திங்கள், 2 பிப்ரவரி, 2009

மும்பையில் முத்துகுமரனுக்கு வீரவணக்கக்கூட்டம் மற்றும் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நாள் (08-02-2009)

அன்புத்தோழர்களே!

ஈழத்தில் தமிழர்கள இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டிக்க திராணியற்ற சமூகமாக நம்மை இந்த பிழைப்புவாத அரசியல் அறிவிலிகள் நம்மை ஆளாக்கி வைத்திருந்த சூழலி ல் வாராது வந்த மாமணியாய் தன்னுயிரை நீத்து உணர்விழந்து, உணர்வூட்டிய முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், நமக்கு துரோகம் இழைக்கும் இந்திய வல்லாதிக்கம் மற்றும் தமிழக அதிகார வர்க்கம், பிழைப்புவாத அரசியல் கட்சிகளை அம்பலபடுத்தும் கடமை நமக்கு உள்ளது.


ஆனால், இந்த உணர்வு அனைத்து தமிழர்களுக்கும் உள்ளதா, இந்த செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிறதா? என்றால் இல்லை. அதாவது தெரிந்த நாம் அவர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க தவறிவிட்டோம்.

ஆதலால், இந்த தருணத்தில் வரலாறு நமக்கு இட்ட கட்டளையின்படி மும்பைவாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை அறிந்து மும்பையில் இளைஞர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ள
விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக அனைத்து அமைப்பு, சமுதாய தோழர்கள் தாய்மார்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தமிழ் அன்பர்களின் ஒருங்கிணைப்பு தேவை.

இந்த பொதுக்கூட்டத்தின் வெற்றி அடுத்த கட்ட போராட்டத்தை தீர்மானிக்கும், தயவு கூர்ந்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மும்பை வாழ் நண்பர்களுக்கு செய்தியை சொல்லுங்கள். தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்

--
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக