சனி, 30 அக்டோபர், 2010

திமிரு நடிகை அசின் எதிர்ப்பு போராட்டத்தின் தொடக்கம் : மும்பை தாராவி 90 அடி சாலையில் விழித்தெழு இயக்கம் சார்பில் நடைபெற்றது .








திமிரு நடிகை அசின் எதிர்ப்பு போராட்டத்தின் தொடக்கம் : மும்பை தாராவி 90 அடி சாலையில் விழித்தெழு இயக்கம் சார்பில் நடைபெற்றது...







இலங்கை அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.
இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் .





















இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்படவிருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள்ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தரெடிதிரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்புமுடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார்.
அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின்உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம்நடைபெற்றது. இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது.
ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சைஅளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சைஅளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.

கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும்என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வைஅழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.
போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமானபோர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின்அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர்ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண்திறப்பாக இருக்கட்டும் .





இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த்திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் .,





சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறைஇருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக்கொண்டிருக்கும் .நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்துநிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில்ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்டமக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர்அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்கஅரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறியஅயபிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிகஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை வருகின்றனர் .
தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்டஇந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும்திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் ....

1 கருத்து:

  1. தமிழ் மக்களின் காசில் உல்லாசமாக இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் இவள் தமிழ் நாட்டுக்கு ஒன்னும் புதிதில்லை இருந்தாலும் இப்போது தமிழன் கொஞ்சம் விழித்து கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும், உதாரணம் : மலையாள நடிகர் ஜெயராமின் பேச்சுக்கு அவர் வீட்டை அடித்து நொறுக்கியது... இனி ஜென்மத்தில் தமிழனை குறித்து கமெண்ட்ஸ் சொல்ல மாட்டான்...அது போல அசினும் அடங்கி விடுவாள்....

    பதிலளிநீக்கு