வியாழன், 5 பிப்ரவரி, 2015

திருநெல்வேலி -பத்தமடை ,காந்திநகர் ---அம்பேத்கர் இளைஞர் அணி -- பொங்கல் விழா (தை 1 & 2 -2046 )

#சகோதரத்துவம் வலியுறுத்தி 2015 பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் அம்பேத்கர் இளைஞர் அணியால் கொண்டப்பட்டது ..

#ஊரால் ஒன்றினைவோம் ..

திருநெல்வேலி மாவட்டம்,பத்தமடை -காந்திநகர் அம்பேத்கர் இளைஞர் அணி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஊரு பொது இடத்தில பொங்கல் வைத்து பின்னர் தொடங்கின ..சனவரி 15, சனவரி 16 (தை 1,2) இரு நாட்கள் நடந்தன.

விளையாட்டு நிகழ்வை சுப்புராஜ் , தளபதி ராஜா, பட்டு ராஜா , ராஜா -ஸ்டீவே வாக், பாலமுருகன், மாரியப்பன், பாஸ்கர், ஆனந்த், தமிழ், ஒருங்கிணைத்தனர்

ராஜன் ஒலி- ஒளி சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் மதியழகன்,
ஊர் தலைவர்-மதி, முன்னாள் அம்பேத்கர் இளைஞர் அணி நிர்வாகிகள் முத்து மணி, முத்து ராஜ், துரை ராஜ், லோகி .முருகன், கலர் -கலைரசன், ராஜன், குட்டி -லக்ஷ்மன், துரை - பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் விளையாட்டுப்போட்டிகளில் சிறுவர் மற்றும் சிறுமியர் ஆண்கள்,பெண்கள் என அனைவரும் பங்குபெற்று விழாவினை சிற்பித்தினர்,
ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஊரு பொது கிணறு அருகை உள்ள மைதானத்தில் நடைபெறுவது வழக்கம்..அது எனவோ வேலை, படிப்பு என்று பலர் வெளியூருக்கு , தமிழகம் தாண்டி சென்றாதல் பல ஆண்டுகாளாக 2009 -2014 வரை நடைபெற வில்லை. ஊரில் இருந்த மற்ற இளைஞர்களும் முன்னெடுக்க வில்லை.
பல ஆண்டுகள் கழித்து நடத்த முன்வந்தனர் அன்று இருந்து சிறுவர்கள் இன்று இளைஞர்கள் ஆகி ஊர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த ஆண்டு யாரைடைய உதவியும் நாடாமல் முயற்சித்து நடத்தி உள்ளனர்.
ஆனால் தார் சாலை வந்ததால் ஊர் எல்லையில் உள்ள அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த ஆண்டு நடைபெற்றது.
விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் கண்டு மகிழ்வதுடன், பங்கு பெறுவதும் வழக்கம்.

இரவு 8மணிக்கு மேல் எவனும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. 'தொலைக்காட்சியை ' பார்த்துக் கொண்டு காற்றாட உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்! ..தொலைக்காட்சி இன்று தொல்லைக்காட்சியாக மாறியுள்ளது .

இந்த வருடம் எமக்கு தல (முதல் ) பொங்கல் ஆகையால் இந்த வருட பொங்கல் நிகழ்வு தமிழகத்தில் ..
மும்பை விழித்தெழு இயக்கம் தொடங்கி 7 வருடம் கழித்து (மும்பைக்கு வந்தது 2008 ஆம் ஆண்டு )
முதன் முதலாக குடும்பத்துடன் ..பெற்றோர் &எனது துணைவியாருடன் தமிழர் திருநாளான தை திருநாளான பொங்கல் விழாவை கொண்டாடினேன்

அப்போது சிறுவர்களாக இருந்தவர்கள் இன்று இளைஞர்காளாக உருவாக்கி உள்ளனர்..முகநூலில் தொடர்பில் இருப்பர்களிடம் எப்போது சொல்லுவேன் .தொடர்ந்து இந்த நிகழ்வை எடுங்கள் என்று...

2009 க்கு முன்னால் விளையாட்டை நடத்தும் பொறுப்பில் எமக்கு முக்கிய பங்கு உண்டு...அது இந்த ஆண்டு எனக்கு எங்கு ஊரு தம்பிகள் ஒதுக்கினார்கள் ...

சிறுவர் சிறுமிகளுக்கு நான் தயார் செய்து உள்ள விளையாட்டு போட்டி
1. தலைவர்களின் படங்களை வைத்து பெயர்களை அடையாளம் காணுதல்
2. சிறுவர்களுக்கான காய்கறிகளின் பெயர்களை அடையாளம் காணுதல்
3.பொங்கல் விழாவை விளக்கும் ஓவிய போட்டி
4. மாறு வேடம் போட்டி
5. ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுவது (தண்ணீரை வாயில் வைத்து கொண்டு)
6. பொது அறிவு வினா விடை போட்டி
7. விழப்புணர்வு ஊட்டும் நாடகம்

இதில் சில போட்டிகள் தயார் செய்தும் நேரம் இல்லாததால் நடத்த முடியவில்லை ...
=============================================================
வழக்கம் மாறாமல் உள்ள விளையாட்டும் நடைபெற்றன ..

1.ஆண்களுக்கான உறி அடித்தல்
2.பெண்களுக்கான கோ கோ போட்டி,
3.. சற்று உயர்வான கயிற்றில் முறுக்கு தொங்க விட்டு கடிப்பது
4.. மெதுவாக ஓட்டும் சைக்கிள் பந்தயம்
5.. ஓட்ட பந்தயம் போட்டி
6.. கயிறு இழைத்தல்
7. சிறுவர் சிறுமிகளுக்கு பாட்டிலில் கைக்களால் தண்ணீர் நிறுப்புதல்
8. கைக்களை பின்னால் கட்டி கொண்டு பாட்டில் தண்ணீர் குடிப்பது
9. பலூன் ஊதி உடைத்தல்
10.சாக்கு போட்டி
11. மியூசிகல் சேர் போட்டி
12. ஆடல் பாடல்

ஒடுக்கப்படும் பல சமூகங்கள் இந்த காந்திநகர், பத்தமடை ஊரில் வாழ்ந்து வந்தாலும் அன்று போலவே இன்றும் இளைஞர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் நேரில் சென்று சந்தித்ததில் , விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி...
பொங்கல் நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் விழாக்குழு சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றினை தெரிவித்து கொள்கிறோம்.......
அம்பேத்கர் இளைஞர் அணி , காந்திநகர், பத்தமடை, திருநெல்வேலி மாவட்டம் .
===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக