வெள்ளி, 18 ஜூன், 2010

உரிமையோடு மும்பை தமிழர்களின் வேண்டுகோள்

இலங்கையில் நடந்த ஐஃபா-இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் நடத்த பட்ட பாலிவுட் நட்சத்திர கலைநிகழ்ச்சி கடந்த சூன் திங்கள் 3-5 நாட்களில் இலங்கையில் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி குறித்த முன்னறிவிப்பு வந்தவுடன் நிகழ்ச்சியின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட தமிழ் அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிரான பரப்புரைகளில் வீரியத்துடன் செயல்பட தொடங்கினர். இதில் முதன்மையாக செயல்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மும்பை வந்து தமிழ் அமைப்புகளுக்கு இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை கொஞ்சம் விரிவாக எடுத்துரைத்து , போரட்டத்தின் தேவையை விளக்கினார். அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து தமிழன் என்ற குடையின் கீழ் போராடுவது என்று முடிவாகியது. எப்பொழுதும் போல் உணர்வுள்ள இளைஞர்கள் மட்டும் களத்தில் இறங்கினர்.

தினகரன் செய்தி 24/05/2010
தினகரன்  செய்தி 24/05/2010

அதன்படி விவேக் ஒபரோய், சபானா ஆஷ்மீ , அமீர் கான் போன்ற திரை பிரபலங்களை சந்தித்து தமிழர்களின் உணர்வுகளை எடுத்துரைத்தனர். ஐ ஃ பா அலுவலகத்திலும் , வட இந்திய திரைப்பட ச ங்கத்தினரிடமும் தமது கோரிக்கையை முன்வைத்தனர் , அதோடு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடந்த போராட்டத்திலும் தோழர்கள் கலந்து கொண்டனர். அமிதாபச்சன் தனது முடிவை மறு பரிசீலனை செய்வதாக சொன்னதும் விழா ஏற்பாட்டாளர்கள், சல்மான்கானை விழாவின் Brand Ambassador ஆக நியமித்தனர். நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் இந்த முடிவால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளான தோழர்கள் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தி கைதானார்கள். இதில் சிறீதர், முது ராஜ் ,கண்ணன், மதன், சரவணன் உட்பட பத்து தோழர்கள் கைதாகி அன்று மாலை காவல் துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், சல்மான்கான் திருப்திகரமான எந்த பதிலும் தராததால் , சல்மான் கான் உருவ பொம்மையை எரித்து தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் காவலில் வைத்து ஆளுக்கு 3000 வீதம் அபராதம் விதித்து, பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் மா.கதிரவன், சிறீதர், செல்வகுமார், டோம்ணிக், பழனி குமார், முத்துவேல், வில்சன், ஜேம்ஸ் பொன்னையா ஆகிய 8 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினகரன் செய்தி 31/05/2010தினகரன்  செய்தி  31/05/2010

தினதந்தி செய்தி 17/05/2010தினதந்தி செய்தி 17/05/2010

இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ செய்தி 31/05/2010"]இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ செய்தி 31/05/2010

பொதுநல போராட்டத்திற்கு கொள்கை தெளிவோடு இருக்கும் வெகுச்சிலரை கொண்டு இயங்கும் தமிழ் சூழலில் முரண்பாடுகளும், தனித்து விடப்படுதலும் தொடர்ந்து தோழர்கள் களத்தில் சந்திக்கும் பொழுது, மாற்று மாநிலங்களில் சொல்லவா வேண்டும். பொருளாதாரம் என்ற அற்ப காரணத்தை கொண்டு களத்தில் நிற்கும் தோழர்கள் விலகி விட கூடாது என்ற நோக்கத்தில் வழக்கில் பிணையில் வருவதற்கு செலவான தொகையை மட்டுமாவது உணர்வுள்ள தமிழர்கள் உதவர்களானால், கூலிக்காக ஓடி ஓடி உழைக்கும் வரிய சூழலிலும் உணர்வை இழக்காமல் நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

போராட்டங்களை குறித்து செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளையும், பிணை வாங்க செலுத்திய ரசீதையும் இணைத்துள்ளோம்.

இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-1இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-1

இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-1"]இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-2

பிணையில் வெளிவ‌ந்த‌ தோழ‌ர்க‌ளிட‌ம் வ‌சூலிக்க‌ப்ப‌ட்ட தொகையின் ர‌சீது இணைப்பு

தமிழர் என்ற உரிமையோடு,
களத்தில் என்றும் நிற்கும் ஆவலோடு,

மும்பை தமிழ் மக்கள் கூட்டமைப்பு,

தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

மா. கதிரவன் : +919321454425

து . சிரிதர் : +919702481441

பாண்டியன் : +919821072848


வங்கி எண் :188104000024772
வங்கி பெயர் : IDBI Bank
வங்கி கிளை : Sion

திங்கள், 31 மே, 2010

மும்பை போராட்டங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு நடத்தப்பட்டது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை மறைத்து இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு, சுற்றுலாவுக்கு பொருத்தமான நாடு என்று நிறுவும் பொருட்டு இந்திய அதிகாரவர்க்கத்தின் முழு ஆதரவு மற்றும் துணையோடு, திரைப்பட விழாவை வருகிற சூன் திங்கள் இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு எதிராக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அதே போன்று மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சார்ந்த தோழர் சிரீதர் பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்த, சாராத தமிழர்களை ஒருங்கிணைத்து, கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் பிரச்சாரம் செய்தது, திரைப்பட்த்துறையினரை சந்தித்து இலங்கை செல்லக்கூடாதென வேண்டுகோள் வைத்தனர் அதில் சபானா ஆஜ்மி, ஜாவேத் அக்தர் ஆகியோர் போகமாட்டோம் உறுதி மொழி கொடுத்தனர், அடுத்தக்கட்டமாக இலங்கைக்கு செல்லவிருக்கும் செல்லவிருக்கும் சல்மான்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அவரின் உருவப்படத்தை எரித்து தாராவி காவல்துறையினரால் 8 தமிழுணர்வாளர்கள் கைதாயினர்.
ஆக, மேற்கண்ட போராட்டங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு நடத்தப்பட்டது. இதில் உரிமை கோருவதற்கு விழித்தெழு இளைஞர் இயக்கம் உட்பட எந்த அமைப்புக்கும் உரிமையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
வே.சித்தார்த்தன்,
செயலாளர்,
விழித்தெழு இளைஞர் இயக்கம்.
தொடர்புள்ள இணைப்புகள்,
http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=1214

சனி, 29 மே, 2010

ஜாவேத் அக்தர், சபனா ஆஸ்மி ஆகியோர் ஐஃபா அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை

இலங்கைக்கு செல்லவில்லை என்று ஜாவேத் அக்தர், சபனா ஆஸ்மி ஆகியோர் ஐஃபா அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று மும்பை தமிழர்களிடம் தெரிவிப்பு......

போய் சந்தித்தவர்கள் சிரீதர், கதிரவன், முத்துராஜ்

புதன், 17 பிப்ரவரி, 2010

மெட்ராஸ் பறையர் ரெஜிமெண்ட்' Madras Paraiyar Regiment


 'மெட்ராஸ் பறையர்  ரெஜிமெண்ட்'  -  Madras  Paraiyar  Regiment
 மெட்ராஸ் மீட்புப் போர்.. இது மகர் ரெஜிமென்ட்  1 - 1 -1818  க்கு முன்னர் உள்ள வரலாறு.. மிக முக்கியமான வரலாறு.. மகர் ரெஜிமென்ட் யை புரட்சியாளர் அம்பேத்கர் மூலம் அறிந்தோம் .   ஆனால் 1758 ஆம் ஆண்டு  வெற்றியை வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட அந்த வீரநாளை, வரலாறை   பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களைக் கொண்டு முதன் முதலாக மீட்டெடுத்து, அச்சிட்டு வெளியிட்டவர் அய்யா தமிழக முதல் சபாநாயகர்  சிவசண்முகம் பிள்ளை (24-2-1901 - 17 -2 -1974 )

தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை.
அய்யா தமிழக முதல் சபாநாயகர்  சிவசண்முகம் பிள்ளை பற்றியும் அறிந்துக்கொள்ள வேண்டும் ..
மெட்ராஸ் மாகாணத்தில் , மண்ணின் மைந்தர்களான ஆதி தமிழர்  (திராவிடர்)  குடும்பத்தில், 1901 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்தார். 
கல்வியை பெற்ற  சமூக முன்னேற்ற சிந்தனையாளரில் மிக முக்கியமானவர் .
  
அரசியல் :-

அரசியல் ஈடுபாடு கொண்ட நமது சிவ சண்முகம் பிள்ளை அய்யா. இளமையிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவர்.
1938 ஆம் ஆண்டு, முதன் முதலாக பட்டியல் இன சமூகத்தில் இருந்து   மெட்ராஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் சிவசண்முகம் பிள்ளை அவர்கள். மாநகராட்சித் தந்தையாக அவர், சிறந்த முறையில் கடமையாற்றினார். அவரின் சிறப்பான அரசியல் செயல்பாடுகள் அவரை தலைவராக உயர்த்தியது.
1951 இல் மெட்ராஸ் மகாணத்தின் சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் . இதன் மூலம், 'சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் சட்டமன்ற அவைத் தலைவர்' என்கிற அடையாளத்தையும் அவர் பெற்றார்.
1951 முதல் 1955 வரை சிறந்த சபாநாயகராக செயல்பட்ட அவர், 1955 முதல் 1961 வரை மத்திய பணியாணையத்தின் (Union public service commission)உறுப்பினராகவும் கடமையாற்றினார். 1962 இல் இந்திய பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவிற்கும் தேர்வு செய்யப்பட்டார்.

குடும்பம் :- .

திருமணம் இவருக்கு 36 ஆம் வயதில் நடந்தது.மனைவி சந்திர சிவசண்முகம் பிள்ளை 
  இத்தம்பதியர்க்கு முன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

சமூக பணி:-
அரசியல் செயல்பாட்டில் மட்டுமல்லாமல், வரலாற்று திரட்டல்களிலும், எழுத்துப் பணியிலும் அவர் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்.
பிரிட்டனின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவப்படையில் இருந்த, மறையர்களின்  வீரவரலாற்றை ஆவணத்துடன் அச்சிலேற்றிக் கொண்டுவந்தார்.

ஆதிராவிடர்களின் வரலாற்றைக் கூறும் 'The History Of The Adi -Dravidas' எனும் நூலை இயற்றினார்.

மேலும், பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் வாழ்வையும் சிந்தனை, செயல்பாடுகளையும் சிறந்த ஆவணமாகக் கூறும், 'THE LIFE, SELECT WRITINGS AND SPEECHES OF Rao Bahadur M.C.Rajah, M.L.A (ராவ்பகதூர் எம்.சி.ராஜாவின் வாழ்வும், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மற்றும் உரைகள்)' எனும் நூலை, 1930 ஆம் ஆண்டில் 'THE INDIAN PUBLISHING HOUSE' மூலம் எழுதி வெளியிட்டார்.