புதன், 30 அக்டோபர், 2013

1. பரமக்குடியில் நடத்த துப்பாக்கி சூடுக்கான சம்பத் விசாரணை அறிக்கை 2. தருமபுரி - எரிக்கப்பட்ட கிராமங்கள் - தற்போதைய கள நிலவரங்கள்

செப்டம்பர் 11,2011 அன்று பரமக்குடியில் நடத்த துப்பாக்கி சூடுக்கான சம்பத் விசாரணை அறிக்கை  ..

பரமக்குடியில் அரச படையினர் நிகழ்த்திய தாக்குதல் நியாயமானதே, தற்காப்பிற்காகவே 7 பேரின் உயிரைப் பறித்து, பலரை முடமாக்கினார்கள் அரசபடையினர். – சம்பத் விசாரணை அறிக்கை..

சி.பி.ஐ.விசாரணை நடக்கின்ற போது அவசர அவசரமாக அறிக்கை வெளியிடுவது ஏற்புடையதல்ல மேலும் ஏழு உயிர்கள் பலியானதை நியாப்படுத்தி, தவறு செய்த அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது இந்த விசாரணை அறிக்கை உண்மைக்கு புறம்பானது.


தருமபுரி - எரிக்கப்பட்ட கிராமங்கள் - தற்போதைய கள நிலவரங்கள்

--ரமணி



தருமபுரி சாதிய ஆதிக்க வன்முறையாளர்களால் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவம் வருகிற நவம்பர் 7ந்தேதியுடன் ஒரு வருடத்தை எட்டப் போகிறது. அக்கிராம மக்கள் 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 7ல் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிக்கப்பட்ட வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு வருடம் கடந்தும் அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாத நிலை. இன்னும் விடுபட்ட வீடுகளுக்கு இழப்பீடுகள் முழுமையாக சென்றடையவில்லை. அம்மக்கள் எங்கும் செல்ல இயலாமல் கிராமங்களிலேயே இருந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே ரேசன் பொருட்கள், மாவட்ட நிர்வாகத்தின் மற்ற பொருட்கள் வழங்கும் நிலை. தாக்கப்பட்ட மொத்தம் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரு பகுதிதான் புனரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமோ எஸ்.சி.எஸ்.டி ஆணையத்திடம் 3 பங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை சமர்பித்துள்ளது. ஆணையர் சிவண்ணா நேரில் பார்த்தபின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் நிவாரணத் தொகையாக 50,000, இழப்பீட்டுத் தொகை சேதமடைந்ததற்கு ஏற்றாற்போல் வழங்கப்பட்டது. ஆனால் இவற்றில் பாதிக்கப்படாத வீடுகளுக்கு இழப்பீட்டை வழங்கி, பாதிக்கப்பட்ட வீட்டிற்கு இழப்பீடு வழங்காமல் போனது மற்றும், சரிவர மதிப்பீட்டின் அடிப்படையில் கொடுக்கப்படாமல் குறைவான தொகையை கொடுத்தது ஆகியவை மக்களிடையே மோதலையும், ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றும் அம்மக்கள் தங்கள் கோரிக்கைக்குப் போராடாத வண்ணம் அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் கடன் (Loan), கடைகள், மாடுகள் போன்ற சில சீர்திருத்தங்களை செய்வதன் வாயிலாக மக்களை பிளவுபடுத்தியுள்ளது.
ஊர்க்கட்டுப்பாடுகள்
குறிப்பாக
  1. தாக்கப்பட்ட கிராம மக்களுக்கு முடிவெட்டுதல் கூடாது,
  2. துணி சலவை செய்யக்கூடாது,
  3. நெல், மாவு அரைத்துத் தரக்கூடாது
  4. வயலில் வேலைக்கு அமர்த்த கூடாது
  5. பால் கூட்டுறவுகளில் பால் வாங்கக்கூடாது
  6. தாழ்த்தப்பட்ட மக்களோடு பேசக்கூடாது.
  7. தாழ்த்தப்பட்டோர் நிலங்களில் டிராக்டர்களை ஓட்டக்கூடாது.
  8. தாழ்த்தப்பட்டோருக்கு கடன் கொடுக்கக்கூடாது,  
இந்த கட்டுப்பாடுகளுக்கு வன்னிய மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. காரணம், தாழ்த்தப்பட்ட மக்களிடம் பொருட்களை விற்பது, வாங்குவது போன்ற பொருளாதார உறவுகளைப் பேணிவந்துள்ள நிலைமை இருந்தது. அவை மீண்டும் தொடர்கிறது. பெரும்பாலும் மக்கள் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவில் உள்ள கொடுக்கல், வாங்கல் உறவை உடைக்கும் வகையில் இக்கட்டுப்பாடுகள் இருப்பதால் வன்னிய, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
குறிப்பாக இக்கட்டுப்பாடுகளை ஏற்காத சில வன்னிய குடும்பங்களும் இருக்கின்றன. கொண்டம்பட்டியை அடுத்துள்ள புளியம்பட்டி வன்னிய கிராமத்தில் ஊர்க்கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாத 10 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். 
தாழ்த்தப்பட்ட மக்களிடம் பேசிவந்த வன்னிய அடித்தட்டு மக்கள் ஊர்க்கட்டுப்பாடு என்பதால் பேசக்கூடாது என்று பயந்து மறைந்துபேசும் சூழல். 
தாழ்த்தப்பட்ட ஒருவருடன் பேசியதால் பஞ்சாயத்தில் வன்னியர் ஒருவர் தண்டத்தொகை கட்ட வைக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழல் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றி நிலவுகிறது. குறிப்பாக பத்துபேர் கொண்ட குழுக்களால் ஒவ்வொரு வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமத்திற்கும் சென்று ஊர்க்கட்டுப்பாடுகளை ஒத்துக்கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பதற்கான பஞ்சாயத்துக்கள் நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் நெருக்கடிகள்
பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள வன்னிய பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள சாதிய கும்பல் சமூக புறக்கணிப்பை, புதிய சாதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளதால் இம்மக்கள் எங்கும் வேலைக்குச் செல்ல இயலாமல் முடக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், உயர்நீதிமன்றம் அமைத்த வாசுகி தலைமையிலான ஆய்வுக் குழுவும் ஏற்கனவே அம்மக்கள் செய்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலையைச் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஊரக வேலையில், தோண்டும் குழிகள் என்பது ஏரி, கால்வாய் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஊர்ப்பகுதியில்தான் அமைந்துள்ளது. அங்கு வரக்கூடாது என்ற நிலை இருப்பதால் அங்கு யாரும் இந்தப் பணி காரணமாக செல்வதில்லை. அப்படியே இந்த வேலை செய்தாலும் தலித் மக்கள் வசிக்கும் ஊர்ப்பகுதியில் உள்ள ஏரி, கால்வாய்க்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அவை நீண்ட நாட்களுக்கு வேலை உத்தரவாதமளிக்கவில்லை. அத்தோடு அப்பணிகள் அங்கு முடிந்தும் விட்டது. ஆதலால் ஊருக்கு அருகாமலேயே செய்த வேலை என்பது போய் மக்கள் அறிமுகமற்ற பகுதிக்குச் சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தாட்கோ லோன் கொடுத்துள்ளது. அவற்றில் கறைவை மாடும் வழங்கியுள்ளது. அதனை மேய்ப்பதற்கு சுற்றியுள்ள வன்னிய மக்களின் நிலங்களைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. அவற்றால் வரும் வருமானம் என்பதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், வன்னிய, தலித் பெண்கள் இணைந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வந்தன. அதனை பா.ம.க வன்னிய சாதிவெறியர்கள் சிலர் கலைப்பதற்கான உள்வேலையைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக செல்லன்கொட்டாய் பெண்களும், அருகில் வசிக்கும் நத்தம் கிராமப் பெண்களும் இணைந்த குழுக்களைப் பிரித்து வன்னிய பெண்கள் மட்டுமே கொண்ட குழுக்களை உருவாக்குவது நடக்கிறது. இங்கு மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. அதற்கு அடித்தட்டு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிடையாது. தூண்டும் சில சாதிய சக்திகள்தான் இதனைச் செய்து வருகிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதேபோன்று நகர்ப்புறங்களில் அனைத்து சாதியைச் சார்ந்த தொழிலாளியையும் அடங்கிய ஆட்டோ ஸ்டேன்ட்டை பா.ம.க ஆட்டோ கிளை என்று திறப்புவிழா செய்யப் போவதற்கான ஆயத்தங்கள் நடக்கிறது என்று ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்ட நேரத்தில், சாதிய வன்முறைக் கும்பலால் வன்னிய பிற்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்களும் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தாக்கப்பட்டதற்கான நிவாரணக்கோரிக்கை எழுந்தபோது, வன்னிய மக்களுக்கு காவல்துறையின் தேடுதலால் வயலில் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் போனது, மாடுகளை மேய்க்க முடியாமல் போனது என எந்த பொருளையும் விளைவிக்க முடியாத நெருக்கடியை சந்தித்த கோரிக்கையும் முன்வந்தது.
 குறிப்பாக வயலில் வேர்க்கடலை செடி அதிகளவு பயிரிடுவார்கள். தாக்கப்பட்ட நேரத்தில் அவை சேதத்தை சந்தித்தது. சில அப்பாவிகளும் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதனால் இரவு நேரங்களில் பெண்கள் மட்டுமே குடும்பத்தை காக்கவேண்டிய நிலை நீடித்தது. இதையும் கூட பெண்களை திரட்டுவதற்கு சாதிவெறி கும்பல் சாதகமாக பயன்படுத்தினார்கள். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட பல வன்னிய ஆண்கள் தாங்கள் வைத்திருந்த வியாபார கடைகளை திறக்காமல் மாதக்கணக்காக பூட்டியிருந்ததால் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தனர். இன்று ஊர்க்கட்டுப்பாடுகள் போடுவதால் பொருட்கள் விற்க, வாங்க, வேலைக்கு ஆட்கள் இல்லாத பற்றாக்குறையும் வன்னிய உழைக்கும் மக்களிடம் நீடிக்கிறது.
உளவியல் மாற்றம்
ஒட்டுமொத்த வன்னிய மக்களிடம் சாதிய உணர்வு மேலோங்கியுள்ளது. இன்னும் அதற்கான முரண்பாடுகள் ஆங்காங்கே வெடித்த வண்ணம் உள்ளன. . நண்பனாக இருந்தவன் இன்று பறையன் என்று ஒதுங்கி நிற்கும் சூழல். உழைக்கும் வன்னிய, பிற்படுத்தப்பட்ட மக்களில் சிறுபிரிவினர் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணக்கத்தைப் பேணுகின்றனர்.
மக்கள் அன்றாடம் வாழ்க்கை பிழைப்பிற்கு கவனம் செலுத்துகின்றனர். ஆனால் சங்கங்களாக இயங்கும் இடங்களில்தான் சாதிய உணர்வு மேலோங்கி உள்ளது. முன்பு ஆட்டோக்களில் எந்த சின்னத்தையும் வரையாத தொழிலாளர்கள் பெரும்பான்மையினர் இன்று வன்னியர் சங்கத்தின் சின்னத்தை (தீச்சட்டியை) வரைந்து அடையாளப்படுத்தி வருகிறார்கள். (எண்ணிக்கையில் குறைவுதான்) ஆனால் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் கிராம மக்கள் மற்றும் வன்னிய மக்கள் ஒன்றாகத்தான் பயணம் செய்கிறார்கள். உதவியையும் செய்து கொள்கிறார்கள்.
சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகள் மௌனம் காக்கும் சூழல் நிலவுகிறது. வி.சி.கவைச் சேர்ந்த ஒருவரிடம் குற்றவாளியே முன்வந்து தாங்கள் செய்யவில்லை; மதியழகன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர்களுக்குள்ளேயே காட்டிக் கொடுக்கும் மனநிலைக்கு சிலர் வந்துள்ளனர். குற்றவாளிகளை காவல்துறைக்கு அடையாளம் காட்டியதற்காக பாதிக்கப்பட்ட மக்களில் சிலரை வெட்டுவதாக பேசி அச்செய்தியை பரப்பி பயத்தை உண்டாக்கி வருகிறார்கள்.
சிறைக்குச் சென்று வந்த குற்றவாளிகளைச் சார்ந்த வீடுகள், சொந்தங்கள் மத்தியில் கடுமையான தலித் மக்கள் மீதான எதிர்ப்பு நிலவி வருகிறது. அவர்கள்தான் முழுக்க பா.ம.க வன்னியர் சங்கத்தில் இணைந்துள்ளனர். இணைந்தவர்கள் தே.மு.தி.க, அதி.மு.க, தி.மு.க என அனைத்துக் கட்சிகளிலும் உள்ள குற்றவாளிகள். அதற்கான புள்ளிவிவரங்கள் பட்டியலைத் தோழர்களுடன் சேர்ந்து விசாரித்து வருகிறோம்.
சிறை சென்று வந்தவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை அதிகளவு பணமும் கொடுத்து, கறிசாப்பாட்டுடன் விருந்தளித்து பாதுகாக்கும் வேலை நடந்து வருகிறது. இவற்றிலும் முக்கிய ஆட்களுக்குத்தான் பணமும், பராமரிப்பும் கிடைப்பதால் போலீசாரால் தேடப்பட்டதில் மனபாதிப்படைந்த வன்னிய மக்கள் பெரும்பான்மையினர், செய்தவன் தின்றான், நாம எதுக்கும் போகவில்லை; நம்மை மாட்ட விட்டுவிட்டனர் என்று திட்டி சண்டையிடும் குழப்பமும் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஒருமாதத்திற்கு முன்பு கொண்டம்பட்டியைச் சேர்ந்த செயராமன் வன்னியர் ஒருவரின் நிலத்தில் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவை மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது. நிலத்தின் சொந்தக்காரரான வன்னிய தொழிலாளி நண்பராகத்தான் இருந்திருக்கிறார். மூன்றுமாதமாக அவரின் காட்டிற்கு வேலை செய்ய அனுமதித்துள்ளார். அதற்காக பா.ம.க தரப்பிலும் சில ஆதிக்க சக்திகளாலும் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார். அவரின் நிலத்தில்தான் இவை நடந்துள்ளது. பின்பு வன்னிய சாதியைச் சேர்ந்த அக்குடும்பம் சமாதானத்துடன் செலவை ஏற்றுகொண்டு, நஷ்டஈடு தருவதாக ஒத்துள்ளார். அவர் சேர்ந்த கர்த்தானூர் வன்னிய கிராம தலைவர்களிடம் கொண்டம்பட்டி மக்கள் முறையிட்டபோது சமாதானத்துடன் நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று ஒத்து பேசி முடித்துள்ள நிலையில், சாதிய ஆதிக்க சக்திகள் நுழைந்து அக்குடும்பத்தையும், ஊரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து வழக்கு போடுங்கள் சந்திக்கிறோம் என்று சவால்விட்டு பிரித்துள்ளனர்.
கொண்டம்பட்டி மக்கள் கோபத்தில் உடலை எடுக்கவிடாமல் மறியல் செய்தார்கள். அவற்றில் மக்கள்மீது தடியடி நடத்தப்பட்டு பலர் பலமாகத் தாக்கப்பட்டனர். போலீசை அடித்த சிஆர்.பி,எப்பைச் சேர்ந்த இறந்தவரின் சொந்தக்காரரான ஒருவரைக் கைது செய்ததுடன், இறந்தவரின் உடலை காவல்துறை எடுத்துச் சென்றுவிட்டது.
வன்னிய மக்களிடம் இருக்கும் சாதி உணர்வை சாதிவெறியாக மாற்றுவதற்கு சாதிய பஞ்சாயத்துகளின் தலைமை சக்திகளும், உதிரிகளும்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். உழைப்பில் ஈடுபடுகின்ற அன்றாட கூலி மக்களோ இதற்கு ஏதோ ஒருவகையில் பலியாகிவருகிறார்கள்.
இளவரசன் இறந்துவிட்டான், திவ்யாவின் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியாத ஒன்று. அப்பெண் மனமுடைந்த நிலையில்தான் இருக்கிறார். சமூகமே என்னை புறக்கணிக்கிறது. யாரும் செய்யாத செயலையா நான் செய்தேன்? என்ற கேள்வியோடு வாழ்க்கையை தொடர்கிறார். இப்பொழுது காவல்துறையின் பாதுகாப்போடு வேலைக்கு சென்று வருகிறார்.
நாகராசன் இறந்தபின் பா.ம.கவின் கட்டுப்பாட்டில் இருந்த தாயார் தேன்மொழி தனி வீட்டில் தன் மகன், மகளுடன் இருந்துவருகிறார். செல்லன்கொட்டாய் கிராமமே அவர்களை புறக்கணித்துள்ளது. இப்போது அவர் தனது கணவர் செய்த வேலையை (கூட்டுறவு சங்கம்) தொடர்கிறார், நத்தம் கிராமத்தின் வழியாகத்தான் காவலர் ஒருவரின் பாதுகாப்புடன் வேலைக்கு வந்து செல்கிறார்.
அரச அடக்குமுறை
இதுபோன்று மக்கள் தங்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை நடத்த விடாமல் எதற்கெடுத்தாலும் 144 என்ற காரணம் காட்டி அச்சுறுத்தும் வேலையை அரசு கடைபிடிக்கிறது. சாதிய கலவரங்கள் நடக்கக்கூடாது என்று காரணம் கூறுகிறது நிர்வாகம். இதனால் அப்பகுதியில் எந்தவித அரசியல் செயல்பாடுகளோ, கூட்டங்களோ, நடப்பதில்லை. யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது என்று நிபந்தனையால் தலித் மக்களின் கோரிக்கையைக் கொண்டு செல்வதற்கும் தடையாக உள்ளது.
கொண்டம்பட்டியில் நடந்த சம்பவத்திற்கு கண்டித்து துண்டறிக்கை, போஸ்டர் போட்ட ம.ஜ.இக.வைச் சேர்ந்த தோழர்களை காவல்துறை தேடி வருகிறது. அதனை அச்சடித்த அச்சகத்தாரைக் கைது செய்து தேசதுரோக வழக்கினை பதிவு செய்துள்ளது. செப்.12 அன்று நாயக்கன்கொட்டாயில் உள்ள அப்பு, பாலன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதற்காக 19க்கும் மேற்பட்ட ம.ஜ.இ.க, ம.ஜ.இ.அ தோழர்களை கைது செய்திருக்கிறது. இதுபோன்ற அடக்குமுறையை ஏவி மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
பா.ம.கவின் சாதிய அணிதிரட்டலும், அச்சுறுத்தலும்
வன்னியர் சங்கமும் ஆதிக்க சக்திகளும் சுதந்திரமாக செயல்படும் சூழலும், சாதகத்தையும் மாவட்ட நிர்வாகமே ஏற்படுத்திக் கொடுக்கிறது. தருமபுரி முழுவதும் வன்னியர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு மேலிடத்திற்கு ஒப்படைக்கும் திட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நல்லம்பள்ளி யூனியனில் 200க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் ரகசியமாக நடந்திருக்கிறது. அதன்படி தருமபுரி முழுவதும் உறுப்பினர் படிவத்திற்கு 200ரூ கட்டணத்துடன் சேர்க்கைக்கான வேலைகள் நகர்ந்து, இன்று தேர்தல் நிதிதிரட்டல் வேலையைச் செய்து வருகிறார்கள்.
