திங்கள், 31 அக்டோபர், 2016

கலாச்சார நடவடிக்கை ஏன்? எவ்வாறு?

இந்திய சமூகத்தின் உண்மைச் சூழல் வேகமாக மாறிவருகிறது. கண்டிப்பாக நல்லதை நோக்கி அல்ல. தேசிய விடுதலை இயக்கத்தின் ஊடாக எழுந்த சமூக மாற்றத்தை நடத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் தளர்ந்து வருகிறது.
அந்தோணி எனக்ரி மற்றும் மைக்கேல் ஹார்ட் என்பவர்கள் உலகமயமாக்கல் குறித்து எழுதிய புத்தகம் பரவலாக விவாத்தை கிளப்பி உள்ளது. அவர்கள் கூறுவது என்ன? ஏகாதி பத்தியம் இறந்துவிட்டது. ஆனால், நம் கண்கள் முன்பு மற்றொரு சாம்ராஜ்யம் உருவாகி வரு கிறது. இந்த சாம்ராஜ்யத்தின் பெயர் ‘உலகமய மாக்கல்’. பன்னாட்டு மூலதனத்திற்கு இந்த உல கையே அடிமைப்படுத்துவதுதான் இதன் நோக் கம். இந்த புதிய சாம்ராஜ்யத்தின் ‘நன்னெறி களும்’, ‘வளர்ச்சி’ என்பதற்கு இவர்கள் தயாரித் திருக்கும் கோட்பாடுகளும்தான் இன்று இந்திய சமூகத்தில் மேலோங்கி இருக்கும், பொதுவான சிந்தனைத் தளத்தை உருவாக்கி வருகின்றன.
இந்த புதிய சாம்ராஜ்யம் சொல்ல விழையும் முக்கிய செய்தி என்ன?
சந்தை! எங்கும் சந்தை, எதிலும் சந்தை! என்பதே. இந்தச் செய்தி எப்படி பரப்பப்படுகிறது? இந்த கலாச்சாரத்தின் அடிப் படையாகக் கொண்டு பல வழிமுறைகள் மூல மாக இந்த கலாச்சாரத்தின் உள்நோக்கம் ஒரு நவீன (உண்மையில், முதலாளித்துவம் என்று தான் கூறவேண்டும்.) சுவையையும் (இச்சை என்றும் கொள்ளலாம்) எதையும் விமர்சனம் செய்யாத மனப்பாங்கையும் செல்வச் செழிப்பை யும் கொண்டு வருவேன் என்று சூளுரைக்கிறது. ஆனால், உண்மையில் முன்னேற்றத்திற்கான தடைகளையும் பண்பாட்டு பிற்போக்குத்தனத் தையும் தான் ஊக்குவிக்கிறது.
வகுப்புவாத சூழல்
இத்தகைய போக்கின் முக்கியமான வெளிப் பாடுதான் வகுப்புவாதம் ஆகும். உலகமயமாக்கல் என்ற புதிய சாம்ராஜ்யம் உருவாக்கிய ‘கலாச்சார’ நெருக்கடியினால் இது மேலும் ஆழ்ந்தூன்றி தழைக்கிறது. ஆக உலகமயமாக்கலும், வகுப்பு வாதமும் ஒரே நோக்கங்களைப் பகிர்ந்து ஒன்று மற்றொன்றை ஊட்டி வளர்க்கும் போக்குகள் என்பது தெரிகிறது. இந்த புதிய சாம்ராஜ்யத்தின் கட்டளைகளை எந்தவித விமர்சனமும் இன்றி இந்திய ஆளும் வர்க்கம் ஏற்கும் என்பதை சமீ பத்திய ஆஃப்கன் போரின் மூலம் எழுந்த விளைவு கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. இந்தப் பின்னணியில் சமூகத்தின் மீதான எந்த செயல்பாடும், குறுக்கீடும் பல முனைகளை கொண்டதாகவே இருக்க வேண்டும். அது அரசியல், பண்பாட்டு மற்றும் கொள்கை ரீதி யான பலமுனைச் செயல்பாடாக இருக்க வேண் டும். இன்று உருவாகி உள்ள பொது சிந்தனைத் தளத்தின் தன்மையை மாற்றுவது நம் செயல் பாட்டின் துவக்ககால நோக்கமாக இருக்க வேண் டும். கலாச்சார நடவடிக்கைகள் இத்தகைய செயல் பாடுகளின் மையமான இடத்தைப் பிடிக்க வேண்டும்.
கலாச்சார நடவடிக்கை என்பது…
பொதுவாகவே ‘கலாச்சாரம்’ என்றாலேயே பல வகையான புரிதல்கள் அளவுக்கு மீறி இருப்ப தால் முதலில் கலாச்சார நடவடிக்கை என்றால் என்ன என்பது குறித்து சில விஷயங்களை தெளிவு படுத்துவது அவசியம். மனிதர் சம்பந்தப்பட்ட அனைத்து ஈடுபாடுகளிலும் உள்ளடங்கி இருக் கும் கலாச்சாரம், சமூக அதிகாரம் செலுத்தப்படும் தளமாகவும் அதிகாரத்தை எதிர்க்கும் தளமாக வும் விளங்குகிறது. அதே சமயத்தில் மேலாதிக் கத்தை செலுத்தவும், மேலாதிக்கத்தை எதிர்ப்ப தற்குமான கருவியாகவும் அது உள்ளது. கலா சாரம் என்பது சமூகத்தில் மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் இழைந்தோடுவது, ரேமண்ட் வில்லியம்ஸ் கூறுவது போல், கலா சாரம் என்பது தன்னாலேயே நின்று விளைவு களை உருவாக்க முடியாத ஒரு இரண்டாம் பட்ச வெளிப்பாடு இல்லை. மாறாக, சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பரவிநிற்பது. எனவே, கலாச்சார நடவடிக்கைக்கான வாய்ப்பு களும் எல்லைகளும் ஒட்டுமொத்தமான சமூக அனுபவங்கள் அனைத் தையும் உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக உணர்வு நிலைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் கலாச்சார நடவடிக்கை, கலாச்சார நடவடிக்கை என்பது பல கலை வடிவங்களைக் கொண்டு நடத் தப்படும் கலை விழாக்கள் அல்லது இதனால், கலை விழாக்கள் கருத்துப் பரிமாற்றக் கருவிகளாக பயன்படுத்தலாம் என்பதை மறுக்கவில்லை. அதற்கும் மேலாக, அன்றாட வாழ்வில் உள்ள டங்கிய ‘கலாச்சாரத்தை’ தட்டி எழுப்பக்கூடிய தொடர்ந்து செயலாற்றும் சமூக நடவடிக்கை யாகவே நாம் கலாச்சார நடவடிக்கையைப் பார்க்கிறோம். மக்கள் சமூகத்தில் முற்போக்கு வாதத்தை தீவிரப்படுத்தப் பயன்படும் குறுக்கீடு களின் ஒரு வகைதான் கலாச்சார நடவடிக்கை என்பது.
வாழ்க்கையை மேலாதிக்கத்திலிருந்து விடு தலை பெறச் செய்ய தேவைப்படும் சாத்தியக் கூறு களை உருவாக்க, சமூகத்தில் நிலவும், ஏற்றத்தாழ் வின்றி இருப்பதுபோல் காணுகின்ற, அமைதி யான நடுநிலையை (நளூரடைiசெரைஅ) குலைப்பது அவசியம் என்று அந்தோணியோ கிராம்ஷி கூறு வார். இதை செயலாற்றுவதற்கு மனித முயற்சியை முன்னிறுத்தும் நோக்கம்தான் கலாச்சார நட வடிக்கையின் அடிப்படை நோக்கமும் கூட.
தடையாக உள்ள மூன்று காரணிகள்
இத்தகைய நோக்கம், ஏதோ இந்திய சமூக இயக்கங்களின் அனுபவத்திற்கு அந்நியமான நோக்கம் அல்ல. அப்பாற்பட்டதும் அல்ல. பல சமூக இயக்கங்கள் அவர்கள் விரும்பும் மக்கள் பகுதியினரை சென்றடைய பலவிதமான சலா சார வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் போன்ற மக்கள் அறிவியல் இயக்கங்கள் மக்கள் வாழ்க்கையின் வாடிக்கையான செயல்களிலும் வழக்கங்களிலும் குறுக்கிடுவதன் மூலம் அவர்களின் கலாச்சார உணர்வுகளில் மாற்றத்தைக் கொண்டுவர முயற் சித்து வருகின்றன. மறுபக்கம், சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட், மானவீயம் (முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலைவிழா முயற்சிகள் போன்ற) இயக்கங்கள் இன்று நிலவும் சமூக உணர்வுகளை எதிர்கொண்டு சவால் விட கலை வடிவங்களின் ஆற்றலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளன. தற்போது நிலவும் சமூக நிலையை, சக்தியோடு கேள்வி கேட்க இந்த இயக் கங்களின் சாதகமான பங்களிப்பை கணக்கில் கொள்ளும். அதே சமயத்தில் ‘கலாச்சார நட வடிக்கை’ என்பதன் அர்த்தத்தை வடிவ ரீதியாக வும் சரி, உள்ளடக்க ரீதியாகவும் சரி; புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த புதிய அர்த் தத்தின்படி, தொடர்ந்த, தீவிரமான குறுக்கீடுகளின் மூலம் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்ற, சமூக மாற்றத்தை அடைய, கலாச்சாரம் மையமான கருவியாக மாற்றப்பட வேண்டும்.
