இயக்குனர் வ. கௌதமன் இயக்கிய "அழகின் சிரிப்பு " ஆவணப்படம் மற்றும் வினவு தயாரித்த “கருவாடு” ஆவணப்படம் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு காட்சியாக OMTEX வகுப்பில் திரையிடப்பட்டது
13 வது அமர்வு.. மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக "அழகின் சிரிப்பு" மற்றும் கருவாடு " ஆவணப்படம் சிறப்பு காட்சி யாக மாணவ மாணவிகளுக்கு தாராவியில் இருக்கும் OMTEX class யில் – நேற்று டிசம்பர் 14, 2014 ஞாயிறுக்கிழமை மாலை திரையிடப்பட்டது.
இயக்குனர் வ. கௌதமன் இயக்கிய "அழகின் சிரிப்பு " ஆவணப்படம் மற்றும் வினவு தயாரித்த “கருவாடு” ஆவணப்படம் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு காட்சியாக OMTEX வகுப்பில் திரையிடப்பட்டது
முடிவில் மாணவ மாணவிகளிடம் திரையிடப்பட்ட ஆவணப்படம் மற்றும் நடந்து வரும் நாட்டு நடப்புகள் குறித்து விவாதம் நடைப்பெற்றது. 40க்கு மேற்பட்ட பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 10 வகுப்பு மாணவர்கள் , 10 க்கு மேற்பட்ட 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
பின்னர் #தாராவி மக்கள் சந்தித்த பிரச்சனைகள், சந்திக்க இருக்கிற பிரச்சனைக்கள் குறித்தும் , வரலாறு குறித்தும், சேரி மக்கள் (சோப்பட) வாழ்க்கை - அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை குறித்து கட்டுரைகள் , ஆவணப்படம், குறும்படம் உருவாக மாணவ மாணவிகளிடம் மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக கோரிக்கை வைத்தோம் ..இதை மாணவ மாணவிகள் தயக்கம் இன்றி ஏற்றுக்கொண்டு ..ஆண்டு தேர்வு முடிந்த பின்னர் கோடை விடுமுறை நாட்களில் தயார் செய்து தருவாதாக உறுதி அளித்துள்ளனர்.
==========================
தாராவியில் தமிழகத்து கருத்தியல்களை பேசி, பேசி பார்க்கிறோம். முற்போக்கு அரசியலை விதைக்க துடிக்கிறோம். மறுபக்கம் தமிழகத்து சாதி சங்கங்கள் அனைத்தும் இருக்கின்றன....மதவாத அமைப்புகள் ஊடுறுவியிருக்கின்றன..
இந்த நிலையில் பிற நாடுகளிலும், சென்னை குடிசைப்பகுதிகளிலும் நடப்பது போல தாராவி உழைக்கும் மக்களை வெளியேற்றினால், தற்போதுள்ள அரசியல் புரிதலில் மக்களை திரட்டவும் முடியாது.
எதிர்ப்பே தெரிவிக்க முடியாத ஜந்துக்களாக, அடிமைகளாக....
உழைத்து, உழைத்து நம் முன்னோர்கள் உருவாக்கிய தாராவியை முதலாளிகளுக்கு தாரைவார்த்துவிட்டு நிற்போம்..
ஈழம் போன்றதுதான் தாராவி...
தமிழ் உழைக்கும் மக்கள் உட்பட, மராத்திய உழைக்கும் மக்கள், வடமாநில உழைக்கும் மக்களின் உழைப்பில்தானே இன்றைய தாராவி உயிர்வாழ்கிறது..
நமது ஜீவாதாரமான தாராவியை முதலாளிகள் பறிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது சரியாக இருக்குமா?
என்ன செய்வது....
தாராவி மக்களுக்கு இந்த மண்ணின் வரலாற்றை கற்று தருவது...தாராவியோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பை உணர்த்துவது.. அவர்கள் உழைத்து உருவாக்கிய தாராவி மீதான அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான அரசியல் அறிவை புகட்டுவது, முன்னேற்றம் என்ற பெயரில் வரப்போகும் ஆபத்தை புரியவைப்பது என்று தெளிவான திட்டமிடல்தான் சரியாக இருக்கும்..
அப்பொழுதுதான்....நம் கொள்கைகள் மக்களிடம் செல்லும், நாமும் மக்களுக்கு நேரடியாக களத்தில் உழைக்கும் அரிய வாய்ப்பை பெறுவோம்..--------------------------
தாராவி குறித்த வரலாற்றுணர்வை ஏற்படுத்த தொடர் நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்....தாராவி வரலாறை அறிந்தவர்களின் வழிக்காட்டல் மற்றும் உதவியும் தேவை...
மும்பை விழித்தெழு இயக்கம்/MVI
















































