புதன், 12 மார்ச், 2014

மும்பை விழித்தெழு இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாடு .. மற்றும் எமது தேர்தல் கோரிக்கை People's Agenda

மும்பை விழித்தெழு இயக்கத்தின் நாடாளுமன்ற -சட்டசபை தேர்தல் நிலைப்பாடு ..
இதுவரை நடந்த தேர்தலிலும், வருகிற தேர்தலிலும் நாங்கள் எந்த ஒரு கட்சியும் ஆதரித்தது கிடையாது..ஆதரிக்கப்போவதும் இல்லை..

(அரசியல் அதிகாரம் இருந்தால் எல்லாவற்றையும் பெற்று விடலாம் என்கிற மாய பேச்சை நாங்கள் நம்பவது இல்லை..அதை பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் எழுதுகிறோம்)

ஆனாலும் தேர்தலில் மக்கள் கோரிக்கையை கொண்டு செல்ல விரும்புகிறோம் ..மும்பை  மக்களின் தேவைகளை, தமிழர்களின் தேவைகளை, சிறுபான்மையினர்,பட்டியல் இன மக்கள் போன்றவர்களின் தேவைகளை  முதன்மை படுத்துகிறோம்.

#People's Agenda..

Charter of Demand to Political party & Member of parliament ..


#Free  toilet facilities for the people especially for women.
( No latrines/toilets & safe drinking water for more than 90% for Dharavi people)

#Free reading room/library ( Plenty of unemployed or poor people living in Dharavi, library use makes better readers, higher achievers & more successful workers we want our young people/student to feel comfortable coming into their local library. Whether or not they have money in their pocket. But we (Mumbai Vizhithezhu Iyakkam /MVI) give small user fees in addition to support library)

#Free coaching centre for weaker sections (dalits,backwards and minorities) for IAS ,IPS, IRS etc exams.

#Call for an international independent investigation into the genocide against tamils in srilanka and also a referendum for
independent Tamil Eelam

#NEED (DALIT) SCHEDULED CASTE BANK. (Scheduled caster venture capital fund to support SC entrepreneurs of people dev.(special component plan & tribal sub-plan for the oppressed sections – more than 50,000 crores in central govertment. State govt & banks not releasing money to scheduled caste people developmet they misusing the money for other development like common wealth, national highway.

#Tamil bhavan in maharashtra and tamil chair in the university.

#Free health care & safe drinking water for all.

#Right to work as a fundamental right & Right to equal opportunity for education for all (from 3years to 18 years)

#Repeal of UAPA (unlawful activities prevention act) and other draconian laws.

#Release Dr. Babasaheb Ambedkar Articles &  film in all Indian languages and also name Dr.Babasaheb Ambedkar name in a Dharavi sector with fullfill of local public demand like economy,school,business and carpet area. (Latest government announcement about Dharavi sector it is against to the local people demand.)

Thanks & Regards
Mumbai Vizhitehzhu Iyakkam/MVI

வியாழன், 6 மார்ச், 2014

தமிழின அழிப்பில் ஐநா வை முதல் குற்றவாளி....ஐநா மீது தமிழக அரசு/மக்கள் வழக்கு தொடர வேண்டும்..மும்பை விழித்தெழு இயக்கம்


 தமிழின அழிப்பில் ஐநா வை முதல் குற்றவாளி....ஐநா மீது தமிழக அரசு/மக்கள் வழக்கு தொடர வேண்டும்..


ஐநா மனித உரிமை கூட்டத்தொடர் என்பது மேற்குலகின் நலன்களை மையமாகக் கொண்டதே
அமெரிக்காவின் தீர்மானமும். நவிபிள்ளை அம்மையாரின் அறிக்கையும் நாம்  எதிர்பார்த்த ஒன்றுதான்..


போர் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆன பின்னரும் எந்த நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஈழமக்களுக்கு ஏற்படவில்லை.
எம்மை அழித்தொழிக்க வேண்டும் என்ற கொலைவெறியில் இருந்த இந்திய அதிகாரவர்க்கத்திற்கும் சிங்கள இனஅழிப்பு அரசுக்கும் தெளிவான பாதையை வரைந்து கொடுத்தது மேற்குலகம்தான். அதை மவுனமாக அங்கீகரித்தது ஐநா மன்றம்.  இப்போது வந்த அமெரிக்க தீர்மானம் நம்மை மறுபடியும் ஏமாற்றும் என்று அறிந்தோம் அதை நடத்துள்ளது.ஐநா மனித உரிமை கூட்டத்தொடர் என்பது மேற்குலகின் நலன்களை மையமாகக் கொண்டதே..இதை தெரிந்த போதிலும்  நடந்த தமிழ் இனஅழிப்பை கவனப்படுத்தவும் அதை சர்வேதச  மட்டத்தில் ஒரு விவாதமாக மாற்றவும் அதன் மூலம் நமது இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறோம் ..

இனப்படுகொலையின் முதலாவது குற்றவாளியான ஐ.நா விடமே எமக்கான நீதியை எதிர் பார்த்து நிற்கும்  நிர்க்கதியான ஒரு இனம் ஆகிய நாம் .

எந்த உலகப்போர்களின் விளைவாக ஐநா தோற்றம் பெற்றதோ அதே ஐநாவின் நீதியில் நம்பிக்கையற்ற மக்களையும் நாடுகளையும் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஐநாவிற்கு எதிராக போராடுவதுதான் ஒரே வழி.

இன்று ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா என்று ஐநாவின் மீது உலகளவில் பலர் நம்பிக்கையிழந்து வரும் சூழலில் ஐநாவிற்கு எதிராக அல்லது அதற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்ற கோசங்கள் வலுத்து வருகின்றன. நாம் அந்த போராட்டத்தின் முதல் அடியை எடுத்து வைப்போம்.  எனவே தற்போது ஐநாவிற்கு எதிரான எமது போராட்டமும் எமது விடுதலையை மட்டுமல்ல ஐநாவால் வஞ்சிக்கப்பட்ட பல இனக்குழுமங்களின் விடுதலையாக இருக்கும்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மட்டுமே  சர்வதேச சமூகம் விரும்புகிறதே ஒழிய, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கமே அதற்கு இல்லை.  போர்க்கால குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை கோரப்படும் என்று சர்வதேச சமூகம் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்கள் பொய்த்துப் போயிருக்கின்றன : கொழும்பில் சில தினகளுக்கு முன்  நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அமெரிக்க தீர்மானம் குறித்து  பேசியது இதை எல்லாமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய உள்ளது.


ஐநா என்பதே உலகப்போர்களின் விளைவாக தோன்றிய ஒரு அமைப்புத்தான். "நீதியும் சட்டமும் என்பது அரசின் வன்முறை,வன்முறையும் போராட்டமும் மக்களின் நீதி" என்ற தத்துவம் பொய்க்காது. எனவே போராட்டங்கள்தான் எதையும் மாற்றியமைக்கும்.

ஐநா சாசனங்களுக்கு எதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டதை நாம் தொடர்ந்து போராடுவதனூடாக உறுதிப்படுத்த வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கெயிட்டி மக்கள் ஐநா மீது கடந்த மாதம் நியூயோர்க் நீதிமன்றில் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி அதாவது (legal terms Immunity) இருப்பதாக ஐநா கூறுகிறது.

ஆனால் ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக வழக்குத் தொடர்ந்துள்ள வழக்குரைஞர்கள் ஐநாவின் வாதத்தை முறியடிக்க முடியும் என்று கூறுகிறார்கள்

ஏன் கெயிட்டி மக்கள் தொடர்ந்து போல தமிழக மக்கள் சார்பாக ஐநாவின் மீது வழக்கும் தொடக்கலாமே .தமிழக அரசின் தீர்மானங்களுக்கும், போராட்டங்களுக்கும்  மத்திய அரசு செவிசாய்க்காததால் ஈழ  மக்களின் நலன் கருதி தமிழக அரசு கூட நேரடியாக ஒரு வழக்கை தொடரலாம்...

எனவே தமிழக அமைப்புக்கள், கட்சிகள் கருத்து வேறுபாடுகளை களைந்து இதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசுக்கு ஒரு அழுத்தத்தை  கொடுக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறோம், மும்பை விழித்தெழு இயக்கம்

 

சனி, 1 மார்ச், 2014

தமிழக எம்.பிக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களவையில் என்ன செய்தார்கள்? முழு விவரங்கள்.


.





நன்றி: வெற்றிபடிகள் 
source: http://www.vetripadigal.in
http://www.prsindia.org/

 15வது மக்களவை 

1950ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட பிறகு, முதல் மக்களவைக்கான முதல் தேர்தல் அக்டோபர் 1951 முதல் பிப்ரவரி 1951 வரை நடந்தது.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது தான் 'முதல் மக்களவை'.
கடந்த 2009  மே மாதம் நடந்த 15வது பொதுத் தேர்தல் மூலம் தற்போது நடந்து முடிந்த 15வது மக்களவை உருவாக்கப் பட்டது.   16வது  மக்களவை அமைக்க வருகிற 2014 மே மாதம் 16வது பொது தேர்தல் நடைபெற உள்ளது.

15வது மக்களவை  2009ம ஆண்டு ஜுன்  1ம தேதி அமைக்கப்ட்ட்டது.   ஜுன் 4ம தேதி முதல்  மக்களவை   அலுவல்கள்  துவங்கப்பட்டன.  பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை கூடுகிறது.  பிப்ரவரி - மார்ச மாதங்களில் பட்ஜெட் தொடரும், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் மழைக்கால தொடரும், நவம்பர் - டிசம்பர் மாதங்களில் குளிர்கால தொடரும் நடைபெறும்.

நடந்து முடிந்த 15வது மக்களவை  15 தொடர்களை நடத்தியது. கடந்த 2013 டிசம்பர் 18ம தேதி முடிய 345 அமர்வுகளை நடத்தியுள்ளது.

பாராளுமன்ற   உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் 

பொதுவாக  மக்களுக்கு  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதே தெளிவாக தெரிவதில்லை. பள்ளிகள் கல்லூரிகளில்  தங்கள் குடும்பத்தினரை சேர்ப்பதற்கும், தங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் இட மாற்றங்ககளுக்கும் மக்களவை உறுப்பினர்கள் உதவ வேண்டும் எனறு எதிர்பார்க்கிறார்கள்.  அது தவிர தெரு விளக்குகள், சுகாதாரம் போன்ற பிரச்சனைகளையும் மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள்.  சுருக்கமாக கூறினால் மக்களவை உறுப்பினர்களை பஞ்சாயத்து தலைவர்களைப் போல் தான் கருதுகிறார்கள்.

சரியான விழிப்புணர்வு இல்லாததால், மக்களவை உறு ப்பினரகளது பணிகளை சரியாக மக்கள் மதிப்பீடு செய்வதில்லை.  நமது அரசியல் சட்டங்கள் பார்வையில், மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் என்ன?

1.  பாராளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்று சட்டங்கள் இயற்றுவது.
2.  அரசின் பணிகளை கண்காணிப்பது.  குறைகளை பாரளுமன்றத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டுவருவது.
3. அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டை அலசி அரசுக்கு ஆலோசனைகளை பாராளுமன்றத்தில் அளிப்பது.
4.  வாக்காளர்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு பாராளுமன்றம் மூலமாக கொண்டு வந்து தீர்வு காண்பது.

பாராளுமன்றம் அளித்துள்ள வழிமுறைகள் 

1.  விவாதங்கள் (debates) மூலம் அரசுக்கு ஆலோசனகளை அளிக்கலாம்.  இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காணமுடியும்.

2.  தனியார் மசோதாக்கள் மூலம் (private members bills),  கட்சி கட்டுபாட்டு இல்லாமல், மக்களுக்கு தேவையான மசோதாக்களை அறிமுகப்படுத்தி விவாதத்தை உருவாக்கலாம். பல தனியார் மசோதாக்கள் அரசால் ஏற்கப்பட்டு அரசு மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறியதும் உண்டு.

3.   தொகுதி, மாநில மற்றும் தேசிய பிரச்சனைகளை கேள்விகள் (Questions) மூலம் எழுப்பி அரசின் பார்வைக்கு கொண்டு வந்து தீர்வு காணலாம்.

4.  உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடும் நாட்களில் தவறாமல் கலந்து கொண்டு பங்கேற்க வேண்டும்.  இதற்கு வருகை பதிவேடு (attendance) என்று பெயர்.

தமிழக எம்.பி க்களின் சாதனை என்ன?

15வது மக்களவையில் தமிழ் நாட்டு மக்களவை உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்கிற விவரம் மக்களவை அலுவலகம் அளித்த தகவலின் அடிப்படையில் PRS India என்கிற அமைப்பு வெளியிட்டு உள்ளது.  இந்த விவரம் 15வது மக்களவை துவங்கிய 2009 ஜுன் 4ம தேதி முதல் 2013 டிசம்பர் 18ம முடிய உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதங்கள், தனியார் மசோதாக்கள், கேள்விகள், வருகை பதிவேடு  அடிப்படையில் தயரிக்ப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி திரு ராமசுப்பு (திருநேல்வேலி) கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறார். இவர் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

கிருஷ்ணகிரி எம்.பி திரு சுகவனமும் (திமுக) தருமபுரி எம்.பி திரு தாமரை செல்வன் (திமுக) ஒட்டு மொத்த பங்கேற்பில் தமிழ் நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள்.

அண்ணா திமுக எம்.பிக்கள் திரு சிவசாமியும் (திருப்பூர) மற்றும் திரு செம்மலையும் (சேலம்) நான்கு மற்றும் ஐந்து இட்டங்க்ளை பெறுகிறார்கள் .

அமைச்சர்களாக இருக்கும் உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாது.  கேள்விகள் கேட்கமுடியாது.  அவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது.  அமைச்சர்களாக இருந்தவர்கள் பதவி விலகிய நாள் முதல், விவாதங்களில் ப்ங்கேற்றல் , கேள்விகள் கேட்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். வருகை பதிவேடும் உண்டு.

சிறந்த பணியாற்றிய மக்களவை உறுப்பினர்களுக்கு தமிழ் நாடு மக்கள் சார்பாக பாராட்டுக்கள்.

அனைத்து எம்.பி க்களின் முழு விவரம் 

MP name Constituency Political party Age Debates Private Member Bills Questions  Total  Atten
 dance
S.S. Ramasubbu Tirunelveli INC 63 164 2 1020  1186 97%
E.G. Sugavanam Krisnagiri DMK 56 23 0 866 889 58%
R. Thamaraiselvan Dharmapuri DMK 50 109 3 697 809 80%
C. Sivasami Tiruppur AIADMK 56 57 0 659 716 74%
S. Semmalai Salem AIADMK 68 122 4 539 665 87%
P. Viswanathan Kancheepuram INC 49 38 0 626 664 87%
S. R. Jeyadurai Thoothukkudi DMK 44 12 0 643 655 58%
K. Sugumar Pollachi AIADMK 53 40 0 609 649 87%
P. Kumar Tiruchirappalli AIADMK 42 55 0 557 612 88%
S. Alagiri Cuddalore INC 61 25 0 561 586 68%
Abdul Rahman Vellore DMK 54 35 0 546 581 68%
N.S.V. Chitthan Dindigul INC 79 59 2 459 520 89%
Manicka Tagore Virudhunagar INC 38 38 0 447 485 88%
Munisamy Thambidurai Karur AIADMK 66 99 0 365 464 86%
P. Venugopal Tiruvallur AIADMK 61 30 0 432 462 89%
P.R. Natarajan Coimbatore CPIM 63 33 0 411 444 90%
C. Rajendran Chennai South AIADMK 53 47 0 390 437 74%
A.K.S. Vijayan Nagapattinam DMK 52 29 0 404 433 57%
A. Ganeshamurthi Erode MDMK 66 30 0 391 421 71%
J.M. Aaron Rashid Theni INC 63 60 0 361 421 67%
P. Lingam Tenkasi CPI 47 83 0 332 415 96%
K. Murugesan Anandan Viluppuram AIADMK 62 22 1 217 240 91%
Davidson J. Helen Kanniyakumari DMK 42 45 0 182 227 82%
M. Krishnaswamy Arani INC 73 22 0 196 218 90%
Adhi Sankar Kallakurichi DMK 56 11 0 178 189 57%
Sivakumar @ J.K. Ritheesh. K Ramanthapuram DMK 40 16 0 155 171 39%
Thalikkottai Rajuthevar Baalu Sriperumbudur DMK 72 35 0 108 143 83%
O. S. Manian Mayiladuthurai AIADMK 59 48 0 48 96 69%
T.K.S. Elangovan Chennai North DMK 59 55 0 15 70 93%
Thirumaa Valavan Thol Chidambaram VCK 51 35 0 23 58 50%
Danapal Venugopal Tiruvannamalai DMK 82 27 0 5 32 65%
Dayanidhi Maran Chennai Central DMK 47 1 0 0 1 63%
S. Gandhiselvan Namakkal DMK 50 1 0 0 1 70%
Andimuthu Raja Nilgiris DMK 50 0 0 0 0 36%
D. Napoleon Perambalur DMK 50 0 0 0 0 6%
M. K. Alagiri Madurai DMK 62 0 0 0 0 6%
S. Jagathrakshakan Arakkonam DMK 65 0 0 0 0 25%
S.S. Palanimanickam Thanjavur DMK 63 0 0 0 0 36%
Palaniappan Chidambaram Sivaganga INC 68





Source: PRS India www.prsindia.org