ஆனால், இன்றைய சூழலில், சமூக மற்றும் சித்தாந்த நிலைகள் சார்ந்த பல காரணிகள் இத் தகைய கலாச்சார நடவடிக்கை செயலாற்றப்படு வதற்கு தடைகளாக உள்ளன. மூன்று காரணி களை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
  1. தனி நபருக்கும் வெளி உலகத்திற்கும் இடையே உள்ள மாறிக் கொண்டிருக்கும் உறவு
  2. சந்தைப் பொருளாதாரத்தின் தாக்கமும் அதனுடன் தொடர்பு கொண்ட நுகர்வு கலா சாரத்தின் பெருக்கம்
  3. மதம் சார்ந்த உணர்வுகள் வகுப்பு வாதத் தின் வளர்ச்சி
    இவை அனைத்தும் உண்மை சமூகச் சூழலுக்கு புறம்பான ஒரு குறுகிய கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு பங்களிக்கின்றன.
தனி நபர்கள் அந்நியமாகின்றனர்
சமூதாயப் பிரச்சனைகள் தனிநபரின் அக் கறைக்கு அந்நியமாகிப்போகும் போக்கு வளர்ந்து வருகிறது. முதலாளித்துவம் போற்றும் போட்டி மனப்பான்மையினாலோ என்னவோ, தனிநபரின் மனதில் சமூதாயத்திற்கு இடமில்லை என்றாகி விட்டது. பொது வாழ்க்கை தனி நலனும் தீவிர அக்கறை பெறும் விஷயங்களாக மாறிவிட் டன. தனி நலனுக்கு உண்டாகியுள்ள நெருக்கடிக் கான விடைகள் தேடுவதிலேயே அதிகமான ஈடுபாடு வளர, சமூக நலனின் மேல் தனிநபருக்கு அக்கறை அறவே இல்லாமல் போய் விட்டது. தனிநலன் என்பதையே சமூகப் பொதுநலனிடம் சரணடையச் செய்த மறுமலர்ச்சி மற்றும் தேசிய விடுதலை இயக்க கால வரலாற்றிலிருந்த போக் கிற்கு எதிராக இந்தப் போக்கு அமைகிறது. சமூக நலத்தின் மீது அக்கறை கொண்டு, கலாச்சார நட வடிக்கைகளை ஊக்குவித்து செயலாற்றக்கூடிய நபர்களின் எண்ணிக்கை சொற்பமாகி வருகிறது.
நுகர்வியம்
கடந்த சில வருடங்களாக மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் ஏற்படுவரும் மாற்றங்களின் காரணமாக தனிநபர் நெருக்கடி மேலும் தீவிர மாகியுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தின் தன்மை மாறி உள்ளது. உலகமயமாக்கல், இது வரை காணாத அளவில், வர்த்தகப் பொருட்கள் மீதான மோகத்தையும், அவற்றை அடையக் கூடிய சாத்தியத்தை பெருக்கி உள்ளது. பன் னாட்டு மூலதனம் ஒரு புதிய தன்மை கொண்ட சந்தையை உருவாக்கியதோடு அதனுடன் சேர்ந்த ஒரு புதிய கலாச்சாரத்தையும் உருவாக்கி உள்ளது. தனிநபரும் இந்த கலாச்சாரத்தை தன் இஷ்டப் பட்டு உட்கொள்ளவில்லை. மாறாக இந்த கலாச்சாரம் தனிநபர் மேல் வலிமையாகத் திணிக்க ப்படுகிறது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதுபோல், சந்தையின் சக்தி கட்டுக்கடங்காமல் வளர்ந்து, நுகர்வுப் பொருள் மோகம்தான் மக்களின் கலாச்சாரம், மக்களின் சித்தாந்தம் என்பது போன்ற நிலை உருவாகி உள்ளது. இது தன்னிலைக்கு மீறிய பொருளாசைகளை உருவாக்கியுள்ளது. உண்மை நிலைமைக்கும் உருவாக்கப்பட்ட ஆசைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டில் எழும் மனக் கலக்கத்திலும் ஏக்கத்திலும் தவிப்பிலும்தான் மத உணர்வுகளும் வகுப்பு வாதமும் கொழுந்துவிட்டு எரிகின்றன. பல தனிநலன் குறித்த பிரச்சனை களுக்கு ஆன்மீகத்தில் விடை காண முயலும் போக்கு வளர்ந்திருப்பதும் மேற்குறிப்பிட்ட முரண்பாட்டின் வெளிப்பாடே.
பண்பாட்டில் இயங்குவது…
மென்மேலும் அந்நியப்பட்டுப் போகும் தனி நபரை சமூக வட்டத்திற்குள் கொண்டு வருவதே கலாச்சார நடவடிக்கையின் செயல் நோக்கம். அதை இரண்டு விதமான செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம். ஒன்று, சிந்தனைப் பூர்வமாக, மற்றொன்று ஆக்கப்பூர்வமான செயல்களினு டாக. சமூக அரசியல் இயக்கங்களுக்காக கலை வடிவங்கனை பயன்படுத்தும் பண்பாடு காலனிய எதிர்ப்பு இயக்கம் முதல் பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி. இன்றைய இந்தியாவிலும் பல இயக்கங்கள் இதே முயற் சியை பல புதிய பரிமாணங்களுடன் மேற்கொள் ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வகுப்பு வாதத்திற்கு எதிரான இயக்கத்தில் இசை, ஓவியம், வீதி நாடகங்கள் ஆகிய வடிவங் களை தனது கருவிகளாக பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறது. சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட் (ளுஹழஆஹளுகூ) என்ற இயக்கம் ஒருங்கிணைக் கப்படாமல் இருந்தாலும், பல்வேறு இயக்கங் களின் சிறந்த முயற்சிகளினால் இந்த வடிவங்களைப் பயன்படுத்தி சமூக உணர்வில் ஒரு தாக்கத்தை ஏற் படுத்த முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் குறைபாடு என்ன? இவை அங்கொன்றம் இங் கொன்றுமாக அவ்வப்போது நடக்கின்றன. ஆகையால், மக்கள் கவனத்தை தொடர்ச்சியாக ஈர்க்கும் பணியை இவை செய்ய முடியாது.
இதற்கு மாறாக, கலாச்சார நடவடிக்கைகளை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாற்றுவதற் கும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் சாத்தியம். நூல் விற்பது, கதர், ஆசிரம வாழ்க்கை ஆகியவற்றை வெகுஜன மக் களைத் திரட்டும் பணியில் வலுவானக் குறியீடு களாக காந்தியடிகள் வியக்கத்தகுந்த வகையில் பயன்படுத்தி பல முன்னுதாரணங்களைத் தந் துள்ளார்.
ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் கலாச்சார நடவடிக்கையை மேற்கொள்வதன் முக்கிய அம்சம் கலாச்சார சமூகங்களை உருவாக்குவது. இரு வகையான சமூகங்களை உருவாக்குவது சாத்தியம். 1கற்பனை சமூகங்கள் , 2.உள்ளூர் சமூகங்கள் என்பன.
கற்பனை சமூகங்கள் சில பொதுவான நெறி களையும் ஆர்வத்தையும் உணர்ந்து உள்வாங்கி இருப்பவை. இதன் அங்கத்தினர், அவர்களுக்கு விருப்பமான நெறிகளுக்கும் ஈடுபாட்டிற்கும் வித்திட்ட ஒரே தோற்றுவாய் அல்லது மூலக் கருத்தாடலோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொள்பவர்களாக இருப்பர்.
கற்பனை சமூகங்கள்
மத்திய பிரதேசத்தில் ‘ஏகலைவன்’ என்ற அமைப்பின் கல்வி குறித்த குறுக்கீடுகள், ஈடுபாடுகள் கற்பனை சமூகத்தை  விளக்குவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கல்வியில் இவர்கள் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளின் மூலமாக, சில பொதுவான கருத்துகளை உரு வாக்கி உள்ளனர். ஆனால் இதன் அங்கத்தினர், முறையான கருத்துப் பரிமாற்றத்தினை அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு சோதனையில் ஈடுபடுவதோ, இல்லாமல் இருக்கலாம். ஆனால் ‘ஏகலைவன்’ ஒரு குறிப்பிட்டத் துறையில் தனது ஈடுபாட்டின் மூலமாக, இந்த ஈடுபாடு உரு வாக்கிய தாக்கத்தின் மூலமாக, கண்ணுக்கு புலப் படாமல் இருப்பினும் பலர், இது நமது இயக்கம், நான் ஆமோதிக்கும் கருத்தாடலைக் கொண்டது என்று உணர்ந்து செயல்படக் கூடிய கற்பனை சமூகத்தை உருவாக்கி உள்ளது.