பா.ம.க வன்னியர் சங்கத்தைக் கூட்டுவதும், ஒவ்வொரு வீட்டுக்கும் வன்னியர் சங்க அறிக்கை விநியோகிக்கப்பட்டு குறிப்பட்ட தொகையும் வழங்கப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் மகளிர் அணியை கூட்டிப் பேசுவதாக விசாரித்த மக்கள் கூறினார்கள்.
வன்னியர்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க தி.மு.க கட்சிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என்ற அறிக்கையும் வன்னியர் சங்கம் சார்பாக விநியோகிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதிதிரட்டல் குழுக்கள் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
இவற்றில் மிகமுக்கியமான விசயம் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க. என அனைத்துக் கட்சிகளில் உள்ள வன்னிய சாதியைச் சேர்ந்த நபர்கள் வன்னியர் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தைக் கொடுத்துள்ளனர். கட்சிகள் எதுவாக இருந்தாலும் தாங்கள் சார்ந்த வன்னிய சாதிக்கான சங்கம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அமைப்பாக்கல் நிகழ்ந்திருக்கிறது. வன்னியராக அணிதிரட்டல் வேலைதிட்டம் பா.ம.க ஜி.கே.மணி, சரவணன் தலைமையில் நகர்த்தப்படுகிறது.
மேலும் தலித் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து அவர்களை பணிநீக்கம், பணிமாற்றம் செய்யும் சதியை செய்துவருகிறது. பா.ம.க, அ.தி.மு.க, தி.மு.க.வைச் சார்ந்த ஆதிக்க சக்திகள் இதனை முன்னெடுத்து வருகிறார்கள். குறிப்பாக அரியகுளம் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலித் ஆசிரியர் மகேந்திரன் என்பவரை வன்னிய மாணவியை அடித்த காரணத்திற்காக சின்னேறிமோட்டுப்பட்டியை சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் மோகன் என்பவர் சாதிவெறியோடு இவற்றில் தலையிட்டு பணிஇடைநீக்கம் செய்ய பள்ளிக்குள்ளேயே வலியுறுத்தி இடைநீக்கமும் செய்யவைத்து பின் வேறுபகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுபோன்று இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.
சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை மிரட்டுவது வெளிப்படையாக நடந்து வருகிறது. ஏற்கனவே சாதிமறுப்புத் திருமணம்செய்பவர்கள் பயந்து வெளிப்படையாக நடமாடுவதற்கும் அஞ்சி ஊரைவிட்டு வேறுஇடத்திற்கு குடிபெயரும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. நாம் கேள்விப்பட்ட வகையில் பல குடும்பங்கள் இதுபோன்று இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால் சாதிமறுப்புத் திருமணம் அப்பகுதிகளில் அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாலக்கோடு சாமனூரைச் சார்ந்த பாத்திர வியாபாரியான தங்கராஜ் என்பவர் தலித்அல்லாதவர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒன்றியச் செயலாளராக இருந்து வருவதால் வல்லப்பட்டியைச் சேர்ந்த சாதிய வெறியர்களுக்கும் ராஜா என்கிற கவுன்சிலரான சாதிவெறியனுக்கும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. ஆதலால் ஒவ்வொரு முறையும் அக்கட்சியை விட்டு வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். அதற்குப் பணியாத தங்கராசை மரத்தில் கட்டிவைத்து காலை உடைத்துள்ளனர். அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் இருந்தார். இவை பகிரங்கமாக மக்கள் மத்தியில்தான் நடந்துள்ளது.
இதுபோன்று தருமபுரி முழுவதும் பல்வேறு வடிவங்களில் சாதிய ஆதிக்கமும், அச்சுறுத்தலும் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இன்னும் ஆழமாக மக்களிடம் விசாரித்துப் பார்க்கும் ஆய்வின்படி நாம் முழுமையான சூழலை உணர முடியும். அதற்கான திட்டமிடலை செய்ய வேண்டியிருக்கிறது.
வழக்கைப் பொருத்தவரை,
1. 150 பேர் கைது, பின் மூன்று மாதத்திற்குள்ளேயே பிணையில் வெளிவந்துள்ளனர். மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட 1000 பேரில், 50 முதல் 100 பேரின் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. மற்றும் பலர் என அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
அனைத்து வழக்குகளும் நிலுவையிலும், வாய்தாவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சங்கரசுப்பு, என்.ஜி.ஆர்.பிரசாத், செங்கொடி ரஜினி, சத்தியசந்திரன், ரத்தினம் ஆகியோர் வழக்கை நடத்துகிறார்கள்.
2. கிராமங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கான வழக்கை சி.பி.சி.ஐ.டியிடம் அரசு மாற்றியது. குற்றவாளிகளைப் பிடிப்பதில் அரசின் மெத்தனப் போக்கால் அதனை சி.பி.ஐக்கு மாற்றக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதற்கு நமது தரப்பு வழக்கறிஞர்கள் முழுவிசாரணை செய்யாமல் தாக்கல் செய்யக்கூடாது என்று வழக்கு போட்டுள்ளதால் அவை நிலுவையில் உள்ளன.
4. பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நிவாரணத்திற்காக போட்டுள்ள வழக்கில் வாசுகி தலைமையிலான குழு விசாரித்துவிட்டது.
5. கிராமத்தில் மாடிவீடு கட்டியிருந்தவர்கள் பாதிக்கப்பட்டதற்கான நிவாரணம் கேட்ட வழக்கை, ஆய்வுக்குழு விசாரித்துள்ளது.
இளவரசன் கொலை வழக்கு
ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒருநபர் விசாரணைக் குழுவும், அரூர் டிஎஸ்பி சம்பத்குமார் தலைமையில் விசாரணைக்குழுவும் அமைத்துள்ளது. இவர்கள் இருவரின் மீதும் சாதியரீதியான புகார்கள் மற்றும் சாதிய மனோபாவத்தோடு சில வழக்கை அணுகியிருப்பதால் அவர்கள் தலைமையிலான விசாரணை வேண்டாம் என்று நிராகரித்து இளவரசன் குடும்பமோ, திவ்யா குடும்பமோ விசாரணைக்குப் போகவில்லை.
7. இளவரசன் மரணத்திற்கு நீதிபதி சந்துரு தலைமையிலான சிறப்பு புலன்விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். அதுவும் வாய்தாவில் இருக்கிறது.
8. இதுபோக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 144ஐ நீக்க வேண்டும், இளவரசன் இறுதி அஞ்சலிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
9. ம.க.இக. சார்பாக திவ்யாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என மனுபோட்டுள்ளபடி, உத்தரவும் பிறப்பித்தனர். வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
10. சி.பி.எம் தரப்பில் சி.பி.ஐ கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது.
 இத்தகைய சூழலில், ஆதிக்க சக்திகளுக்கு பாடம் புகட்டும் வகையில் அனைத்து வழக்குகளையும் இணைத்து நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. சிறப்பு நீதிமன்றக் கோரிக்கை, சுண்டூர் படுகொலையும் அதன் நீதியும் பற்றிய விவாதங்கள் நடத்த வேண்டும். இவை வழக்கை முன்கொண்டு செல்ல தேவையாக இருக்கும்.
அதேபோல் வன்னிய பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பா.ம.க மற்றும் சாதிய வன்முறைக் கும்பலைத் தனிமைப்படுத்த வேண்டிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். அதற்கான வேலைத் திட்டத்தை நகர்த்த வேண்டியுள்ளது.
சாதிய கட்டப் பஞ்சாயத்துகளின் பங்கு மிக முக்கியமாக அமைந்திருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவற்றைத் தடை செய்ய வலியுறுத்த வேண்டும்.
ஆக, தருமபுரி மாவட்டத்தில் சாதிய ஆதிக்க வன்முறையாளர்களும், பா.ம.கவும் தங்களுக்கான திட்டத்தை செய்வதும், தலித் மக்கள் பயந்து முடங்கியுள்ள நிலையுமே நீடிக்கிறது.
மேற்கண்ட விவரங்கள் அங்குள்ள நிலைமையைப் புரிந்துகொள்ள போதுமானவையாக இருந்தாலும் நமது தரப்பில் ஒரு குழு அமைத்து தொடர்ச்சியாக தருமபுரி சம்பவத்துக்கான கோரிக்கையையும், வழக்கையும் நகர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான குறிப்பான கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும். இதற்கு பரந்தளவிலான மக்கள் இயக்கங்களை இணைத்துக் கொண்டு முன்னெடுப்பதை நோக்கி நகர்வோம்.
- ரமணி, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை, தமிழ்நாடு ( aruvi1967@gmail.com)

செவ்வாய், 29 அக்டோபர், 2013

தீர்மானம் நிறைவேற்றப்படும் தமிழக அரசால் ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை ..எங்கே சிக்கல் இருக்கிறது ...

தயவு கூர்ந்து இக்கட்டுரை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..

தீர்மானம் நிறைவேற்றப்படும் தமிழக அரசால் ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை ..எங்கே சிக்கல் இருக்கிறது ...

மாநில அரசுகளுக்கு முழமையான அதிகாரம் இல்லாததால்தான் நம்மால் செயல்படுத்த முடியவில்லையா? மாநிலச் சட்டமன்றங்களினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்தான் அமுலாக முடியும்.

மாநிலச் சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் நிறுத்திவைக்கும் உரிமை மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மாநிலச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். இதற்குக் காலவரையறை கிடையாது என்கிற சட்ட வீதி இருப்பதாக புத்தகத்தில் படித்து உள்ளேன்.. இப்படி இருக்கிற நிலைமையில் நமது போராட்டம் எதை நோக்கி இருக்க வேண்டும்.. தமிழ்நாடு தன்னுரிமை பெறுவதன் மூலமே நாம் நமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது எனது கருத்து ..

மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது போல "ஒரு அரசியலமைப்புச் சட்டம் சிறப்பானதாக இல்லை என்றாலும் ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்றால் மக்கள் கூடுதலான உரிமைகளைப் பெற்று நலமாக வாழ முடியும்.
 மக்கள் உரிமைகளை மதிக்காதவர் ஆட்சியில் இருந்தால் எவ்வளவுதான் சிறப்பான அரசியலமைப்புச்சட்டம் இருந்தாலும் மக்கள் உரிமையை இழந்து வாழ நேரிடும் என்கிற உண்மையை கடந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நாம் அனுபவித்து வருகிறோம்."

..

இந்திய நிலப்பரப்பில் வாழும் எந்தத் தேசிய இனமும் இன்று நிம்மதியாக இல்லை.உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழி இடம் பெறுவதற்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட போதிலும் மைய அரசு இன்றுவரை மறுத்து வருவதைப்பார்க்கிறோம்.
தமிழ்நாடு தன்னுரிமை பெறுவதன் மூலமே நாம் நமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
தன்னுரிமை கோரிக்கைகளை முன்வைக்கும்  காலம் பிறந்துள்ளது..

இந்தியாவின் அனனத்து தேசிய இனங்களுக்கு தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக விளங்க வேண்டும்.

சோசலிசச் சமுதாயக் குடியரசு அமைப்பதே நமது குறிக்கோள்..


இந்த இலக்குகளை அடைவதற்கு  சாதி, மத, வர்க்க வேறுபாடுகளை அற்று ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று தமிழினத்தார் யாவரையும் கேட்டுக்கொள்கிறோம்..  
தன்னுரிமை பெற்ற தேசிய இனங்களின் கூட்டாட்சி நாடாக இந்தியா மாறும் போது வல்லரசுகள் ஒவ்வொரு தேசிய இன அரசையும் தனித்தனியே அணுகித் தொழில் அனுமதியைப் பெறுவதென்பது நடைமுறையில் சாத்தியமற்ற செயலாகும்..கூடங்குளம் அணுஉலை அமைத்தல், கெயில் நிறுவனம், நிய ட்ரோன் கைக்கப்படுத்தும் நிலம் போன்றவைகள் சாத்தியம் கிடையாது.
(தமிழ்) தேசிய இன அரசுக்கும், (இந்திய) ஒன்றிய அரசுக்கும் முரண்பாடு ஏற்பட்டால் தேசிய இன அரசின் இறையான்மை மீது ஒன்றிய அரசு மேலாளுமை செலுத்த முடியாது. தன்னுரிமை என்பதின் அடிப்படை இதுதான்.      


தேசிய இனங்களின் தன்னுரிமைக் கோரிக்கை அபாயகரமானது. அது தேசத்தைத் துண்டாக்கும் கோரிக்கை என பல அகில இந்தியக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. இவர்களுக்கு ஆகஸ்டுத் தீர்மானம்  1942 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரெஸ் மாநாடு  தீர்மானம், 1945 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, 1946bஆம் ஆண்டு அறிவித்த  மௌலான அபுல் கலாம் ஆசாத் திட்டம், 1946 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள் தீர்மானம், 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுத் தீர்மானம் என கடந்த காலங்களில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் .தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன..


================================================================================================== 

தற்போதைய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவே உள்ளன.
அவை
௧.. மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியலில் 97 விஷயங்களும், மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பட்டியலில் 67 விஷயங்களும் மாநில அரசுப் பட்டியலில் 66 விஷயங்களும் மட்டுமே சேர்க்கப்பட்டன.        பொதுப் பட்டியலில் ஒதுக்கப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி மத்திய அரசு தனியாகவும், மாநில அரசு தனியாகவும் சட்டங்கள் இயற்றுமேயானால் மத்திய அரசின் சட்டமே மேலோங்கி நிற்கும். மூன்று பட்டியலிலும் சேராத விஷயம் ஏதேனும் இருக்குமானால் அவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை அதாவது எஞ்சிய அதிகாரம் (Residuary Powers) மத்திய அரசுக்கே உண்டு. அரசியல் சட்டப்படி அதிகாரப்பங்கீடு என்பது மத்திய அரசைச் சார்ந்தாகவே அமைந்து விட்டது.
௨. அமெரிக்க போன்ற கூட்டாட்சி நாடுகளில் அரசமைப்புப் சட்டத்தைத் திருத்துவது என்பது எளிதான காரியமல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தை மத்திய நாடாளுமன்றத்தில் வருகை தந்துள்ள உறுப்பினர்களில் 2/3 பெரும்பான்மை மூலம் எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம். மாநிலச் சட்ட மன்றங்கள், இதை அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. அரசமைப்புச் சட்டத்தின் சில பகுதிகளுக்கான திருத்தங்களை மட்டுமே மாநிலச் சட்டமன்றங்கள் அங்கீகரிக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்திற்கு எந்தத் திருத்தத்தையும் கொண்டுவர மாநிலச் சட்டமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.
௩. இந்திய அரசமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்குத் தனியான அரசமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொள்ளும் அதிகாரம் கிடையாது. காஷ்மீர் மாநிலம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இந்திய அரசியல் அமைப்பிலிருந்து மாநிலங்கள் வெளியேறிச் செல்ல முடியாது.இந்த அரசியல் அமைப்புக்கு உட்பட்டே மாநிலங்கள் இயங்க வேண்டும்.
௪. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் சம பிரிதிநிதித்துவம் என்ற கோட்பாட்டை இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை, மக்கள் தொகையின் அடிப்படையிலே மாநிலங்களுக்குப் பிரிதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
௫.அமெரிக்க போன்ற நாடுகளில் ஒவ்வொருவருக்கும் இரட்டைக் குடியரிமை உண்டு. ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரே ஒரு குடியுரிமை மட்டுமே வழங்கியுள்ளது.
௬. மற்ற கூட்டாட்சி நாடுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் மத்திய அரசினால் நேரடியாக ஆளப்படுகிற பகுதி உண்டு (Union Territories) இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களும் அந்தஸ்தும் இந்தப் பகுதிகளுக்குக் கிடையாது.
௭, கூட்டாட்சி நாடுகளில் அந்த நாடுகளின் அமைப்பினைத் தலைகீழாக மாற்றுவதற்குச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இத்தகைய மாற்றத்திற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பிலுள்ள கூட்டாட்சி முறையைப் போர்க் காலத்திலோ அல்லது வேறு அவசர காலங்களிலோ முற்றிலுமாக மாற்றிக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்கலாம். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டால் மாநிலங்களில் பாட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள எந்த விஷயத்தைப் பற்றியும் மத்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிட்டு வழிமுறைகளைக் காட்ட உத்தரவிடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு  எந்த மாநிலத்திலாவது நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்று குடியரசுத்தலைவர் கருதினால், அந்த மாநிலத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
௮. சர்வதேசக் கடமையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் நேர்ந்தால் மாநிலப் பட்டியலிலுள்ள எந்தப் பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம், மாநிலத்துறைகளில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்யலாம்.
௯. IAS, IPS, IFS போன்ற அகில இந்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தேடுக்கப்படுபவர்களை மத்திய அரசே நியமிக்கிறது. அவர்களைப் பல மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது. மாநில அரசின் கீழ் அவர்கள் வேலை பார்த்தாலும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டவர்களே. அமெரிக்க போன்ற நாடுகளில் மாநிலப் பணிகள் வேறாகவும், மத்தியப் பணிகள் வேறாகவும் உள்ளன.
௧௦. மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள், குடியரசுத் தலைவர் விரும்புகிற காலம் வரை அவர்கள் அந்தப் பதவியை வகிக்கலாம். ஆளுநர்கள் மத்திய அரசின் தரகர்களாகவேஇருக்கிறார்கள்.
௧௧. தேர்தல் ஆணையத்திற்குரிய அதிகாரிகளைக் குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். மாநில அரசுகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் நியமனத்திலோ, நிர்வாகத்திலோ எந்தவிதப் பங்குமில்லை.
௧௨. அமெரிக்க போன்ற நாடுகளில் இரட்டை நீதிமன்ற முறைகள் உள்ளன. மாநிலச் சட்டங்களை அமுல் நடத்துவதற்கு மாநில அரசு தனி நீதிமன்றங்களையும், மத்திய சட்டங்களை அமுல் நடத்த மத்திய அரசு தனி நீதிமன்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரே ஒரு உச்ச நீதிமன்றமும், அதன்கீழ் மாநில உயர்நீதிமன்றங்களும் இயங்குகின்றன.
௧௩. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி ஒரு மாநிலத்தின் எல்லைகளை விரிவாக்கவோ அல்லது குறைக்கவோ மத்திய அரசினால் முடியும். மாநிலத்தின் பெயரையே மாற்றியமைக்கலாம். ஒரு மாநிலமே இல்லாமலும் செய்து விடலாம்.
௧௪. கூட்டாட்சி அமைப்பின் முக்கியமான அம்சம் நிதிப் பங்கீடாகும். மத்திய மாநில அரசுகள் சுதந்திரமாக இயங்குவதற்குத் தேவையான நிதி அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். ஆனால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு ஏற்ற நிதி வருவாய் வழிமுறைகளோ அவற்றை உருவாக்கும் அதிகாரங்களோ மாநிலங்களுக்கு இல்லை. மாநிலங்கள் நிதிக்காக மத்திய அரசிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை நீடிக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது போல ஒரு அரசியலமைப்புச் சட்டம் சிறப்பானதாக இல்லை என்றாலும் ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்றால் மக்கள் கூடுதலான உரிமைகளைப் பெற்று நலமாக வாழ முடியும். மக்கள் உரிமைகளை மதிக்காதவர் ஆட்சியில் இருந்தால் எவ்வளவுதான் சிறப்பான அரசியலமைப்புச்சட்டம் இருந்தாலும் மக்கள் உரிமையை இழந்து வாழ நேரிடும் என்கிற உண்மையை கடந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நாம் அனுபவித்து வருகிறோம்.
நமது திட்டம் :-
நாட்டின் பாதுகாப்பு (Defence), போக்குவரத்து மற்றும் தொடர்புச் சாதனங்கள் (Communication) ,வெளிநாட்டுறவு (External Affairs) மற்றும் நாணய அச்சடிப்பு ஆகிய துறைகள் மத்திய அரசுக்கும் மற்ற விருப்பு அதிகாரப் பட்டியலிலுள்ள (Discretionary List) அதிகாரங்கள் அனைத்தும் மொழிவழித் தேசிய இன அரசுகளிடமே இருக்கவேண்டும்  

இந்தியாவின் அனனத்து தேசிய இனங்களுக்கு தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக விளங்க வேண்டும்.

சோசலிசச் சமுதாயம்/குடியரசு அமைப்பதே நமது குறிக்கோள்..


இந்த இலக்குகளை அடைவதற்கு  சாதி, மத, வர்க்க வேறுபாடுகளை அற்று ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று தமிழினத்தார் யாவரையும் கேட்டுக்கொள்கிறோம்..  
 


தோழமை மிக உறவுகளுக்கு
 (எனக்கான சாதி மத வர்க்க வேறுபாடுகள் அற்ற ஒரு நாடு உருவாகும் வரை நானும் அகதியே )

மும்பை விழித்தெழு இயக்கம்
.......உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,
எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்) 

சனி, 5 அக்டோபர், 2013

மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் தமிழ் ஸ்டுடியோ உடன் இணைந்து நடத்தும் இலவச திரைக்கதைப் பயிற்சி பட்டறை...

மும்பையில் ...
மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் தமிழ் ஸ்டுடியோ உடன் இணைந்து நடத்தும் இலவச திரைக்கதைப் பயிற்சி பட்டறை...

(முன்பதிவு அவசியம்...நாள் & தேதி முன் பதிவுக்கு பின் அறிவிக்கப்படும். .#தங்களது பெயர், கல்வி தகுதி, தொடர்பு எண், முகவரி எழதி vizhithezhu.org@gmail.com .)
===============================================
திரைப்பட பயிற்சி பட்டறை தொடர்ந்து பத்திரிக்கை துறைக்கான பயிற்சி, பட்டய படிப்பு முடித்த நபர்களுக்கான பயிற்சி, வறுமை , சூழ்நிலையால் படிப்பை விடுவர்களுக்கான தொழில் பயிற்சி, தற்காப்பு பயிற்சி, பறை இசை பயிற்சி, சட்ட ஆலோசனை பயிற்சி, ஆண்டுக்கு ஒரு மாணவரை சட்ட படிப்புக்கு படிக்க வைப்பது, காவல் துறை, தொல்லியல் துறை, பட்டியல் மக்களுக்கான ஒரு வங்கியே உருவாக்குவது, அரசியல் வகுப்புகள், தமிழ் மொழிகளுடன் சேர்ந்து பிற மொழிகளை கற்கும் வகுப்புகள் என மும்பையில் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.. 

எங்களுக்கு தேவையானது உங்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுத்தல் மட்டுமே.. 

வாழ்க வையகம்.. மும்பை விழித்தெழு இயக்கம்/MVI

சனி, 28 செப்டம்பர், 2013

தந்தை என் .சிவராஜ்: வாழக்கை வரலாறு

தந்தை,(பேராசிரியர் )என் .சிவராஜ். B.A., B.L.,Ex.MP.,Ex.Mayor (29/9/1892 - 29/9/1964)

18 October 2012 at 23:59
தந்தை என் .சிவராஜ்: வாழக்கை வரலாறு

சில முக்கிய  குறிப்புகள் தந்தை சிவராஜ் குறித்து :-
  1. தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதினார்.பழங்குடி சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.
  2. தந்தை சிவராஜ் மற்றும் மீனாம்பாள் சிவராஜ் தம்பதியர்கள், ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.(நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக்கொண்டன )
  3. மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில் தோன்றக் காரணமாயிருந்தார்.
  4. ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்
  5.  தாத்தா, இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர்.
  6. சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
  7. 1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார்...இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார்.நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.
  8. 1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.





சிந்திப்பதெல்லாம் முற்போக்காகவம் செயல்படுவதெல்லாம் மக்களின் நன்மைக்காகவும் இருத்தலை கொள்கையாகக் கொண்டோர் தங்கள் செல்வாக்கின் முத்திரையை மக்கள் உள்ளத்தில் ஆழ பதித்துச் செல்வார்கள் அப்பெருமைக்குரியவர் தலைவர்                 தந்தை என் .சிவராஜ் அவர்கள்.


வறுமை என்னவென்று தெரியாத நமசிவாயம் -வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29 ஆம் தேதி பிறந்தார்.

கல்விப்பணி:-
4 ஆம் வகுப்பு வரை தன் வீட்டிலேயே படித்தார். பின் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த டி.ஜான்ரத்தினம் அவர்களிடம் 5 ஆம் வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக் படிப்பை முடித்து வெஸ்லி கல்லூரியில் 'இண்டர்மீடியேட்' பயின்றார்.

பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் B.A பட்டம் பயின்றார். இக்கல்லூரியில் டாக்டர் இராதாக்கிருஷ்ணன் இவரின் ஆசிரியராக இருந்தது சிறப்புக்குரியது.

பின் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை முடித்தார். மேலும் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பேராசியராக பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதினார்.
பழங்குடி சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.

 குடும்பம்:-
1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம் வயதில் அன்னை மீனாம்பாளை வாழ்க்கை இணையராக்கிக்கொண்டார்.

தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.(நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு பயன்படுத்திக்கொண்டன )

கல்யாணி, தயாசங்கர், பத்மினி, போதி சந்தர் என 4 மகவுகள் இவர்களுக்கு பிறந்தனர்.

பவுத்தத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக இருவரும் பின்பற்றினர்.

அரசியல் பணி

சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராக தந்தை திகழ்ந்தார்.
மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில் தோன்றக் காரணமாயிருந்தார்.
மக்கள் சொந்த நிலா விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய  அடிமைமுறை மாறாது என்ற கொள்கையே உடையவர்.

அப்பொழுது மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள பெரு முதலாளிகளுக்கு சரி நிகராக பந்தயக்குதிரைகளை வைத்து போட்டிகளில் வென்று காட்டியவர்.

ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்.


சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும், சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் துணைத் தலைவராகவும் இருந்தவர்.

 தாத்தா, இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர்.
சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார்.இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார்.

பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F ஐ கலைத்து விட்டு அகில இந்திய குடியரசுக் கட்சியை அமைத்தார்.

1956 முதல் அக்கட்சியின் தலைவராக தந்தை சிவராஜ் ஏக மனதாக நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிக்காலம் வரை அப்பொறுப்பினை வகித்தார்.



இந்து மதத்தினை புறக்கணித்து விட்டு , மதம் மாறினால்தான் , நாம் ஒரு தனி இனமாக உரிமைக்குரல் எழுப்பிட முடியும்,போராட முடியும் என வலியுறுத்தினார்.

நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.

1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.

1944லும் 1960 லும் பாராளுமன்ற உறுப்பினரானார். அங்கு பல செயற்குழுக்களில் பங்கேற்று நாட்டிற்கு செயல்வகை மிகுந்த திட்டங்களை தந்தார்.
இந்திய பழங்குடி மக்களின் நன்மைக்காக போராட்ட சென்ற இந்த அன்புத் தலைவர் 1964 செப்டம்பர் 29 ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் பிரிவினை  அடைந்தார்.

Thanthai EN. SIVARAJ
Thanthai EN. SIVARAJ


Thanthai  N.SIVARAJ (29/9/1892 – 29/9/1964)


Those who have the principle that all their thoughts should be progressive and all their actions should bring benefit to the people would leave the seal of their influence deep in the heart of the people. Leader Thanthai  N. Sivaraj can have that appreciation. He was born as a son in 1892 to Thiru Namaisvayam. He had education in Presidency  and law colleges and became successful.
SERVICE TO EDUCATION:
After completion of studies in law he practiced as an advocate in the high court for some time. Then he was lecturer and Professor of law college. He held the view that education in general and knowledge in law in particular were essential for the progress of aboriginal society.
SERVICE TO SOCIETY:
Since his early days he had been rendering service jointly with aboriginal society. By his lectures of deep thinking he was counted as a good thinker by people. He convened many meetings and conferences for the sake of the people and gave them good ideas. Justice party and “Self respect Movement” best utilized him.
POLITICAL SERVICE:
He was a good, decent and polite politician.
He became an M.L.A in Madras in 1922.
He was an M.P in 1944 and 1960. He was instrumental for the springing up of several students’ hostels in many places in the city. He had the principle that the agriculturists would not be agriculturists of their own lands until their slavery system changed. He rendered his services be being associated with many institutions connected with legislature. He became Mayor of the Madras Corporation in 1945. In 1942, he was elected leader of the ALL India Scheduled Castes and Scheduled Tribes Federation. Participating in the SAN FRANCISCO CONFERENCE, he explained the difficulties of poor Indians. In 1946 as no action was taken for redressing the difficulties and down- trod-den condition of his people he cast aside the honourable title “Diwan Bahadur” conferred by British government as a protest. He started an English weekly “JAI BHEEM” in 1946 to challenge the Indian and Britishers.

Even after  the scheduled castes and scheduled Tribes Confederation assumed the form of political movement he was its all India leader. He was the guardian and incomparable leader of the INDAN REPUBLICIAN PARTY formed by Baba sahib in 1956. He participated in many executive committees and many active schemes for the country. In Delhi, in 1964, this beloved leader had come to fight for the benefit and welfare of Indian aborigines and died leaving millions of his followers to bemoan his loss.


காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் .. எமது ஆதரவு 49' Oக்கு மட்டுமே ..


காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் ..
எமது ஆதரவு 49' O மட்டுமே ..

( ஒரு முறை உங்கl வாக்குகளை இந்த 49' O க்கு போடலாமே ..)
===========================================
NO CONGRESS and NO BJP.

VOTE FOR REJECTION UNDER RULE - 49 O
The Supreme Court has ordered installation of a separate button for 49o to enable voters to exercise their right to reject all candidates on a secret manner without fear.

#இந்துத்துவம் ஒருபொழுதும் இந்தியத்தினை விட்டுக்கொடுக்காது #
காங்கிரசை போலவே பிஜேபியையும் புறக்கணிப்போம்.
======================================
குறிப்பாக தமிழகத்தின் வாழ்வாதார-அரசியல் உரிமைப் பிரச்சனைகளில் பாஜகவின் நிலைப்பாடு என்பது காங்கிரஸின் நிலையையே பிரதிபலித்தது.

/மூன்று தமிழர் தூக்கு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை, காவேரி தண்ணீர் பகிர்மானம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம், கூடங்குளம் அணு உலைப் பிரச்சனை, மீனவர் படுகொலை, கெயில் குழாய்ப் பிரச்சனை என தமிழக மக்கள் போராடும் அடிப்படைப் பிரச்சனைகளில் நரேந்திர மோடியோ, பாஜகவின் தலைமையோ தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வரவில்லை.மாறாக காங்கிரஸ் அரசின் தமிழர் விரோத நிலைப்பாட்டினையே எடுத்தது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த பாஜக ஆட்சிக் காலத்தில்தான் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் #தமிழகமீனவர்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.
இந்த வகையில் பார்த்தோமானால், தமிழகத்தில் மையப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் வாழ்வுரிமை கோரிக்கை போராட்டங்கள் பெருமளவு இவர்களால் பின்னடைவினை சந்திக்கும்./நமது தோழமை அமைப்பான மே பதினேழ அமைப்பின் அறிக்கையும் இதை சுட்டிக்காட்டுக்கிறது.
============================================= வளர்ச்சி என்கிற முழக்கத்தின் காரணமாக நிகழும் மனித உரிமை மீறல்களையும், இனக்கொலைகளையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட முடியாது...

சரி பிஜேபி சொல்கிற வளர்ச்சியை என்ன வென்று பாப்போம்...
தகவல் : Mohammad ali

மாநில மொத்த உற்பத்தி (SGDP)
அளவில் குஜராத் 8-வது இடத்தில் இருக்கிறது.
• வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையில் 18-வது இடத்தில் (அதாவது வறுமை ஒழிப்பில்) உள்ளது குஜராத். பின்தங்கிய ஒடிசா, குஜராத்தை விட பல படி மேலே உள்ளது.
• பெண் சிசுக்கொலை இன்னும் தொடர்கிறது. ஆண்-பெண் விகிதம் 1000-க்கு 918 என்ற அளவில் 18-வது இடத்தில் உள்ளது.
• 44% பேர் மட்டுமே காங்கிரீட் கூரையில் வாழ்கின்றனர். பிறர் மோசமான நிலையில் வாழ்கின்றனர்.
• கல்வியில் மிகப் பின்தங்கிய நிலையில் 15-வது இடத்தில் உள்ளது குஜராத்.
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்குவதில் 7-வது இடத்தில் உள்ளது. அதாவது 100 நாட்களுக்கு பதில் 34 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
• குழந்தை மரணத்தைத் தடுப்பதில் 18-வது இடத்திலும், மகப்பேறு கால மரணத்தைத் தடுப்பதில் 5-வது இடத்திலும் இருக்கிறது குஜராத்.
• 50% குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 65% பேர் சத்துணவு இன்றியும் வாழ்கின்றனர்.
• பெண்களில் பாதி பேர் ரத்த சோகை கொண்டவர்கள். இது பற்றி கேட்டபோது, குஜராத் பெண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி உணவைக் குறைத்து சாப்பிடுவதால் தான் பிரச்சினை என்று மோசடி வாதத்தை முன்வைத்தார் மோடி.
• மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவது முற்றிலும் நின்று போய் விட்டது.
• தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 4-ல் 3 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.
• சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்க்கை நிலையில் பீகார் முசுலீமை விட கீழ் நிலையிலேயே உள்ளனர்.
• கிராமங்களில் 16% பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கடனாளி மாநிலமும் குஜராத்-தான்.

• சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள 88 இந்திய நகரங்களில் 8 குஜராத்தில் உள்ளன.
=============================================
நரேந்திர மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்
----------------------------------------

இந்தியாவின் உள்ளேயும், அண்டைப்புற நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன மக்கள் போராட்டங்களில் இந்தியா தலையிடும். காங்கிரஸின் அதே மக்கள் விரோதக் கொள்கை முறைகளே இலங்கை, பர்மா, நேபாளம் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது தமிழீழத்தின் மீதான விரோதத்தினை இந்தியம் எந்தவகையிலும் குறைத்துக் கொள்ளப்போவதில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் அதிகார வர்க்கத்தினால் முடிவெடுத்துச் செயல்படுத்தப்படும் பொழுது, இதை ஒரு பொழுதும் கேள்வி எழுப்பாத இந்திய-பார்ப்பனிய-இந்துத்துவம் தமிழினத்தின் மீதான விரோதத்தினை குறைத்துக் கொள்ளும் என நம்பமுடியாது.

தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் வெளியிட்ட தமிழீழ எதிர்ப்பு அறிக்கைகள், நிலைப்பாடுகள், இலங்கை அரசுடன் மேற்கொள்ளும் நட்பு நடவடிக்கைகள் என்பது தமிழ்ச் சமூகத்தின் கவலைகளில் முக்கியமானது. சுப்ரமணிய சாமி போன்ற மூன்றாம்தர கொலைகாரக் குற்றவாளிகளை தன்னகத்தே, எந்த விமர்சனமின்றி இணைத்துக் கொள்ளும் ஒரு கட்சியும், அதன் தலைமையும் எந்தவிதத்திலும் நேர்மையான கட்சி கிடையாது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸின் இலங்கை மீதான கொள்கையே தமது கட்சியின் கொள்கை என அறிவித்திருக்கிறார். பாஜகவின் தலைவர் லால்கிருஷ்ண அத்வானி சிங்கள மக்களுடனான தமது ஆரிய உறவின் பாசத்தினை வெளிப்படுத்துகிறார். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தேவையில்லை எனவும், அதை தாம் ஏற்கப் போவதில்லை எனவும் பாஜகவின் ரவிசங்கர்பிரசாத் அறிவிக்கிறார். இதே போல பாராளுமன்றத்தில் இலங்கையில் நிகழ்ந்த படுகொலைகளைப் பற்றி 2011இல் பாஜக கேள்வி எழுப்பினாலும், அது ஒருபோதும் இலங்கை மீதான கொள்கை மாற்றத்தினைக் கோரவில்லை. மாறாக, தமிழீழப் பிரச்சனையைக் கொண்டு காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்கிற அரசியல் தந்திரமே காண முடிகிறது. சுஷ்மா சுவராஜ்ஜின் ’சாஞ்சி’ தொகுதிக்கு ’அன்புடன்’ அழைக்கப்பட்ட்ட ராஜபக்சேவினையும் அவருக்கு அளிக்கப்பட்ட மத்தியப் பிரதேச அரசின் மரியாதையையும் தமிழர்கள் ஒருமோதும் மறக்க மாட்டார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவானது தமிழர்களின் அரசியல் கோரிக்கையைப் பற்றியோ, அவர்கள் சந்திக்கும் இன அழிப்பினைப் பற்றியோ வாய்திறக்கவில்லை.

ஓர் இனப்படுகொலையை சந்தித்த சமூகம், காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கையை முன்மொழியும் எந்த ஒரு தேசிய, மாநில கட்சிகளை எந்தக் காலத்திலும் தேர்ந்தெடுக்காது என்பதை இந்திய துணைக்கண்டத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இந்துத்துவத்தினை வரலாறு முழுவதும் எதிர்த்த ஓர் இனம், தனது நலன்களை விட்டுக்கொடுத்து போராட்டத்திலிருந்து பின்வாங்காது என்பதை இந்தியப் பேரரசு புரிந்துகொள்வது அவசியமாகிறது. சிங்கள பெளத்த பேரினவாதமும், பர்மிய பெளத்த பேரினவாதமும் இந்தியாவின் பார்ப்பன இந்துத்துவத்துடன் இணைந்து சிறுபான்மை-தேசிய இன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் கவனிக்கத் தவறவில்லை. இந்த கூட்டமைவு தெற்காசிய பிராந்தியத்தின் அப்பாவி உழைக்கும் மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

இந்தியாவில் தேசிய இனச்சிக்கல் கூர்மையடையும் இந்தக் காலத்தில், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென்கிற அரசியல் நெருக்கடி உண்டான இந்த நேரத்தில், இந்திய தேசியத்தினை ஒற்றை ஆற்றலாக காட்டவும், ஒன்றிணைக்கவும், தேசம் தழுவிய ஒற்றைத் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக தேவைப்படுகிறார்கள். அதாவது ஒரே தேசம், ஒரே இனம், ஒரே ஒரு வலிமையான கட்சி என்பதன் மூலமாக இந்திய துணைக்கண்டத்தின் பன்மைத் தன்மையை உடைப்பது இந்துத்துவ பார்ப்பனிய ஆற்றல்களுக்கு அவசியமாகிறது. இதன் மூலம் மாநிலக் கட்சிகளின் அதிகாரங்களும், மாநில அரசுகளின் அதிகாரங்களும் குறைக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படும். மாநிலக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி அம்மாநில அல்லது தேசிய இனமக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு தேசிய நலன் என்கிற நோக்கத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தேசிய முதலாளிகளுக்கும் ஒட்டுமொத்தமாக தேசிய இனமக்களின் சொத்துக்கள் விற்கப்படும். எனவே இந்த ஒற்றைத்தலைமை - ’ராகுல்’, ’மோடி’ - கோரிக்கையானது தேசிய இனங்களின் நலன்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியே. வலிமையான ஓர் இந்தியத் தலைவர் என்பது இந்தியாவின் பல்தேசிய இனங்களுக்கு ஆபத்தானதே.