வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்தை(முத்துகுமரனை) கண்டெடுப்பது தமிழர்களின் கடமை


தமிழன் அங்கு செத்து கொத்தாய் விழ இன்னும் ஏனடா?

சொரணைகெட்டு உயிருடன் இருக்கிறாய்,என்று

எங்களை கேளாமல் கேட்டிருக்கிறாய் எங்கள் முத்துகுமரா!

எங்களை உணர்வு கொள்ளச் சொல்லி

உணர்விழந்திருக்கிறாய்! உயிரிழந்திருக்கிறாய்!!


நாங்களும் என்னதான் செய்வது அடிமைகளாக

இருந்து பழகிவிட்டது எங்களுக்கு! எங்களை


மதத்தின் பெயரால் அடிமைபடுத்தி, சாதியின்

பெயரால் துண்டாடி, எங்கள் பிணத்திலும்

ஓட்டு பொறுக்கும் பிணம்திண்ணி அரசியல்வாதிகள்தானே

எங்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்! என்ன செய்வது!!


எங்கள் உணர்வுகளை/ உரிமைகளை பிடுங்கி தின்றது போதும்,

இந்த பொறுக்கிகள் உன் பிணத்திலும் ஓட்டு

பொறுக்க அனுமதிக்க மாட்டோம்.

உன் பிரிவால் எழும் கண்ணீரின் சாட்சியாக


நான் இந்தியனல்லன், என்று உரத்து சொல்கிறேன்,

என்னை மதிக்காத நாடு, என் உணர்வுகளை

கொச்சைபடுத்தும் நாடு, எனதாக இருக்க முடியாது, எனதாக இருந்ததல்ல!!


ஆங்கிலேயன் ஆண்டதால் ஆங்கிலேயன் ஆகாத நான்,

இந்து வல்லாதிக்க இந்தியன் ஆள்வாதால் மட்டும்

இந்தியன் ஆக முடியுமா?


ஆள்பவன், என்னை நான் யார் என்று தீர்மானிக்கக் கூடாது

நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்னை யார் ஆள்வது என்று


என்பதை நன்கு உணர்த்தி சென்றிருக்கிறாய்,

தமிழர்களுக்காக தீக்கடல் மூழ்கியிருக்கிறாய்,

முத்தை(முத்துகுமரனை) கண்டெடுப்பது தமிழர்களின் கடமை,

நான் கண்டெடுத்து விட்டேன், தமிழர்களே நீங்கள்!

செவ்வாய், 27 ஜனவரி, 2009

சிந்தனைத்துளிகள்

தமிழ்ப்பற்று

குன்றக்குடி அடிகளார் எஸ்.எஸ்.எல்.சி., தேறியவர் இராணுவத்தில் பேருந்து ஓட்டுநராகச் சேர இருந்தார். அவரது தமிழ்ப்பற்று அவரை குன்றக்குடி மடாதிபதி ஆக்கியது.

இதுதான் காமராஜ் பாணி

அரசுக் கல்லூரியில் ஆ.ளுஉ., இயற்பியல் படிக்க ஒரு மாணவருக்கு சிபாரிசு செய்தார் காமராசர். அப்போது அவர் தமிழக முதல்வர். கல்லூரி முதல்வரோ, இயற்பியல் படிக்க 12 பேருக்கு மட்டுமே லேப் வசதி இருப்பதால் , காமராசர் சிபாரிசு செய்த மாணவன் 13ஆவது நபர் என்பதால் செய்வதறியாது கைபிசைந்தார்.

காமராசர் ஒரு யோசனைசொன்னார். 12 பேருக்கு மட்டுமே சமைக்கப் பாத்திரம் இருக்க, திடீரென 22 பேர் விருந்தினர் வந்தால் இரண்டு முறை சமைக்க மாட்டோமா? அப்படிச் செய்யுங்க! - என்றார். இப்படித்தான் கல்லூரி களில் ஷிப்ட் முறை (Shift System) வந்தது?

அப்பனுக்கு அப்பன்!

உலகப் போர் முடிந்து பின்

சர்ச்சில்: கடவுள் கனவில் தோன்றி நடந்து முடிந்தபோரின் வெற்றிக்கு காரணம் உன் ராஜதந்திரமே என்றார்.

ரூஸ்வெல்ட்: நிச்சயமா அப்படி இருக்க முடியாது. ஏனெனில் கடவுள் என் கனவில் வந்து அமெரிக்கா தந்த போர்க் கருவிகள்தான் வெற்றிக்கு காரணம் என்றாரே!

ஸ்டாலின்: நான் யாருடைய கனவிலும் வரவில்லையே!

சிந்தனைத் துளிகள் தொகுப்பு: சந்தனத் தேவன்

நன்றி: உண்மை இதழ்

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? - கவிஞர் இரா.இரவி

ஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும் இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில் படுகொலை இப்படி தொடரும் வன்முறை.

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்-களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியா-வில் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின் போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத் தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்-களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்-பது, விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம் கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம் என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறை-யில் அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும், பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.

ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனை-கள் செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம், மனித மனங்களை நெறிப்படுத்து-வதற்குப் பதிலாக ஏன் இப்படி வெறிப்-படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றது.

நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று உயர்-கின்றார்கள். மதுரை மாவட்ட மய்ய நூலகத்-தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன. அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம் என்பது பெரிய சொத்து, மனிதனை, மனி-தனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும் திறன் வளர்க்கும்.

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும் சிங்களத்-தினர், அன்று தமிழர்களின் இலக்-கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன இது பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர் கொல்லப்-படுகின்றனர் என்பது புண்மொழி. ஆலயங்-கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக இன்று வம்பைப் போதிக்கின்றன.

தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக இருந்தது என்று நான் ஒரு சமயம் கமலை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது, அவர் சொன்னார், இந்த வசனத்தைச் சொன்னது உங்கள் மதுரைக்காரரான அறிஞர் தொ. பரமசிவம் என்றார். இது வசனம் மட்டுமல்ல, நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது நூலகரை வரவழைத்துத்தான் கவுரவப்படுத்தினார்கள். இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. ஆலயத்தில் பூஜை மட்டும் செய்து கொண்டிருந்தால் சந்திராயனை நம்மால் அனுப்பி இருக்க முடியாது.

அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா ஆலயம் செல்வ-தில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான் அறிஞராக மாற முடிந்தது.

மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில் 1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச் செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவகர்லால் நேருவிற்கு ஆலயம் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது.

தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தும்போது கோவிலிலிருந்து எடுத்து வந்து பிள்ளையாரை உடைக்க மாட்டார். தனது சொந்தப் பணம் கொடுத்து பிள்ளை-யார் சிலை வாங்கி வரச் சொல்லி உடைத்துக் காட்டி போராட்டம் நடத்தினார். அறிவு நாணயமும், பொது ஒழுக்கமும் மிகுந்தவர் தந்தை பெரியார். ஆனால் இன்று எந்த நாத்திகனும் ஆலயத்தைச் சிதைப்-பதில்லை. ஆனால் ஆத்திகர்கள் தான், மாற்று மதத்தினர் ஒருவருக்கொருவர் ஆலயங்களைச் சிதைத்துக் கொண்டு மோதிக் கொண்டு பலியாகின்றனர். மதுரை சிறையில் 3500 கைதிகளில் அனை-வரும் ஆத்திகர்கள் தான். ஆலயம் மனதை பண்படுத்தவில்லை என்-பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.

காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு. மாமேதை அப்துல்கலாம், அக்னிச்-சிறகுகள் எனும் தன்னம்பிக்கை விதையை பல்வேறு மொழிகளில் படைத்து விற்பனை-யில் சாதனை படைத்தது. இந்நூல் வடிக்க காரணமாக இருந்தது நூல் அறிவு. தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வீடு கட்டும் போது வரவேற்பறை, படுக்-கையறை, பூஜையறை, கழிவறை கட்டு-கின்றோம். நூலக அறை கட்டுவதில்லை. இனி ஒவ்வொரு தமிழரும் வீடு கட்டும்போது நூலக அறை கட்ட வேண்டும். பட்டிமன்ற நடுவர். அறிஞர், முனைவர் இரா. மோகன் அவர்தம் வீட்டிற்குச் சென்றவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். வீட்டில் நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் நூலகத்-திற்குள் வீடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு திரும்பிய பக்கம் அனைத்திலும் நூல்கள்தான் இருக்கும். சங்கத் தமிழ் முதல் இன்று வந்த நூல்கள் வரை அனைத்தும் இருக்கும். அதன் காரணமாகத்தான் பட்டி-மன்றங்களில் நடுவராகக் கலக்குகின்றார். 75 நூல்கள் எழுதிக் குவித்துள்ளார்.

இது கணினி யுகம், இணைய தளங்கள், மின்னணு நூலகங்கள் வந்துவிட்டன. விஞ்-ஞான உலகில் இன்று இணைய தளங்களில் புகழ் பெற்ற தேடுதளங்களான கூகுள். யாகூ. என பல்வேறு தளங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டால் அது தொடர்-பான அனைத்துத் தகவல்களும் உங்கள் விரல் நுனியில் வந்துவிடும், விழி-களுக்கும் செவிகளுக்கும் விருந்து தரும் பல தகவல்கள் களஞ்சியமாக உள்ளது. இணையம் என்பது தீ போன்றது, தீயை சமைக்கவும், வெளிச்சம் பெறவும், ஆக்க சக்தியாகப் பயன்படுத்தலாம். தீயை எரிக்கவும், கொளுத்-தவும் அழிவு சக்தியாகவும் பயன்படுத்தலாம். இணையத்தை இனி அறிவு வளர்க்கும் ஆக்க சக்தியாக மட்டும் பயன்படுத்துவோம். அறிவைத் சிதைக்கும் ஆபாச அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருப்போம்.

