ஞாயிறு, 27 ஜூலை, 2014

எமது செயல்திட்டங்களை அறிவிக்கிறோம்...மும்பை விழித்தெழு இயக்கம் / MVI



MVI:-#தமிழர் காமராஜர் -தமிழர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த மாதமான ஜூலை மாதத்தில் எமது செயல்திட்டங்களை அறிவிக்கிறோம்..#மும்பை விழித்தெழு இயக்கம் 
===========================================================
மதிப்பிற்குரிய மும்பை வாழ் தமிழ் மக்களே !!
வணக்கம்...

தமிழர்களே, தயவு கூர்ந்து உங்கள் பெயர்களுக்கு பின்னாடி சாதி பெயர்களை போடுவதை தவிர்க்கவும் மற்றும் தகப்பன் பெயர் (initial ) ஆங்கிலத்திலும் பின் வரும் பெயரை தமிழில் போடாமல்..முழவதையும் தமிழில் எழதுங்கள்.

#செயல்திட்டங்கள் ......

1. தாராவியில் நூலகம் - படிப்பகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் .

2. தாராவி -90 அடி சாலைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்..
தாராவி- குறுக்கு சாலை – Cross Road க்கு தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அல்லது பண்டித அயோத்திதாசர் பெயர் ,
தாராவி செக்டர் (தற்போது வரை தாராவி செக்டர் திட்டத்தை எதிர்க்கிறோம் மக்களை விரட்டும் திட்டமாக இது இருக்கிறது ) -தாராவி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யபட்டு திட்டம் நிறைவேற்று பட்சத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயர் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது இந்த சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையாக கொண்ட வர வலியுறுத்த உள்ளோம்.

3. நமது தமிழ் சமூகத்தில் 1௦, 12 வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அல்லது குறைந்த மதிப்பெண் பெற்று படிக்க ஆர்வமுள்ள பொருளாதரத்தில் பின் தங்கிய ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி பெறுவதற்கான உதவித்தொகை, கல்வி ஆலோசனை வழங்கவது அல்லது வருடத்திற்கு ஒரு மாணவ மாணவியை தேர்ந்தெடுத்து சமூகத்திற்கு பயன்படும் படிப்புக்கு உதவி செய்தல்.

4. IAS , IPS, IRS , IFS போன்ற முதல் தர உயர் அதிகாரிக்கான படிப்புக்கு Coaching Class /academy; உருவாக்க முயற்சித்து மேற்கொள்ளப்படும்.

5. பத்து வகுப்பு மற்றும் பன்னிரெண்டும் வகுப்புக்கு தனியார் மூலமாக நடந்த வரும் வகுப்புக்கு முப்பது ஆயிரத்திற்கு மேல் கொடுத்த மாணவர்கள் படித்த வருகிறார்கள். பள்ளியில் சேர்க்க போது அதிகபட்சமான நன்கொடை என்கிற பெயரில் பணம் கொள்ளை நடந்து வருகிறன இதை அகற்றி சிறந்த கல்வியை பள்ளிகளை கொடுக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

6. மும்பையில் தமிழ் மற்றும் தமிழ் அல்லாத உழைக்கும் மக்கள் பலர் தெருவோர தொழில் செய்யும் உழைப்பாளர்களாக இட்லி தொழில், உடை விற்பவராக, சிறு உணவு விற்பவராக, ஓட்டுனராக -டிரைவர்களாக, கார்மென்டில் வேலை செய்பவராக, கட்டிட தொழிலாளராக, இருந்து வருகிறனர். இவர்களுக்கு சமூக பாதுகாப்பும், சட்ட வழங்கி உள்ள அடிப்படை உரிமைகள் பெற்று தர முய்ற்சிகள் மேற்கொள்ளப்படும்.

7. பெயர்களுக்கு பின்னாடி சாதிய பெயர்களை தமிழர்கள் வைப்பதை தவிர்க்க தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் .

8. மும்பையில் தமிழ் வானொலி, தமிழ் பவன், மும்பையில் படிக்கும் நபர்கள் உயர் கல்விக்காக தமிழகத்திற்கு செல்லும் போது சேர்க்கை கிடைக்கமால் மிகவும் சிரமப்படுகிறனர் (இரண்டு தலைமுறையாக மும்பையில் இருந்தாலும் மும்பையிலும் & தமிழகத்திலும் இவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது ..தனது திறமையால் மட்டுமே கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்து வருகிறனர் ) தமிழகத்தில் இவர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் இது போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்ட செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

9. தாராவி என்.சிவராஜ் மாநகராட்சி மைதானத்தை, பூங்காவாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன (நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழ்நிலையில் இருப்பதால், ஒரு காற்றோட்டமான, மரம் செடிகளுடன், இயற்கையோடு இளைப்பாற, பேசி மகிழ என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது பூங்கா. ஆனால் தாராவி என்.சிவராஜ் மாநகராட்சி மைதானம் பராமரிப்பு இல்லமால் சுற்ற சுழல் பாதிக்கப்பட்டு இருக்கிறன)

10. தாராவியில் உள்ள பள்ளிகளுக்கு, சிறந்த பத்திரிகை /புத்தகத்தை மாததொரும் இலவசமாக வழக்கப்படும், சுற்று சுழல் குறித்து மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல், சமூகத்திற்கு உழைத்த தலைவர்களின் கருத்துகளை , வரலாறுகளை கேள்வி பதில் போட்டி , கட்டுரை போட்டி, ஆவணப்படும் திரையிடல், அறிவியல் கண்காட்சி மூலமாக மாணவ மாணவிகளுக்கு சமூக தலைவர்களின் கருத்துகள் கொண்ட செல்லப்படும்.ஏதேனும் ஒரு அரசுப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்படை வசதி மற்றும் கல்வித்திறனில் (தமிழ் மற்றும் ஆங்கிலப்புலமையை பெருக்க, அறிவியல் மற்றும் கணித நுண்ணறிவுத்திறன்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.)

11. வேலைவாய்ப்புகென ஒரு அமைப்பை உருவாக்கி ஆண்டுக்கு ஒருமுறை தொழில் பயற்சி முகாம் நடத்துவதும், கோ அப்பெரடிவே கூட்டறவு வங்கி உருவாக்குவது என திட்டமிட்டு உள்ளோம்.

# சிறீதர் தமிழன்
ஒருங்கிணைப்பாளர்.

# பன்னிர் செல்வம் & தங்க பாண்டியன்
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்

#மனித நேயமும், உழைக்கும் மக்கள் மீது இரக்கம் கொண்டவர்களால் தான் சுரண்டப்படுவதை முழமனதுடன் எதிர்க்க முடியும் ஆனால் அடிப்படையிலே மனிதன் சுயநலம் மிக்கவன் இது மரபுக்கூறுகளின் வழியாகவும் உண்மைதான். எல்லா உயிர்களும் அப்படித்தான் இயங்கி வருகின்றன.
சிந்திக்கத் தெரிந்த காரணத்தால் சுயநலத்தைக் குறுக்கிக்கொண்டு அதைப் பொதுநலமாக ஆக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்
சமூக அதிகமான பகுத்தறிவு சிந்தனையூடும், சுதந்திரத்தோடும் இருக்க வேண்டும் என்பது எமது விருப்பம். உழைப்பவர்கள் ஓய்வேடுத்துக்கொள்ளும்போது வசதி படைத்தவர்கள் வாளெடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட செயற்கை சரித்தரத்தை மாற்றுவோம். சமூகத்தின் உழைப்பால் விளைந்த நாங்கள், எங்களுக்கு கிடைக்கபெற்ற ஆற்றல்களை இச் சமூகத்தின் நீடித்த வளர்சிக்கு உதவ நினைக்கிறோம். அதன் ஒரு பகுதியாக துண்டறிக்கையை தயார் செய்து உங்களிடம் ஒரு கருத்துருவாக்கம் செய்யவதும் . உங்கள் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுவதற்க்காவே இத்துண்டறிக்கை வெளியிடப்படுகிறது..

இதுவரை #மும்பை விழித்தெழு இயக்கம் இலங்கையில் நடந்த போரை நிறுத்துங்கள் –தமிழர்களை காப்பாற்றுகள் என்ற முழக்கத்தோடு மனித சங்கலி, கருத்தரங்கம், போராட்டம் என பல நடத்தப்பட்டு உள்ளன,, தமிழர்களை ஒருங்கிணைக்க தை-தமிழ் புத்தாண்டு –சமுத்துவ பொங்கல் நடத்தப்பட்டு வருகிறன, வாழ்வாதார பிரச்சனைக்கு மக்கள் மத்தியில் ஆவணப்பட திரையிடல், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கருத்தரங்கம், ஆணுஉலை அமைப்பதற்கு எதிராக பிரச்சாரம், ஊர்வலம், உண்ணாவிரதம், மீதேன் அமைப்பதற்கு எதிராக ஆவணப்பட பிரசாரம் மீனவர்களுக்கான ஆதரவு போராட்டம், மரண தண்டனைக்கு எதிராக போராட்டம், நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு மூலமான பிரச்சாரம், ஒவ்வொரு மாதம் ஆவணப்பட திரையிடல் & புத்தகம் வெளியீடு/அறிமுகம் செய்து தொடர்ந்த வருகிறன, மாணவ மாணவிகள் மத்தியில் கட்டுரை போட்டி போன்றவை நடந்துள்ளன, சமூக புரட்சியாளர் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடை தமிழில் கொண்டு வந்தது,

மும்பை விழித்தெழு இயக்கம்

vizhithezhu.org@gmail.com

http://vizhithezhuiyakkam.blogspot.in/2014/07/blog-post.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக