திங்கள், 27 பிப்ரவரி, 2012
Sri Lanka: War Crimes and Need for International Investigation - a Book Released
Transnational Government of Tamil Eelam (TGTE) today released a Booklet on Sri Lanka: “We Accuse War Crimes and Genocide – A Brief for an Independent International Investigation.” This release took place in Toronto, Canada to a packed audience and addressed by several dignitaries including, Member of the Canadian Parliament Rathika Sitsabaiesan and John Argue of Amnesty International, said a TGTE spokeswoman.
“Releasing this Booklet is one of our initiatives to reach out to the international community to highlight the mass killing of Tamils and the need for an international investigation. We need justice for our people. If Sri Lanka is allowed to walk free for these killings, then other governments will feel less restraint to kill civilians” said Prime Minister Visuvanathan Rudrakumaran. “Bringing Sri Lankan Government to face international justice is our top priority” he continued.
This booklet will also be released in Geneva (UN) on 27th, in India on 28th and in London on 29th. It will then be followed by releases in different Capitals around the world, said the TGTE spokeswoman. This booklet, written by academics from India and North America, is to be widely distributed around the world and at the current UN Human Rights Council session in Geneva, she continued.
This Booklet highlights different reports that documented mass killing of Tamils, including the UN Panel report and US State Department report. It also includes several international actions that were taken for mass killings, starting from Nuremberg trials in 1945, said the spokeswoman. The facts in the Booklet are supplemented by charts that make it easy to compare important issues and past international actions, she continued.
TGTE has sent a delegation to the UN Human Rights Council to counter Sri Lankan delegation’s attempt to stop any action on Sri Lanka, said the spokeswoman. This Booklet will be used as one of the resources to counter Sri Lankan Government’s propaganda, she continued.
According to a UN Panel report over 40,000 civilians were killed in five months in 2009 and women were sexually assaulted. Sri Lankan Government restricted food and medicine to Tamils, resulting in several died of starvation and injured were bled to death. UN Secretary General Ban Ki-Moon referred this UN report to the UN Human Rights Council to act, continued TGTE spokeswoman
The book will be also available on line at: http://www.tgte-us.org Contact: Deluxon Morris (UK) at: d.morris@tgte.org or +44-794-002-0758
டாக்டர் அம்பேத்கர் படம் தமிழில் குறுந்தகடு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம் !!



டாக்டர் அம்பேத்கர் படம் தமிழில் குறுந்தகடு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம் !!
தோழர்களே....
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை மறு வெளியிடுவது அல்லது தமிழில் குறுந்தகடு கொண்டு வருவது என முயற்சியில் உள்ளோம்.. இதன் முதன் செயல்திட்டமாக, ஜனவரி 30,2012 அன்று தோழர்,எடிட்டர் லெனினும்,( தமிழ்நாட்டில் முதன்முதலில் டிசம்பர்,ஜனவரி 2011 அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்தவரில் இவரும் முக்கியமானவர் ) நானும் எக்மோரில் உள்ள NFDC அலுவலகத்தில் பி.ராமு (Asst . Manager -Film /Production of NFDC,Chennai Branch ) அவர்களே சந்தித்து மறு படியும் வெளியிட வேண்டும் என் கேட்டுகொண்டோம் ...
பின், மறு வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளதால்.... தமிழில் குறுந்தகடு கொண்டுவருவது என முடிவு செய்தோம்..
NFDC சென்னை , மும்பை மற்றும் டெல்லி அலுவலகத்திற்கு 3000 குறுந்தகடுகள் தயாரித்து தரவேண்டி விண்ணப்பித்து உள்ளோம்...
இத்துடன் NFDC க்கான மாதிரி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது...
எங்களின் முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் தோழர்கள்...
தொடர்பு கொள்ளுங்கள் :-
விழித்தெழு இயக்கம்,மும்பை &
அம்பேத்கர் திரைப்படம் பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு---தமிழ்நாடு
தொடர்புடைய கட்டுரைகள்:-
http://mathimaran.wordpress.com/2010/04/16/article-297/
அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
http://mathimaran.wordpress.com/2010/04/30/article-302/
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
http://www.thenaali.com/inner.php?id=251
http://mathimaran.wordpress.com/2010/04/21/article-298/
அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
http://mathimaran.wordpress.com/2010/11/29/43article-342/
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
http://www.ambedkarfilm.com/default.html
(For down loading in English and Hindi)
http://www.vizhi.net/?p=1589
(அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி )
www.keetru.com/index.php?option=com_content&view...
www.mathavaraj.com/2010/12/blog-post_03.ஹ்த்ம்ல்
www.tamil10.com/.../அம்பேத்கர்-திரைப்படம்-
மாதிரி கடிதம்
To
D. Rama Krishnan
Deputy General Manager
National Film Development Corporation Ltd
Chennai
From
Vizhithezhu Ilaignar Iyakkam
Mumbai
SUB: Requesting 3000 VCD/DVD copies of Tamil version of film Dr.Babasaheb Ambedkar
Respected Sir,
On behalf of the ' Vizhithezhu Ilaingar Iyakkam'(Awareness Youth Organisation) is a social organisation to bring awareness among people on various issues and fighting for peoples common rights. This organisation never failed to raise its voice against the social injustice and inhumanity. We also introduced many living personalities from various fields like art and literature.
We have been screening many documentary and sensual fiction films for the people. We have already screened many documentaries from national and international list. We have very good contact with many organisation, Schools and colleges. We are conducting film screening, interative and debate sessions and contests for students.
Now we like to distribute the Tamil version of film Dr. Babasaheb Ambedkar, directed by Jabbar Patel. As you know better that, this Dr.Babasaheb Ambedkar is one of the finest historical film.
In post Independent India, there were two struggles being fought simultaneously; the first, which is well known, was fight for independence lead by Mahatma Gandhi, against the British colonial powers. The second, much less well known but no less important was an internal struggle. Seventy million Indian untouchables, led by Dr. Ambedkar were fighting for their rights. This film holds its significance due to the fact that, though the ethos contained is Indian, it has its equation in the political and social disparity all over the world. The basic aim of the social revolution is to uphold the meaning of humanity in its truest sense.
We have not finding any official VCD/DVD copies of This movie. So will like to place an order for bulk DVD copies. We need at least 3000 ( three thousand) copies initially. We Will pay for that. Even We are ready to give some amount as token for confirming this order.
Our aim is to distribute the copies of this film as much as possible among the young generation and let them know the history through the medium they better understand.
We hope you will do the necessary things to get the copies of the film. And you can even direct us to know the proper channel to get the VCD/DVD copies of the film Dr. Babasaheb Ambedkar.
Hope you will help us and also be a part of this awareness act.
Thanking You.
Yours Sincerely,
SRITHAR
Vizhithezhu Ilaignar இயக்கம்,மும்பை,
Mob:09702481441
சனி, 18 பிப்ரவரி, 2012
அந்தரத்தில் நிலை கொண்ட வாழ்வு ---மும்பை .....இயக்குனர் கீரா மூர்த்தி
அடுத்ததாக எமது பயணம் சென்னையில் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தேடி அலைந்த நாட்களில் வயிற்றை கொஞ்சம் கவனிக்க திருமண மண்டபங்களில் வேலை பார்ப்போம்..அப்படியாக ஒரு உணவு பரிமாற்ற முன்பை சென்றேன்..அப்பொழுது சுற்றிலும் முன்பையின் பார்ப்பன தமிழர்களின் கொழுத்த வாழ்க்கை கண்ணுக்கு தெரிந்தது..முன்பை வரை என்னை புரோக்கர் அழைத்து சென்றதற்கான பின்னணி ஒன்றே ஒன்றுதான்..நான் சிகப்பாக இருப்பதுதான் அது..சென்னையிலும் பிராமண திருமணம் என்றால் எனக்கு சர்வர் வேலை நிச்சயம் உண்டு..
அதன் பிறகு எனது அடுத்த பயணம் பச்சையின் பட வேலைகள் சம்மந்தமாக மகிழ்நன் அழைப்பின் பெயரில் தம்பி பொழிலனுடன் சென்றிருந்தேன் .நான் சென்றது மும்பையின் இதயம் என அழைக்கப்படும் தமிழர்கள் அதாங்க பறையர்கள் மற்றும் இன்னபிற ஒட்டுண்ணி சாதிகள் நிரம்பி நிற்கும் தாராவி ..
நான் கேட்ட கண்டடைந்த தாராவி அல்ல..அது..நாயகனில் விரவி நிற்கும் தாராவி அல்ல..பார்ப்பன மணிரத்தினத்தினால் தாராவியை காட்ட முடியாது என்பதை புரிந்து கொண்ட இடம் அது..
மும்பையின் தெருக்களில் நிரம்பி வழியும் தமிழ் சாதிகளின் பதாகைகள்..அதை தாண்டி பத்தாயிரம் பேருக்கு வெளிக்கிருக்கும் பொது இடம் பத்து..அதே போல சில லட்சம் தமிழர்களின் வெளிக்கிருக்கும் கொள்ளளவு அதிகபட்சம் நூறு அறைகள்..அவசர மும்பையில் பாதி பேர் வெளிக்கிருக்க தொடர்வண்டியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்கிற அவலம்..இவ்வளவையும் தாண்டி ஒரு புறா கூடல் பல நூறு புறா கூடுகளை போன்ற வீடுகள் ..ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் நடந்து போகும் பொழுது நம் தலையில் தட்டும் அளவுக்கு இருக்கும் அதிசயம் (கேவலம்) .ஒரு ஆள் கூட கவனமின்றி நடக்க தவறினால் மரணம் என்கிற இரும்பில் நிற்கும் படிக்கட்டுகள் ..
எப்பொழுதும் அந்த இடத்தையும் கூட கூறு போட ரௌடிகளுடன் இயங்கும் பிஜிபி,சிவா சேனா ,இன்ன பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் .. பெரும்பாலும் அடிமட்ட தொழிலில் மட்டுமே வாழ்வாதாரம் கொண்ட தமிழ் மக்கள்..நடைபாதையெங்கும் சில கோடி நட்சத்திரங்களை போல நீண்டிருக்கும் பீ கூட்டங்கள்....என மும்பை மிக அழகாகவே இருந்தது..
நான் அந்த மக்களுடன் பேசிய பொழுது இதை விட ஒரு லட்சம் மடங்கு கேவலமாக (அதாங்க அழகா மணிரத்தினம் எடுத்தது )இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் தாராவி இருந்தது..
மனசில் சொல்லொண்ணா துயரம் எம் ஈழ மக்கள் போலவே மும்பையில் எம் இன மக்கள்(பார்ப்பன மற்றும் அந்த அடிவருடி அரசியலை கையில் கொண்ட நாடார்,தேவர்களை தவிர ..இதை குறிப்பிட காரணம் சாதியின் வலிமை தான் ) சிலரை தவிர பல லட்சம் மக்களின் தின வாழ்வாதாரம் தொடர் கேள்வி குறிகள்..ஈழத்தில் இன சிங்கள ஆதிக்கம் என்றால் அதை விட மும்பையில் சாதிய ஆதிக்கம்..
அதையே சீரணிக்க முடியாமல் (குறிப்பாக தமிழகத்தில் கஷ்ட படுவதை நாம் பேத்தி கொள்வதை விட ஆயிரம் மடங்கு கேள்வி குறியுடன் வாழும் மக்கள் )நான் கிளம்பி வந்தேன்..எங்கும் நடை பயணமே உண்மையில் மக்களின் உண்மை துயரினை சந்திக்க முடியும் என்றும் நம்பினேன்..அப்படி இயலாமையில் இருந்த நான் அடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்த பொழுது இன்னும் ஒன்று புரிந்தது..
நான் பார்த்தது கேட்டது அதுதான் உச்சம் என நம்பியது என எல்லாமே பொய்..ரே ரோட்டில் வசிக்கும் எம் மக்களின் வாழ்விற்கு முன்பாக தாராவி மிக சாதாரணம்..
எழுதவோ பேசவோ கூட திராணியில்லாத பகுதி அது..இவர்களின் வாழ்வு எல்லையை எந்த ஒரு நாய் தலைவன் கூட புரிந்து கொள்ள முடியாது..கற்பனை செய்ய முடியாது..
எங்கு பார்த்தாலும் சிறு கப்பல் களுக்கான இரும்பு அடிக்கும் தொழிற்சாலை அதன் இடது பகுதியில் வீடுகள்..தொழிற்சாலைக்கும் வீட்டிருக்கும் இடையேயான தூரம் ஒரு அடி அந்த ஒரு அடியில் என் சில ஆயிரம் குழந்தைகள் மின் வெட்டும் இடத்தில் விளையாடுகிறான்..என் மனசை இரும்பாக்கிய இடம் அது..அந்த வீடுகளில் ஏழெட்டு மனிதர்கள்..காலம் காலமாக கப்பல் கட்டும் துறைமுகத்தை உருவாக்க அழைத்து இல்லை கொண்டு செல்ல பட்ட எம் தமிழர்கள் அதன் குழந்தைகள்..இங்கே சாதாரண வெல்டிங் பட்டறையின் மின்னலை கூட தாங்க முடியாத நம் கண்கள்..அங்கே பெரும் இரும்புகளுக்காக தீட்டப்படும் மின்னல்கள்..இரும்பு செதில்கள் அதன் நடுவே வாழும் குழந்தைகள்..அங்கேயும் அந்த இடத்தையும் பிடுங்க காத்திருக்கும் கழுகு மராட்டிய முதலாளிகள்..
இதை விட முக்கியமான ஒன்று..அந்த வீடுகள் எல்லாமே அந்தரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன..கடலில் இரும்புகளை ஏற்றி இரும்புகளின் மீது வீடு அமைத்து அதன் மீது வாழ்வை ஓட்டும் அந்த தமிழர்களை விட உலகத்தில் ஒரு தமிழனையும் பார்க்க முடியாது..கடல் உப்பில் இரும்புன்ன ஆகும்..அந்த இரும்பு சிதைந்தால் எப்படி உயிர் போகும்..அந்த உயிர் போனால் முதலாளி கழுகு அந்த இடத்தையும் ஆக்கிரமிக்கும்..
ஆனாலும் மனிதனாக பிறந்ததற்காக தமிழனாக பிறந்ததற்காக எத்தனை உயிர் மடினும் வாழ்வது என்கிற கோட்பாட்டில் வாழும் அவர்களை விட எதையும் சொல்ல எந்த தமிழனுக்கும் அருகதை அல்ல..என்னிடம் தங்கர் பச்சான் ஒன்னு சொன்னார்..முல்லை பெரியார் பத்தி கவலை படுரானுங்க..ஈழ பிரச்சனைய பத்தி பேசுறானுங்க..மூன்று தமிழர் விடுதலைக்காக இம்மாம் கூட்டம் கூடுது..ஒரு தானே ஒரு மக்களின் வாழ்வையே கேள்விக்குரியாக்குநிச்சி என் யாரும் கண்டுக்கல ..அப்படின்னு அவர் சொல்லும் பொழுது எனக்கு கோபம் வந்தது அவர் மீதும்..ஒட்டு மொத்த வசதியான சேற்றில் இறங்காத அதை போல பாவனை செய்த..அதற்க்கு வக்காலத்து வாங்குகிற அத்தனை தமிழ் தேசிய வாதிளின் மீதும் கோபம் வந்தது..தங்கரையும் சேர்த்து தான் என்..நீங்க கூட மும்பைய பார்க்கல..உங்க வசதி எங்க குறிஞ்சி இருக்குன்னு..
எல்லா விசயங்களுக்காக போராடுவதாக பாவனைதான் எல்லாரும் செய்றாங்க..என்னையும் சேர்த்து தான் ..இதுக்கு முடிவு என்ன..இந்த ஒட்டு மொத்த தமிழ் தேசிய வாதிகளின் கற்பிதங்களுக்கு யார் முடிவு கட்டுவது..இவர்களின் பின்னால் இயங்கும் வாலிபர்களின் கதி என்ன...இந்த வாலிபர்கள் திராவிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட போன தலைமுறைகளின் இன்றைய தமிழ் தேசிய வாரிசுகள் என்னும் பொழுது கவலை அளிக்கிறது..திராவிடத்தில் ஏமாந்த அதே தமிழன் இன்று தமிழ் தேசியத்தாலும் ஏமாறுகிறான் என்பதை வெக்கத்தோடு அறிவிக்கிறேன்..........
நன்றி,
இயக்குனர்,கீரா மூர்த்தி
வெள்ளி, 10 பிப்ரவரி, 2012
தமிழகத்தின் 170 கல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை---- அம்பலபடுத்திய மாணவன்
அதிர்ச்சி தரும் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்கு பெரும் உதவிகளைச் செய்கிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி, தமிழக இன்ஜினியரிங் கல்லூரி களில் நடந்திருக்கும் அநியாயத்தை அம்பலப்படுத்துகிறார், அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர் சரவணகுமார்.
அவரைச் சந்தித்தோம். 'நான் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்று கவுன்சிலிங் மூலம் சேலத்தில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். கவுன்சிலிங் மூலம் சேர்பவர்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தொகை 32,500 ரூபாய். ஆனால், அந்தக் கல்லூரியில் 50,000 ரூபாய் வசூல் செய்தனர். காரணம் கேட்டதற்கு, 'இந்தத் தொகையை கட்டினால் படிக்கலாம் இல்லை என்றால் வேறு கல்லூரிக்குப் போய் விடுங்கள்’ என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். கவுன்சிலிங் முடிந்தபிறகு வேறு கல்லூரியில் போய்ச் சேரமுடியாது என்பதால், கூடுதல் பணத்தைக் கஷ்டப்பட்டு கட்டி படித்தேன்.
முதல் ஆண்டு ஒரு வழியாக முடித்து விட்டேன் என்றாலும் அடுத்த மூன்று வருடங்கள் படிப்பதற்கு பணம் புரட்ட முடியாது என்பது தெரிந்தது. அரசு சொன்ன தொகையை நம்பி இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது. அவ்வளவு பணம் கட்டமுடியாது என்பதால் அடுத்த வருடம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் தவிப்பார்களோ என்ற சிந்தனை என்னைப் பாடாய்ப்படுத்தியது. அதனால், குறிப்பிட்டதை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது, அரசு தக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றேன். நான் கேட்ட 20 கேள்விகளுக்கு 36 பக்கங்களில் பதில் கொடுத்தார்கள். பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றாலும் கிடைத்த பதில்களே அதிர வைத்து விட்டன.
2007-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகாருக்கு உள்ளானவை, 39 இன்ஜினீயரிங் கல்லூரிகள். 2008-ம் ஆண்டு 46 கல்லூரிகள். 2009-ம் ஆண்டு 61 கல்லூரிகள். 2010-ம் ஆண்டு 24 கல்லூரிகள் என்று 170 கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ளன. இதனை விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 39 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகளில் மட்டுமே அந்தக் குழு விசாரணை நடந்தியிருக்கிறது. அதில் இரண்டு கல்லூரிகள் மட்டும் அதிக வசூல் செய்வது கண்டறியப்பட்டது.
இதேபோன்று 2008-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 61 கல்லூரிகளில், 7-ல் மட்டும் விசாரணை நடைபெற்றது. அதில் 5 கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக புகார் கூறப்பட்ட 170 கல்லூரிகளிலும் விசாரணை நடத்தாமல் சில கல்லூரிகளில் மட்டுமே நடந்துள்ளது. அதனால் 11 கல்லூரிகளில் மட்டுமே அதிகக் கட்டணம் வசூல் செய்வதுநிரூபணமானது. இந்த 11 கல்லூரிகளும் தலா ஒரு மாணவருக்கு மட்டுமே, கூடுதலாக வசூல் செய்த பணத்தை திருப்பி அளித்துள்ளது. அதிகக் கட்டணம் வசூல் செய்த கல்லூரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
'புகார் அளிக்கப்பட்ட அனைத்துக் கல்லூரி களிலும் ஏன் விசாரணை நடத்தவில்லை? இந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் தங்களது கடமையை சரிவரச் செய்யாமல் சில கல்லூரிகளுக்குத் துணை போயிருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டி அரசு மீதும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீதும் வழக்கு தொடுக்கப் போகிறேன். பல ஆயிரம் மாணவர்களின் வாழ்கையைப் பாழாக்கும் கூடுதல் கட்டண வசூல் விவகாரம் இனியாவது ஒழியட்டும்'' என்றார் ஆவேசமாக.
இதுகுறித்து, உயர்க்கல்வித் துறை அமைச் சர் பழனியப்பனிடம் கேட்டோம். ''இது முழுக்க முழுக்க கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள். இப்போது, மானிட் டரிங் செய்வதற்காக மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைத்து உள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது விசாரணை நடத்தி வருகிறோம். கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியின் உரிமத்தை ரத்து செய்யவும் தயங்க மாட்டோம்'' என்றார்.
இன்றைய நடவடிக்கை இருக்கட்டும். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்கப்போவது யார்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பதில் சொல்லப்போவது யார்?
நன்றி:
ஜூனியர் விகடன்
வெள்ளி, 23 டிசம்பர், 2011
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா?
தமிழ்நாட்டில் தமிழ்-- பா.இரா.தமிழ்நன்
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறதா என்றால் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த மாபெரும் உண்மை ஆனாலும் இதற்குத் தமிழ்நாடு என்றுதான் பெயர். நம் ஆட்சியாளர்கள் இங்கு ஆட்சி மொழியை நடைமுறைப்படுத்தாமல் நடுவில் (மத்தியில்) தமிழ் ஆட்சி மொழி என்றவாறு நகைச்சுவை ஊட்டுவார்கள்.
பிறமொழியில் பிறந்து தமிழுக்குத் தொண்டு செய்த உலக அறிஞர்கள் உண்டு. இங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியில் பிறந்து பிற மொழிக்குத் தொண்டு செய்கிறார்கள். அதாவது சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை அடையாளமாகத் தூக்கித் திரிகிறார்கள். சமற்கிருதம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தமிழை அரித்த கரையான். பின் ஒவ்வொரு பிற இனத்தவர்களின் ஆட்சியின் போதும் அவர்கள் மூலம் நுழைந்த சொற்கள் இன்று வரை நம்மைத் தாக்கி வருகிறது.
தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை. சமற்கிருதம், ஈப்ரு, அரபு, உருது போன்ற மொழிகளில் பெயர் கொள்கின்றனர். அதன் மூலம் தமிழைக் கொல்கின்றனர். தமிழ்க் குழந்தைக்குத் தமிழில்தான் பெயரிட வேண்டும் என்ற உணர்வும் தமிழர்களிடம் இல்லை. பெயர்தான் இனத்தின் அடையாளம். இரஷ்யா போன்ற சில நாடுகளில் அந்த அரசே அந்த மொழிக்குரிய பெயர் பட்டியலைத் தந்து அதில்தான் பெயரிட வேண்டும் என்று சட்டமியற்றி உள்ளது. இங்குத் தமிழில் பெயர் வைத்தால் கணையாழி (மோதிரம்) அளிக்கப்படும் என்ற அறிவிப்பு கொடுமை வேறு.
அடுத்து தமிழர்களின் கல்வியும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. ஆங்கிலம் படிப்பது என்பது வேறு ஆங்கிலத்தில் படிப்பது என்பது வேறு. நாம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டும் படிப்போம். அனைத்தையும் தமிழிலேயே படிப்போம். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அவரவர் தாய்மொழிகளில்தான் கல்வி கற்கின்றனர். நம் கண் முன்னே அழிக்கப்பட்ட ஈழத்திலும் அனைத்தும் தாய்மொழியிலேயே இருந்தது. அதனால்தான் அந்தப் போராளிகளும் உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கூட கண்டுப்பிடித்தார்கள். அங்கு மருத்துவமும் தமிழில்தான் இருந்தது. நமக்கு தெரிந்து அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில்தான் ஆங்கிலம் எங்கும் இருக்கிறது.