எனவே, சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து. ஆலயம் செல்வது இன்று ஆடம்-பரமாகி விட்டது. எனவே மனிதனைப் பண்-படுத்தும், நெறிப்படுத்தும் மகிழ்வூட்டும், அறிவுத்-திறன் வளர்க்கும் நூலகம் செல்வோம். நமது குழந்தைகளை நூலகம் அழைத்துச் சென்று பழக்குவோம். வாசிக்கும் பழக்கத்தை சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம். நமது பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் திரைப்படம் மற்றும் தொல்லைக்காட்சியாகி-விட்ட தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு நூலகம் செல்வோம். ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம். ஜாதி மத மோதல்-களை விடுப்போம். பகுத்தறிவைப் பயன்படுத்து-வோம். மனிதநேயம் வளர்ப்போம். மானுடம் காப்போம். சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைப்போம்.

வெள்ளி, 23 ஜனவரி, 2009

நான் தமிழனா? இந்தியனா?

நான் தமிழ்நாட்டில் பிறந்த தமிழந்தான். ஆனால் இந்தியன் என்று சொல்ல என்மனம் மறுக்கிறது.

வடக்கே அண்டை நட்டுக்காரன் இந்தியாவுக்குள் ஒரு அடிவைத்தால்கூடஆயிரம் குண்டுகளை பொழியும் இந்தியா,
தென்கோடியிலிருக்கும் தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவைஅண்டைநாடான இலங்கைக்கு தாரைவார்த்ததை நினைக்கும்பொது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.நான் தமிழன் என்றஎண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.

சமாதானப்படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்று தமிழர்களுக்கு இந்தியஇராணுவம் இழைத்தசொல்லொன்னா கொடுமைகளை நினைக்கும்போது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.
நான் தமிழன் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.

தமிழக மீனவர்களை தொடர்ந்து கொடுமைப் படுத்தியும்,
கொன்று குவித்தும் வரும் இலங்கை கடற்ப்படையைப் பார்த்து, வடக்கே பதிலடிகொடுப்பதுபோல் இலங்கை கடற்ப்படைக்கு பதிலடியோ,
மீனவர்களுக்கு பாதுகாப்போ தராமல் மெளனம் சாதிக்கும் இந்தியாவைநினைக்கும்போது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.நான் தமிழன் என்றஎண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.

அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை இராணுவத்தைபார்த்துக்கொண்டு கண்டும் காணாததுபொல் இருக்கும் இந்தியாவைநினைக்கும்போது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.
நான் தமிழன் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.

காவேரி தண்ணீரை கர்நாடகமும், கிருட்ணா* தண்ணீரை ஆந்திர மாநிலமும், பெரியாற்றுத் தண்ணீரை கேரள மாநிலமும் சக இந்திய மாநிலமானதமிழகத்துக்கு தர மறுக்கும்பொது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.நான் தமிழன் என்றஎண்ணம் எனக்குள் வேரூன்றுகிறதுசாகடிக்கபடலாம் .... ஆனால் நான்தோற்க்கடிக்க படமாட்டேன்......."பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்!

வெள்ளி, 16 ஜனவரி, 2009

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாநிலை போராட்டம்.


ஈழத்தமிழர்களுக்காக கோரிக்கைகள் ஏற்காவிடில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் அறிவித்திருக்கும் அண்ணன் திருமாவிற்கு ஆதரவாக மும்பை தாராவி பகுதியில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்.

நாள்: காவல் துறை அனுமதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்


வியாழன், 15 ஜனவரி, 2009

சமத்துவ பொங்கலோ! பொங்கல்!!



சிந்தனைக்கான செய்திகளை மக்கள் மனதில் ஊன்ற அமைக்கப்பட்ட கருங்கல்

என்னுடைய சமூக பணிக்கு முழு விடுதலை உணர்வளித்திருக்கும் என் தாய்


பகுத்தறிவு கொள்கைகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் களமாக உள்ள கதிர் வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர், மாணவர்கள் மற்றும் தோழர்கள்


சமூக ஆர்வலர், சீரிய பகுத்தறிவுவாதி சு.குமணராசனின் லெமூரியா இதழின் வாழ்த்து செய்தி



தமிழர்கள் ஓர் இனம் அதை சாதியோ, மதமோ பிரிக்க அனுமதிக்க இயலாது, பிரிந்த இனச் சகோதரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி


குழுப்படம்



இஸ்லாமிய தமிழ்ச்சகோதரியின் தமிழ் பொங்கல்


பகுத்தறிவை வாழ்வியலாகக் கொண்ட தோழரின் இனிய பொங்கல்




சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வனின் தமிழார்வ ஆதரவுள்ள உறுதுணை



அய்யா சாகுல் அமீதுவின் வாழ்த்துரை


தமிழ் மூதாட்டியின் பொங்கல்




எங்கள் இயக்கத்தின் முதலாமாண்டு பொங்கல் நிகழ்வுக்கு முழு உறுதுணையாக இயக்க தலைவரின் சகோதரி

எங்களோடு விழித்திருந்து உறுதுணையாக பணிகள் சிறப்பாக அமைய ஆலோசனைகளை வழங்கிய விழித்தெழு இயக்கத்தின் ஒரு குடும்பம்