இருக்கு ரசிக்க பல விழிகள் உண்டு” என்று நினைத்து ஆடும் ஆட்டம் தான் பொய்க்கால் குதிரையாட்டம் .!

இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இரண்டு குதிரை பூட்டினது போல இவர்கள் தோழில் இரு துணியைக் கட்டி அதிகமான பாரத்தோடு
அந்த இந்திரன் வாறான் புரவியில் !
இந்த சந்திரன் வாறான் குதிரையில் போவோமா ?
நாம் இருவர் போருக்கு!
தோட்டம் பாடும் பரணி கேளு ?
என்று சொல்லம் வந்தோம் !
ஐயா வீதிக்கு !மறந்து விட்டு என்ன பேச்சு ?
மாரியம் தேரிலே ஆட்டம் பார்க்கும் ரசிகரே அடித்திடுவீர் விசிலையே?
என்ற போதே அவர்களை பொய்க்கால் குதிரை ஆட்டம் !
ஆட்டக்கூட்டியந்த அப்பையும் சேர்ந்தடிப்பார் விசில் !
குதியை பார்க்காதவரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் பார்க்க ஓடி வருவார்கள். எப்படித்தான் இந்த குதிரைபோல இவர்கள் முன்னுக்கும், பின்னூக்கும் தூக்கி ஆடுகின்றன் ! ஆட்டம் கற்றார்களோ ?என்று என்ன வைக்கும் முகத்துக்கு நல்ல வண்ணக்ககலர் பூச்சுப் பூசி அவர்கள் உண்மை முகம் தெரியாது குதிரை பச்சைக்கலரில் துணி செய்து பார்ப்போரை நிஜம் தானா அவர்கள் ஆட்டம் என்று எண்ண வைக்கும்.
இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியை பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள். நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் ஆகும்.
..........................................................................................................................................


பறையாட்டம்
பறையாட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமானநடனம் ஆகும்.  பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது.
தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இதுதப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஆதி மனிதன் தங்களுடைய சமூகம் ஒன்று கூடுதலுக்காகவும்,  தங்கள்குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும்விலங்குகளிடம் இருந்து தங்களைதற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின்மூலம் எழும் சத்தமாகும்.
ஊர் விழாக்களில் நடைப்பெற்ற பறையாட்டம்.

ஆவேசம்மகிழ்ச்சிஉற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பிகேட்போரைஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி இந்த பறையாட்டத்திற்கு உண்டு.வரலாறு விலங்குகளைக் கொன்றுதின்று, மிஞ்சியத்தோலை எதிலாவதுகட்டிவைத்துகாய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடியஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும்வாழ்வியல்உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறியது.
பறை இசைக்கருவி

திருமணம்,  இறப்புசிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின்அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுகம் மற்றும்  துக்கங்களிலும் இடம்பெறும் கலையாக மாறியது.
சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில்கடினமான,  இசைக்கச்சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும்இலகுவான இசைக்கருவிகளைதங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர்மேலும் சாதிகோட்பாடுகலை நிகழ்த்துவோரையும், தொழிலை மையப்படுதியும் சாதி பிரிக்கப்பட்டது.  அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறைஆட்டம் ஒதுக்கப்பட்டது.  தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறுஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள்உரிய கல்விகிடைக்காமல்நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்ததருணங்களில்அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறியநவீன சமூகம்அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை,சாவுமேளம் என முத்திரை குத்தியது.
ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியை மையப்படுத்தும்குறியீடாகவும்அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட,அச்சமூகத்தின் விடுதலை எண்ணிக்கொண்டிருந்த இளைஞர்கள்பறையடித்தலை அவமானமாக கருத தொடங்கினர்.  இவ்விதமெ பறையாட்டம் மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இறுதி சடங்குகளில் பறையாட்டம்

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம்பூக்குளித்தல்தீச்சட்டிஎடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு.இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவமதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர்அந்தோணியர்,ஆரோக்கியமாதாவியாகுலமாதாசந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவகோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.
சிறப்புஒவ்வொரு நிகழ்ச்சிக்கும்ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனிஅடிவகைகள் உள்ளன.
  •   சப்பரத்து அடி
  •     டப்பா அடி
  •     பாடம் அடி
  •     சினிமா அடி
  •     ஜாயிண்ட் அடி
  •     மருள் அடி
  •   சாமிச்சாட்டு அடி
  •   ஒத்தையடி
  •   மாரடிப்பு அடி
  •    வாழ்த்தடி
         என பல வகை அடிகள் உள்ளன.
இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர்.
நேர்நின்றுஎதிர்நின்றுவளைந்து நின்று ஆடுதல்அடிவகைகளைமாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்தகலையாடல்கள் இதில் உண்டு.
தஞ்சாவூர்மதுரைதிண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடுதுணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறதுதென்மாவட்டங்களில்டிரம் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சாவூர்திண்டுக்கல்மதுரை மாவட்டங்களில்இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள்கோயில் சார்ந்தநிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல்பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது

..................................................................................................................