உள்ளூர் போராட்டங்கள்
உள்ளூர் சமூகங்கள் செயல்படும் நிலை முழு வதும் மாறுபட்டது. அவர்கள் உள்ளூர் பிரச் சனைகளை மையமாக வைத்து செயல்படுவதி னால் இவற்றை நாம் ‘உள்ளூர் சமூகங்கள்’ என்று கூறவில்லை. மாறாக, இவை செயல்படும் விதத்தி லும் தன்மையிலும் இருக்கவேண்டிய மாற்றத்தை வைத்தே உள்ளூர் சமூகங்கள் எனக் கொள்கி றோம். இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அனைவருக்கும் சம்பந்தமான ஒரு பிரச் சனைக்கு,  இவர்கள் செயலாக்கத்தை (போராட் டங்கள், ஒன்று திரட்டுதல்…) மனதில் கொண்டு, உள்ளூர் வடிவம் கொடுக்கின்றனர். ஒரு பொது வானப் பிரச்சனையை உள்ளூர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மாற்றி  செயல்படுகின்றனர் என்றும் கூறலாம். மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவின் அடிப்படையில் எழும் சுற்றுப்புறச் சூழல் குறித்த பிரச்சனைகள் இதற்கு ஓர் உதாரணமாக கூறலாம்.
சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்கெனவே மோசமான நிலைகளை ஊட்டிவிட்ட நிலையில், உலகமாயக்கலினால், இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் அதி கரித்துள்ளன. சமூக அக்கறையை வளர்ப்பதற்கும், மாற்று வழிமுறைகளைத் தயாரிக்கவும், சுற்றுப் புறச் சூழல் பிரச்சனைகளை மையமாக வைத்து ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கலாம். தமக்கு சம்பந்தப்படாத, ஏதோ தொலைதூரத்தில் உள்ள ஒரு  பிரச்சனை என்பதைவிட இது நம் உள்ளூர் பிரச்சனை என்றக் கண்ணோட்டம் மக்களிடம் அதிக ஆர்வத்தை தூண்டக்கூடும். அதேசமயம், சுற்றுப்புறச்சூழல் சார்ந்த பிரச் சனைகள், நாட்டில் உள்ள சந்து மூலை முடுக்கு களுக்கும் பொருந்தும் என்பதால் உள்ளூர் பிரச் சனைகளுக்கு ஒரு தேசியத் தன்மையும் உண்டு. ஆனால் ‘உள்ளூர் சமூகம்’ என்பது ஏதோ ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க சொல்கின்றனர் என்று நினைத்துவிட வேண்டாம், ஸ்தாபனம் அல்ல ஆனால் ஒரு கூட்டுத்தன்மை. இந்தக் கூட்டுத் தன்மையால் பங்கேற்கும் தகுதி உறுப் பினர் சந்தா கொடுத்து சேர்வதால் கிடையாது. ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினால் உள்ளூர் பிரச்சனைகளில் தலையிடுவதால் மட்டுமே ஒருவரால் இந்தக் கூட்டுத்தன்மையின் பங்கேற் பாளராக ஆகமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் பொருத்தமான பலவிதமான, எண்ணிலடங் காதப் பிரச்சனைகளை நம்மால் கண்டறிய முடியயும். ‘உள்ளூர் சமூகங்கள்’ தனிப்பட்டு செயல்படும் கூட்டமைப்புகளும் இல்லை. இவை, இன்றைய கலாச்சார, சமூக, அரசியல் சூழலுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டியவை.
மக்களை ஈர்க்க வேண்டும்
சமூக உணர்வை உருவாக்குவதற்கு தொடர்ச்சி யான செயல்பாடுகள் கட்டாயம். இதற்கான வாய்ப்பு உள்ளூர் சமூகங்களை உருவாக்குவதி னால் பெருகும் என்பதுதான் இச்சமூகங்களின் சிறப்பம்சம். அரசியல் கட்சிகளும், அவற்றின் பல அமைப்புகளும் கடைபிடிக்கும் பிரச்சார போராட்ட முறைகள் தன்னிச்சையான முறை யிலோ அல்லது இங்கொன்றும் அங்கொன்று மாக, அவ்வப்போது நடப்பதால் ஒருமுகமானத் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. மேலும், இம்முறைகள் பெரும்பாலும் தங்களது உறுப் பினர்களை மட்டுமே எல்லையாகக் கொண்டு அமைகின்றன. பல சமயங்களில் இவை பொது வான அனுதாபத்தைக்கூட பெறத் தவறிவிடு கின்றன. ஜனநாயகப் போராட்டங்களின் கட் டாயமானப் பங்காக இந்த முறைகள் இருந் தாலும், தற்போதுள்ள சமூக சூழலில் இவை எந்த அளவிற்கு தேவைப்படும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன என்பது குறித்து தீவிரமான மறுபரி சீலனை தேவை. இதற்கு மாறாக, ‘உள்ளூர் சமூ கங்களின்’ செயல்பாடுகளும், ஈடுபாடுகளும் அமைதியான முறையில்  குறிப்பிட்ட  பிரச்சனைகளின் அடிப்படையில், கூட்டுப்பொறுப்பை மையமாகக் கொண்டு ஆழமான உறவுகளை மக்களிடையே உரு வாக்கும் தளமாக மாறும் தன்மை படைத்தவை.
கலாச்சார நெருக்கடி
மக்கள் சமூகத்தில் முற்போக்கு சிந்தனையைத் தீவிரப்படுத்துவதுதான் கலாச்சார நடவடிக்கை யின் மையநோக்கம். இதன் முதற்படி உலகமய மாக்கல் சார்ந்த கருத்தாடல்களின் பிடியிலிருந்து மக்கள் சமூகத்தை மீட்பதும், வகுப்புவாதம் வளரக் காரணமாய் உள்ள காரணிகளை களைந் தெறிவதும்தான். உலகமயமாக்கலுக்கும் சரி, வகுப்புவாதத்திற்கும் சரி. இவை இரண்டு சாதக மான கருத்துகளுக்கு இன்றைய இந்திய சமூகத் தில் பஞ்சமில்லை. இத்தகைய கருத்துகள் சக்தி மிக்கவை. பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடி யவை.
உலகரீதியான சக்திகளின் ஆதரவிலும் ஊக் கத்திலும் உலகமயமாக்கலுக்கு சாதகமான கருத் துகள் உருவாக்கப்படுகின்றன. ‘சங்கப் பரிவாரத் தின்’ சமூக – கலாச்சார அமைப்புகளின் மூலம் வகுப்புவாதத்திற்கு ஆதரவான அரசமைப்பு நேரடியாக உடந்தை, உலகமயமாக்கல் மூலம் இந்தியப் பொருளாதாரம் மோசமாக பாதிப்புக் குள்ளாகிய போதும், பெரும்பான்மையான மக்களின் தேவைகளை பிரதிபலிக்காத சந்தை இன்று செல்வம் கொழித்து கிடக்கிறது என்ற செயற்கையான பிரம்மையை உருவாக்குவதில் வெற்றி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய ஆப்பிள் பழங்களுக்கு ஈடாக மோட்டார் வாகனங்கள் பெருத்துக்கிடப்பது என்ற உதாரணம் சாதாரண மனிதனின் தேவையை இந்த சந்தை கணக்கில் கொள்ளவே இல்லை என்பதை நிரூபிக்கின்றது. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் ஆதரவினாலும், அமோகமான வரவேற்பினாலும், உலகமய சக்திகள் இன்று, அடிமட்டங்களில் கூட வர்த் தகப் பொருட்கள் மீதான மோகத்தை கிண்டி விடும் புதிய கலாச்சார சுவையை ஏற்படுத்தி உள்ளன.
பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைக் கான அடிப்படைத் தேவைகளே பகற்கனவாக உள்ள இந்தியா போன்ற பரந்த நாட்டில் வர்த் தகப் பொருள்மீதான மோகம் சார்ந்த கலாச்சாரம் அடிப்படையில் முரண்பாடான ஒன்று. ஏனெ னில் இது பலரிடையே புதிய எதிர்பார்ப்பு களையும், சலுகைகளையும், சாத்தியங்களையும் தூண்டிவிடுகிறது. இவர்கள், இதுவெல்லாம் நம் பகுதிக்கு அப்பாற்பட்டவை என்று உணரும் போது, தங்களை ஏற்கனவே கவ்வியிருக்கும் அலாதியான வாழ்க்கை மீது மேலும் வெறுப் படைகின்றனர்.
இந்தப் பொருள் மோகம் நடுத்தர வர்க்கத்தி னர் இடையே வேறுவிதமானத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மோகத்தினால் அவர்கள் தழுவி ஏற்றுக் கொள்ளும் பொருள் சார்ந்த புதிய நவீனத்துவம் அவர்களிடையே ஒரு கலாச்சார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடன் வாங்கி ஏற்றுக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையில் வட்டத்திற்குள்ளாக அவர்களால் இந்த நெருக் கடிக்கான விடைகளை காண முடியாமல் போகி றது. இதன்மூலம், தனது வேர்களை நோக்கியத் தேடலில் ஈடுபடும் முயற்சி கட்டாயப்படுத்தப் படுகிறது. இவர்கள், தமது வேர்களை, மதரீதியாக வரையறுக்கப்பட்ட கடந்தகால கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் கண்டெடுக்க விரும்புகின்றனர். இந்தக் கலாச்சார நெருக்கடி அரசியல் படுத்தப் படும்போது தான், நடுத்தர வர்க்கம் வகுப்பு வாதத்திற்கு தமது விமர்சனமற்ற ஆதரவை முழுமையாக அளிக்கிறது. இதன் பெயர்தான் கலாச்சார தேசியவாதம் என்று கூறுப்படுகிறது. மேற் கத்திய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்ட ஒரு கலாச்சார அடையாளத்தை மேன்மைப்படுத்தி முன்னிறுத்துவதுதான் கலாச்சார தேசிய வாதத் தின் நோக்கம். எனவே, உலகமயமாக்கலுக்கும் கலாச்சார தேசியவாதத்துக்கும் இடையே ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. இந்த முரண் பாட்டை மறைக்கத்தான் ஆளும் வர்க்கங்கள் அதன் சிந்தனையாளர்களும் ‘சுதேசி’ என்ற முகமூடியை கண்டுபிடித்துள்ளனர். உலகமயமாக் கலுக்கு ஒரு மனிதாபிமான பரிணாமத்தை அளிக்க முற்படுவதுதான் ‘சுதேசி’ என்ற கோஷம். இருப்பினும், சந்தையின் ஆதிக்கம் மேலும் மேலும் ஊடுருவ, இந்த முரண்பாடு தீவிரமாகி றதே ஒழிய மறையவில்லை.
அதேசமயம் எதிர் காலாசார நடவடிக்கை களை முடுக்கிவிடவும் அதற்கு தேவையான தளத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், இந்த முரண் பாடுதான் உள்ளூர் சமூகங்களை தங்களை ஆயத் தப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது.
இடதுசாரிகளின் முயற்சி
இதுவரையில் உலகமயமாக்கலிற்கும், வகுப்பு வாதத்திற்குமான எதிர்ப்பு, அரசியல் சார்ந்த எதிர்ப்பை தாண்டி செல்லவில்லை. இடதுசாரி சக்திகளின் முன்முயற்சியினால், வேலை நிறுத்தம், தர்ணா, ஆர்ப்பாட்டம் என பல வழிமுறை களினால் இந்த எதிர்ப்பு நன்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதற்கான சமூக எதிர்ப்பு தகுந்த முறையில் வளரவில்லை. பன்னாட்டுக் கம் பெனிகளின் சந்தையை சார்ந்த சில கடைகளைத் தாக்குவது (கர்நாடகாவில்) போன்ற சில நேரடி யான எதிர்முறைகள் நடற்துள்ளன. ஆனால் அரசின் குறுக்கீட்டின் காரணமாக, இவற்றை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. பல சமயங்களில் இவற்றால் செயல்படுத்த முடிய வில்லை. பல சமயங்களில் இவற்றால் பொதுமக் களின் அனுதாபத்தை சம்பாதிக்க முடியாமல் போய் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி உள்ளன. பன்னாட்டு கம்பெனிகளின் பொருட் களை புறக்கணிப்பது என்ற ஒரு மாற்றையும் பலர் கூறுகிறார்கள். ஆனால், இக்கம்பெனிகள் நாட்டுச் சந்தையில் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஊடுருவலையும்  இதற்கு அரசின் மறைமுகமாக ஆதரவையும் கணக்கில் கொண்டால் இந்த மாற்று ஒரு பகற்கனவாகவே தெரிகிறது.
புரிந்துகொள்ள வேண்டிய சிக்கல்
வகுப்புவாதத்திற்கான எதிர்ப்பும் இதே சிக்கலில்தான் மாட்டிக் கொண்டுள்ளது. இருப் பினும், பல்வேறு கொள்கை ரீதியான வேலை களின் மூலம் வகுப்புவாத எதிர்ப்புணர்வை கட் டமைக்க குறிப்பிடத்தக்க பல முயற்சிகள் நடந் துள்ளன. இன்று இந்துமத வகுப்புவாதம் ஆட் சியைப் பிடித்துள்ளது. இது ஏதோ அவர்களின் அரசியல் பணியினால் மட்டுமல்ல; சமூக, கலாச்சாரத் தளங்களில் அவர்கள் செய்த தளராத தொடர்ச்சியான செயல்பாட்டினால்தான். இதுவேதான், இன்று நாட்டில் மேலோங்கி இருப்பதுபோல் காணப்படும் மதம் சார்ந்த உணர்வுகள் வளர பங்களித்துள்ளது. அமைப்பு ரீதியாக திரட்டப்படும் மத உணர்வுகளும், ஆன்மீகமும் கொடுக்கும் தளத்தில்தான் வகுப்பு வாதம் மக்கள் சமுதாயத்தில் ஊடுருவிப் பரவு கிறது. மதம் சார்ந்த உணர்வுகளையும், ஆன்மீக உணர்வுகளையும் அமைப்பு ரீதியாகவும் பிரம் மிக்கத்தக்க வகையிலும் பொதுப்படையாக வெளிப்படுத்தும் போக்கு கடந்த சில வருடங் களில் வளர்ந்துள்ளது. ஆகையால் ஆன்மீக உணர்வுகளுக்கும் வகுப்புவாதத்திற்கும் உள்ள வேறுபாடு சமூகத்தின் பார்வையில் வேகமாக மறைந்து வருகிறது.
மக்கள் சமூகத்தின் பொதுப்படையான சிந்தனையோட்டத்தை மாற்றுவதும், அதன்மீது தீவிரமானத் தாக்கத்தை உருவாக்குவதும் தான் கலாச்சார நடவடிக்கையின் பயன். இதை மறுப்பு மற்றும் எதிர்ப்புகள் மூலமாக மட்டும் அடைந்து விட முடியாது. மறுப்பும் எதிர்ப்பும் கட்டாயத் தேவைகள். ஆனால் போதுமானவை அல்ல.
முடிவாக…
உலகமயமாக்கலும் வகுப்புவாதமும் உரு வாக்கி உள்ள பொதுச் சிந்தனையை குலைக்க, பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் ஒரு எதிர்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை. இது எப்படி சாத்தியம்? நமக்கே உரிய கலாச்சார பாரம்பரிய மூலங்களை ஆதாரமாகக் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைத்து தொடர்ந்து ஈடுபடும் அதேவேளையில் பிற் போக்குவாதத்திற்கு ஆளாகிப் போகாமல் செயல்படுவதுதான் ஒரே வழி.
அந்நியோன்னியமான முறையில் உள்ளூர் கலாச்சார வாழ்க்கையில் தொடர்ச்சியான தலை யிடக்கூடிய ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கு வதுதான் எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் கட்டாயமானத் துவக்கப்பணி.
இந்த எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் பணி யில் சமூக – அரசியல் மேலதிகாரத்துடன் மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த மோதலுக்கு, உள்ளூர் மற்றும் தேசியப் பரிமாணங்கள் விஷயங்களில் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துவது. இது அடுப்பெரிக்க விறகு சேர்ப் பதும், குடிக்க தண்ணீர் பெறுவதிலும் இருந்த, கடந்தகால வரலாற்றிலும் பண்பாட்டிலும் தனக்கே உரித்தான பங்கையும் இடத்தையும் கோருவது வரை அடங்கும். இவை தேசியத்தை கட்டமைக்கும் முயற்சியிலும் தாக்கத்தை ஏற் படுத்தக்கூடியது என்பதால், உள்ளூர் சமூகங்கள் போற்றும் கலாச்சாரம் பல்வேறு பண்பாட்டு ரீதியான சமூகங்கள் பல்வேறு வகைகளில், பல பகுதிகளில் வெளிப்படுத்திய கலாச்சாரங்களை ஆதாரமாகக் கொண்டது. இத்தகைய அடிமட்ட, உள்ளூர் சார்ந்த பரிமாணங்களை (இவை உள்ளூர் சம்பந்தப்பட்டவை மட்டுமே என்று கருதாமல்) முடிந்த அளவிற்கு வேறுபாடு களோடு வெளிப்படுத்துவதுதான் இன்று உலக மயமாக்கலும், வகுப்புவாதமும் வேறுவேறு பாணியில் அடைய முயலும் – ஒரேவிதமான பண்பாட்டை – ஒரே தேசியத்தை -முறியடிக்கும். இந்த கண்ணோட்டத்திலான, கலாச்சார நடவடிக்கை என்பது கலாச்சாரத்தையும் தாண்டி சமூகத்தையும் அரசியலையும் தன்னுள் ஒரு அம்சமாகப் புரிந்து செயல்படக்கூடியது. அப்படியெனில், கலாச்சாரமும் அரசியல்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக