திங்கள், 10 ஆகஸ்ட், 2009

தமிழ் உறவுகளே உங்களுடைய பங்குக்கு!!

தோழமை மிகு உறவுகளுக்கு,

விழித்தெழு இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டு ஒராண்டு ஆகின்றது. இவ்வியக்கத்தை குறித்த அறிமுகம் அதன் செயல்பாடுகள்தான். இதையேதான் இதனுடைய முகமாகவும் ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அக்டோபர் திங்கள்,2009 அன்று முதலாமாண்டு மலர் வெளியிட இருக்கிறோம். இந்த மலர் வெளியீட்டு விழா, தோழர் சீமான் மற்றும் ஐயா கொளத்தூர் மணி கலந்து கொள்ளும் நிகழ்விலேயே நடைபெற இருக்கிறது. (நிகழ்ச்சி குறித்து அறிய இங்கே அழுத்தவும்)

மலருக்கான வாழ்த்துச்செய்தி, விளம்பரம் மற்றும் கட்டுரைகள் அனுப்பிட அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி suresh.sasa2125@gmail.com.

உங்களுடைய மேலான ஆதரவை இனநலன் சார்ந்த களத்தில் எதிர்ப்பார்க்கிறோம்.எம் தமிழ் உறவுகளுக்காக எம் தோழர்கள் செய்யும் பணியில் தமிழ் மக்களின் பங்கும் இருக்க வேண்டும், பொருளாதரச்சுமை, சமூக அக்கறையோடு ஈடுபடும் தோழர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது, என்பதே இச்செய்தியின் நோக்கம்

மேலதிக தொடர்புகளுக்கு அணுக...

பன்னீர் செல்வம்:+919867488167

சிரீதர்:+919987379815

பாண்டியன்:+919821072848

மகிழ்நன்:+919769137032