கரகாட்டம்
கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்றாகும்தலையில்கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும்கரகம் என்பது ஒரு பானைவடிவ கமண்டலத்தைக் குறிக்கும்சங்க இலக்கியங்களில் கரகாட்டம்குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபல விதங்களில்அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடிசமநிலை பேணிகரகாட்டம் ஆடப்படும்.
கரகாட்டம்

கரகம் அமைக்கப்படும் முறைஅலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில்வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழேவிழாதவாறு பெண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.



கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம்பூக்குடம்கும்பம்செம்புநீர்க்குடம்என்ற பல அர்த்தங்கள் உண்டுகரகாட்டத்திற்கு மூன்று கிலோ எடையுள்ளசெம்பினுள் மூன்று அல்லது நான்கு கிலோ மண்ணோஅரிசியோ இட்டுஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும்செம்பின்வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டைவைத்திருக்கின்றனர்.
இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர்.குடையின் மேலே கிளிஅன்னம்புறா போன்ற தக்கைப்பறவை உருவம்இருக்கும்தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்என்றும்தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்என்றும் சொல்வர்.தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவதுபித்தளையால்செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களேஆடுகின்றனர்இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம்சிறிய உடுக்கை,பெரிய உடுக்கைசத்துக்குழல்செண்டைபறை என்பனஇசைக்கப்படுகின்றன.



கரகாட்ட வகைகள்    சக்தி கரகம்    -  பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.
   ஆட்ட கரகம்  -  பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில்ஆடப்படுவது ஆட்ட கரகம்
தெருக்கூத்து
கூத்துக்கலையின் அடையாளமாக சென்னையில் அமைக்கப்பட்ட சிலை.
தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும்இது தமிழர்களின்பழங்க்கலைகளில் ஒன்றாகும்கதை சொல்லல்நாடகம்ஆடல்பாடல்என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும்பொதுவாகஒரு தொன்மம்நாட்டார் கதைசீர்திருத்தக் கதைஅல்லது விழிப்புணர்வுக்கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும்.
 
தெருக்கூ த்து 

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலைபோன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்தஆடுபரப்பில்ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகியஅணிகலன்களைப் பூண்டுகட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டுநடனம்பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக்கூத்துருவமாக்கிஇரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலைமுடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்பார்வையாளர்கள்கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.
கூத்து நடைபெறும் இடம்தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும்ஊரின் புறத்தே அல்லதுகோவில் திடல்களில்அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவேஇக்கூத்தானது நடைபெறும்கூத்து நடைபெறும் இடத்தை முதலில்சுத்தப்படுத்துவர்பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில்விளக்குகளைக் கட்டுவர்கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்துநடைபெறும் இடமாகும்இதனை விட்டமாகக் கொண்டே மக்கள்வட்டமாகச் சுற்றி அமர்வார்கள்கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒருஅகன்ற விசுப்பலகை போடப்பட்டிருக்கும்அதன் பின்னே தென்னங்கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும்இது கூத்தில் நடிக்கும்நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.
 பின்பாட்டுக் காரர்கள்கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும்பாடலும் இணைந்த நாட்டிய நாடகமே தெருக்கூத்துஇக்கூத்தில் பின்பாட்டுபாடுபவர்கள் இவர்களே ஆவார்கள்ஒவ்வொரு பாத்திரத்தின்தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர்பாட்டின் இடையே வசனம் பேசுவதும்இவர்களேஇவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமைமிகுந்தோராய் இருப்பர்இவர் விசுப்பலகையில் அமர்ந்துஇசைக்கருவிகளை இசைப்பர்.
 இசைக்கருவிகள்தெருக்கூத்தில் ஆர்மோனியம்மத்தளம்தாளம்முகவீணை(மோர்சிங்)  முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.
 கட்டியங்காரன்கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார்கூத்தினைத்தொடங்கி வைத்தல்கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல்,கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல்கூத்தின்கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை    மகிழ்விக்கும்விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல்கூத்தினைமுடித்து   வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.
தெருக்கூத்து கலைஞர் 
ஆடை அணிகலண்கள் கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள்கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும்மற்றவர்கதைக்கு ஏற்பவும்பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும்உடலோடு ஒட்டியமுழுக் கால் சட்டைஅதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும்அணிவர்பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம்,மார்புப் பதக்கம்தோளணிகள்(புஜகீர்த்திகள்), போன்ற அணிகளை அணிவர்.வண்ணக் காகிதங்கள்பாசிமணிகள்கண்ணாடித் துண்டுகள்போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும்பெண்வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவானஅணிகலன்களை அணிவர்.
 விதிமுறைகள்கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும்.இதனை களரி கட்டுதல் என்பர்அதாவது கூத்து தொடங்கிவிட்டது எனஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.

  • கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத்திரையாகப் பிடித்தபடி நிற்பர்கூத்தின் கதாபாத்திரங்கள்அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்குமுன்னர்இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன்காட்சி தருவர்.
  • தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லைஆண்களேபெண்வேடமிட்டு நடிப்பர்.
  • பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில்கூத்து தொடங்கிமுடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோண்பிருப்பர்.
 இன்றைய நிலைதெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில்விழாவின் ஒரு பகுதியாகவும்பக்தியை பரப்பும் கருவியாகவும்அமைகின்றது.  கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில்வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள்வணங்குவதும்இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும்.அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்துபல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின்வட மாவட்டங்களிலும் சேலம்தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப்பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும்இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி 
வருகிறது
ஓவியக்கலை
எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக்கொள்ளைகொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ஓவியக்கலை. ஓவியம் பேசும் செய்திகள் பல, உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல.தமிழகத்தில் தொன்றுதொட்டு விளங்கிவந்த பாரம்பரியக் கலைகள் பல. அவற்றுள் பல, காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயின. எஞ்சிய சில, தமிழர்களின் கலைத்திறன்களையும் கலை நுட்ப அறிவையும் உலகோர்க்கு எடுத்துகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது.பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுதினர். இவற்றை தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவைகோட்டோவியங்கள் எனப்படும்.இலக்கியங்களில் ஓவியக்கலை:தொல்காப்பியம் ”நடுகல் வணக்கம்” பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி, தான் செதுக்கருவிக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்தையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததையும் உணர முடிகின்றது.ஆடல் மகள் மாதவி, ”ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” எனச்சிலம்பு பகர்கிறது.புறநானூற்றில், “ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஓப்ப வைத்து”  கவிஞர் போற்றுகிறார்.நாச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” என்றும் பெண் ஓவியர் “சித்திரசேனா”எனவும் பெயர் பெற்றிருந்தினர்.ஓவியக்கலை ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது.ஓவியக்கலைஞர் ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.வரைகருவிகள்பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர்.வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.வரைவிடங்கள்அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன.  ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.சித்தன்னவாசல் ஓவியம்மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்த் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசர்கள் ஓவியகலையை வளர்த்து வந்துள்ளார்கள். பல்லவர் கால ஓவியங்கள், பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் ஓவியங்கள் சிதைந்த தோற்றத்தோடு காணப்படுகின்றன. 



புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்க்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்னைக் கவர்வன,

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசைஎன்பது தமிழர்களின் கலைகளுள்ஒன்றாகும்வில்லின் துணைகொண்டுப்பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டுஎனப் பெயர் பெற்றது.
துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மைபெறுகிறதுதுணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை 
தாளம்

குடம்

உடுக்கை
உடுக்கைகுடம்தாளம்கட்டை என்பனவாகும்வில்லுப்பாட்டின் தோற்றம்வில்லுப்பாட்டின் தோற்றம் இன்றும் கண்டறிய முடியாத நிலையில் உள்ளன. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தநேரம் அவனுக்கு உதவியது வில்லாகும்அதில் கட்டப்பட்டிருந்த மணிஓசையில் மயங்கி    அதனைக்கொண்டு வில்லுப்பாட்டிசைஉருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வில்லுப்பாட்டு கச்சேரி

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கியவில்லுப்பாட்டுகாலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுதுபோக்கிற்காகவும்குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைசொல்வதற்கும்   பயன்பட்டது.
வில்லுப்பாட்டின் அமைப்புவில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாகவகுக்கலாம்:
காப்பு விருத்தம்இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும்அந்த முறையில்வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறதுபெரும்பாலும்இது விருத்தமாக அமையும்.
வருபொருள் உரைத்தல்குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர்முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும்.  இது பாடலாகஅமையப்பெறும்.
குருவடி பாடுதல்தனக்கு ஆசிரியராக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாகஉதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.
அவையடக்கம்கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும்கேட்போரைச்சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும்பிழைநேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதிஅமையப்பெறும்.
நாட்டு வளம்கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.
கதைக்கூறுநாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும்கதையின்தலைவன்தலைவியின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.
வாழிபாடுதல் இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும்கதை கேட்போர்கதைமாந்தர்கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாகமங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.
இவ்வாறு தமிழர்கள் தங்களுடைய அன்றாடவாழ்வில் நடக்கும் நிகழ்வுலையும், அவர்களுடைய சுக, துக்கங்களையும் கலை என்ற வார்த்தையில் வைத்து தங்களுடைய பண்பாடு மற்றும் கலாச்சாரதையும் வளர்தனர்

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர்

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..?
......................................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக