வியாழன், 27 பிப்ரவரி, 2014

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி! - யோ .திருவள்ளுவர்

அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!

புழுதியை கிழப்பியபடியே கழுத்தில் கட்டியிருந்த பெரிய வெண்கல மணியொலியெழுப்பியபடி இரண்டு வெள்ளை காளைகளும் வண்டியை இழுத்து செல்கிறது. முழுநீள வேட்டியும், தோழில் சுற்றப்பட்ட துண்டும், தலைப்பாகையும் அணிந்த உயரமான அழகிய வாலிபனின் கோபம் காளைகளை வேகப்படுத்துகிறது. பாய்ந்து ஓடும் காளையின் இழுப்பில் வண்டி சந்தையின் பாதையில் மீண்டும் மீண்டும் ஓடுகிறது. ஆண்டாண்டு காலமாக தனது சொந்தங்கள் நடமாட முடியாத சாலையில் வேங்கையாய் அலையும் இந்த இளைஞன் யார் தெரியுமா?   19ம் நூற்றாண்டில் புலையன் சாதியில் பிறந்ததால் இவனுக்கும், சகமனிதர்களுக்கும் தெருவில் நடக்கக்கூட உரிமை மறுக்கப்பட்டவன். அடிமையாக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த இவனோ மாட்டு வண்டியில், முழுவேட்டி கட்டி, தோழில் துண்டும் தலைப்பாகையுமாக வருவது கண்டு ஆதிக்கச்சாதி நாயர்கள் வெறிகொண்டனர். அவனுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து எந்த புலையனும் எதிர்த்து எழும்ப கூடாது என திட்டமிட்ட நாயர்கள் கும்பல் சேர்த்து அவனை வழிமறித்தார்கள். அவனோ சிலிர்த்தெழும் வேங்கையாக இடுப்பில் சொருகியிருந்த நீண்ட கத்தியை உருவினான். அவனை தொடுபவன் எவனையும் வெட்டுவதாக அடவு கட்டி நின்றான். கோபத்திலும் உறுதியாக அடவு கட்டி காலை பரவி கையை வீசி நின்ற அவனை கண்டதும் விலகியதுஆதிக்க வெறி கும்பல். எதிர்த்து நின்ற மாவீரன் அய்யன்காளி என்னும் மாபெரும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராளி. போராளிகளுக்கு உயிர் பயமில்லை என்பதற்கு சாட்சியாக நின்றவன். தன்னலமில்லாத விடுதலை வேட்கையென்னும் நெருப்பில் குளித்து எழும் இந்த நெருப்புப்பறவைகள் எழுந்தால் விடுதலை பிறக்கும். அய்யன்காளி என்ற மாபெரும் நெருப்புக்கனல் வளர்த்த விடுதலை நெருப்பில் புலையர்கள் எழுந்தனர். திருவிதாங்கூரில் பார்ப்பனீய அடிமைத்தனத்திலிருந்து தலித் மக்களை மீட்ட மாபெரும் மக்கள் தலைவன் அய்யன்காளி.28 ஆகஸ்டு 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை அனுபவித்தனர். பார்ப்பனீய வர்ணாஸ்ரம அடுக்கில் கீழே இருந்ததால் புலையர்களை மிருகத்திற்கு இணையாக ஏரில் பூட்டி வயலை உழுதனர். அடிமைகளாக இருந்த அவர்களது உழைப்பில் நாயர்களும், நம்பூதிரிகளும், மன்னனும் உண்டு கொழுத்து கிடந்தனர். இவை அனைத்தையும் உணர்ந்த அய்யன்காளி விளையாடிய பந்து நாயர் ஒருவனது வீட்டின் அருகே விழுந்தது. கோபம் கொண்ட நாயர் அய்யன்காளியை மிரட்டினான். பல நாட்கள் யோசித்து, தெளிவடைந்த மனதுடன் புறப்பட்ட அய்யன்காளி எது மறுக்கப்பட்டதோ அந்த உரிமையை பெற தடையை மீற எழுந்தார். அந்த எழுச்சி தான் தனியொருவனாக நடத்திய மாட்டுவண்டிப் போராட்டம். முதல் முறையாக அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை நிலைநாட்டினார். தொடர்ந்து அந்த சாலையில் மாட்டுவண்டியின் மணிசத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.அய்யன்காளி பெற்ற வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு பெற செய்தது மட்டுமல்லாமல் ஆதிக்கசாதியினரை ஆத்திரமடைய வைத்தது. அய்யன்காளி மாட்டுவண்டி ஓட்ட முடிந்தாலும், மற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் தெருவில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. தனது விடுதலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையே உண்மையான விடுதலையாக இருக்க முடியுமென்பதை அய்யன்காளி உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக புத்தன் சந்தைக்கு 'விடுதலை ஊர்வலம்' போனார். ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியார் தெருவை அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர். திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.சாலியார் வீதி கலகம் பற்றிய செய்திகள் மணக்காடு, கழக்கூட்டம், கன்னியாபுரம் போன்ற பகுதியில் தீயாக பரவ இளைஞர்கள் தெருக்களில் இறங்கி உரிமைகக்காக போராட துவங்கினர். ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் கலகத்தை அடக்க ஆதிக்க சக்திகள் எடுத்த முயற்சி பலனளிக்காமல் மேலும் கலவரத்தை பரவச்செய்தது. விவசாய வேலைகளை புறக்கணித்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடத் துவங்கினர். போராடிய மக்களை பயமுறுத்த ஆதிக்கசாதியினர் தாக்குதலை தொடுத்தனர். அதன் விளைவு போராட்டத்தை மீண்டும் வலுவடைய வைத்து ஆதிக்கச்சாதி பண்ணைகளை பதற வைத்தது. தாக்குதலிலிருந்து காப்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சிறு ஆயுதக்குழுக்களை உருவாக்கினர். விடுதலைக்கான பாதையும் விரிவடைந்தது...அய்யன்காளி போன்ற தலைவர்கள் உருவாக காரணமான சூழல் பற்றிய  பதிவுஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது புலம்புகிறது. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த பார்ப்பனீயத்தை எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே பார்ப்பனீயம் இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்.திருவிதாங்கூர் சங்ககாலத்தில் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த திராவிடர்களின் பூமியாக இருந்துள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் திருவிதாங்கூரில் துவங்கிய ஆரிய பண்பாட்டு படையெடுப்பு கி.பி 8ம் நூற்றாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது (தமிழக வரலாறும் பண்பாடும்: டாக்டர் A.சாமிநாதன்). இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பை உருவாக்க துவங்கியது. "சாதி அமைப்பில்லாத சமத்துவ சமுதாயத்தில் குடியேறிய ஆரியர்கள் சதுர்வர்ண அடிப்படையில் ஆரிய சித்தாந்த சாதி அமைப்பை உருவாகினர்" (மேற்கோள்: வரலாற்றாசிரியர் திரு. ஸ்ரீதரமேனன்). 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் பார்ப்பனீய கொடுங்கோன்மையின் உச்சநிலையில் இருந்தது. பார்ப்பனீயவாதிகளால் விதிக்கப்பட்ட இந்துமத விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமை தீயில் வேக வைத்தது.கன்னியாகுமரியில் அடக்குமுறையாளர்கள் பெரும்பாலும் நாயர் சாதியினர். திருவிதாங்கூர் அரசகுடும்பத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, போரில் அபரிதமாக செயலாற்றியதற்காக நாயர்களுக்கு பிள்ளை, பணிக்கர், நம்பியார், மேனன், கர்தா, கைமால்... என பட்டங்களை மன்னன் வழங்கியிருந்தான். இந்த பட்டங்களை நாயர் குடும்பங்கள் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பட்டங்கள் துணைசாதிகளாக அடையாளம் காணப்பட்டன. நம்பூதிரிகளின் நிழல் அதிகார மையங்களாக நாயர் குடும்பங்கள் விழங்கியது. திருவிதாங்கூரில் சாதி அடுக்கில் நம்பூதிரிகளுக்கு அடுத்த இடம் நாயர்களுக்கு இருந்தது. நம்பூதிரிகளின் ஆதரவு நாயர்களுக்கு தடையில்லாமல் கிடைக்க முக்கிய காரணம் அவர்களுக்கிடயிலான morganatic மணஉறவுகள். சிலநேரங்களில் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்களாக இருந்த நம்பூதிரிகளின் செல்வத்தை பெற இந்த மண உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாயர் பெண்ணின் வீட்டிற்கு நம்பூதிரி "வரலாம்"; அந்த வேளை அவளது கணவனை விட நம்பூதிரிக்கே முதலிடம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வகை உறவுகளினால் நம்பூதிரிகளின் நிழலில் நாயர்கள் பதவி, அதிகாரம், சொத்து, படைபலம் என அனைத்தையும் அனுபவித்தனர். மன்னனின் படைகளில் முக்கிய பதவிகளில் நாயர்கள் இடம்பெற்றனர். விளைநிலங்களான வயல், தென்னந்தோப்புகள் நாயர்களிடமிருந்தது. வழிபாட்டு முறைகளிலும் நாயர்கள் சூரியவணக்கம் முதல் பெரும்பாலும் நம்பூதிரிகளின் வழிபாட்டுமுறைகளை தழுவியே இருந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்' நிலையில் இருந்த இவர்களை அப்படி அழைத்த சொல் யாமான், ஏமான் என்று மருவி சொல் வழக்காக இருக்கிறது. அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு. அடக்குமுறையை அனுபவித்த வலியின் வெளிப்பாடு சூத்திரன் என நாயரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் சொல்ல வைத்தது. பண்ணையார்களாக இருந்த நம்பூதிரிகளும், நாயர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.கொல்லம் திவான் எழுதிய மடலில் திருவிதாங்கூரில் 1,64,864 பேர் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அடிமைகளாக இருந்த மக்கள் ஆங்கிலேய காலனியாத்திக்க பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் "பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாய கூலிகள், வேலையும் சமூக அடக்குமுறையும் சேர்ந்து எங்களை விவசாய கூலி அடிமையாக பண்ணையார்களிடம் வைத்திருக்கிறது. நாங்கள மன, வாழ்வு அடிப்படையில் சுதந்திர மனிதர்களாக பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க சாதியினர் அனுபவித்து வருகிற உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நில உரிமையாளர்களின் பிடியில் சிக்குண்டு மழையிலும், வெயிலிலும் மிருகமாக உழைத்து எஜமானர்கள் சொத்தை பெருக்க நாங்கள் அரை வயிற்றில், அழுக்கு சாக்கில் அவதிப்பட வைக்கப்பட்டுள்ளோம்" என எழுதினர். அடிமைகளை வாங்குவதும், விற்பதும் ஆதிக்கசாதி நில உடமையாளர்களுக்கு உரிமையாக இருந்தது. இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன. அடிமைகளை சக்கையாக பிளிந்து வேலை வாங்கிய பின்னர் வதைப்பதும், கொலைசெய்வதும், மீண்டும் விற்பது என கொடுங்கோன்மையின் உச்சகட்டம் நிலவியது. திருவிதாங்கூர் பார்ப்பனீய அரண்மனை, கோட்டைகளின் அழகிலும், கோயில்களின் சுவர்களிலும் இந்த அடிமைகளின் இரத்தமும் சதையும் கலந்த வரலாறு செல்வ செழிப்பாக கலந்திருக்கிறது.பார்ப்பனீயம் உச்சநிலையில் ஈடுபட்ட அரசுகளில் நம்பூதிரிகளும், நாயர்களும் இணைந்து ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மன்னராட்சி குறிப்பிடத்தக்கது. நம்பூதிரிகளும், நாயர்களும் சேர்ந்து கோவில்கள், வீதிகள் எங்கும் கட்டுப்பாடுகள் அமைத்து தங்களுக்கு சாதகமான அமைப்பை உருவாகி வைத்திருந்தனர். அதிகார மையங்களில் தங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஈழவ சாதியில் பிறந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி தூரம் விட்டும், நாயர்களிடமிருந்து 16 அடி தூரம் தள்ளியும் நடக்கவேண்டும் என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. கண்ணால் பார்த்தாலே தீட்டு என சில சாதிகளை ஒதுக்கி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் உடையணிய தடையும், அபராதமும் விதித்திருந்தனர். நாயர் வீடுகளின் அருகில் பிற சாதியினர் செல்லக்கூடாது. நாயர்கள் குளிக்கும் பொது இடங்களில் பிற சாதியினர் குளிக்கக்கூடாது. நாயர்கள் போல மேலாடை அணியக்கூடாது. கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோவிலில் நுழையக்கூடாது. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இப்படியான கொடுமைகள் தொடர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் பள்ளர், பறையர், சாணார், முக்குவர் சாதி மக்கள்.

இந்த கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் எழுந்து கலவரங்களாக வெடித்தது. அந்த போராட்டங்களில் மூழ்கி எழுந்த முத்தாக சமூகப்புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். திருவிதாங்கூரில் உருவான வீரம் செறிந்த மாமனிதர்களில் அய்யங்காளி, நாராயணகுரு, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) என பலர். அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்.

மன்னர் ஆட்சியில் நம்பூதிரிகளும், நாயர்களும்அனுபவித்து வந்த பதவி சுகங்கள், அதிகாரம் அனைத்தும் காலனியாதிக்கத்தில் இடம் மாற துவங்கியது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்கள் தங்களது உரிமையை அனுபவிக்க ஆரம்பித்தனர். மேலாதிக்கத்தின் பிடி மெல்ல நழுவ துவங்கியது. பார்ப்பனீய மதத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மதம் மாறினால் கிடைக்குமென நம்பி அதிக எண்ணிக்கையில் மக்கள் மதம் மாற துவங்கினர். வாழ்வுரிமையையும், கலாச்சாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க தெற்கு திருவாங்கூரில் சமூகநீதி போராட்டங்கள் மதத்தை மையமாக வைத்து உருவானது.

ஈழவ மக்களுக்கு கோவிலில் வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு என தள்ளி வைத்தனர் ஆதிக்க சாதியினர். வைணவ இந்துகோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக வைத்து வழிபாட்டு உரிமையை மறுத்ததை எதிர்த்தநாராயணகுரு ஈழவ மக்களுக்காக தனியாக கோயில்களை உருவாக்கினார். நம்பூதிரிகளும், நாயர்களும் அதை எதிர்த்தனர். எதிர்த்த நம்பூதிரி ஒருவனிடம் "இது நம்பூதிரி சிவனுக்கான கோயிலல்ல, இது ஈழவ சிவன் கோவில்" என்றாராம் நாராயணகுரு. எங்களை எங்கள் வழியில் வாழவிடு என்பதாக அமைந்த நாராயணகுருவின் பாதை அணுகுமுறை பார்ப்பனீயத்தை உலுக்கியது.

பார்ப்பனீய கொடுங்கோன்மையில் சாலையில் நடக்க கூட உரிமையில்லாதவர்களாக புலையர் சாதி மக்கள் நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தங்களது பொருளாதாரமும், வாழ்க்கையும் முன்னேறாமல் இருந்த புலையர் சாதி மக்கள் சாலைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது வசதிகளுக்காக இயக்கமாக போராட்ட துவங்கினர். 1893ல் புலையர் சாதியினர் வெங்கனூர் என்னும் இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினர். இந்த பள்ளிக்கூடம் ஆதிக்கசாதியினரால் தகர்க்கப்பட்டது. புலையர் சாதி மக்களிடமிருந்து பிறந்த ஒருவர் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆதிக்க சாதியினர் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வதை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார் அந்த மனிதர். மாட்டு வண்டியில் பொது சாலையில் சென்று போராட்டம் துவங்கினார். 1898ல் அவர் தலைமையில் பொது சாலையில் புலையர்கள் நுழையும் போராட்டத்தை நடத்தினார். புலையர் சாதி மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் மோதல்கள் வெடித்தன. கன்னியாகுமரி, நெய்யாற்றின்கரை, வைக்கம் முதலான இடங்களில் வெடித்த போராட்டங்களை அரசு அடக்கியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாபெரும் மனிதர் தான் அய்யன்காளி. அய்யன்காளி, வலிக்கர சோதி முதலிய தலைவர்களின் போராட்டங்களின் பலனாக புலையர் சாதி மக்களுக்கு கல்வி உரிமைக்கான சட்டத்தை 1914ல் திருவிதாங்கூர் அரசு உருவாக்கியது. இந்த சட்ட உரிமையை ஆதிக்க சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். புல்லத்து என்ற இடத்தில் புலையர் சாதி குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை நாயர்கள் தீவைத்து கொழுத்தினர். இந்த பிரச்சனையில் காலனியாதிக்க அரசு தலையிட்டது.

நாடு முழுவதும் கலனியாதிக்கத்தின் பிடி அழுத்தமாக இருந்த வேலையிலும் பார்ப்பனீய கொடுங்கோன்மை ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன. குறுநில மன்னர்கள் போல திருவிதாங்கூரின் பல பகுதிகளின் பல கிராமங்களை நம்பூதிரிகள், நாயர்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்த அதிகார மையங்களே இதற்கு அடிப்படை காரணம். இந்த அதிகார மையங்கள் மன்னனுடன் தொடர்பை வைத்திருந்தது. கோவிலை சுற்றி அமைந்த பல கிராமங்களை உள்ளடக்கி ஆளப்பட்ட இந்த பகுதிகள் சங்கேதம் என்று அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை கவனிக்க தனியாக படைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இவை அதிகார மையங்களாக விளங்கியது (தகவல்: கொச்சி இராச்சியம், K.P.மேனன், 1911)

நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியில் (இடுப்புக்கு மேலே) மார்பை மறைக்க இடுப்புக்கு மேல் துணி அணிய உரிமை மறுக்கப்பட்டது. மீறி ஜாக்கட் அணிந்த பெண்கள் கொடும் துயரத்துக்கு ஆளாயினர். நாடார் சாதி மக்களின் போராட்டங்களும், ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதித்தது. ஆனால் அவர்கள் மேல்சாதி பெண்களைப் போல நல்ல உடை அணியக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாயர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை நடைமுறைபடுத்த முடியவில்லை. 1859ல் தெற்கு திருவிதாங்கூரில் (குமரிமாவட்டம்) இரணியல், கோட்டார், திட்டுவிளை, தொடுவெட்டி மற்றும் பல ஊர்களில் நாடார் சாதி மக்களை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரித்தனர். அவர்களது ஜாக்கெட்களை நாயர்கள் கிழித்தெறிந்த கொடுமை தொடுவெட்டி (மார்தாண்டம்), அருமனை என கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.
1870ல் குமாரகோவில் திரு.வெள்ளையன் நாடார் தலைமையில் 12000 சாணார் சாதி மக்கள் கோவிலில் நுழைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலில் அனுமதிக்காது நாயர்கள் தாக்கியதில் 150 சாணார் சாதியினர் கொல்லப்பட்டனர். இதுபோல பார்ப்பனீய இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையவிடாத நிலை திருவிதாங்கூர் முழுவதும் இருந்தது.அய்யாவழி இப்படியான காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்துதாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் என அந்த மக்களின் உரிமைக்காக அய்யாவழி தனி மதமாக பிறந்தது. இல்லறமே உயர்ந்த அறமாக போதித்த அய்யா வைகுண்டர் இல்லறத்தையே கடைபிடித்தார். இயற்கையான வழியும், வாழ்வுமே அய்யாவழியின் அடிப்படை என்பதற்கு துறவறமின்மை, கண்ணாடியில் தன்னையே கண்டு வணங்குதல், சுயமரியாதைக்கு அடையாளமான தலைப்பாகை, ஒரே கிணற்றில் எல்லோரும் சமமாக தண்ணி அருந்துவது, சாதி பாகுபாடின்மை என பல அடையாளமாக உள்ளன (அய்யாவழி பற்றி முந்தைய பதிவுகள் இங்கே: அய்யாவழி மதத்தின் வரலாறு,பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!). ஒடுக்கப்பட்ட மக்களின் மாமனிதர்களில் அய்யாவும் ஒருவர்.பார்ப்பனீய கொடுங்கோன்மை திட்டங்களையும், கொள்கைகளையும் அறவே எதிர்த்து பல தளங்களில் போராடியவர்கள் தான் அய்யா, நாராயணகுரு, அய்யன்காளி போன்ற எண்ணற்ற மாவீரர்கள். இன்று அவர்களை பார்ப்பனீய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் சொந்தமாக்க முனைவது ஓநாய் அழுவதை தான் நினைவுபடுத்துகிறது. நம்பூதிரிகளும், நாயர்களும் நடத்திய கொடுங்கோன்மை கோரத்தாண்டவத்தை திருத்தி எழுத பார்ப்பனீயவாதிகள் முயல்கிறார்கள். இதன் பின்னணியில் சமகால சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் சங்பரிவாரங்களை 1970, 1980 களில் உருவாக்கி களம் அமைத்ததும், கலவரங்களை தூண்டியதும் நாயர்கள். தங்களது இழந்த அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் வழியாக கிடைக்குமா என அலையும் ஆதிக்கசாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறை பலிக்கடாவாக ஆக்கப்படுகிறது காலத்தின் சுழற்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை அழிப்பது, திருத்துவதன் வழி பார்ப்பனீயவாதிகள் தங்கள் தவறுகளை ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மிசனரிகள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளில் சங்கப்பரிவாரங்களின் ஊடுருவலும், ஆர்.எஸ்.எஸ் கிளைகளும் உருவாக்கப்படுகின்றன. மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் தனித்தன்மையை அதிக்கசக்தியினர் அழித்து, வரலாற்றை திரித்து குற்றப்பழியிலிருந்து தப்பிக்க பார்ப்பனீயம் துடிக்கிறது. 


_________________

அய்யா (வைகுண்டர் )வழி வரலாறு- யோ .திருவள்ளுவன்

ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் ஆதிக்க  அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த இந்து மதத்தை  எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே இந்து மதம்  இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்


அய்யாவழி வரலாறு

"அய்யாவழி"
தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.

திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.

1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.

அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).

அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்


  • பூசை செய்யக்கூடாது.

  • பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது

  • யாகம், ஹோமம் கூடாது

  • மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.

  • எந்த வழிபாடும் கூடாது

  • ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது

  • காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது

  • மாலையிடுதல் கூடாது

  • யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்

  • லஞ்சத்தை ஏற்காதீர்கள்

  • ஆசைகளை துறந்துவிடுங்கள்.

  • உண்மையாக இருங்கள்

இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.
அய்யாவழியின் முறைகள் மற்றும் இறையியல்:
"கலியென்பது எலியல்ல, கணையாழி வேண்டாமே" என கலி பற்றியும் அதை அணுகும் முறை பற்றியும் அகிலம் கூறுகிறது.

கலி (தீமை) என்பது எலி போன்ற உருவ அமைப்பு உடையதல்ல. அதனால் ஆயுதம் வேண்டாம். அன்பை அடிப்படையாக வைத்து ஆயுதமே கூடாது என மக்களுக்கு அன்பு போதனையை உருவாக்கியது தான் அய்யாவின் வழி.

"இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர், உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு.

அச்சம் தவிர்த்து நிமிர்ந்து நில்
"அய்யாவழி" இந்துமதத்திலிருந்து முற்றிலும் எதிர்பாதையை மக்களுக்கு காட்டுகிறது. தாங்களை உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ""இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள்." என அய்யா சொன்னது இந்துமத வர்ணாஸ்ரம மனுதர்மத்தையும், அதன் வேதங்களையும் புறக்கணித்து புதிய பாதையை மக்களுக்கு தந்தது. கொடுமையான பார்ப்பனீய சட்டத்தை உடைத்து மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அய்யாவின் வழி. விடுதலைக்கான பாதைக்கு முதல் நிலை அச்சம் தவிர்ப்பது; அய்யாவழி அதை செய்தது.
தன்மானமும், சுயமரியாதையும்
"நீங்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் கலி (தீமை/கொடுமைகள்) தானாகவே அழியும்" என அகிலத்திரட்டில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதனை சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் அடிமையற்ற நிலையில் நிமிர்ந்து நடக்க வைப்பது அய்யாவின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. அகிலத்திரட்டில் இதை பல பகுதிகளில் காணலாம்.
இந்துமதம் கீழ்சாதி என தீட்டாக வைத்திருந்து ஆடை அணிந்துகொள்ள கூட வரிவிதித்த காலத்தில்; ஆண்கள் தலையில் தலைப்பாகை அணியவும், பெண்கள் தோழ்ச்சீலை அணியவும் வழியை உருவாக்கி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உருவாக்கியது. இந்த அடையாளங்கள் "மனிதனாக பிறந்த எவனும் எவனுக்கு முன்னும் அடிமையில்லை" என்ற சுயமரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் விதைத்தது. மனித மாண்பை உன்னதமாக மக்களுக்கு எளிய வழியில் இந்த முறைகள் உணர்த்தின.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக
அய்யாவழியை சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.
அரச(அரசியல்) அடக்குமுறைக்கு எதிராக:
திருவிதாங்கூர் மன்னனை 'கலிநீசன்' எனவும், ஆங்கிலேயர்களை 'வெண்நீசன்' எனவும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. கலிநீசனை பிரதான அடக்குமுறையாளனாகவும், அவனே மக்களின் உழைப்பை சுரண்டும் ஊழியம், வரிகள், சாதி அடக்குமுறைகளை கட்டிக்காப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் "மன்னனின் ஆட்சியை அகற்றி விட்டு நாட்டை ஒரே குடையின் கீழ் ஆளப்போவதாக" அகிலத்திரட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இது அன்றைய திருவிதாங்கூர் மன்னனின் சாதி அடக்குமுறைக்கு எதிராக எழுந்த குரலாக காணலாம். அய்யா வைகுண்டர் மீது மன்னனின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் வழி எங்கெல்லாம் அரச அதிகாரம் மக்களை அடக்குகிறதோ அங்கே மக்களுக்கு அரச அடக்குமுறையை எதிர்க்க மன உறுதியை அய்யாவழி தருகிறது.

பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிராக 
உழைக்கும் மக்களை சுரண்டுவதையும், ஏமாற்றி பிழைப்பதையும் அய்யாவழியில் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இருந்த உழைப்பு அடிப்படையிலான அடக்குமுறைகளை எதிர்த்து 3 முழு பக்கங்கள் அகிலத்திரட்டில் கண்டிக்கப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் மற்றும் பிற வகைகளில் வாங்கப்பட்ட கொடுமையான வரிகளை எதிர்க்கிறது அகிலத்திரட்டு. "மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் வரி என்ற பெயரில் வசூலிக்கிற கொடுமையான நீசன்" என மன்னனை அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. "யார் உழைத்து வருமானம் சேர்க்கிறார்களோ அவர்களே அதை அனுபவிக்கட்டும்; வேறு யாருக்கும் அதை அனுபவிக்க அதிகாரமில்லை", "எந்த வரியும் இனிமேல் கொடுக்க அவசியமில்லை" என்கிறது அகிலத்திரட்டு. அந்த காலகட்டத்தில் சாணார் சாதி மக்கள் பனையேற பயன்படுத்தும் மிருக்குத்தடி என்கிற துணைக்கருவிக்கு கூட வரி கட்டவேண்டியது இருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பூசை, காணிக்கை, யாகங்களுக்கு எதிராக
அய்யாவழி பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மக்களின் உழைப்பை யாரோ பூசாரிகள் அனுபவிக்க கொடுக்ககூடாது என அய்யா மக்களுக்கு அறிவுறுத்தினார்.
பூசாரிகளுக்கு கண்டனம்

"வேத பிராமணர்களுக்கு தொல்லை தர நாம் வந்தோம்", "பூணூல் அணிபவர்கள் இந்த பூமியில் இனிமேல் இருக்கமாட்டார்கள்" என புரோகிதர்களை கண்டிக்கிறார் அய்யா. ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் பிராமணர்கள் கடைபிடித்து வரும் மனிதத்தன்மையற்ற செயல்களை அய்யா கண்டித்தார். அய்யாவழி மக்களுக்கு பூசாரி எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்தார்.
விக்கிரக வழிபாட்டை மறுத்தல்
மூடப்பழக்கத்தையும், வெற்று சடங்குகளையும் வளர்த்து மக்களை அறிவில்லாதவர்களாகவும், அறியாமையிலும் வைத்து தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க பூசாரிகளுக்கு உதவியாக இருக்கும் விக்கிரக வழிபாட்டை அய்யா மறுத்தார். தனது வழியை பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வழிபடுவதை எதிர்க்கவும், மறுக்கவும் கட்டாயமாக்கினார்.

அய்யா வழிமுறை
அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். "மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது" என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.

அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.

ஆண்பெண் சமஉரிமை:

அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.

அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.

அய்யாவழி ஒரு தனிமதம்:

கலி பற்றிய விடயத்திலும், அதை எதிர்கொள்ளுவதிலும் அய்யாவழி மற்ற இந்துமதத்திலிருந்து முரணானது. கலியை (தீமையை) அழிக்க ஆயுதங்கள் தாங்கி கடவுள்கள் அவதரிக்கும் இந்துமதத்திலிருந்து வேறுபட்ட பார்வையை அணுகுமுறை வழியாக அய்யாவழி மதம் உருவாக்கியது.

இந்துமதம் தனது நம்பிக்கையை வர்ணாஸ்ரம சாதி அடித்தளத்திலிருந்து கட்டி பரவலாக்கி வைத்திருக்கிறது. அது கோயில்கள் பிரதான இடங்களாகவும், கடவுள் வழிபாடு, காணிக்கை, வழிபாடு, யாகம், விக்கிரகம், அபிசேகங்கள், யாகம், பூசாரி என அதன் ஆதாரங்களாக விளங்குகிறது. பெண்ணுக்கு இந்துமத கோவில்களில் வழிபாட்டில் உரிமையில்லை.

அய்யாவழி ஆரிய இந்துமதத்திலிருந்து எதிரான திசையில் மக்களை ஒன்று திரட்டியது. அய்யாவழியை தனிமதமாக பதிய இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் சாதகமாக செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அய்யாவழி மக்களை இந்துமதம் என கணக்கில் சேர்க்கும் மோசடி கடந்த காலங்கள் தொட்டு நடந்து வருகிறது. அய்யாவழியினர் தங்களை தனிமதமாக அடையாளம் காணவே விரும்புகின்றனர்.

சமீபகாலங்களாக இந்துமதத்தில் ஒரு பிரிவு தான் அய்யாவழி என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்துமதத்தின்(வைணவ) சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த புதிய சமயங்களையும், வழிபாடுகளையும் (புத்தம், சமணம், நாட்டார் வழக்கியல் வழிபாடுகள், வள்ளலாரின் வழி, அய்யாவழி...) இந்துத்துவவாதிகள் ஒரே குடையின் கீழ் இந்து என முழக்கமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆதிக்க எண்ணமுடைய சில வலைப்பதிவாளர்களும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அய்யாவழியைப் பற்றி பரப்புகிற பொய்யான புழுகு வரலாற்றை எதிர்ப்பதும், உண்மையை பதிவு செய்வதும் மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.

எப்படி ஒரு கையின் விரல்கள் பல வடிவங்களில் பன்முக தன்மையுடன் இருக்கிறதோ அதுபோல பன்முக சமயங்கள் அதன் கூறுகளோடும், காலத்திற்கேற்ற மறுமலர்ச்சியுடனும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்துத்துவம் என்கிற புளியமர நிழலில் அழிந்துபோகும் அழகிய ரோஜாசெடியாக நமது பண்பாடு ஆபத்தை சந்திக்கிறது. இந்த முறை பண்பாட்டை அழிப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அவர்களது எழுத்துக்கள் பொய்யையும் உண்மையாக நம்ப வைக்கும் கலையில் கைத்தேர்ந்தது. விழிப்பாக இருப்போம்.

________
முத்தாரு, மாடத்தி போல அடிமையாக பலரை கொலைசெய்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நாகர்கோயில் செல்லும் வழியில் தாளக்குடி எனும் கிராமம். அங்கு சாம்பவர் சாதியைச் சார்ந்த கர்ப்பிணி பெண் மாடத்தியை ஆதிக்கசாதியினர் அடிமையாய் வைத்திருந்தனர். அவரை மாட்டுக்குப் பதிலாய் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுது கொன்றனர். இந்த கொடுமை 19ம் நூற்றாண்டில் நடந்தது.
~0OO0OO0OO0~
முத்தாரு, மாடத்தி போல அடிமையாக பலரை கொலைசெய்த வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் இவை மட்டுமா? எத்தனை வகையான வரிகள் மற்றும் அபராதங்கள்?
  • புலையர் சாதி மக்கள் நடந்த பாதையைப் பெருக்கிச் செல்ல அவர்களது கழுத்தில் துடைப்பம் கட்டிச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.
  • 'பார்த்தால் தீட்டு' என தீண்டாமை கொடுமையில் நம்பூதிரியும், நாயரும் தெருக்களில் நடந்து வரும் போது "எட்டிப்போ" என புலையர்களையும், ஈழவர்களையும் எட்டு அடி தூரத்திற்கு மேல் தள்ளி நடக்க வைத்தனர்.
  • நாடார் சாதி ஆண்கள் வளைந்த கைப்பிடி உள்ள குடை வைத்துக் கொள்ளக்கூடாது. மீறினால் அதற்கு அபராதம்.
  • ஆண்கள் மீசை வளர்க்கக்கூடாது.
  • ஆண்கள் தலையில் துணி கட்டக் கூடாது.
  • பெண்கள் மார்பைத் துணிவைத்து மறைக்கக் கூடாது. மார்பின் அளவிற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் (முலை வரி எனப்பட்டது).
  • பனையேறுபவர்களது அருவா, கம்புதடி என அனைத்திற்கும் வரி.
  • திண்ணை வைத்து வீடு கட்டக்கூடாது. திண்ணை வைத்து வீடு கட்டினால் ஆட்கள் வந்து அமர்ந்து பேசுவார்கள் அதனால் அறிவு பெருகிவிடுமாம்.
  • குடியிருப்புகள் போல வரிசையாக வீடு கட்டக்கூடாது.
  • தாலியில் தங்கம் அணியக்கூடாது. பனைஓலையை சுற்றி கட்டுவது தான் தாலி.
  • செருப்பு அணியக்கூடாது.
  • படிக்கக்கூடாது.
  • பொது குளத்தில் குளிக்கக்கூடாது.
  • இடுப்பில் தண்ணி குடம் எடுக்கக்கூடாது.
இன்னும் பல...
~0OO0OO0OO0~
பைத்தியக்கார விடுதி என்று விவேகானந்தரால் சொல்லப்பட்ட மனுதர்மத்தின் கோட்டையாக இருந்த திருவிதாங்கூரில் நடந்த கொடுமைகள் தான் இவை அனைத்தும். கன்னியாகுமரியில் இந்து சமயம் செய்த அடிமைத்தனத்திற்கு சாட்சியாக திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் பல ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் இருக்கின்றன.
இந்த கொடுமைகளை நிகழ்த்தியது யார்? ஆங்கிலேயர்களா? மிசனரிகளா? மொகலாய மன்னர்களா? யார் செய்தார்கள்?
1826 முதல் 1857 வரை மூன்று முறைகள் இக்கொடுமைகளை எதிர்த்து மக்கள் போராடினர். முறையீடுகள் பிரிட்டீஸ் மகாராணி வரை அனுப்பப்பட்டது. நாயர்களும், நம்பூதிரிகளும் இந்த உரிமைக்குரல்களை கடுமையாக எதிர்த்தனர்.
போராடிய நாடார் பெண்களுக்கு 1829ல் மேலாடை உடுத்த அரசாணை அனுமதி கொடுத்தது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த விடவில்லை ஆதிக்க சக்திகள். திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவு பெற்ற நாயர் குழுக்கள் பெண்களின் ஜாக்கெட்டைக் கிழித்துக் கலகம் செய்ததனர். மனிதத்தனமற்ற கீழத்தரமாக நடந்துகொண்ட இந்த ஆதிக்க சாதியினரின் மதம் இந்துமதம்.
பாளையங்கோட்டையில் நாடார் சாதியை சார்ந்த மக்கள் மானம் காக்க துணி அணிய உரிமை இருந்தது; கன்னியாகுமரியில் அந்த உரிமை இல்லை. காரணம் கன்னியாகுமரி பார்ப்பனர்கள் கரம் ஓங்கிய திருவிதாங்கூர் இந்து மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு 'குப்பாயம்' போட உரிமையிருந்தது. இந்துவாக இருந்து மார்பை மறைக்க கூட உரிமையில்லாமல் சுயமரியாதையை இழப்பதை விட தடையாக இருந்த மதத்தை தூக்கியெறிவது மேல் என கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். அப்போதும் திருவிதாங்கூர் இந்து மன்னனின் ஆதிக்கம் தான் நடந்துகொண்டிருந்தது. மன்னனின் காலத்தில் மதம் மாறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டன (தேவசகாயம் பிள்ளைக்கு கிடைத்த தண்டனைகள் இதற்கு ஒரு உதாரணம்). கிறிஸ்தவ மதம் பரவ இந்துமதத்தின் சாதிச்சாக்கடை சனாதான தர்மமே காரணமாயிற்று.
~0OO0OO0OO0~
அய்யாவழி என்னும் விடுதலை மதம்
வைதீக இந்துமதத்திற்கும் (பார்ப்பனீய மதம்) முத்துக்குட்டி சுவாமிகளின் அய்யா வழிபாட்டு முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆங்கிலேயர்களை அய்யா எதிர்க்கும் சில வரிகளை மட்டும் காட்டி பார்ப்பனீய இந்துமதம் தப்பிக்க இயலாது. அய்யா வழிபாடு முறை முற்றிலும் இந்துமதத்திற்கு எதிரானது. அதனால் தான் அய்யாவை இராஜாங்க எதிரியாக அன்றைய இந்து ஆதிக்க சாதியினர் திருவாங்கூர் மன்னரிடம் குற்றம் சாட்டினர். நம்பூதிரிகளின் ஆலோசனையின் பேரில் திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை சித்திரவதைக்குள்ளாக்கினான்.
'தாலிக்கு ஆயம், கம்புத்தடிக்கு ஆயம் ' என அகிலத்திரட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திருவிதாங்கூர் மன்னன் சுமத்திய வரிக்கொடுமைகளை அய்யா எதிர்த்திருக்கிறார். (ஆயம் = வரி; கம்புத்தடி= பனையேறும் தொழிலுக்கு உதவும் கருவி). அய்யாவின் முதல் பெயரான "முடிசூடும் பெருமாள்" என்ற பெயரை மாற்றி 'முத்துக்குட்டி' என ஆக்க காரணமும் பார்ப்பனீய இந்துமத ஆதிக்க சாதியினர். 'முத்துகுட்டி' அய்யா வழியை உருவாக்க காரணமும் அவர்களது அடக்குமுறையே.
அய்யாவழியில் இந்துமதத்திற்கு நேர் எதிரான வழிகளை தான் அய்யா வகுத்தார். அவற்றில் சில:
  1. பூசை செய்யக்கூடாது.
  2. பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
  3. யாகம், ஹோமம் கூடாது
  4. மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  5. எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
  6. எந்த வழிபாடும் கூடாது
  7. ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
  8. காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
  9. மாலையிடுதல் கூடாது
  10. யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
  11. லஞ்சத்தை ஏற்காதீர்கள்
  12. ஆசைகளை துறந்துவிடுங்கள்.
  13. உண்மையாக இருங்கள்
இவை அனைத்தும் அய்யா வழியினரின் நூலான 'அகிலத்திரட்டில்' சாட்சியாக இருக்கிறது.
பார்ப்பனீய இந்துமதத்திற்கு எதிர்திசையில் அய்யாவழி!
  • சாதியை படைத்தவன் நீசன் என்கிறார் அய்யா. இந்துமதத்தில் சாதியை படைத்தவன் கடவுள். அய்யாவழிக்கும், இந்துமதத்திற்கும் இடைய்லான அடிப்படி முரண்பாட்டில் இது முக்கியமானது.
  • இந்து மதம் உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையது. அய்யா வழியில் இறைவனுக்கு உருவமில்லை.
  • இந்து மதத்தில் சாதி அமைப்பு தான் அதன் அடித்தளம். அய்யா வழியில் சாதி வேற்றுமைகள் இல்லை. அனைவரும் சேர்ந்து துவையலுடன் கஞ்சி அருந்தும் 'துவயல் பந்தி' உண்பார்கள்.
  • இந்து மதத்தில் கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் அர்ச்சகர் என்ற இடைத்தரகர் உண்டு. அய்யா வழியில் எந்த பூசாரியோ/அர்ச்சகரோ இடைத்தரகராக இல்லை.
  • இந்து மதத்தில் பிறர் கருவறைக்குள் செல்ல உரிமையில்லை. அய்யா வழியில் 'பள்ளியறை' வரை சென்று (ஆண், பெண் வேறுபாடு உட்பட) எந்த வேறுபாடுகள் இல்லாமலும் வணங்கலாம். தலையில் சுயமரியாதையுடன் தலைக்கட்டுடன் தான் அய்யாவழியில் வணக்கம் செலுத்த வேண்டும்.
  • அய்யா வழியினர் எந்த இந்து கோயில்களுக்கும் சென்று வழிபடுவதோ, பிரசாதங்களை உண்பதோ இல்லை.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமையை உருவாக்க இந்துமதத்தை புறக்கணித்து தனது மக்களுக்காக புதிய வழியான 'அய்யா வழியை' தோற்றுவித்து அன்றைய பார்ப்பனீயத்தின் குரல்வளையை இறுக்கியவர் அய்யா!
இன்றைய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் ஆதிக்க குரல்களை அடக்க இந்த மதம் தனித்தன்மையுடன் இருப்பது தடையாக இருக்கிறது. அதனால் இந்துவெறியாளர்கள் அய்யா வழியும் இந்து மதம் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் நடத்திய மண்டைக்காடு கலவரத்தின் போது அதற்கு எதிராக குன்றக்குடி அடிகளார், அரோக்கியசாமி ஆண்டகை, இஸ்லாமிய தலைவர்கள் ஆகியோருடன் இணைந்து அய்யா வழியின் இன்றைய 'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார் ஒற்றுமை பேரணிகளை முன்னின்று நடத்தினார். அன்று முதல் அய்யா வழியை தனக்குள் விழுங்கும் பிரச்சரங்களை இந்து மதவெறியர்கள் ஆரம்பித்தனர்.
ஆதிக்கசாதி இந்துக்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் மாற்று மதங்களில் ஒன்று அய்யாவழி! ஆம் இது ஒரு தனிமதம்! பார்ப்பனீயத்தின் பிடரியை நெரித்ததில் அய்யா வழி தனிமதமே!

ஆடு நனைகிறது என ஓநாய் அழுது வடிப்பதாக கிராமங்களில் பழமொழி ஒன்று உண்டு. இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைமுறை, தெய்வங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டு பார்ப்பனீயம் ஓநாயாக அழுது புலம்புகிறது. ஓநாய்களிடமிருந்து ஆடுகளுக்கு விடுதலை தானாக வருவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும் அது போல தானாக கிடைப்பதில்லை. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் விடியலைப் பெற முடியும்.

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது. தென்தமிழகத்தில் பார்ப்பனீய அடக்குமுறையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அய்யாவழி தோன்றியது. பிரச்சனையின் உச்சநிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே அய்யாவழி பிறந்தது. எந்த பார்ப்பனீயத்தை எதிர்த்து அய்யாவழி பிறந்ததோ அதே பார்ப்பனீயம் இன்று அய்யாவழியை விழுங்கி ஏப்பம் விட துடிக்கிறது. அய்யாவழி மதம் தோன்றிய காரணத்தை புரிந்துகொள்ள அன்றைய திருவிதாங்கூர் பற்றி அறிவது அவசியம்.

திருவிதாங்கூர் சங்ககாலத்தில் ஐந்திணைகளாக பிரிக்கப்பட்டு சமஉரிமை படைத்த திராவிடர்களின் பூமியாக இருந்துள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் திருவிதாங்கூரில் துவங்கிய ஆரிய பண்பாட்டு படையெடுப்பு கி.பி 8ம் நூற்றாண்டில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது (தமிழக வரலாறும் பண்பாடும்: டாக்டர் A.சாமிநாதன்). இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பை உருவாக்க துவங்கியது. "சாதி அமைப்பில்லாத சமத்துவ சமுதாயத்தில் குடியேறிய ஆரியர்கள் சதுர்வர்ண அடிப்படையில் ஆரிய சித்தாந்த சாதி அமைப்பை உருவாகினர்" (மேற்கோள்: வரலாற்றாசிரியர் திரு. ஸ்ரீதரமேனன்). 19ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் பார்ப்பனீய கொடுங்கோன்மையின் உச்சநிலையில் இருந்தது. பார்ப்பனீயவாதிகளால் விதிக்கப்பட்ட இந்துமத விதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமை தீயில் வேக வைத்தது.

கன்னியாகுமரியில் அடக்குமுறையாளர்கள் பெரும்பாலும் நாயர் சாதியினர். திருவிதாங்கூர் அரசகுடும்பத்திற்கு விசுவாசமாக இருந்ததற்காக, போரில் அபரிதமாக செயலாற்றியதற்காக நாயர்களுக்கு பிள்ளை, பணிக்கர், நம்பியார், மேனன், கர்தா, கைமால்... என பட்டங்களை மன்னன் வழங்கியிருந்தான். இந்த பட்டங்களை நாயர் குடும்பங்கள் நிரந்தரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பட்டங்கள் துணைசாதிகளாக அடையாளம் காணப்பட்டன. நம்பூதிரிகளின் நிழல் அதிகார மையங்களாக நாயர் குடும்பங்கள் விழங்கியது. திருவிதாங்கூரில் சாதி அடுக்கில் நம்பூதிரிகளுக்கு அடுத்த இடம் நாயர்களுக்கு இருந்தது. நம்பூதிரிகளின் ஆதரவு நாயர்களுக்கு தடையில்லாமல் கிடைக்க முக்கிய காரணம் அவர்களுக்கிடயிலான morganatic மணஉறவுகள். சிலநேரங்களில் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்களாக இருந்த நம்பூதிரிகளின் செல்வத்தை பெற இந்த மண உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாயர் பெண்ணின் வீட்டிற்கு நம்பூதிரி "வரலாம்"; அந்த வேளை அவளது கணவனை விட நம்பூதிரிக்கே முதலிடம் என்ற வழக்கம் இருந்தது. இவ்வகை உறவுகளினால் நம்பூதிரிகளின் நிழலில் நாயர்கள் பதவி, அதிகாரம், சொத்து, படைபலம் என அனைத்தையும் அனுபவித்தனர். மன்னனின் படைகளில் முக்கிய பதவிகளில் நாயர்கள் இடம்பெற்றனர். விளைநிலங்களான வயல், தென்னந்தோப்புகள் நாயர்களிடமிருந்தது. வழிபாட்டு முறைகளிலும் நாயர்கள் சூரியவணக்கம் முதல் பெரும்பாலும் நம்பூதிரிகளின் வழிபாட்டுமுறைகளை தழுவியே இருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாயர்களை நேரில் காணும் போதும், பேசும் போதும் அழைக்க "ஏமானே (எஜமானே)" என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. 'எஜமான்' நிலையில் இருந்த இவர்களை அப்படி அழைத்த சொல் யாமான், ஏமான் என்று மருவி சொல் வழக்காக இருக்கிறது. அதே நாயர் நேரில் கண்ணில் படாத வேளை சூத்திரன் என திட்டுவதும் உண்டு. அடக்குமுறையை அனுபவித்த வலியின் வெளிப்பாடு சூத்திரன் என நாயரை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் சொல்ல வைத்தது. பண்ணையார்களாக இருந்த நம்பூதிரிகளும், நாயர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக வைத்திருந்தனர்.

கொல்லம் திவான் எழுதிய மடலில் திருவிதாங்கூரில் 1,64,864 பேர் அடிமைகளாக இருந்துள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அடிமைகளாக இருந்த மக்கள் ஆங்கிலேய காலனியாத்திக்க பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் "பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாய கூலிகள், வேலையும் சமூக அடக்குமுறையும் சேர்ந்து எங்களை விவசாய கூலி அடிமையாக பண்ணையார்களிடம் வைத்திருக்கிறது. நாங்கள மன, வாழ்வு அடிப்படையில் சுதந்திர மனிதர்களாக பண்ணையார்கள் எதிராக உள்ளனர். ஆதிக்க சாதியினர் அனுபவித்து வருகிற உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நில உரிமையாளர்களின் பிடியில் சிக்குண்டு மழையிலும், வெயிலிலும் மிருகமாக உழைத்து எஜமானர்கள் சொத்தை பெருக்க நாங்கள் அரை வயிற்றில், அழுக்கு சாக்கில் அவதிப்பட வைக்கப்பட்டுள்ளோம்" என எழுதினர். அடிமைகளை வாங்குவதும், விற்பதும் ஆதிக்கசாதி நில உடமையாளர்களுக்கு உரிமையாக இருந்தது. இரணியல், தொடுவெட்டி, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் அடிமைகளை விற்க சந்தைகள் இருந்துள்ளன. அடிமைகளை சக்கையாக பிளிந்து வேலை வாங்கிய பின்னர் வதைப்பதும், கொலைசெய்வதும், மீண்டும் விற்பது என கொடுங்கோன்மையின் உச்சகட்டம் நிலவியது. திருவிதாங்கூர் பார்ப்பனீய அரண்மனை, கோட்டைகளின் அழகிலும், கோயில்களின் சுவர்களிலும் இந்த அடிமைகளின் இரத்தமும் சதையும் கலந்த வரலாறு செல்வ செழிப்பாக கலந்திருக்கிறது.

பார்ப்பனீயம் உச்சநிலையில் ஈடுபட்ட அரசுகளில் நம்பூதிரிகளும், நாயர்களும் இணைந்து ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மன்னராட்சி குறிப்பிடத்தக்கது. நம்பூதிரிகளும், நாயர்களும் சேர்ந்து கோவில்கள், வீதிகள் எங்கும் கட்டுப்பாடுகள் அமைத்து தங்களுக்கு சாதகமான அமைப்பை உருவாகி வைத்திருந்தனர். அதிகார மையங்களில் தங்களுக்கு சாதகமான சட்டங்களை உருவாக்கி வைத்திருந்தனர். ஈழவ சாதியில் பிறந்தவர்கள் நம்பூதிரிகளிடமிருந்து 32 அடி தூரம் விட்டும், நாயர்களிடமிருந்து 16 அடி தூரம் தள்ளியும் நடக்கவேண்டும் என்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தது. கண்ணால் பார்த்தாலே தீட்டு என சில சாதிகளை ஒதுக்கி வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேல் உடையணிய தடையும், அபராதமும் விதித்திருந்தனர். நாயர் வீடுகளின் அருகில் பிற சாதியினர் செல்லக்கூடாது. நாயர்கள் குளிக்கும் பொது இடங்களில் பிற சாதியினர் குளிக்கக்கூடாது. நாயர்கள் போல மேலாடை அணியக்கூடாது. கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. கோவிலில் நுழையக்கூடாது. இருபதாம் நூற்றாண்டு வரையிலும் இப்படியான கொடுமைகள் தொடர்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த கொடுமைகளை அதிகம் அனுபவித்தவர்கள் பள்ளர், பறையர், சாணார், முக்குவர் சாதி மக்கள்.

இந்த கொடுமைகளை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இடங்களில் கிளர்ச்சிகள் எழுந்து கலவரங்களாக வெடித்தது. அந்த போராட்டங்களில் மூழ்கி எழுந்த முத்தாக சமூகப்புரட்சியாளர்கள் பலர் உருவாகினர். திருவிதாங்கூரில் உருவான வீரம் செறிந்த மாமனிதர்களில் அய்யங்காளி, நாராயணகுரு, அய்யா வைகுண்டர் (முத்துக்குட்டி சாமிகள்) என பலர். அன்றைய வர்ணாஸ்ரம சாக்கடையான திருவிதாங்கூரை சீர்படுத்திய இந்த மாமணிகளின் வரலாறு இன்றைய தலைமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியவில்லை. பள்ளிப்பாடங்களிலும், வரலாற்று புத்தகங்களிலும் இவற்றை அறியாமல் வளர்ந்துவிட்டோம்.

மன்னர் ஆட்சியில் நம்பூதிரிகளும், நாயர்களும்அனுபவித்து வந்த பதவி சுகங்கள், அதிகாரம் அனைத்தும் காலனியாதிக்கத்தில் இடம் மாற துவங்கியது. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய மக்கள் தங்களது உரிமையை அனுபவிக்க ஆரம்பித்தனர். மேலாதிக்கத்தின் பிடி மெல்ல நழுவ துவங்கியது. பார்ப்பனீய மதத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மதம் மாறினால் கிடைக்குமென நம்பி அதிக எண்ணிக்கையில் மக்கள் மதம் மாற துவங்கினர். வாழ்வுரிமையையும், கலாச்சாரத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க தெற்கு திருவாங்கூரில் சமூகநீதி போராட்டங்கள் மதத்தை மையமாக வைத்து உருவானது.

ஈழவ மக்களுக்கு கோவிலில் வழிபட, சாலைகளில் நடமாட தீட்டு என தள்ளி வைத்தனர் ஆதிக்க சாதியினர். வைணவ இந்துகோயில்களில் ஒடுக்கப்பட்ட மக்களை தீட்டாக வைத்து வழிபாட்டு உரிமையை மறுத்ததை எதிர்த்தநாராயணகுரு ஈழவ மக்களுக்காக தனியாக கோயில்களை உருவாக்கினார். நம்பூதிரிகளும், நாயர்களும் அதை எதிர்த்தனர். எதிர்த்த நம்பூதிரி ஒருவனிடம் "இது நம்பூதிரி சிவனுக்கான கோயிலல்ல, இது ஈழவ சிவன் கோவில்" என்றாராம் நாராயணகுரு. எங்களை எங்கள் வழியில் வாழவிடு என்பதாக அமைந்த நாராயணகுருவின் பாதை அணுகுமுறை பார்ப்பனீயத்தை உலுக்கியது.

பார்ப்பனீய கொடுங்கோன்மையில் சாலையில் நடக்க கூட உரிமையில்லாதவர்களாக புலையர் சாதி மக்கள் நடத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னரும் தங்களது பொருளாதாரமும், வாழ்க்கையும் முன்னேறாமல் இருந்த புலையர் சாதி மக்கள் சாலைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொது வசதிகளுக்காக இயக்கமாக போராட்ட துவங்கினர். 1893ல் புலையர் சாதியினர் வெங்கனூர் என்னும் இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை துவங்கினர். இந்த பள்ளிக்கூடம் ஆதிக்கசாதியினரால் தகர்க்கப்பட்டது. புலையர் சாதி மக்களிடமிருந்து பிறந்த ஒருவர் அதை எதிர்த்து கடுமையாக போராடினார். ஆதிக்க சாதியினர் நிலங்களில் விவசாய வேலைகள் செய்வதை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார் அந்த மனிதர். மாட்டு வண்டியில் பொது சாலையில் சென்று போராட்டம் துவங்கினார். 1898ல் அவர் தலைமையில் பொது சாலையில் புலையர்கள் நுழையும் போராட்டத்தை நடத்தினார். புலையர் சாதி மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் மோதல்கள் வெடித்தன. கன்னியாகுமரி, நெய்யாற்றின்கரை, வைக்கம் முதலான இடங்களில் வெடித்த போராட்டங்களை அரசு அடக்கியது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாபெரும் மனிதர் தான் அய்யன்காளி. அய்யன்காளி, வலிக்கர சோதி முதலிய தலைவர்களின் போராட்டங்களின் பலனாக புலையர் சாதி மக்களுக்கு கல்வி உரிமைக்கான சட்டத்தை 1914ல் திருவிதாங்கூர் அரசு உருவாக்கியது. இந்த சட்ட உரிமையை ஆதிக்க சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். புல்லத்து என்ற இடத்தில் புலையர் சாதி குழந்தைகள் படித்த பள்ளிக்கூடத்தை நாயர்கள் தீவைத்து கொழுத்தினர். இந்த பிரச்சனையில் காலனியாதிக்க அரசு தலையிட்டது.

நாடு முழுவதும் கலனியாதிக்கத்தின் பிடி அழுத்தமாக இருந்த வேலையிலும் பார்ப்பனீய கொடுங்கோன்மை ஆதிக்க சாதிகளால் நடத்தப்பட்டே வந்தன. குறுநில மன்னர்கள் போல திருவிதாங்கூரின் பல பகுதிகளின் பல கிராமங்களை நம்பூதிரிகள், நாயர்கள் கூட்டணி ஆட்சி செய்து வந்த அதிகார மையங்களே இதற்கு அடிப்படை காரணம். இந்த அதிகார மையங்கள் மன்னனுடன் தொடர்பை வைத்திருந்தது. கோவிலை சுற்றி அமைந்த பல கிராமங்களை உள்ளடக்கி ஆளப்பட்ட இந்த பகுதிகள் சங்கேதம் என்று அழைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கை கவனிக்க தனியாக படைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இவை அதிகார மையங்களாக விளங்கியது (தகவல்: கொச்சி இராச்சியம், K.P.மேனன், 1911)

நாடார் பெண்கள் தங்கள் உடலின் மேல்பகுதியில் (இடுப்புக்கு மேலே) மார்பை மறைக்க இடுப்புக்கு மேல் துணி அணிய உரிமை மறுக்கப்பட்டது. மீறி ஜாக்கட் அணிந்த பெண்கள் கொடும் துயரத்துக்கு ஆளாயினர். நாடார் சாதி மக்களின் போராட்டங்களும், ஐரோப்பிய மிஷனரிகள் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகவும் 1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு நாடார் பெண்கள் குப்பாயம் எனப்படும் ஒருவித ரவிக்கையை மட்டும் அணியலாம் என்று அனுமதித்தது. ஆனால் அவர்கள் மேல்சாதி பெண்களைப் போல நல்ல உடை அணியக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாயர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவை நடைமுறைபடுத்த முடியவில்லை. 1859ல் தெற்கு திருவிதாங்கூரில் (குமரிமாவட்டம்) இரணியல், கோட்டார், திட்டுவிளை, தொடுவெட்டி மற்றும் பல ஊர்களில் நாடார் சாதி மக்களை நாயர்கள் கடுமையாக தாக்கி வீடுகளை எரித்தனர். அவர்களது ஜாக்கெட்களை நாயர்கள் கிழித்தெறிந்த கொடுமை தொடுவெட்டி (மார்தாண்டம்), அருமனை என கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.
1870ல் குமாரகோவில் திரு.வெள்ளையன் நாடார் தலைமையில் 12000 சாணார் சாதி மக்கள் கோவிலில் நுழைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலில் அனுமதிக்காது நாயர்கள் தாக்கியதில் 150 சாணார் சாதியினர் கொல்லப்பட்டனர். இதுபோல பார்ப்பனீய இந்து கோவில்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையவிடாத நிலை திருவிதாங்கூர் முழுவதும் இருந்தது.

அய்யாவழி இப்படியான காலச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்துதாழக்கிடப்பாரை தற்காப்பதுவே தர்மம் என அந்த மக்களின் உரிமைக்காக அய்யாவழி தனி மதமாக பிறந்தது. இல்லறமே உயர்ந்த அறமாக போதித்த அய்யா வைகுண்டர் இல்லறத்தையே கடைபிடித்தார். இயற்கையான வழியும், வாழ்வுமே அய்யாவழியின் அடிப்படை என்பதற்கு துறவறமின்மை, கண்ணாடியில் தன்னையே கண்டு வணங்குதல், சுயமரியாதைக்கு அடையாளமான தலைப்பாகை, ஒரே கிணற்றில் எல்லோரும் சமமாக தண்ணி அருந்துவது, சாதி பாகுபாடின்மை என பல அடையாளமாக உள்ளன (அய்யாவழி பற்றி முந்தைய பதிவுகள் இங்கே: அய்யாவழி மதத்தின் வரலாறு,பார்ப்பனீய பிடரியை உலுக்கிய அய்யாவழி!). ஒடுக்கப்பட்ட மக்களின் மாமனிதர்களில் அய்யாவும் ஒருவர்.

பார்ப்பனீய கொடுங்கோன்மை திட்டங்களையும், கொள்கைகளையும் அறவே எதிர்த்து பல தளங்களில் போராடியவர்கள் தான் அய்யா, நாராயணகுரு, அய்யன்காளி போன்ற எண்ணற்ற மாவீரர்கள். இன்று அவர்களை பார்ப்பனீய இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் சொந்தமாக்க முனைவது ஓநாய் அழுவதை தான் நினைவுபடுத்துகிறது. நம்பூதிரிகளும், நாயர்களும் நடத்திய கொடுங்கோன்மை கோரத்தாண்டவத்தை திருத்தி எழுத பார்ப்பனீயவாதிகள் முயல்கிறார்கள். இதன் பின்னணியில் சமகால சமூக அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் சங்பரிவாரங்களை 1970, 1980 களில் உருவாக்கி களம் அமைத்ததும், கலவரங்களை தூண்டியதும் நாயர்கள். தங்களது இழந்த அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் வழியாக கிடைக்குமா என அலையும் ஆதிக்கசாதிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய தலைமுறை பலிக்கடாவாக ஆக்கப்படுகிறது காலத்தின் சுழற்சி. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை அழிப்பது, திருத்துவதன் வழி பார்ப்பனீயவாதிகள் தங்கள் தவறுகளை ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ மிசனரிகள் மீது போட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு முறைகளில் சங்கப்பரிவாரங்களின் ஊடுருவலும், ஆர்.எஸ்.எஸ் கிளைகளும் உருவாக்கப்படுகின்றன. மாற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் தனித்தன்மையை அதிக்கசக்தியினர் அழித்து, வரலாற்றை திரித்து குற்றப்பழியிலிருந்து தப்பிக்க பார்ப்பனீயம் துடிக்கிறது.

_________________
உதவிய நூல்கள்
  1. A Caste and Social Change in Colonial Kerala - essay by: D.Damodaran Namboodiri. Perspectives on Kerala History - The Second Milennium, P.J.Cherian (Ed)
  2. Religion and Sub-altern Agency - Dr. G.Patrick : University of Madras
  3. Slavery in Travancore, 1973, K.K. Kusuman
  4. Dr. Sobhanan, Temple Entry Movement and Sivakasi Riots, K.Kesavan, கோவில் நுழைவுப் போராட்டங்கள்
இந்த கட்டுரையை திருவள்ளுவர் வலைத்தளம் மற்றும் பூங்கா வலையிதழில் படிக்க இங்கே அழுத்தவும்
http://poongaa.com/content/view/1138/1/
http://www.thiruvalluvar.in/2007/01/blog-post_21.html

குறிப்பு:

அய்யாவழி பற்றிய சில வரலாற்று உண்மைகளை பதிய வைக்கும் நோக்கத்தில் பாலபிரஜாதிபதி அடிகள் அவர்களை சந்தித்து http://www.thiruvalluvar.in/2007/01/blog-post_21.html யோ.திருவள்ளுவர்  உரையாடினார் . அந்த உரையாடல்கள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்யப்பட்டாலும், தொழில்நுட்ப விடயங்கள் இன்னும் இறுதி வடிவம் பெறாத காரணத்தால் பதிவு செய்ய இயலவில்லை. பாலபிரஜாதிபதி அடிகளாரின் பேட்டியை வெகுவிரைவில் பதிவு செய்ய முயல்கிறேன். என்று தெரிவித்துள்ளார் யோ.திருவள்ளுவர்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

தோழர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு



தோழர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு.
==========================================

இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் திராவிடர் விடுதலை கழகத்தினரும் போராட்டம் செய்து வந்தனர் . 
அப்போது சேலத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கை நீதிபதிகள் ராஜேஷ்வரன், பி.எம்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கொளத்தூர் மணியை கைது செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்தனர்.


















ஐ.நா வின் துரோகத்தினை அம்பலப்படுத்தும் வகையில்
ஐ. நாவிற்கு எதிரான போராட்டம், யு னி செப் அலுவலக ((Unicef, Parsi panchayat road,Andheri east) முன் நாளை 12-02-14, புதன் கிழமைகாலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம்நடைபெறுகிறது
=======================================
முருகதாசன் உயிர் நீத்து உறக்கச் சொன்ன கோரிக்கையை உயர்த்திப் பிடித்து உலகை திரும்பச் செய்ய வா... ரோசமும், மானமும் உள்ள தமிழர்களாய் ஐ.நாவின் கிரிமினல்களுக்கு நெருக்கடி கொடுப்போம்.

மே பதினேழு இயக்கம் -இன அழிப்பிற்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்- மும்பை விழித்தெழு இயக்கம் ஆகியவை ஒருங்கிணைக்க,
இவர்களுடன் ,
ததேபொக, தஓவி, திவிக, தபெதிக, மற்றும் இதர இயக்கங்களுடன் கட்சிகளாக மதிமுக,தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், தமுமுக, எஸ்டிபிஐ, விடுதலை தமிழ்ப் புலிகள், சீக்கிய இளைஞர் இயக்கம், நியூ சோசலிஸ்ட் ஆல்டர்நேடிவ், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஏனைய கட்சி இயக்கங்களுடன் உலகெங்கும் முற்றுகை இடுகிறோம். (விடுபட்ட இயக்க பெயர்கள்-ஏதேனும் இருந்தால்- இணைத்துக் கொள்கிறோம். )

இனப்படுகொலைக்கு நீதி கேட்க விரும்புகின்ற தோழர்கள் அனைவரும் இணைக.. கட்சி, சாதியாக பிரிந்து நின்ற 2009 போல அல்லாமல் அனைவரும் கைகோர்ப்போம்.

பிப்ரவரி 12இல்
சென்னை - யுனிசெப் , அடையாறு , இந்திரா நகர், அம்பிகா அப்பளம் எதிரில்
பெங்களூர் - டவுன் ஹால், எம் ஜி சாலை
மும்பை -யுனிசெப் , கிழக்கு அந்தேரி, பர்சி பஞ்சாயத் சாலை,
நியூயார்க் - ஐ.நா தலைமை அலுவலகம்
சிட்னி - ஐ.நா அகதிகளுக்கான குழு , 66, கிங் சாலை,

புது தில்லியில் பிப்14இல் நிகழ்கிறது. லோதி சாலை, தில்லி.

================================
#வருகின்ற பிப்-12இல் உலகெங்கும் உள்ள ஐ.நா அலுவலகங்கள் முற்றுகை & ஆர்ப்பாட்டம் ..(பல பகுதிகளில் மே பதினேழு ஒருங்கிணைக்கிறது)
========================================
மும்பையில் .#தமிழின இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் ஐ.நா அலுவலக ஆர்பாட்டத்தில் மும்பை விழித்தெழு இயக்கத்துடன் ....

#அந்தேரி தமிழ் சங்கம்;
தமிழின இளைஞர் இயக்கம், நேருநகர்,விலே பர்லே; விடுதலை சிறுத்தைகள் கட்சி, செம்பூர் பகுதி;
உலகத் தமிழர் பேரமைப்பு, மலாடு பகுதி;
மதிமுக, காட்கோபர் பகுதி;
நாம் தமிழர் கட்சி, செம்பூர் பகுதி தோழர்கள்
இணைவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள்....
(கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமை அன்று மேலே குறிப்பிட்ட பகுதியில் ஐநா அலுவலக முன் ஆர்ப்பாட்டம் ஏன் ..விளக்கம் கூட்டம் நடத்தினோம்.) மேலும் ஒய்வு பெற்ற நீதிபதி சுரேஷ், சீக்கிய இனப்படுகொலையை ஆவணப்படுத்திய தோழி com.Teena kaur : com.Varsha , Research associate, india (Focus on the Global south ) மற்றும் மனித உரிமை ஆர்வாளர்கள் பலரை அணுகிய உள்ளோம்..வர முயற்சிப்பதாக சொல்லி உள்ளனர்..




===========================================================
தமிழீழப்படுகொலையில் நேரடியாக ஐக்கிய நாடு சபை  பங்கெடுத்ததை கண்டித்து தீயிட்டு வீரமரனமடைத்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2014 இல் மும்பை ஐக்கிய நாடு சபை அலுவலகம் (UNICEF) முன் ஆர்ப்பாட்டம்.

2௦௦9 ஆம் ஆண்டு ஈழத்தில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்றுகுவிக்கப்பட்டனர். இந்த போரில் பொதுமக்கள் மீது சர்வேதச நாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்து குண்டுகளும்,ரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டது.
தமிழினத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த போரை தடுத்து நிறுத்தி மக்களை காக்க வேண்டிய ஐக்கிய நாடு சபை தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல் தமிழர்களை அழிக்க துணைபோனதே இத்துயரத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.
ஒரு நாட்டில் போர் நடக்கும்பொழுது ஐக்கிய நாடு சபையின் பாதுகாப்பு கவன்சிலை கூட்டி போரை நிறுத்த வேண்டிய ஐக்கிய நாடு சபையின் பொதுச்செயலாளர் பான்-கீ-முன் அதை செய்யத் தவறினார். இந்த போரை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரியான விஜய் நம்பியார் இலங்கை அரசின் போர் ஆலோசகரான சதிஸ் நம்பியாரின் உடன்பிறந்த சகோதரராவார்,எனவே இவர் போரை நிறுத்தாமல், இலங்கை அரசு இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு துணையாக செயல்பட்டார். இப்படி பல்வேறு விதங்களில் ஐக்கிய நாடு சபை இந்த போரை நிறுத்த தவறியது என்று 2012 நவம்பரில் ஐக்கிய நாடு சபையின் அதிகாரியான சார்லஸ் பெட்ரி தனது உள்ளக ஆய்வறிக்கையிலேயே தெளிவாக சொல்லியிருந்தார் .
இந்த சார்லஸ் பெட்ரி அறிக்கையை மறைக்க நடந்த பல்வேறு சதிகளை உடைத்தெறிந்து கடந்த வருடம் இதனை மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தினோம். இதனடிப்படையில் ஐக்கிய நாடு சபை அதிகாரிகளின் இந்த துரோகத்தினை கண்டித்து உலகமெங்கும் உள்ள ஐக்கிய நாடு சபையின் அலுவலகங்களை சென்ற ஆண்டு (2013) இல் ஆர்பாட்டம் மற்றும் முற்றுகையிட்டோம் . இதனை தொடர்ந்து கூடிய ஐக்கிய நாடு சபையில் இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடு சபையின் செயல்பாடுகள் தோல்வி அடைந்துவிட்டது  என்று ஐக்கிய நாடு சபை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனாலும் இன்றுவரை ஐக்கிய நாடு சபையானது ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோரை இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்காமல் இலங்கை அரசிற்கு தொடர்ந்து சாதகமாக நிற்கிறது.
சமீபத்தில் ஜெர்மனியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த உயர் பொறுப்புகளிலிருந்து அதிகாரிகள் பங்குபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் 2௦௦9 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை தான் என்றும் அது இன்றும் தொடர்கிறது  என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர் மேலும் இந்த இனப்படுகொலைக்கு இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்து ஆகிய நாடுகள் துணைநின்றனர் என்றும் ஆதாரத்துடன் தீர்பளித்துள்ளனர். (நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் – எந்த அரசதிகாரத்தையும் சார்ந்திராத ஓர் உலகளாவிய கருத்து தீர்ப்பாயம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது அடுத்து ஒரு உலகப்போர் வராமலும், உலக அமைதி சீர்குலையாமலும் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தடுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் , அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வேலையை மட்டுமே இன்று வரை அது செய்து வருகின்றது. மேலும் இது அரசுகளின் கூட்டமைப்பாகும். இது அரசுகளைச் சாராத உலக‌ நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்கள் , எழுத்தாளர்கள், பண்பாட்டு, சமூகத் தலைவர்களை உள்ளிடக்கிய ஒரு அமைப்பின் தேவையை சர்வதேச அரசியல் வெளி உருவாக்கியது. 1966-67ல் வியட்நாமில் நடந்த போர் தொடர்பாகவும்,1974-76ல் நடந்த இலத்தின் அமெரிக்காவில் சர்வாதிகாரம் தொடர்பாகவும் நடைபெற்ற இரசல் தீர்ப்பாயத்தை தனது அடிப்படையாக கொண்டு 1979ல் உருவானது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். இதன் தலைமையகம் ரோமில் உள்ளது. இதுவரை 20 தீர்ப்பாயங்களை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியுள்ளது. ஐ.நா சபை போலல்லாமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அரசுகளின் கையிலில்லை, மக்களே அதன் பிரதிநிதிகள், இங்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சித்தாந்தம் கிடையாது. அதுமட்டுமின்றி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒரு நடுநிலையான அமைப்பு, அதற்கு இதுவரை இந்த தீர்ப்பாயம் நடத்திய 20 க்கும் மேற்பட்ட விசாரணைகளே சாட்சி. இந்த 20 விசாரணைகளின் அறிக்கையை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம் .. 

http://www.internazionaleleliobasso.it/)
ஐக்கிய நாடு சபையின் விதிகளின் படி, இனப்படுகொலைக்கு உள்ளானவர்கள் தனிநாடாக பிரித்து போவதற்கான உரிமையை உறுதி செய்கிறது. இதன்படி தமிழீழம் பிரிந்து போவதற்கான பொது வாக்கெடுப்பினை உடனே நடத்தியிருக்கவேண்டும். இதனை இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் நிர்பந்ததால் செய்ய மறுக்கிறார்கள். இது அயோக்கியத்தனத்தின் உச்சமாகும்.
இப்படிப்பட்ட முக்கிய காலகட்டத்தில் இருக்கும் நாம் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவுக்கு உடந்தையாக இருக்கும் ஐக்கிய நாடு சபையின் அதிகாரிகளை தண்டிக்கவும், அவர்களின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளன தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியான :
·         இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும் ,
·         தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரியும்.


                                                                                 
போர்குற்ற விசாரணை என்பது தமிழர்களை ஏமாற்றம் செயல் என்று உலகிற்கு உரக்க சொல்வதற்கு, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும்  ஜெனீவாவில் யுள்ள ஐக்கிய நாடு சபை யின் வாயிலில் தீக்குளித்து வீரமரணமடைந்த முருகதாசனின் நினைவு நாளான பிப்ரவரி 12இல் நீதி கேட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் நகரங்களிலும், உலகமெங்கும் உள்ள ஐக்கிய நாடு சபை யின் அலுவலகங்களை முற்றுகையிடுவோம்/ஆர்பாட்டம் நடத்துவோம்.
இந்தியா- இலங்கை அமெரிக்கா-இங்கிலாந்தின் கூட்டு சதியை முறியடிப்போம்.


இக்கட்டுரை மும்பையில் இருந்து வெளிவருகிற தமிழ் இலெமுரிய மாத இதழ் தலையங்கத்தில் வந்தது (www.tamillemuriya.com)
2013 செப்டம்பர் திங்களில் நடைபெற்ற (ஐக்கிய ) அய்க்கிய நாடுகளின் அவை 68 ஆம் பொது சபைக் கூட்டத்தில் அய்.நா. செயலாளர் பான் கி மூன் இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த கருத்துகள்அய்.நா. மனித உரிமைக் குழுவின் 24வது கூட்டத்தில் அதன் தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசு குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் ஆகிய இரண்டும் உலகத் தமிழர்களாலும்மனித உரிமை ஆர்வலர்களாலும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

            அய்.நா. பொதுச்சபையின் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பான் கி மூன் இலங்கையில் அய்.நா.வின் செயல்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில் அய்.நாஅமைப்பு ரீதியாகத் தோல்வியைத் தழுவியுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும்இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நிறுத்தவோமனித உரிமைகளைக் காக்கவோ தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும்அய்.நா.வின் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை எனவும்அய்.நா.வின் தோல்வியை ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாகவே தந்துள்ளார்.

            இதே போன்று அய்.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளைஇலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் செய்து நேரில் ஆய்வு செய்துதனது வாய்மொழி மூல அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களில் காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லைபோர் முடிந்து நான்கு ஆண்டுகள் முற்றுப்பெற்ற பின்னரும் தமிழர் பகுதிகளில் இராணுவமும்காவல் துறையினரும் குவிக்கப்பட்டுநீதித்துறை முடக்கப்பட்டுமக்களாட்சி உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் தன் பயணத்தின் போது ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இராணுவச் சோதனை மையங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதென்று தெரிவித்திருப்பதுடன்குற்றத்தைச் செய்ததாகச் சொல்லப்படும் இராணுவத் துறையே குற்றங்களை விசாரிப்பது என்பது நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை எனவும்இலங்கை அரசு எதிர் வரும் மார்ச் 2014க்கு முன்பாக இருக்கும் ஆறு மாத கால நேரத்தைப் பயன்படுத்தி முறையான விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசு இதைச் செய்ய தவறுமானால் பன்னாட்டு அமைப்புகளின் மூலம் சுயமான விசாரணைகள் மேற்கொள்வது பன்னாட்டு அமைப்புகளின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

            உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் 2009 ஆம் ஆண்டு அய்.நா. அமைப்புகளை கண்ணீருடன் கெஞ்சிய நிலையில் உணர மறுத்த உண்மைகளை தற்போது அய்.நா. ஒப்புக் கொண்டிருப்பது ஒரு ஆறுதலான விடயமாகும். 

            உலக நாடுகள் வழிகாட்டுதலுக்கு முதன்மை அமைப்பாக விளங்கும் அய்.நா. பொதுச் சபை மற்றும் அதன் உயரிய அமைப்பான அய்.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த இந்த கருத்துகளைகருத்து தெரிவித்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள்ளாக இலங்கை அரசு மறுத்துஇவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்திருப்பதுடன்வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணி முதலமைச்சர் சொல்வதனால் இலங்கை இராணுவத்தினரை வடக்குப் பகுதியில் இருந்து திரும்பப் பெற முடியாது எனவும் இலங்கை அதிபர் இராசபக்சே குறிப்பிட்டுள்ளார்.

            “வன்முறை ஒழிப்புப் போர்” என்ற போர்வையில்உலக நாடுகள் பலவற்றை தந்திரமாக தன் பக்கம் திருப்பிபோர்க் குற்றங்கள் புரிந்துஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவின் தற்போதைய நிலைப்பாடு வியப்பிற்குரியதல்ல. இலங்கை அரசின் இந்தத் துணிச்சலுக்குக் கரணியமாக விளங்குவது அய்.நா.வின் கடந்த கால நேர்மையற்ற நடவடிக்கைகளேயாகும். 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலகட்டத்தில் அய்.நா. செயலாளர் பான் கி மூன் இலங்கை அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பது போன்று அறிக்கை வெளியிட்டமைசெஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அய்.நாகண்காணிப்புக் குழுவினரை இலங்கை அரசு வெளியேற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அய்.நா. மவுனம் காத்த போக்குஇலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை அறிவிக்க மறுத்து தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்த அனுமதித்த நிலைஇனப்படுகொலை நடத்தி முடித்து வெற்றி விழா கொண்டாடிய இலங்கை அரசின் விழாவில் அய்.நா. பொதுச் செயலாளர் பங்கேற்ற அவலம், 2012 ஆம் ஆண்டு சேனல் 4 தொலைக்காட்சி காணொளிகளுக்குப் பின்பும் அமெரிக்கத் தீர்மானத்தின் மீது இலங்கை அரசே அதன் அத்துமீறல்களை விசாரித்துக் கொள்ள அனுமதித்த அய்.நா.வின் நேர்மையற்ற செயல்கள் ஆகிய அனைத்தும் இராசபக்சேவின் கயமை எண்ணங்களுக்கு உரமூட்டி உள்ளன. அதன் விளைவே இன்று இலங்கை அரசை துணிச்சலுடன் மறுக்க வைத்துள்ளன என்பது உண்மையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு நேரடியாகவும்மறைமுகமாகவும் அனைத்து வழிகளிலும் உதவி செய்த அமெரிக்காஇந்தியா போன்ற சில நாடுகள் கூடஉண்மைகள் வெளிவரும் நிலையில்தற்போது தன் மனசாட்சியின் உறுத்துதலினால் தெளிவாகக் கருத்துத் தெரிவிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு மவுனம் காத்து வருகின்றன.

            எதையுமே ஏற்காதஎவரையும் மதிக்காத இலங்கை அதிபரிடம் மீண்டும் மீண்டும் வேண்டுவதும்விளம்புவதும்மலைப்பாம்பின் முன் மகுடி ஊதும் மனிதனின் செயலுக்கு ஒத்ததல்லவா!

            தூய்மையும்வாய்மையும் இன்றி குருதிக் கொப்பளிக்ககொடுமையின் உச்சத்தை எட்டி இன அழிப்பு செய்த ஒரு நாட்டில் மனித உரிமைமக்களாட்சிஅமைதிபாதுகாப்புபேச்சு சுதந்திரம் போன்ற கொள்கைகளை முன்னெடுக்கும் பொது நல நாடுகளின் மாநாடு என்பதும்அதற்கு இலங்கை அரசின் இராசபக்சே தலைவராக தேர்வு செய்யப்படுவதும் எந்த வகையான நீதிஅய்.நா.வும்இந்தியாவும் இதுவரை செய்த தவறுகள் போதாதாதமிழர்களை அடக்கத் துடிக்கும்அழிக்கத் துடிக்கும்ஆதிக்க விலங்குகளிடமிருந்து இனியாவது இந்தியா விலகியிருக்க வேண்டும். இலங்கை அரசின் பொய்மை அறிவிப்புகளும்புனைவு வேடங்களும் உலக நாடுகளுக்குத் தெரிய வந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் இந்தியா நேர்மையுடன் செயல்பட வேண்டும்.

            இலங்கைத் தமிழர்களுக்காத் திட்டங்கள் என்கிறார்கள்தீர்வுகள் என்கிறார்கள்சட்டங்கள் என்கிறார்கள்ஏட்டிலே மட்டும் எல்லாமே இனிக்கிறது-இளிக்கிறது. தேசம் ஒன்று என்றும்நேசம் நன்று என்றும் சொல்வதோடு சரிசொல்பவர்கள் எவரிடமும் நேசமும் காணோம்பாசமும் காணோம். மோசமும்நாசமும்தான் இதுகாறும் மிஞ்சியுள்ளன. இந்த நய வஞ்சகத்தினையும்நாணயக் கேட்டினையும் அகற்றினாலொழிய தீர்வை நோக்கிய திசை தெரிவது கடினம்.
 உலகமெங்கும் உள்ள ஐக்கிய நாடு சபை யின் அலுவலகங்களை முற்றுகையிடுவோம்/ஆர்பாட்டம் நடத்துவோம்.
இந்தியா- இலங்கை அமெரிக்கா-இங்கிலாந்தின் கூட்டு சதியை முறியடிப்போம்.



இடம் : யுனிசெப் அலுவலகம் ,பார்சி பஞ்சாயத் ரோடு,  அந்தேரி கிழக்கு,மும்பை
நாள் :- பிப்ரவரி 12, புதன்கிழமை,காலை 9.30 மணிக்கு
மும்பை விழித்தெழு இயக்கம் /MVI -- 9702481441, 9867488167,9821072848
vizhithezhu.org@gmail.com

  


 =============================================================
press note
Mumbai Vizhithezhu Iyakkam
Add:- Dharavi cross road,Dharavi, Mumbai-40017
_______________________________________________________________________

Dear Press,


A massive genocide has taken place in Tamil Eelam (Island of Srilanka) and it still does not have its rightful attention in the international arena. If Media's role was the biggest learning from the Rwanda's tragedy, it is high time we used this Media in its highest cause, by swerving the International attention towards giving hope to another human soul.

UN - From “Complicity with Evil” to “Dancing with Devils” -
The UN Internal Review Panel Report, known as “Petrie Report” released in November 2012 has exposed the callousness of the UN and its ancillary bodies working in Sri Lanka during the end of the civil war. The report has made it clear that the massacre of tens of thousands of innocent Eelam Tamil civilians by the Sri Lankan Army could have been averted if the top UN officials had chosen to disclose the death toll at an early stage.

The report though damning of the UN bodies in general and on the incompetency of the Resident Coordinator Mr. Neil Buhne in particular, tacitly underplays the disastrous effect of the “quiet diplomacy” path of the Secretary General, implemented in “ground zero” by his then Chef de Cabinet Mr. Vijay Nambiar and Under Secretary General for Humanitarian Affairs Mr. John Holmes. And the report is dubiously silent on the appalling course of actions pursued by other UN high officials Mr. Philippe Duamelle, Country Representative of Sri Lanka, UNICEF (which supplied cricket bats and black boards instead of life saving medicine and food at the height of the war) and Mr. Amin Awad Head of UNHRC in Sri Lanka.

In fact, an independent inquiry conducted by the eminent author Julian Vigo, published in the Sri Lankan Guardian on April 2012, and has indicted the above mentioned UN officials acting in utter disregard of the suffering population, promoting their self interests and in complicity with the murderous onslaught of the Sri Lankan regime. Many of these officials have been promoted to further higher echelons of the UN hierarchy without any deliberation on their accountability.
The Human rights violation at Srilanka and the conscious ignorance of the human rights norms by UN Officials like Ban- Ki- Mon, Vijay Nambiyar and John Holmes should be investigated. The UN Public voting on the “Tamil Eelam” which is held by these people should be conducted immediately in order to provide Justice for the Tamils.

Considerable evidences have been gathered against the above mentioned UN officials and their sheer ignorance on the same. Some of the evidences are summarized below,
- The Food, Water and Medical help to the war victims are stopped by UN during the time of war which in itself is a biggest war crime. (The final materials which were sent to the war zone where cricket bats and balls instead of medical facilities)
- Withholding the exact figures of people died in the war purposefully and by doing this it encouraged the Srilankan Army to advance further (These details are withheld until today)
- The UN officials of the lower cadre in Srilanka were forced to falsely impose the war crimes and the Genocide by the Srilankan Army and the Government on the LTTE.
- UN Official Vijay Nambiyar who was sent to look in to the War status, hold peace talks and stop the war has never moved out of his guest house Press Note
- Un Official Ban- ki- Moon attending the victorious celebrations of the Srilankan Government and Army after the war.
- Ban- Ki- Moon’s planned screening of Srilankan commercial war videos produced by the Srilankan Government instead of the Channel 4 videos
- His ignorant statement saying that “Srilanka will do it’s investigate its own self and there is no need for any independent agency involvement”
- The UN officials have vested interest in the war owing to their personal connections with the Srilankan and Indian bureaucracy (Ban- ki- Moon’s son in law is the official who represented the IPKF forces and Vijay Nambiyar’s brother Sathish Nambiyar is the Srilankan Army advisor who was a mastermind behind the entire war.)
- There are also substantial evidences that show the way Ban- Ki- Moon giving considerable time to the Srilankan Government to destroy the proofs of Genocide.
Let us all raise in unison against UN who are now proclaiming that the Tamils are treated their best by the Srilankan Government, Let us bring in to light the crimes committed by these officials, let us all fight for the Justice for which more than 18 Tamils set themselves a blaze for. Let us all march to the streets demanding Justice for those numerous people who were victims of war crimes and raise our collective voices against the irresponsive Indian Government and the UNO
The report while remaining silent about the findings of the independent inquiry, has an ironic mention of the Brahimi Report (commissioned in 2000 by the then SG Mr. Kofi Annan) in its concluding remarks, which had more scathing comments to say of the UN’s failure in Rwanda. It had warned the UN of “Complicity with Evil” if it fails to identify the perpetrator from the victim.
Sadly, a decade after the warning, the UN - as the “Petrie Report itself admits, has moved a step further – from “Complicity with Evil” to “Dancing with the Devil”. In spite of knowing the obvious, that the Govt. of Sri Lanka was perpetrating a horrendous crime right in front of their own eyes, the UN officials stationed in Sri Lanka and the UN high command, failed to stand against the crime, covered the blood bath, and thrust the entire blame upon those who fought for the freedom of their brethren.
In light of a comprehensive review of UN interventions in conflicts around the globe, and witnessing it in action in close proximity in Sri Lanka, we have come to the conclusion that it is nothing short of an international bureaucracy indulged in parasitic sustenance. In deep consonance with our brethren - Eelam Tamils in Sri Lanka, let down by a heartless bureaucratic machine, we Tamils from Tamil Nadu and the Tamil diaspora, demand justice be done within the machine. We demand a transparent inquiry be conducted, on all the high officials, including the Secretary General for their role of complicity with a murderous regime, which unleashed a brutal genocide right in front of our eyes.
We the “May 17 Movement” from Tamil Nadu have initiated this struggle for justice from the UN, demanding accountability and transparency on the part of UN, challenging it to conduct a free and fair inquiry on all of its officials who were complicit with a murderous regime. We Tamils all over the world are to lay siege to the UN offices on 12 February, 2014 to remind it of its fate in the words of its own

Brahimi Report: “People everywhere are fully entitled to consider that it is their organization and as such to pass judgment on its activities and the people who serve in it”.
A seize demonstration has been planned outside the UN office in India, United States, France, Norway, Australia and United Kingdom and Malaysia on the 12th February 2014 in the memory of Martyr Murugadasan who set fire to self-outside the UN headquarters in Geneva.
We would like to bring to your kind attention that, our besieging of UN offices insisting our demands will simultaneously take place in Chennai, Tamil Nadu, in which representatives of major political parties that hold a membership of more than a million, and 40 political movements of strong ideological commitments and 12 human rights organizations will participate. The besieging of UN offices will also take place in our neighboring states of Kerala, Andhra Pradesh, Karnataka, in the capital New Delhi and in front of its head quarters in Geneva and New York. The protest will also be held at Human rights square at the French Capital, Paris and against UN office in London
UN High Officials collaboration with the Rouge State Sri lanka is a continuing affair till date and we accuse UN for collaborating with the Srilanka to dilute the Demand for independent Nation and insist a false reconciliation process that was forced upon the Tamils by Sri lanka military. Proposal for International Independent Investigation by UNSG legal advisor and UNHRC was neglected by Mr. Ban Ki Moon thus rejected justice to Tamils of Eelam. So we demand the UN to implement what was denied to the innocent Eelam Tamils. The above are noted from the report submitted by the “Panel of Experts on accountability in Sri Lanka” known as ‘Experts Panel Report” established by (UN) Secretary-General and from Petrie Report.

A panel headed by Jan Eliasson, Deputy Secretary General, prepared a report titled “Rights Up Front” which makes recommendations to UN based on its inaction in Sri Lanka. The recommendations have been constructed largely based on the complicity of Secretary General and suggests ripping off most of the critical responsibilities from Secretary General. These suggestions are a huge blow to the UN system as a whole and Secretary General in his speech in General Assembly admitted a systemic failure. At this juncture, it is the moral responsibility of the UN to initiate remedial actions to deliver justice to the victims based on their political needs and aspirations as suggested by Experts Panel Report.

Couple of months back, Permanent People’s Tribunal also gave their verdict on Eelam Tamil Genocide and a brief follows.

About Permanent People’s Tribunal(PPT)

The Permanent Peoples' Tribunal is an international opinion tribunal independent from State authorities. It examines and provides judgments relatives to violations of human rights and rights of peoples. The Tribunal was founded in Bologna (Italy), June 24, 1979, by law experts, writers and other intellectuals. It succeeded the Russell Tribunal (or International War Crimes Tribunal), which, in 1967, exposed the war crimes committed against the Vietnamese people. The Permanent Peoples' Tribunal was created out of the Lelio Basso International Foundation for the Rights and Liberation of Peoples (FILB), established in 1976 and inspired by the Universal Declaration of the Rights of Peoples at Algiers (also named the Algiers Declaration). The Permanent Peoples’ Tribunal may use International human rights law, or the Declaration on the Rights of Indigenous Peoples adopted by the United Nations.

About PPT’s verdict on Srilankan Genocide
After an assessment of evidences presented by eyewitnesses and experts, judges of the Permanent People’s Tribunal reached unanimous consensus that the Sri Lankan state was guilty of crimes of genocide against the Eezham Tamils and that the genocide is continuing even after the end of the military operations against the LTTE. Concluding the four day session with a press conference at Bremen on Tuesday, the judges also noted that the Sri Lankan military did not have capacity to commit genocide on its own and that it was supported by the UK-USA-India axis.

The Tribunal considers that the proofs established, beyond any reasonable doubt that the following acts  were committed by the Government of Sri Lanka 
(a) Killing members of the group, which includes massacres, indiscriminate shelling, the strategy of 
herding civilians into so‐called "No Fire Zones" for the purpose of massive killings, targeted assassinations of outspoken Eelam Tamil civil leaders who were capable of articulating the Sri Lankan genocide project to the outside world 
(b) Causing serious bodily or mental harm to members of the group, including acts of torture, inhumane or degrading treatment, sexual violence including rape, interrogations
combined with beatings, threats of death, and harm that damages health or causes disfigurement
or injury.
 (c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part, including 
* expulsions of the victims from their homes, 
* seizures of private lands, 
* declaring vast areas as military 
High Security Zone (HSZ) to facilitate the military acquisition of Tamil land 

These are the highlights from the Permanent Peoples’ Tribunal.

Above all, The United Nations failed in its mandate to protect civilians in the last months of Sri Lanka's bloody civil war, a leaked draft of a highly critical internal UN report says.

We Demand,    
1. UN to conduct referendum for Independent Sovereign Tamil Eelam, Now.
2. International Independent Investigation on Srilanka for Crime of Genocide, Crimes against Humanity & War Crimes
We will besiege UN offices wherever we live in this world and demand justice on 12th feb, 2014, the day Mr.Murugadasan self-immolated himself before the UNHRC’s HQ Geneva five years ago demanding UN to save Tamil people from racist government to which UN was a partner.


For reference:

Appendix 1: (UN Complicity - Evidences & Recordings - May17 Movement Report) as attachment 1
Appendix 2: (SCETTAG - ICC – Charge sheet) as attachment 2
Channel4 Video: http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/episode-guide
http://www.bbc.co.uk/news/world-asia-20308610

From
Mumbai Vizhithezhu Iyakkam 
Mumbai