பாவேந்தர் ஓர் இரவில் எழுதியது ‘தமிழியக்கம்’ எனும் நூல். அதில் தமிழ்நாட்டில் தமிழ் எதிலும் இல்லாத கொடுமையைத் தமிழ்ச் சுவையுடன் படைத்திருப்பார். அவருடைய வருத்தம் அவர் மறைந்தும் அப்படியேதான் உள்ளது. ஆண்டுத்தோறும் அவர் சிலைக்கு மட்டும் மாலை போடப்படுகிறது.
ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய பொருட்களை உலக சந்தைக்குக் கொண்டு வரும் போது அவர்களுடைய தாய் மொழியில்தான் கொண்டு வருகிறார்கள் என்பதைத் தமிழர்கள் நினைவுக் கொள்ள வேண்டும்.
இன்னொரு கொடுமை என்னவென்றால் எதையும் இறக்குமதி செய்யும் குணம் தமிழர்களிடம் நிறைய உண்டு. மேலை நாட்டில் குளிர் பகுதிகளில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதை இங்கு நம்மவர்கள் அப்படியே இறக்குமதி செய்கிறார்கள். குறிப்பாக அவர்கள் குளிர் பகுதிகளில வாழ்வதால் குப்பாயம் (Coat) அணிந்தார்கள். இங்கு நம் தமிழர்கள் கொளுத்தும் கோடை வெய்யிலிலும் குப்பாயம் (Coat) அணிகிறார்கள். அதே போன்றுதான் கால்களில் மூடணி (Shoe) அணிவதும்.
இப்போது மம்மி டாடி பண்பாடு மிகுதியாய் ஆகிவிட்டது. குழந்தைகள் அம்மா அல்லது அப்பா என்று விளித்தால் உடனே பெற்றோர்கள் அவர்களை மருட்டி மம்மி டாடி எனப் பழக்கப்படுத்துகிறார்கள்.
நம்முடைய இசை ‘சங்கீத’மானது. நமது நாட்டியம் ‘பரத’ நாட்டியம் ஆனது. ஊர் பெயர்கள் பல சமற்கிருதம் சுமந்துள்ளது. நம்முடைய ஓகக் கலை ‘யோகாசனம்’ எனும் பெயரில் சமற்கிருதத்தில் திரிக்கப்பட்டது. இவைகள் தானாகச் சமற்கிருதத்தைச் சுமக்கவில்லை இவைகளின் மேல் அது ஏற்றப்பட்டது.
சுழியைப் பயன்படுத்திய தமிழர்களைப் புறந்தள்ளி அதை ‘இந்தியர்கள்’ கண்டுபிடித்ததாய் வெட்கம் இல்லாமல் பெருமை பேசுகிறார்கள். அதற்கு அவர்கள் பூஜ்யம் என்று பெயரிட்டு நம்மைச் சுழிக்குள் அடக்கிவிட்டார்கள்.
இங்கு இரண்டு தமிழர்கள் பேசும் போது ஒன்று ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் அல்லது தமிங்கிலத்தில் பேசுகிறார்கள். கூடவே உலக மொழிகளை அவர்கள் அறியாமலேயே பயன்படுத்துகிறார்கள். தமிழர்கள் பேச்சிலும், எழுத்திலும் உள்ள ஆங்கிலக் கலப்பைப் பற்றிதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். பிற மொழிகளின் கலப்பைப் பற்றி அறிய ஆர்வம் இல்லை அதை நீக்க முயற்சியும் இல்லை. எதையாவது கூறினால் தூயத் தமிழ் என்பார்கள் தனியாக அழுக்குத் தமிழ் என்று ஒன்று இல்லை. தமிழ் மற்றும் பிற மொழி அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்பது கவலைக்கிடமாகவே உள்ளது. கடும் மருத்துவப் (தீவிரச் சிகிச்சை) பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
உலக நாடுகள் தமிழின் பெருமையைப் பேசுகின்றன. உலக மக்களும் தமிழின் பெருமையை அறிய முனைகிறார்கள். தமிழர்கள் தங்கள் பெருமையைக் கேட்க கூட விரும்பவில்லை. தமிழர்கள் மிகுதியாக வாழும் உலக நாடுகள் சிலவற்றில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் வானூர்தி அறிவிப்புகள் கூட தமிழில் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து மதுரை போகும் வானூர்திக்குக் கூட தமிழ் அறிவிப்பு இல்லை.
உலகின் மிக உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே தமிழ் இருப்பதாய்க் கூறுகிறார்கள். இங்கு மிக உயரத்தில் இருந்து தமிழ் விழுந்து காலம் ஆகிவிட்டது.
இனி தமிழ்நாடு என்பதற்கு உண்மையான பொருளை நாம் ஏற்படுத்துவோம்.
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
என்றார் பாவேந்தர்.
நன்றி
ஆக்கம் -பா.இரா.தமிழ்நன்
செவ்வாய், 20 டிசம்பர், 2011
பெண்ணுலகமும் பதுங்குகுழிகளும்
புதியமாதவி மும்பை.
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்காற்றிய பெண்களின் எண்ணிக்கை நமக்கு வியப்பூட்டும். அமெரிக்க நாட்டின் படையில் மட்டும் பெண்கள்:
கடற்படை - 100,000
கப்பல்துறை - 23,000
கடற்கரை கண்காணிப்பு - 13,000
விமானப்படை - 1,000
தரைப்படை, கப்பற்படை செவிலியர் - 74,000
1970 வரை அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இராணுவ அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. சாதாரண அரசு ஊழியர்களாகவே அமெரிக்க அரசு அவர்களைப் பட்டியலிட்டது.
போரும் போர்க்களமும் முழுக்க முழுக்க ஆண் கட்டுப்பாட்டுக்குரியதாகவே இன்றுவரை இருப்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல.. போர்நிறுத்த உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள், அமைதிக் குழுக்கள் இத்தியாதி அனைத்தும் ஆண்களின் ஆளுமைக்குட்பட்டதாகவே இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இன்றுவரை எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெற்றுள்ளதாக சரித்திரமில்லை.
போரின் பாதிப்புகளை அதிகமாக அனுபவிக்கும் பெண்ணினத்தின் அனுபவங்களும் அதைப் பற்றிய பதிவுகளும் மிகக்குறைவு. பெயர் தெரியாத ஜெர்மானியப் பெண்ணின் நாட்குறிப்பு (An Anonymous Woman Diarist in Berlin) உலக யுத்தத்தில் ஜெர்மானியப் பெண்களின் மனிதாபிமான செயல்களைப் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ரஷிய வீரர்களால் தங்கள் மனைவி மக்கள் வன்கொடுமைக்குள்ளானபோது ஜெர்மானிய வீரர்கள் தங்கள் உயிர் காக்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். பெர்லின் நகரத்து ஜெர்மானியப் பெண்கள் தான் தங்கள் பெண்களைப் பாதுகாத்தார்கள் என்றும் பதிவு செய்துள்ளது.
ஜெர்மானிய ஹிட்லரின் நாசிப்படை வீரர்கள் தாங்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளிலும் தங்கள் வாரிசுகளை அனாதைகளாக விதைத்தார்கள் என்பது சரித்திர உண்மை. 1940 மே மாதம் முதல் 1944 டிசம்பர் வரை ஜெர்மானிய வீரர்கள் பிரான்சு நாட்டைக் கைப்பற்றி இருந்தபோது ஜெர்மானிய வீரர்களுக்கு பிரான்சு பெண்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை சற்றொப்ப 200,000. அதுபோலவே 1940-45களில் டென்மார்க் நாட்டை கைப்பற்றியிருந்தபோது பிறந்த குழந்தைகள் 6000 முதல் 8000. நெதர்லாந்தில் 1935-45களில் பிறந்த குழந்தைகள் 50,000. ரஷியாவில் மட்டும் ஜெர்மன் நாசிப்படை வல்லாங்கு செய்த அந்நாட்டு பெண்களின் எண்ணிக்கை 200,000 மேலிருக்கும்.
நாசிப்படை மட்டும் இதைச் செய்யவில்லை. உலக யுத்தம் முடிந்தபின் நேச நாடுகளின் படைவீரர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஜெர்மானிய மண்ணில் இதே கொடுமையைத்தான் செய்தார்கள். ஜெர்மன் தாய்கள் பெற்ற குழந்தைகளில் 36334 அமெரிக்கனுக்கும், 10188 பிரான்சு காரனுக்கும் 8397 பிரிட்டன்காரனுக்கும் 3105 ரஷியனுக்கும் 1767 பெல்ஜியநாட்டவனுக்கும் பிறந்தவர்கள். தகப்பனின் நாட்டு அடையாளமும் இல்லாமல் பிறந்தவர்கள் 6829. அதுமட்டுமல்ல, ஜனவரி 1946வரை அமெரிக்க வீரன் விரும்பினாலும் கூட தன் எதிரி நாட்டில் வாழும் தன் வாரிசுகளுக்கு வாரிசுரிமையை வழங்க முடியாது என்று அரசாங்க சட்டமே இருந்தது. இன்றுவரை தங்கள் தந்தையரின் வேர்மூலம் தேடி அலையும் அவர்களின் கதை மனித இனத்தின் ஒரு சோக வரலாறு.
பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!
போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)
அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.
போரின் விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.
மகன் புறமுதுகிட்டான் போர்க்களத்தில் என்று கேட்டு அவன் பாலுண்ட தன் முலையை அறுத்து எறிந்த புறநானூற்று தாயின் வீரத்தைச் சொல்லி சொல்லி ஆணுலகம் போர்ப் பரணி எழுதி வைத்திருக்கிறது. அதைக் கொண்டாடும் மூளைச்சலவையிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இன்றைய போர்முனையில் இலங்கையிலிருந்து ஒலிக்கிறது ஒரு தாயின் குரல்..
கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப்பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா "தாய் நிலம்"
புதல்வர்களைக் கேட்கிறது?
போராட என்னை அழைக்காதே
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற 'தாய்நிலமே'
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை.
கடித்துக் குதறி
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனை குஞ்சுகளை விழுங்கிவிட்டாய்.
இன்னும் அடங்காதோ உன் பசி?
விண்ணேறி மண் தொட்டு
மீண்ட பின்னும்
சமாதானம் வேண்ட
யுத்தம் தேவையோ?
பற்றி எரிக ஆயுத கலாசாரம்!
என் மழலைகளை விடு
நாளைய உலகம்
அவர்களுக்காய் மலரட்டும்!
(ஈழக்கவிஞர் ஒளவை)
- புதியமாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)
http://www.keetru.com/literature/essays/puthiya_madhavi_14.php
செவ்வாய், 13 டிசம்பர், 2011
நான்கு பேரை கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்
நான்கு பேரை (இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள்) கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார்
அனுப்புதல்:-
லட்சுமி (20) க/பெ காசி
பெருமாள் கோவில் மண்டபப் படி
தி.மண்டபம், திருக்காவிலூர்
பெறுநர்:-
காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்
ஐயா,
பொருள் என் கணவர் காசி (22) த/பெ முருகன் என் கணவரின் அண்ணன் வெள்ளிக்கண்ணு (24) என் மாமனார் முருகன் (50) த/பெ மாணிக்கம், சின்ன மாமனார் குமார் (45) த/பெ மாணிக்கம் உறவினர் குமார் (55) த/பெ மாணிக்கம் என் உறவினர் ஏழுமலை (35) த/பெ கேசவன் ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதுடன் என்னையும், என்னுடைய ஓரவத்தி கார்த்திகா (18) க/பெ வெள்ளிக்கண்ணு, என்னுடைய நாத்தனார்களான வைகேஸ்வரி (20) த/பெ முருகன், ராதிகா (17) த/பெ முருகன் ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
><><>
வணக்கம். நான் பழங்குடி இருளர் சாதியைச் சேர்ந்தவள். எனக்கும் மேற்படி காசிக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. நானும் என் கணவரும் உளுந்தூர்பேட்டை அருகில் சந்திரன் செங்கல் சூளையில் என் பெற்றோருடன் வேலை செய்து வருகிறோம். மழைக் காலமானதால் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளோம். இது போன்று சென்னையை அடுத்து பனப்பாக்கத்தில் உள்ள அம்பாள் செங்கல் சூளையில் தன் பெற்றொருடன் வேலை செய்து வந்த ஓரவத்தியும் தன் கணவருடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். மேற்படி என் மாமனார் வீட்டில் இதுவரை கல்யாணமாகாத அவருடைய தம்பி குமார் (45) என் நாத்தனார்களான வைகேஸ்வரி (20) ராதிகா (17) கொளுந்தனார்களான படையப்பா (12) மாணிக்கம் (10) ரங்கனாதன் (8) ஆகியோர் உள்ளனர். மேற்படி என் மாமனார் வீட்டருகே அவர் உறவினரான குமார் (55) த/பெ மாணிக்கம் தன் மனைவி செல்வியுடன் ஒரு வீட்டில் குடியிருக்கிறார். இந்த இரு வீடுகளைத் தவிர மேற்படி மண்டபப் படியில் வேறு வீடுகள் கிடையாது. விழுப்புரம் வட்டம் சிறுவாலையைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஏழுமலை நான்கு நாட்களுக்கு முன்பு என் மாமனார் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தார்.
(2) கடந்த செவ்வாய்க் கிழமை (22.11.2011) அன்று மாலை 3 மணிக்கு நானும் மேற்படி கார்த்திகா, வைகேஸ்வரி மற்றும் என் கணவர் காசி ஆகியோர் வீட்டில் இருந்தோம். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அதில் ஒருவர் என் கணவர் காசியை நடத்திக் கூட்டிச் சென்றார். மற்றவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் போகும் போது என் நாத்தனர் வைகேஸ்வரியைப் பார்த்து “உன் அப்பா வந்ததும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்” என்று செல்லி விட்டுச் சென்றனர்.
(3) மேற்படி செய்தியை ஆற்றில் மேற்படி ஏழுமலையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த என் மூத்தார் வெள்ளிக்கண்ணுவிடம் போய்ச் சொன்னோம். திருக்கோவிலூர் அருகே பெண்ணையாற்றங்கரையில் தட்டான் மண்ணைச் சலித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த என் மாமானார், மாமியாருக்கு என் மூத்தார் போய் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து என் மாமியார், மாமனார் மூத்தார் மற்றும் மேற்படி ஏழுமலை மற்றும் மேற்படி குமார் (55) ஆகியோர் திருக்கோவிலூர் காவல்நிலையம் சென்று என் கணவர் காசியைப் பற்றி விசாரித்துள்ளனர். அங்கிருந்த போலீசார் என் கணவரை விழுப்புரம் கூட்டிச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர். மேற்படி மணல் சலிக்கும் இடத்திற்கு என் மாமனார் மாமியாருடன் சென்றிருந்த மேற்படி என் சின்ன மாமனார் மற்றும் மேற்படிச் செல்வி ஆகிய இருவரும் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்கள் சொல்லித்தான் என் மாமனாரும் மற்றவர்களும் என் கணவரைப் பற்றி விசாரிக்க திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றுள்ள விபரம் எங்களுக்குத் தெரிய வந்தது.
(4) அன்று இரவு சுமார் 8 மணியளவில் ஒரு வேனில் 8 போலீசார் எங்கள் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் எங்கள் வீட்டையும், எங்களையும் சோதனையிட்டனர். சமைத்திருந்த உணவையும், பாத்திரங்களையும் சிதறடித்தனர். பூட்டி வைத்திருந்த ஒரு பெட்டியை உடைத்து அதனுள் நீண்ட நாள் என் மாமனார் மாமியார் சேர்த்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளையும் ரூ 2000 ரொக்கம், 4 செல்பேசிகள், சார்ஜர் வயர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்பு மேற்படி போலீஸ் வேனில் அங்கிருந்த என்னையும் என் ஓரவத்தி, நாத்தனார்கள், கொளுந்தனார்கள் மற்றும் என் சின்ன மாமனார் குமார் (45) மேற்படி செல்வி ஆகிய 9 பேரையும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்தவர்களில் நான்கு போலீசார் எங்களை ஊரையெல்லாம் தாண்டி ஒரு தைலா மரம் தோப்பிற்கு கொண்டு சென்றனர். மீதி நான்கு போலீசார் எங்கள் வீட்டருகே இருந்து கொண்டனர்.
(5) இரவு 8 மணிக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு வந்த என் மாமனார், மேற்படி வெள்ளிக்கண்ணு மேற்படி குமார் (55) ஏழுமலை ஆகியோரை அங்கிருந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியால் கடுமையாக அடித்துள்ளனர். என் மாமியார் உள்ளிட்டு அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு திருக்கோவிலூர் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆண்களையெல்லாம் ஒரு அறையில் அடைத்து விட்டு என் மாமியாரை மட்டும் தனியே அழைத்துச் சென்று சேலை, மடிகளையெல்லாம் சோதனையிட்டு அவர் வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக் கொண்டுள்ளனர். பின்பு என் மாமியாரை மிரட்டி அடித்து, ஒரு வெள்ளைத்தாளில் கட்டாயப்படுத்தி கை ரேகை வாங்கியுள்ளனர். என் மாமியார் மற்றும் மாமனார் பெயரைக் கேட்டு அதில் எழுதியுள்ளனர். பின்பு என் மாமியாரை மட்டும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மூன்று போலீசார் சந்தைப்பேட்டை வந்தனர். மேற்படி தைலா மரம் தோப்பிலிருந்து எங்களையும் சந்தப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். எங்கள் வேனில் இருந்து, என் சின்ன மாமனார் குமாரைத்தவிர அனைவரையும் என் மாமியார் வந்த வேனில் மாற்றினர். அதிலிருந்த ஒரு போலீசார் மட்டும் என் மாமியார் வந்த வேனில் எங்களோடு ஏறிக் கொண்டார். பின்பு நாங்கள் அனைவரும் என் மாமியார் வந்த வேனில் மேற்படி தைலாமரம் தோப்பிற்கு கொண்டு செல்லப் பட்டோம்.
(6) இரவு சுமார் 12 மணியளவில் மேற்படி வேனில் இருந்து என்னோடு கார்த்திகா, வைகேஸ்வரி, ராதிகா ஆகிய நான்கு பேரையும் கீழே இறக்கி வண்டியில் வந்த நான்கு போலீசாரும் ஆளுக்கு ஒருவராக எங்களை தனித் தனி மறைவிடங்களுக்கு தள்ளிச் சென்றனர். என்னைத் தள்ளிச் சென்றவர் என் காலை இடறி கீழே படுக்க வைத்து என் சேலையை அப்புறப்படுத்தி மார்பகங்களை கசக்கினார். “நான் மூன்று மாதமாக முழுகாமல் உள்ளேன்….. ஐயா என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சியும் அவர் விடவில்லை. நான் கத்த முயன்ற போது என் வாயை பொத்தி அழுத்தி கற்பழித்தார். இது போல கார்த்திகாவை தள்ளிச் சென்ற போலீசிடம் “நான் உங்க கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி நினைச்சி என் விட்டுடுங்க” என்று காலில் விழுந்து கெஞ்சியும், அவளைக் கட்டாயப்படுத்தி படுக்க வைத்து தாலிக் கயிற்றை அவிழ்த்து எறிந்து விட்டு, அவளை கற்பழித்துள்ளார். மேற்படி வைகேஸ்வரியை அவளைத் தள்ளிச் சென்ற போலீஸ், முழுமையாக நிர்வாணப் படுத்தி, மார்பில் எட்டி உதைத்து கீழே படுக்க வைத்து கற்பழித்துள்ளார். மேற்படி ராதிகாவை மேற்படி போலீசாரில் மூன்று பேர் மாறி மாறி கழ்பழித்துள்ளனர். கற்பழிக்கும்போது அவர்கள் சத்தம் போடாதவாறு மேற்படி போலீசார் எங்கள் வாயை பொத்தி அழுத்தி விட்டனர்.
(7) பின்பு எங்கள் நால்வரையும் மேற்படி போலீசார் மீண்டும் வேனில் ஏற்றினார்கள். நாங்கள், வண்டியின் பின்புறம் இருந்த என் மாமியாரிடம் நடந்ததைச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதோம். விடியற்காலை (23.11.2011) சுமார் 5 மணிக்கு எங்களை எங்கள் வீட்டருகே கொண்டு வந்து விட்டனர். எங்களை பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு என் மாமியார் வள்ளி, மேற்படி செல்வியுடன், திருக்கோவிலூர் காவல் நிலையம் சென்றார். அங்கு என் கணவர் உள்ளிட்ட 6 பேரையும் ஒரு போலீஸ் வேனில் ஏற்றியதை அவர்கள் இருவரும் பார்த்துள்ளார்கள். அங்கு நின்ற போலீசார் ஒருவர் அனைவரையும் விழுப்புரம் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார்.
(8) பின்பு என்னுடைய மாமியாரும் மேற்படி செல்வியும் சந்தப்பேட்டையில் உள்ள பா.ம.க வழக்கறிஞர் வீர செல்வராஜி என்பவரைப் பார்த்து முறையிட்டுள்ளார்கள். மேலிடத்தில் சென்று புகார் கொடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
(9) இந்நிலையில் அன்று மதியம் ஒரு போலீசார் வாகனம் எங்கள் இடத்திற்கு வரும் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். மேற்படி போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்து, நாங்கள் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் மற்றும் சாமான்களை சிதறடித்து விட்டுச் சென்றனர். மாலை 3 மணியளவில் வீடு வந்த என் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறினோம். இரவு நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் தங்குவதற்கு பயந்து, அன்று மாலையே மேற்படி சந்தப்பேட்டை வக்கீல் வீட்டில் வந்து தஞ்சமடைந்தோம். அவர் கொடுத்த ரூ.50/- க்கு ஆளுக்கு இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டோம். மறுநாள் (24.11.2011) வியாழன் காலை 10 மணியளவில், சந்தப்பேட்டை ஜெயிலில் என் கணவர் மாமனார் உள்ளிட்டோர் இருக்கிறார்களா என்று பார்த்தோம். பின்பு அங்கிருந்து நாங்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள என் பெற்றோர்களின் இருப்பிடத்திற்கு வந்தோம். எனது தந்தை கொளஞ்சி த/பெ துரைசாமி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தில் உறுப்பினர். பின்பு அவர் மூலம் எங்கள் உறவினரும், கா.பொன்னங்குப்பம் கிராமத்தில் குடியிருப்பவருமான திருமதி.பூபதி, க/பெ வெங்கடேஷ் மூலம், விழுப்புரத்தில் இருக்கும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ரமேஷ் அவர்களின் வீட்டிற்கு 25.11.2011 அன்று மாலை வந்து சேர்ந்தோம். அவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினோம். அவர் உதவியோடு இந்தப் புகாரினைத் தயாரித்தோம்.
ஐயா அவர்கள், என் கணவர் காசி, மூத்தார் வெள்ளிக்கண்ணு, மாமனார் முருகன், சின்னமாமனார் குமார் (45) உறவினர் குமார் (55) ஏழுமலை ஆகிய ஆறுபேரையும் கடத்திச் சென்றதோடு, என்னையும், ஓரவத்தி கார்த்திகா, நாத்தனார்களான வைகேஸ்வரி, ராதிகா, ஆகிய நான்கு பேரையும் கற்பழித்த திருக்கோவிலூர் போலீசார் மீது எஸ்.சி எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
தங்கள் உண்மையுள்ள
ஒம்/-லட்சுமி
(தகவல் :
இரா.முருகப்பன் http://iramurugappan.blogspot.com/2011/11/blog-post.html
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் )
இருளர் வகுப்பை சேர்ந்தவர்கள்