செவ்வாய், 28 ஏப்ரல், 2009

மும்பையிலும் பரவிய விடுதலை பொறி

சிங்கள ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து உலநாடுகள் அனைத்து அறிக்கைவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைமையினாலான அரசு சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு பாராட்டு பத்திரம் அளித்து வருகிறது. ராஜே பக்சேவும் போரளிகளை இதோ ஒழித்துவிட்டேன், இன்னும் கொஞ்சம் தான் என்று ஆருடம் பார்த்து பார்த்து சொல்லிகொண்டு இருக்க, போராளிகள் தங்களில் எல்லைகளை மிகவும் பெரிய அளவில் விரிவடைந்து விட்டார்கள். ஆம் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களை போரளிகளாக போராட்டங்களின் மூலம் ராஜபக்சேவிற்கு சிம்ம சொப்பனமாக ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களை பிடித்துவைத்து போட்டோ எடுத்து புலிகள் பார் என்று புரளிவிடுகின்றனர். இவர்களின் புரளிகள் இன்றா நேற்றா காலங்காலமாக விடும் புரளிக்கதைகளையும் சீராக சிறப்பாக இந்திய மீடியாக்கள் எடுத்து சொல்லிவருகின்றன. ஆனால் அத்தனையும் மீறி போராளிகள் தான் தமிழர்கள் தமிழர்கள் தான் போராளிகள் என்ற உண்மை உலகெங்கும் தெரிய வருகிறது. உலகமெங்கும் போராட்டம் உண்ணாவிரதம் போன்றவை நடந்து வருகிறது

மராட்டிய மாநிலம் மும்பையில், தாராவிப் பகுதியில் சனிக்கிழமை சிங்கள கொடும்பாவி மகிந்தா ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு போராட்டமும் இந்திய அரசின் கண்மூடித்தனத்தை கண்டித்தும் மும்பை தாராவியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தை மும்பையில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப் பட்டிருக்கும்

விழித்தெழு இளைஞர் இயக்கம்

இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இந்த போராட்டத்தில் தாராவியில் உள்ள பல தமிழர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது

தமிழ் வாழ்க!

சிங்கள அரசு ஒழிக!

கொலைகார ராஜபக்சே தமிழர்களை கொல்வதை நிறுத்து!

என்று கோசங்கள் எழுப்ப பட்டது.


முடிவில் ராஜபசேவின் படத்திற்கு செறுப்பு மாலை அணிவித்து விளக்குமாறறால் சாத்தினர். அதன் பின்பு கொடுங்கோலன் ராஜபக்சேவின் படம் எரிக்கபட்டது.


மும்பை தாராவி பகுதியில் கூட்டம் நிறைந்த அரசியல் கட்சிகள் ஊர்வலம் வரும் வேளையில் இந்த நிகழ்வு நடந்ததால் தாராவி பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ராஜபக்சே உருவபடத்தை எரித்தற்காக இயக்க தோழர்கள் பன்னீர் செல்வம், மகிழநன்,சிரிதர், மற்றும் கதிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர், பின்னர் பிணையில் வெளிவந்தனர், பிணையை திங்கட்கிழமை நீதிமன்றம் உறுதி செய்தது.


2 கருத்துகள்:

  1. Normally, I dont like to see the rajebakshe pictures..But I like his pictures here :-))

    பதிலளிநீக்கு
  2. Mathippirkuriya விழித்தெழு இளைஞர் இயக்கம்,

    Tamilaka tamilarkalin manamarntha nandri.Eela tamilarkalukkaka innum porattangal thodarattum, urkka kathuvom, innum taminadu CM,India PM kathukalil vilumaaru urakka kathuvom,
    Annan seeman vali thodaruvom, thodar porattam nadathi nam Tamil ina makkal 300000 padum thunbam neenga aavana seiya thaalmaiyudan keetu kolkiren. Naam intha porattathai india mulavathum thodara vendum...tamilakathil evvalavu adakkumurai vanthalum annan seemananal parappurai thodarnthu konde thaan irukkum, avarai pin patri neengalum porattangal thodara vaalthukkal விழித்தெழு இளைஞர் இயக்கம்

    Tamilarkalin Thaagam Tamileela thaayagam
    Rajkumar,Tamilnadu

    பதிலளிநீக்கு