வெள்ளி, 28 ஜனவரி, 2011

முத்துக்குமார் நினைவு நாளில்: மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக ஒரு வேண்டுகோள்

முத்துக்குமார் நினைவு நாளில்:

தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தால் உலகெங்கும் உள்ள தமிழினத்தை தலைநிமிரச்செய்த அந்த மாவீரன் நினைவு நாளில் சாதி,மதம் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என்கிற எல்லா அடையாளங்களையும் கடந்து வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் பெயரே-- சென்னை கிழ்பாகம் பொது மருத்துவனைக்கு "வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் " என பெயரை வைக்கும் முயற்சியைக் எடுக்க வேண்டும்

என்று பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்:-


௧) சோனியா காங்கிரசை வீழ்த்துவது நாட்டுக்கு நல்லது. கருணாநிதி தி.மு.க.வை வீழ்த்துவது தமிழினத்திற்கு நல்லது. இவர்கள் இருவரையும் வீழ்த்தும் பணியை தமிழநாட்டில் வாழும் மானமுள்ளவர்கள் உடனடியாக செய்யவேண்டும். வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

௨)தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

௩) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ்நாட்டில் ஆதரிக்க வேண்டும்.

௪) தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) அகற்ற ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

௫) தமிழ்நாட்டில் உள்ள (இலங்கை) தமிழ் அகதிகளுக்கு (சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்) தற்காலிக குடியுரிமை வழங்க வேண்டும்.இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டுமெனவும் வலியுறுத்த வேண்டும்.

௬) இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை இந்திய மத்திய, மாநில அரசுகள் அமைத்துத்தர வலியுறுத்த வேண்டும்

௭)இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சதீவை நாம் மீட்க வேண்டும்.

௮)தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) போன்ற இலங்கை சமந்தப்பட்ட அனைத்தையும் அகற்றாமல்
மற்றும் இலங்கை அரசை "போர்குற்றம் புரிந்த அரசு" என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
& "தமிழீழம்" தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றதா
வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளும் மும்பை வரவேண்டாம் என வருத்ததுடன் கேட்டுக் கொள்கிறோம்..

(குறிப்பு: அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் பல ஆயிரம் , லட்சம் தொண்டர்கள்,
அதுவே போராட்டம் என்றால் நூறு முதல் ஐநூறு தோழர்கள்
)


மும்பையிலுள்ள, நாங்கள் தமிழக மீனவர்கள், தமிழீழ மக்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச மற்றும் தமிழ் அல்லாத மக்களிடம் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட இருக்கிறோம்..

இதுவே, முத்துக்குமார் தமிழீழ போரட்டகளை கூர்மைப்படுத்த "எனது உடலையே துருப்புச்சிட்டாகப் பயன் படுத்துங்கள் என அறிவித்த அண்ணன் கு. முத்துக்குமார் 2 ம் ஆண்டு நாளில் உறுதி சபதம் ஏற்போம் ....


என்று
பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமை மிகு உறவுகளுக்கு,
விழித்தெழு இயக்கம்
(உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,
எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்)

Vizhithezhu iyakkam
மும்பை

http://vizhithezhuiyakkam. blogspot.com

http://www.warwithoutwitness. com

http://www.tamilsagainst genocide.com

http://www.srilankagenocidealbum.com

1 கருத்து:

  1. // சோனியா காங்கிரசை வீழ்த்துவது நாட்டுக்கு நல்லது. கருணாநிதி தி.மு.க.வை வீழ்த்துவது தமிழினத்திற்கு நல்லது.///

    நடக்கட்டும் நடக்கட்டும்......

    பதிலளிநீக்கு